search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "second match"

    கொரியாவுக்கு எதிரான இரண்டாவது போட்டியில் இந்திய பெண்கள் ஹாக்கி அணி 2-1 என்ற கணக்கில் வீழ்த்தியது.
    ஜின்சியான்:

    இந்திய பெண்கள் ஹாக்கி அணி கொரியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் இந்திய பெண்கள் ஹாக்கி அணி வென்றது.

    இந்நிலையில், கொரியாவுக்கு எதிரான இரண்டாவது போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய பெண்கள் ஹாக்கி அணி 2-1 என்ற கணக்கில் வீழ்த்தியது. இந்திய தரப்பில் கேப்டன் ராணி 37வது நிமிடத்தில் ஒரு கோலும், நவ்ஜோத் கவுர் 50வது நிமிடத்தில் ஒரு கோலும் அடித்தனர்.

    இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி போட்டி நாளை மறுதினம் நடைபெற உள்ளது.
    பெங்களூருவில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில், மேக்ஸ்வெல்லின் அதிரடியான சதத்தால் இந்தியாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரையும் கைப்பற்றியது ஆஸ்திரேலியா. #INDvAUS
    பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வென்றுள்ளதால், இன்றைய போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்தியா களமிறங்கியது.

    டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பின்ச் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவானும், லோகேஷ் ராகுலும் களமிறங்கினர்.

    இருவரும் அடித்து விளையாடியதால் இந்தியா பவர் பிளே-யான முதல் 6 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 53 ரன்கள் சேர்த்தது.

    கேஎல் ராகுல் 26 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சருடன் 47 ரன்கள் சேர்த்து அவுட்டானார். தவான் 24 பந்தில் 14 ரன்கள் சேர்த்து வெளியேறினார். ரிஷப் பந்த் 1 ரன் எடுத்த நிலையில் ஏமாற்றம் அளித்தார். இதனால் இந்தியா 11 ஓவரில் 74 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுக்களை இழந்தது.

    4-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் டோனி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி பொறுப்புடனும், அதிரடியாகவும் ஆடியது. இதனால் ரன்கள் உயர்ந்தன. இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 50 பந்தில் 100 ரன்கள் குவித்தது. டோனி 23 பந்தில் 3 பவுண்டரி, 3 சிக்சருடன் 40 ரன்கள் சேர்த்து வெளியேறினார். விராட் கோலி அதிரடியாக ஆடி அரை சதமடித்தார்.


     
    இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் குவித்தது. விராட் கோலி 38 பந்தில் 2 பவுண்டரி, 6 சிக்சருடன் 72 ரன்களுடனும், தினேஷ் கார்த்திக் 3 பந்தில் 8 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    191 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆர்கி ஷாக்கும், மார்கஸ் ஸ்டோனிசும் இறங்கினர்.

    ஸ்டோனிஸ் 7 ரன்னிலும், ஆரோன் பின்ச் 8 ரன்னிலும் அவுட்டாகி வெளியேறினர். அடுத்து இறங்கிய அனுபவ வீரர் மேக்ஸ்வெல் ஷாக்குடன் இணைந்தார். இருவரும் பவுண்டரி, சிக்சராக விளாசினர்.

    இதனால், முதல் 10 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 87 ரன்கள் எடுத்தது. 73 ரன்கள் சேர்த்த நிலையில் ஷாக் 40 ரன்னில் அவுட்டானார்.

    அடுத்து இறங்கிய ஹேண்ட்ஸ்கோம்ப் மேக்ஸ்வெல்லுக்கு ஒத்துழைப்பு கொடுத்தார். மேக்ஸ்வெல் கிடைத்த பந்துகளை பவுண்டரி, சிக்சர்களுக்கு பறக்கவிட்டார். சிறப்பாக ஆடிய மேக்ஸ்வெல் சதமடித்து அசத்தினார். அவர் 113 ரன் எடுத்து அவுட்டாகாமல் உள்ளார்.

    இறுதியில், ஆஸ்திரேலியா அணி 19.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதையடுத்து, டி20 தொடரை ஆஸ்திரேலியா 2-0 என கைப்பற்றியது. #INDvAUS
    அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில், 84 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது. #AFGvIRE #HazratullahZazai #RashidKhan
    ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகின்றன. இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது.   

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது  டி20 போட்டி இன்று டேராடூனில் நடந்தது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    தொடக்க ஆட்டக்காரர்களாக ஹஸ்ரத்துல்லா ஷாஷை, உஸ்மான் கனி ஆகியோர் களமிறங்கினர். இருவரும் முதலில் இருந்தே அயர்லாந்து அணி பந்துவீச்சை மைதானத்தில் நாலாபுறமும் சிதறடித்தனர். முதல் விக்கெட்டாக உஸ்மான் கனி 73 ரன்கள் எடுத்து வெளியேறினார்.



    மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஹஸ்ரத்துல்லா சரவெடியாக வெடித்தார். அவர் 62 பந்துகளில் 16 சிக்சர், 11 பவுண்டரி என அடித்து 162 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். இறுதியில், ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 278 ரன்கள் எடுத்து சாதனை புரிந்துள்ளது.

    இதையடுத்து, 279 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் அயர்லாந்து அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரும் கேப்டனுமான பால் ஸ்டிர்லிங் 50 பந்தில் 91 ரன் எடுத்து அவுட்டானார். மற்றவர்கள் நிலைத்து நிற்கவில்லை. இதனால் அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    இதைத்தொடர்ந்து 84 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது. ஆப்கானிஸ்தான் சார்பில் ரஷீத் கான் 4 ஓவரில் 25 ரன் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். #AFGvIRE #HazratullahZazai #RashidKhan
    அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில், ஹஸ்ரத்துல்லா அதிரடி சதத்தால் ஆப்கானிஸ்தான் 278 ரன்களை குவித்து சாதனை படைத்துள்ளது. #AFGvIRE #HazratullahZazai
    ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகின்றன. இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது.   

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி இன்று டேராடூனில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    தொடக்க ஆட்டக்காரர்களாக ஹஸ்ரத்துல்லா ஷாஷை, உஸ்மான் கனி ஆகியோர் களமிறங்கினர். இருவரும் முதலில் இருந்தே அயர்லாந்து அணி பந்துவீச்சை மைதானத்தில் நாலாபுறமும் சிதறடித்தனர். இதனால் அணியின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது.

    முதல் விக்கெட்டாக உஸ்மான் கனி 73 ரன்கள் எடுத்து வெளியேறினார். அப்போது அணியின் எண்ணிக்கை 236 ஆக இருந்தது.

    மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஹஸ்ரத்துல்லா சரவெடியாக வெடித்தார். அவர் 62 பந்துகளில் 16 சிக்சர், 11 பவுண்டரி என அடித்து 162 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இறுதியில், ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 278 ரன்கள் எடுத்து சாதனை புரிந்துள்ளது. #AFGvIRE #HazratullahZazai
    ஸ்காட்லாந்து அணிக்கெதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஓமன் அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. #SCOTvOMAN
    ஓமன் - ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி அல் அமராத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஸ்காட்லாந்து பந்துவீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி ஓமன் அணி முதலில் களம் இறங்கியது. மொகமது நதிம், குர்ரம் நவாஸ் ஆகியோரின் பொறுப்பான அரை சதத்தால் 200 ரன்களை தாண்டியது.

    இறுதியில், நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் ஓமன் அணி 8 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் எடுத்தது.

    ஸ்காட்லாந்து அணி சார்பில் சப்யான் ஷரீப் 3 விக்கெட் வீழ்த்தினார். பின்னர் 249 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது ஸ்காட்லாந்து அணி.

    ஆனால், ஓமன் அணியினரின் சிறப்பான பந்து வீச்சில் சிக்கிய ஸ்காட்லாந்து அணி 155 ரன்களில் ஆல் அவுட்டானது.
    இதையடுத்து, 93 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது ஓமன்.

    ஓமன் அணி சார்பில் மொகமது நதிம், பாதல் சிங் ஆகியோர் தலா 3 விக்கெட்டும், பிலால் கான், கலிமுல்லா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். #SCOTvOMAN
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் எம்எஸ் டோனியின் ஆட்டம் மிகவும் அருமையாக அமைந்திருந்தது என கேப்டன் விராட் கோலி பாராட்டியுள்ளார். #AUSvIND #ViratKohli #MSDhoni #HappyPongal2019
    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று அடிலெய்டில் நடைபெற்றது.

    டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஷான் மார்ஷின் அபாரமான சதத்தால் ஆஸ்திரேலியா 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 298 ரன்கள் எடுத்தது.

    தொடர்ந்து ஆடிய இந்தியாவில் கேப்டன் விராட் கோலியின் பொறுப்புடன் ஆடினார். அவருக்கு எம்.எஸ்.டோனி ஒத்துழைப்பை தந்தார். கோலி ஒருநாள் போட்டிகளில் 39வது சதமடித்து அசத்தினார். இவர் 2 சிக்சர், 5 பவுண்டரிகள் உள்பட 104 ரன்களை எடுத்து அவுட்டானார். அவருக்கு பிறகு டோனி நிலைத்து நின்று அரை சதமடித்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார்.



    இந்நிலையில், இந்தியாவின் வெற்றி குறித்து கேப்டன் விராட் கோலி கூறுகையில், எம்.எஸ்.டோனி மிகவும் அருமையாக விளையாடினார். அவர் என்ன நினைக்கிறார் என்பது அவருக்கு மட்டும் தான் தெரியும். இன்றைய போட்டி எங்களுக்கு மிகவும் சிறப்பானது என பாராட்டு தெரிவித்துள்ளார். #AUSvIND #ViratKohli #MSDhoni #HappyPongal2019
    ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலியின் அபாரமான சதத்தால் இந்தியா வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது. #AUSvIND #ViratKohli #HappyPongal2019
    அடிலெய்டு: 

    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று அடிலெய்டில் தொடங்கியது.

    டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது, பின்ச் 6 ரன்னிலும், அலெக்ஸ் கேரி 18 ரன்னிலும், கவாஜா 21 ரன்னிலும் வெளியேறினார். பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப் 20 ரன்னில் அவுட் ஆனார். ஸ்டாய்னிஸ் 29 அவுட்டானார். 

    ஷான் மார்ஷ் அபாரமாக ஆடி சதமடித்தார். இவருக்கு மேக்ஸ்வெல் ஒத்துழைப்பு அளித்தார். மேக்ஸ்வெல் 48 ரன்னில் வெளியேறினார். பொறுப்புடன் ஆடிய ஷான் மார்ஷ் 131 ரன்களில் அவுட்டானார். இறுதியில், ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுக்கு 298 ரன்கள் எடுத்தது.

    இந்தியா சார்பில் புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்டும், முகமது ஷமி 3 விக்கெட்டும், ரவீந்திர ஜடேஜா 1 விக்கெட்டும் எடுத்தனர்.



    இதையடுத்து, 299 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. ரோகித் சர்மாவும் ஷிகர் தவானும் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆடினர்.

    அணியின் எண்ணிக்கை 47 ஆக இருக்கும்போது ஷிகர் தவான் 32 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய விராட் கோலி ரோகித்துடன் ஜோடி சேர்ந்தார். இவர்கள் 54 ரன்கள் சேர்த்த நிலையில், 43 ரன்னில் ரோகித் வெளியேறினார்.

    அதன்பின் இறங்கிய அம்பதி ராயுடு 24 ரன்னில் அவுட்டானார். அப்போது, இந்தியா 3 விக்கெட்டுக்கு 160 ரன்கள் எடுத்திருந்தது.

    அடுத்து இறங்கிய எம்.எஸ்.டோனி கோலிக்கு ஒத்துழைப்பு அளித்தார். கேப்டன் விராட் கோலி பொறுப்புடன் ஆடி ஒருநாள் போட்டிகளில் 39வது சதமடித்தார். இவர் 2 சிக்சர், 5 பவுண்டரிகள் உள்பட 104 ரன்களை எடுத்து அவுட்டானார்.

    அவரை தொடர்ந்து இறங்கிய தினேஷ் கார்த்திக்கும் டோனியும் பொறுப்புடன் ஆடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். டோனி அரை சதமடித்து அசத்தினார்.

    இறுதியில், இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இந்த வெற்றி மூலம் ஒருநாள் தொடர் 1 - 1 என சமனில் உள்ளது. #AUSvIND #ViratKohli #HappyPongal2019
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் விராட் கோலி பொறுப்பாக ஆடி சதமடித்து அசத்தினார். #AUSvIND #ViratKohli #HappyPongal2019
    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று அடிலெய்டில் தொடங்கியது.

    டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஷான் மார்ஷின் அபாரமான சதத்தால் ஆஸ்திரேலியா 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 298 ரன்கள் எடுத்தது.

    இதையடுத்து, 299 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. ரோகித் சர்மா 43 ரன்னிலும், ஷிகர் தவான் 32 ரன்னிலும் அவுட்டாகினர்.அம்பதி ராயுடு 24 ரன்னில் வெளியேறினார்.

    விக்கெட்டுகள் ஒருபுறம் வீழ்ந்தாலும் கேப்டன் விராட் கோலி பொறுப்புடன் ஆடினார். அவருக்கு எம் எஸ் டோனி ஒத்துழைப்பை தந்தார்.

    இந்நிலையில், விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் 39வது சதமடித்து அசத்தினார். இவர் 108 பந்துகளில் 2 சிக்சர், 5 பவுண்டரிகள் உள்பட 104 ரன்களை எடுத்து அவுட்டானார். #AUSvIND #ViratKohli #HappyPongal2019
    ×