என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தியாவுடனான பெண்கள் டி20 கிரிக்கெட் : 3வது போட்டியிலும் இங்கிலாந்து வெற்றி
Byமாலை மலர்9 March 2019 12:00 PM GMT (Updated: 9 March 2019 12:00 PM GMT)
இந்தியாவுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து மகளிர் அணி, இந்தியாவை ஒயிட் வாஷ் செய்தது. #INDWvENGW
இந்தியா - இங்கிலாந்து பெண்கள் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி இன்று கவுகாத்தியில் நடைபெற்றது.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுக்கு 119 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் தொடக்க வீராங்கனைகள் வியாட் 24 ரன்களும், டாமி பியூமோன்ட் 29 விக்கெட் கீப்பர் எமி எல்லன் ஜோன்ஸ் 26 ரன்களும் எடுத்தனர்.
அதன்பின், 120 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. தொடக்க வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா 58 ரன் எடுத்தார். மிதாலி ராஜ் 30 ரன்னுடன் அவுட்டாகாமல் இருந்தார். மற்றவர்கள் நிலைத்து நிற்கவில்லை.
ஆட்டத்தின் கடைசி ஓவரில் 3 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் இந்திய அணி ஒரு ரன் மட்டுமே எடுத்தது. இறுதியில், இந்தியா 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 118 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து, ஒரு ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதுடன், தொடரையும் 3- 0 என கைப்பற்றியது.
#INDWvENGW
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X