search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "oneday cricket"

    பாகிஸ்தானுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் ஜானி பேர்ஸ்டோவின் அதிரடி சதத்தால் 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது.
    இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று பிரிஸ்டோலில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, களமிறங்கிய பாகிஸ்தான் 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 358 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் இமாம்-உல்-ஹக் 131 பந்தில் 151 ரன்கள் குவித்தார். இதன்மூலம் இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் குவித்த பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை பெற்றார். ஆசிப் அலி அரை சதமடித்தார்.

    இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டுகளும், டாம் குர்ரான் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.



    இதையடுத்து, 359 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோவ் இருவரும் சிறப்பாக ஆடினர். 

    ஜேசன் ராய் 76 ன்ரனில் அவுட்டானார். தொடர்ந்து அதிரடியாக ஆடிய பேர்ஸ்டோவ் சதமடித்து அசத்தினார். அவர் 128 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    தொடர்ந்து இறங்கிய ஜோ ரூட், மொயின் அலி ஆகியோர் பொறுப்புடன் ஆட இங்கிலாந்து அணி 44.5 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 359 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 2-0 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது.
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்திய மண்ணில் ஆஸ்திரேலியா அணி முதல் முறையாக ஒருநாள் தொடரை கைப்பற்றியது #INDvAUS
    இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி டெல்லியில் நடைபெற்றது. ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.

    அந்த அணியின் உஸ்மான் கவாஜா, ஆரோன் பிஞ்ச் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் 76 ரன்னாக இருக்கும்போது ஆரோன் பிஞ்ச் 27 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

    அடுத்து கவாஜா உடன் ஹேண்ட்ஸ்காம்ப் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமாக விளையாடியது. 102 பந்தில் 10 பவுண்டரி, 2 சிக்சருடன் கவாஜா சதம் அடித்தார். இந்தத் தொடரில் அவரின் 2-வது சதம் இதுவாகும். அவர் 104 ரன்னில் ஆட்டமிழந்தார். ஹேண்ஸ்ட்காம்ப் 52 ரன்னில் வெளியேறினார். இறுதியில், ஆஸ்திரேலியா 9 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் சேர்த்தது. 

    இந்திய அணி சார்பில் புவனேஸ்வர் குமார் 3 விக்கெட்டும், முகமது ஷமி மற்றும் ஜடேஜா தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 273 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு இந்தியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் இறங்கினர்.

    தவான் 12 ரன்னில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார். அடுத்து இறங்கிய விராட் கோலி 20 ரன்னில் அவுட்டானார். ரிஷப் பந்த் 16 ரன்னிலும், விஜயசங்கர் 16 ரன்னிலும் வெளியேறினர்.



    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலு ரோகித் சர்மா நிதானமாக ஆடி அரை சதமடித்தார். அவர் 56 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து இறங்கிய கேதார் ஜாதவும்,  7வது விக்கெட்டுக்கு இறங்கிய புவனேஸ்வர் குமாரும் நிலைத்து நின்று ஆடினர். இந்த ஜோடி 91 ரன்கள் சேர்த்தது. புவனேஸ்வர் குமார் 46 ரன்னிலும், கேதார் ஜாதவ் 44 ரன்னிலும் வெளியேற இந்தியாவின் தோல்வி உறுதியானது.

    இறுதியில், இந்தியா 237 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, ஆஸ்திரேலிய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா சார்பில் சம்பா 3 விக்கெட்டும், கம்மின்ஸ், ரிச்சர்ட்சன், ஸ்டோனிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதன்மூலம், ஆஸ்திரேலிய அணி ஒருநாள் தொடரை 3 - 2 என்ற கணக்கில் கைப்பற்றியது. #INDvAUS
    டேராடூனில் நடைபெற்ற 5-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது அயர்லாந்து. #AFGvIRE
    ஆப்கானிஸ்தான் - அயர்லாந்து இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் உள்ள டேராடூனில் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றது. 2-வது போட்டி மழையால் கைவிடப்பட்டது. 3வது போட்டியில் அயர்லாந்தும், 4வது போட்டியில் ஆப்கானிஸ்தானும் வெற்றி பெற்றது.

    இந்நிலையில் இன்று 5-வது போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற அயர்லாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி ஆப்கானிஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. அணி கேப்டன் அஷ்கர் ஆப்கன் பொறுப்புடன் ஆடி 82  ரன்னில் காயமடைந்து வெளியேறினார். அவருக்கு அடுத்தபடியாக, மொகமது நபி 40 ரன்னும், ரஷித் கான் 35 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 216 ரன்கள் எடுத்தது.
     
    அதன்பின்னர் 217 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து களம் இறங்கியது. தொடக்க வீரரான பால் ஸ்டிரிங் 70 ரன்னும், 3-வதாக இறங்கிய ஆன்டி பால்பிரைனி 68 ரன்கள் அடித்தனர். ஆட்டத்தின் கடைசியில் கெவின் ஓ பிரையன் 33 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெறச்செய்தார்.

    அயர்லாந்து 47.2 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் அடித்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் போட்டி தொடர் 2-2 என சமநிலையில் முடிந்தது. #AFGvIRE 
    மொகாலில் நடைபெற்ற 4-வது ஒருநாள் போட்டியில் ஹேண்ட்ஸ்கோம்ப், டர்னர் அதிரடியில் ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. #INDvAUS #Rohitsharma #ShikarDhawan #PeterHandscomb #AshtonTurner
    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 20 ஓவர் தொடரை ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இதுவரை நடந்த 3 ஆட்டத்தின் முடிவில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
     
    இந்நிலையில், இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது ஒருநாள் போட்டி மொகாலியில் இன்று நடைபெற்று வருகிறது.

    டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் களமிறங்கினர்.

    இருவரும் முதலில் இருந்தே அதிரடியாக ஆடினர். அதனால் இந்தியாவின் ரன் வேகம் அதிகரித்து வந்தது. இருவரும் எளிதில் அரை சதம் கடந்தனர்.

    அணியின் எண்ணிக்கை 193 ரன்னாக இருக்கும்போது ரோகித் சர்மா அவுட்டானார். அவர் 92 பந்துகளில் 2 சிக்சர், 7 பவுண்டரியுடன் 95 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த போட்டியில் முதல் விக்கெட்டுக்கு ரோகித், தவான் ஜோடி 193 ரன்கள் எடுத்ததும் சாதனையாகும்.



    அடுத்து இறங்கிய கே.எல்.ராகுல் தவானுக்கு ஒத்துழைப்பு அளித்தார். ஷிகர் தவான் அதிரடியாக ஆடி சதம் கடந்தார். சிறப்பாக ஆடிய ஷிகர் தவான் 115 பந்துகளில் 3 சிக்சர், 18 பவுண்டரியுடன் 143 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    அவரை தொடர்ந்து கே.எல்.ராகுல் 26 ரன்னிலும், விராட் கோலி 7 ரன்னிலும், ரிஷப் பந்த் 36 ரன்னிலும் விஜய்சங்கர் 26 ரன்னிலும் அவுட்டாகினர்.

    இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 358 ரன்கள் எடுத்துள்ளது.

    ஆஸ்திரேலியா சார்பில் பாட் கம்மின்ஸ் 5 விக்கெட்டும், ரிச்சர்ட்சன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, 359 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது.

    தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் பின்ச் ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட்டானார். அடுத்து இறங்கிய ஷான் மார்ஷ் 6 ரன்னில் வெளியேறினார். இதனால் 2 விக்கெட்டுக்கு 12 ரன்கள் எடுத்து தத்தளித்தது.

    அடுத்து இறங்கிய பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் உஸ்மான் கவாஜாவுடன் இணைந்து நிதானமாக ஆடினார். இருவரும் இணைந்து 192 ரன்கள் சேர்த்தனர். கவாஜா 91 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய மேக்ஸ்வெல் 23 ரன்னில் அவுட்டானார்.

    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் ஹேண்ட்ஸ்கோம்ப் சதமடித்து அசத்தினார். அவர் 117 ரன்களில் வெளியேறினார்.

    அவருக்கு அடுத்து இறங்கிய ஆஷ்டன் டர்னர் அதிரடியில் மிரட்டினார். இவர் 43 பந்துகளில் 6 சிக்சர், 5 பவுண்டரியுடன் 84 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார்.

    இதனால் ஆஸ்திரேலியா அணி 47.5 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 359 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதையடுத்து ஒருநாள் தொடரில் இரு அணிகளும் 2-2 என சமனிலை வகிக்கின்றன. #INDvAUS #Rohitsharma #ShikarDhawan #PeterHandscomb #AshtonTurner
    மொகாலில் இன்று நடைபெற்ற 4-வது ஒருநாள் போட்டியில் 2 சிக்சர்கள் அடித்து டோனியின் சாதனையை ரோகித் சர்மா முறியடித்தார். #INDvAUS #Rohitsharma #MSDhoni
    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 20 ஓவர் தொடரை ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இதுவரை நடந்த 3 ஆட்டத்தின் முடிவில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
     
    இந்நிலையில், இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது ஒருநாள் போட்டி மொகாலியில் இன்று நடைபெற்றது.

    இன்றைய ஆட்டத்தின் ஆரம்பத்தில் ரோகித் சர்மா 216 சிக்சர்கள் அடித்து 2-வது இந்தியராக இருந்தார். டோனி இந்தியாவுக்காக 217 சிக்சர்கள் அடித்துள்ளார்.

    இன்றைய ஆட்டத்தில் ரோகித் சர்மா 92 பந்துகளில் 2 சிக்சர், 7 பவுண்டரியுடன் 95 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இந்த போட்டியில் ரோகித் சர்மா 2 சிக்சர்கள் அடித்தார். இதனால் எம்.எஸ்.டோனியை முந்தி முதல் இடத்தை பிடித்துள்ளார்.

    இரண்டாம் இடத்தில் டோனி 217 சிக்சர்களுடனும், அடுத்து தெண்டுல்கர் 195 சிக்சர்களுடனும், கங்குலி 189 சிக்சர்களுடனும், யுவராஜ் சிங் 153 சிக்சர்களுடனும் அதற்கு அடுத்த நிலையில் உள்ளனர். #INDvAUS #Rohitsharma #MSDhoni
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில், இந்திய அணியின் ரோகித் சர்மா ஷிகர் தவான் ஜோடி பார்ட்னர்ஷிப்பில் சாதனை படைத்துள்ளது. #INDvAUS #Rohitsharma #ShikarDhawan
    இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டி மொகாலியில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. 

    ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். கடந்த சில போட்டிகளாக இந்திய அணியின் தொடக்கம் சரியாக அமையவில்லை.

    இந்நிலையில், இந்திய அணி 12வது ரன்னை அடித்த போது ரோகித், தவான் ஜோடி 4 ஆயிரத்து 389 ரன்களை சேர்த்தது. இந்த ஜோடி சச்சின் - சேவாக் ஜோடியின் முந்தைய பார்ட்னர்ஷிப்பை கடந்து இரண்டாவது இடத்துக்கு முன்னேறியது.

    இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் விக்கெட்டுக்கு ரோகித், தவான் ஜோடி 193 ரன்கள் எடுத்ததும் சாதனையாகும்.

    பார்ட்னர்ஷிப் முதல் இடத்தில் சச்சின் - கங்குலி ஜோடி 8 ஆயிரத்து 227 ரன்களை எடுத்து முதல் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. #INDvAUS #Rohitsharma #ShikarDhawan
    பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி கேப்டவுனில் இன்று நடக்கிறது. #Pakistan #SouthAfrica #SAvPAK
    கேப்டவுன்:

    தென்ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதுவரை நடந்துள்ள 4 ஆட்டங்களில் இரு அணிகளும் தலா 2-ல் வெற்றி கண்டுள்ளன.

    இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையே தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி கேப்டவுனில் இன்று நடக்கிறது. முந்தைய ஆட்டத்தில் வெறும் 164 ரன்னில் அடங்கிய பிளிஸ்சிஸ் தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணி இன்றைய ஆட்டத்தில் எழுச்சி பெற வேண்டிய நெருக்கடியில் உள்ளது. கடந்த வாரம் உள்ளூர் முதல்தர போட்டியில் சதம் அடித்து கலக்கிய ஆல்-ரவுண்டர் வியான் முல்டெர் தென்ஆப்பிரிக்க அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். அவர் களம் காண வாய்ப்புள்ளது.

    அதே சமயம் 4-வது ஆட்டத்தில் கிடைத்த வெற்றியால் பாகிஸ்தான் வீரர்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அகமதுவுக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதால் இந்த ஆட்டத்திலும் அந்த அணியை சோயிப் மாலிக் வழிநடத்துவார். மொத்தத்தில் சவால்மிக்க இரு அணிகள் மல்லுகட்டுவதால்ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி இ.எஸ்.பி.என். சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. #Pakistan #SouthAfrica #SAvPAK
    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் இமாம் உல் ஹக்கின் பொறுப்பான ஆட்டத்தால் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. #SAvPAK #Usmankhan #imamUlHaq
    ஜோகனஸ்பெர்க்:

    தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் போட்டி ஜோகனஸ்பர்கில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆம்லாவும், டி காக்கும் களமிறங்கினர். ஆம்லாவும் டு பிளசிசும் பொறுப்புடன் ஆடினர். ஆம்லா 59 ரன்னிலும், டு பிளசிஸ் 57 ரன்னிலும் அவுட்டாகினர். மற்ற வீரர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை. இதனால், தென் ஆப்பிரிக்கா அணி 41 ஓவரில் 164 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

    பாகிஸ்தான் சார்பில் உஸ்மான் கான் 4 விக்கெட்டும், ஷஹீன் அப்ரிதி, ஷதாப் கான் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.



    இதையடுத்து, 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் ஆடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக 
    இமாம் உல் ஹக்கும், பகர் சமானும் இறங்கினர்.

    அணியின் எண்ணிக்கை 70 ஆக இருந்தபோது பகர் சமான் 44 ரன்களில் அவுட்டானார். சிறப்பாக ஆடிய இமாம் உல் ஹக் அரை சதமடித்து அசத்தினார். அவர் 71 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில் பாகிஸ்தான் அணி 31.3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 168 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. பாபர் அசாம் 41 ரன்னுடன் அவுட்டாகாமல் இருந்தார். இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் தொடர் 2 - 2 என சமனிலை வகிக்கிறது. #SAvPAK #Usmankhan #imamUlHaq
    பாகிஸ்தானுக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் உஸ்மான் கான் பந்துவீச்சில் சிக்கிய தென் ஆப்பிரிக்கா அணி 164 ரன்னில் சுருண்டது. #SAvPAK #Usmankhan
    ஜோகனஸ்பெர்க்:

    பாகிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையே 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடந்த மூன்று போட்டிகளில் 2 - 1 என தென் ஆப்பிரிக்கா அணி முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் போட்டி ஜோகனஸ்பர்கில் இன்று நடைபெற்று வருகிறது.

    டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆம்லாவும், டி காக்கும் களமிறங்கினர்.

    ஆம்லாவும் டு பிளசிசும் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தனர். ஆம்லா 59 ரன்னிலும், டு பிளசிஸ் 57 ரன்னிலும் அவுட்டாகினர்.

    மற்ற வீரர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை. இதனால், தென் ஆப்பிரிக்கா அணி 41 ஓவரில் 164 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

    பாகிஸ்தான் சார்பில் உஸ்மான் கான் 4 விக்கெட்டும், ஷஹீன் அப்ரிதி, ஷதாப் கான் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். #SAvPAK #Usmankhan
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் எம்எஸ் டோனியின் ஆட்டம் மிகவும் அருமையாக அமைந்திருந்தது என கேப்டன் விராட் கோலி பாராட்டியுள்ளார். #AUSvIND #ViratKohli #MSDhoni #HappyPongal2019
    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று அடிலெய்டில் நடைபெற்றது.

    டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஷான் மார்ஷின் அபாரமான சதத்தால் ஆஸ்திரேலியா 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 298 ரன்கள் எடுத்தது.

    தொடர்ந்து ஆடிய இந்தியாவில் கேப்டன் விராட் கோலியின் பொறுப்புடன் ஆடினார். அவருக்கு எம்.எஸ்.டோனி ஒத்துழைப்பை தந்தார். கோலி ஒருநாள் போட்டிகளில் 39வது சதமடித்து அசத்தினார். இவர் 2 சிக்சர், 5 பவுண்டரிகள் உள்பட 104 ரன்களை எடுத்து அவுட்டானார். அவருக்கு பிறகு டோனி நிலைத்து நின்று அரை சதமடித்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார்.



    இந்நிலையில், இந்தியாவின் வெற்றி குறித்து கேப்டன் விராட் கோலி கூறுகையில், எம்.எஸ்.டோனி மிகவும் அருமையாக விளையாடினார். அவர் என்ன நினைக்கிறார் என்பது அவருக்கு மட்டும் தான் தெரியும். இன்றைய போட்டி எங்களுக்கு மிகவும் சிறப்பானது என பாராட்டு தெரிவித்துள்ளார். #AUSvIND #ViratKohli #MSDhoni #HappyPongal2019
    ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலியின் அபாரமான சதத்தால் இந்தியா வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது. #AUSvIND #ViratKohli #HappyPongal2019
    அடிலெய்டு: 

    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று அடிலெய்டில் தொடங்கியது.

    டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது, பின்ச் 6 ரன்னிலும், அலெக்ஸ் கேரி 18 ரன்னிலும், கவாஜா 21 ரன்னிலும் வெளியேறினார். பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப் 20 ரன்னில் அவுட் ஆனார். ஸ்டாய்னிஸ் 29 அவுட்டானார். 

    ஷான் மார்ஷ் அபாரமாக ஆடி சதமடித்தார். இவருக்கு மேக்ஸ்வெல் ஒத்துழைப்பு அளித்தார். மேக்ஸ்வெல் 48 ரன்னில் வெளியேறினார். பொறுப்புடன் ஆடிய ஷான் மார்ஷ் 131 ரன்களில் அவுட்டானார். இறுதியில், ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுக்கு 298 ரன்கள் எடுத்தது.

    இந்தியா சார்பில் புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்டும், முகமது ஷமி 3 விக்கெட்டும், ரவீந்திர ஜடேஜா 1 விக்கெட்டும் எடுத்தனர்.



    இதையடுத்து, 299 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. ரோகித் சர்மாவும் ஷிகர் தவானும் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆடினர்.

    அணியின் எண்ணிக்கை 47 ஆக இருக்கும்போது ஷிகர் தவான் 32 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய விராட் கோலி ரோகித்துடன் ஜோடி சேர்ந்தார். இவர்கள் 54 ரன்கள் சேர்த்த நிலையில், 43 ரன்னில் ரோகித் வெளியேறினார்.

    அதன்பின் இறங்கிய அம்பதி ராயுடு 24 ரன்னில் அவுட்டானார். அப்போது, இந்தியா 3 விக்கெட்டுக்கு 160 ரன்கள் எடுத்திருந்தது.

    அடுத்து இறங்கிய எம்.எஸ்.டோனி கோலிக்கு ஒத்துழைப்பு அளித்தார். கேப்டன் விராட் கோலி பொறுப்புடன் ஆடி ஒருநாள் போட்டிகளில் 39வது சதமடித்தார். இவர் 2 சிக்சர், 5 பவுண்டரிகள் உள்பட 104 ரன்களை எடுத்து அவுட்டானார்.

    அவரை தொடர்ந்து இறங்கிய தினேஷ் கார்த்திக்கும் டோனியும் பொறுப்புடன் ஆடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். டோனி அரை சதமடித்து அசத்தினார்.

    இறுதியில், இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இந்த வெற்றி மூலம் ஒருநாள் தொடர் 1 - 1 என சமனில் உள்ளது. #AUSvIND #ViratKohli #HappyPongal2019
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் விராட் கோலி பொறுப்பாக ஆடி சதமடித்து அசத்தினார். #AUSvIND #ViratKohli #HappyPongal2019
    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று அடிலெய்டில் தொடங்கியது.

    டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஷான் மார்ஷின் அபாரமான சதத்தால் ஆஸ்திரேலியா 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 298 ரன்கள் எடுத்தது.

    இதையடுத்து, 299 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. ரோகித் சர்மா 43 ரன்னிலும், ஷிகர் தவான் 32 ரன்னிலும் அவுட்டாகினர்.அம்பதி ராயுடு 24 ரன்னில் வெளியேறினார்.

    விக்கெட்டுகள் ஒருபுறம் வீழ்ந்தாலும் கேப்டன் விராட் கோலி பொறுப்புடன் ஆடினார். அவருக்கு எம் எஸ் டோனி ஒத்துழைப்பை தந்தார்.

    இந்நிலையில், விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் 39வது சதமடித்து அசத்தினார். இவர் 108 பந்துகளில் 2 சிக்சர், 5 பவுண்டரிகள் உள்பட 104 ரன்களை எடுத்து அவுட்டானார். #AUSvIND #ViratKohli #HappyPongal2019
    ×