search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "first match"

    அயர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், குல்பதின் நயீப்பின் பேட்டிங், பந்துவீச்சால் ஆப்கானிஸ்தான் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #AFGvIRE #GulbadinNaib
    ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகின்றன. இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடரை ஆப்கானிஸ்தான் 2- 0 என கைப்பற்றியது. 

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று டேராடூனில் நடைபெற்றது. டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர் பால் ஸ்டிர்லிங் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து ஆடினார். அரை சதமடித்த அவர் 89 ரன்னில் அவுட்டானார். மற்றொரு வீரர் ஜார்ஜ் டாக்ரெல் 37 ரன்னில் வெளியேறினார். மற்றவர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை. இதனால், அயர்லாந்து அணி 49.2 ஓவரில் 161 ரன்கள் எடுத்தது.

    ஆப்கானிஸ்தான் சார்பில் தவ்லத் சட்ரான், முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் தலா 3 விக்கெட்டும், குல்பதின் நயீப் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் களமிறங்கியது. மொகமது ஷசாத் 43 ரன்னிலும், ஹஸ்ரத்துல்லா ஷாஷை 25 ரன்னிலும், ரஹ்மத் ஷா 22 ரன்னிலும், குல்புதின் நயீப் 46 ரன்னிலும் அவுட்டாகி வெளியேறினர்.

    இறுதியில், ஆப்கானிஸ்தான் 41.5 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதுடன், ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. #AFGvIRE #GulbadinNaib
    விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் டி20 போட்டியில், பரபரப்பான கட்டத்தில் இந்தியாவை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா. #INDvAUS
    இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 2 டி20 போட்டி மற்றும் 5 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. 

    இந்நிலையில், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று தொடங்கியது. போட்டி தொடங்குவதற்கு முன் காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த 40 சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

    டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பின்ச் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், லோகேஷ் ராகுலும் களமிறங்கினர்.

    ரோகித் சர்மா 5 ரன்னிலும், விராட் கோலி 24 ரன்னிலும், ரிஷப் பந்த் 3 ரன்னிலும் அவுட்டாகி வெளியேறினர். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் பொறுப்புடன் ஆடிய லோகேஷ் ராகுல் அரை சதமடித்து அவுட்டானார்.

    மகேந்திர சிங் தோனி ஓரளவு தாக்குப்பிடித்து 29 ரன்னுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில், இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 126 ரன்களை எடுத்துள்ளது.

    ஆஸ்திரேலியா சார்பில் நாதன் கவுல்டர் நைல் 3 விக்கெட் வீழ்த்தினார்.



    இதையடுத்து, 127 ரன்களை இலக்காக கொண்டு ஆஸ்திரேலியா களமிறங்கியது. அந்த அணி 5 ரன் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுக்களை இழந்தது.

    அடுத்து இறங்கிய மேக்ஸ்வெல், தொடக்க ஆட்டக்காரரான ஆர்கி ஷாட்டுடன் இணைந்து நிதானமாக ஆடினார். இருவரும் 84 ரன்கள் சேர்த்தனர். ஆர்கி ஷாட் 37 ரன்னில் அவுட்டானார். கிளென் மேக்ஸ்வெல் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 56 ரன்னில் வெளியேறினார்.

    ஆஸ்திரேலிய அணி இடையில் விக்கெட்டுகளை இழந்து திணறினாலும், பரபரப்பான கட்டத்தில் பொறுப்புடன் ஆடி வெற்றி பெற்றது.

    அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதையடுத்து, டி20 தொடரில் 1-0 என ஆஸ்திரேலியா முன்னிலை வகிக்கிறது. #INDvAUS
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில், லோகேஷ் ராகுலின் அரை சதத்தால் இந்திய அணி 127 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. #INDvAUS
    இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 2 டி20 போட்டி மற்றும் 5 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. 

    இந்நிலையில், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று தொடங்கியது. போட்டி தொடங்குவதற்கு முன் காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த 40 சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

    டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பின்ச் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், லோகேஷ் ராகுலும் களமிறங்கினர்.

    ரோகித் சர்மா 5 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து கேப்டன் விராட் கோலி இறங்கினார். ராகுலுடன் இணைந்து நிதானமாக ஆடினார். இருவரும் இணைந்து 55 ரன்கள் சேர்த்தனர். அணியின் எண்ணிக்கை 69 ஆக இருக்கும் போது விராட் கோலி 24 ரன்னில் வெளியேறினார்.

    அவரை தொடர்ந்து இறங்கிய ரிஷப் பந்த் 3 ரன்னில் ரன் அவுட்டாகி வெளியேறினார். இதனால் முதல் 10 ஓவர் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 80 ரன்கள் எடுத்தது. பொறுப்புடன் ஆடிய லோகேஷ் ராகுல் அரை சதமடித்து அவுட்டானார். அடுத்து வந்த வீரர்களில் தோனி மட்டும் தாக்குப்பிடித்தார். அவர் 29 ரன்னுடன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இறுதியில், இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 126 ரன்களை எடுத்துள்ளது. இதையடுத்து, 127 ரன்களை இலக்காக கொண்டு ஆஸ்திரேலியா விளையாடி வருகிறது. #INDvAUS
    இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், லோகேஷ் ராகுலும் களமிறங்கி உள்ளனர். #INDvAUS
    இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 2 டி20 போட்டி மற்றும் 5 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. 

    இந்நிலையில், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி 20 போட்டி இன்று தொடங்கியது.

    டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பின்ச் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், லோகேஷ் ராகுலும் விளையாடி வருகின்றனர். #INDvAUS
    சிட்னியில் நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா. ரோகித் சர்மாவின் சதம் வீணானது. #AUSvIND #RohitSharma #JhyeRichardson
    சிட்னி:

    இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் முதலாவது ஒருநாள் போட்டி சிட்னியில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

    நிர்ணயித்த 50 ஓவரில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 288 ரன்கள் எடுத்திருந்தது. ஆஸ்திரேலியா தரப்பில் ஹேண்ட்ஸ்கோம்ப் 61 பந்துகளில் 73 ரன்களும், கவாஜா 81 பந்துகளில் 59 ரன்களும், மார்ஸ் 70 பந்துகளில் 54 ரன்கள் எடுத்திருந்தனர்.

    இந்தியா அணியில் புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ் தலா இரண்டு விக்கெட்களும், ஜடேஜா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். 

    இதையடுத்து 289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது.

    தவான் டக் அவுட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் விராட் கோலி 3 ரன்னில் வெளியேறினார். பின்னர் வந்த அம்பதி ராயுடு ரன் ஏதும் எடுக்கவில்லை.



    அடுத்து ரோகித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்தார் டோனி. இருவரும் நிதானமாக விளையாடினர். அரை சதமடித்த டோனி 51 ரன்னில் அவுட்டானார்.

    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் ரோகித் சர்மா தனி ஒருவனாக போராடி சதமடித்தார். அவரது போராட்டம் வீணானது. அவர் 129 பந்துகளில் 6 சிக்சர், 10 பவுண்டரியுடன் 133 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதைத்தொடர்ந்து இறுதிக்கட்ட விக்கெட்டுகளும் விரைவில் விழுந்தன.

    இறுதியில், இந்திய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுக்கு 254 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ஆஸ்திரேலியா 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 

    ஆஸ்திரேலியா சார்பில் ரிச்சர்ட்சன் 4 விக்கெட்டும், ஜேசன் பெஹர்ண்டாப், ஸ்டோனிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். #AUSvIND #RohitSharma #JhyeRichardson
    டாக்காவில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீசை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்காளதேசம் அபார வெற்றி பெற்றது. #BANvWI
    டாக்கா:

    வெஸ்ட் இண்டீஸ் அணி வங்காள தேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி, 3 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் வங்காள தேசம் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி டாக்காவில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அந்த அணியின் கிரன் பாவெல், ஷாய் ஹோப் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். வங்காள தேசத்தினர் பந்து வீச்சில் மிரட்டினர். இதனால்  வெஸ்ட் இண்டீஸ் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.



    ஷாய் ஹோப் 43 ரன்களும், கீமோ பவுல் 36 ரன்களும், ரூஸ்டன் சேஸ் 32 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் விரைவில் வெளியேறினர். இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுக்கு 195 ரன்கள் எடுத்தது.

    வங்காள தேசம் சார்பில் முஷ்டாபிசுர் ரகுமான், மஷ்ரப் மோர்டசா தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். 

    இதையடுத்து, 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காள தேசம் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக தமிம் இக்பால், லித்தன் தாஸ் களமிறங்கினர். தமிம் இக்பால் 12 ரன்னிலும், லித்தன் தாஸ் 41 ரன்னிலும், இம்ருல் காயேஸ் ஒரு ரன்னிலும் அவுட்டாகினர்.

    அடுத்து இறங்கிய விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிம் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவருக்கு ஷாகிப் அல் ஹசன் ஓரளவு ஒத்துழைப்பு கொடுத்தார். ஷாகிப் அல் ஹசன் 30 ரன்னிலும், சவுமியா சர்க்கார் 19 ரன்னிலும் அவுட்டாகினர்.

    இறுதியில் வங்காள தேசம் 35.1 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 196 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அத்துடன் 1 - 0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. ஆட்ட நாயகன் விருதை மஷ்ரப் மோர்டசா வென்றார். #BANvWI
    16 நாடுகள் பங்கேற்கும் உலக கோப்பை ஆக்கி போட்டி புவனேஸ்வரத்தில் இன்று தொடங்குகிறது. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை சந்திக்கிறது. #HockeyWorldCup2018 #India #SouthAfrica
    புவனேஸ்வரம்:

    உலக கோப்பை ஆக்கி போட்டி 1971-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. ஸ்பெயினில் நடந்த தொடக்க போட்டியில் பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. அடுத்த 2 போட்டிகள் 2 ஆண்டுகள் இடைவெளியிலும், 4-வது போட்டி 3 ஆண்டுகள் இடைவெளியிலும் நடைபெற்றது.

    1978-ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை உலக கோப்பை ஆக்கி போட்டி நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக 2014-ம் ஆண்டு நெதர்லாந்தில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது.



    14-வது உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) தொடங்கி டிசம்பர் 16-ந் தேதி வரை நடக்கிறது.

    இதில் 16 நாட்டு அணிகள் கலந்து கொள்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு ஒலிம்பிக் சாம்பியன் அர்ஜென்டினா, நியூசிலாந்து, ஸ்பெயின், பிரான்ஸ் அணிகளும், ‘பி’ பிரிவில் நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் இடத்தில் உள்ளதுமான ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அயர்லாந்து, சீனா அணிகளும், ‘சி’ பிரிவில் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள பெல்ஜியம், 5-வது இடத்தில் இருக்கும் இந்தியா, கனடா, தென்ஆப்பிரிக்கா அணிகளும், ‘டி’ பிரிவில் நெதர்லாந்து, ஜெர்மனி, மலேசியா, பாகிஸ்தான் அணிகளும் இடம் பிடித்துள்ளன.

    ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் இடம் பிடித்துள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை லீக் ஆட்டத்தில் மோதும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தை பிடிக்கும் அணிகள் நேரடியாக கால்இறுதிக்கு முன்னேறும். கடைசி இடம் பெறும் அணிகள் கால்இறுதி வாய்ப்பை இழந்து வெளியேறும்.

    ஒவ்வொரு பிரிவிலும் 2-வது, 3-வது இடத்தை பிடிக்கும் அணிகள் 2-வது சுற்றில் கிராஸ் ஓவர் முறையில் மற்ற பிரிவில் 2-வது, 3-வது இடத்தை பெறும் அணியுடன் ஒரு ஆட்டத்தில் மோதும். இதில் வெற்றி பெறும் 4 அணிகள் கால்இறுதிக்குள் நுழையும். வருகிற 9-ந் தேதியுடன் லீக் ஆட்டம் முடிவடைகிறது. 2-வது சுற்று ஆட்டங்கள் வருகிற 10, 11-ந் தேதிகளில் நடக்கிறது. வருகிற 12, 13-ந் தேதிகளில் கால்இறுதி ஆட்டமும், வருகிற 15-ந் தேதி அரைஇறுதி ஆட்டமும், வருகிற 16-ந் தேதி இறுதிப்போட்டியும் நடை பெறுகிறது.

    மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி 43 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் உலக கோப்பை உச்சி முகர்ந்து இழந்த பெருமையை மீட்டெடுக்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். 8 முறை ஒலிம்பிக் சாம்பியனான இந்திய அணி உலக கோப்பையை ஒரு முறை மட்டுமே வென்றுள்ளது. 1975-ம் ஆண்டு கோலாலம்பூரில் நடந்த உலக கோப்பை போட்டியில் அஜித் பால்சிங் தலைமையிலான இந்திய அணி இறுதிப்போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. அதன் பிறகு இந்திய அணி உலக கோப்பை போட்டியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதிகபட்சமாக 5-வது இடத்தையே பெற்றுள்ளது. கடந்த போட்டியில் இந்திய அணி 9-வது இடத்தை பிடித்தது.

    இந்த உலக கோப்பை போட்டி தொடரில், தொடர்ந்து 2 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, ஒலிம்பிக் சாம்பியன் அர்ஜென்டினா, நெதர்லாந்து, ஜெர்மனி, பெல்ஜியம் ஆகியவை இந்திய அணிக்கு கடும் சவாலாக இருக்கும். இந்திய அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்களும், துடிப்பு மிக்க இளம் வீரர்களும் சம அளவில் இடம் பிடித்துள்ளனர். 2016-ம் ஆண்டு ஜூனியர் உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பிடித்து இருந்த 7 இளம் வீரர்கள் இந்த உலக கோப்பை போட்டிக்கான அணியில் இடம் பெற்றுள்ளனர். தடுப்பு ஆட்டத்தில் கொஞ்சம் அதிக கவனம் செலுத்தினால் இந்திய அணி சாதிக்க வாய்ப்பு உள்ளது. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் இந்திய அணி புதிய வரலாறு படைக்குமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

    உலக கோப்பை போட்டியையொட்டி ஒடிசா மாநிலம் விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்த போட்டிக்காக ஒடிசா மாநில அரசு ஏறக்குறைய ரூ.82 கோடி செலவிட்டுள்ளது. போட்டி நடைபெறும் ஸ்டேடியம் மற்றும் வீரர்கள் தங்கும் இடத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    தொடக்க நாளான இன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில் பெல்ஜியம்-கனடா (மாலை 5 மணி), இந்தியா-தென்ஆப்பிரிக்கா (இரவு 7 மணி) அணிகள் மோதுகின்றன. போட்டி நடைபெறும் ஸ்டேடியம் 15 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வசதி கொண்டதாகும். முதல் நாள் போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டன. இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷன் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

    உலக கோப்பை ஆக்கி போட்டி இந்தியாவில் நடைபெறுவது இது 3-வது முறையாகும். 1982-ம் ஆண்டு மும்பையில் நடந்த போட்டியில் இந்தியா 5-வது இடமும், 2010-ம் ஆண்டு டெல்லியில் நடந்த போட்டியில் இந்தியா 8-வது இடமும் பெற்றது.  #HockeyWorldCup2018 #India #SouthAfrica
    ×