என் மலர்
செய்திகள்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி - விராட் கோலி அபார சதம்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் விராட் கோலி பொறுப்பாக ஆடி சதமடித்து அசத்தினார். #AUSvIND #ViratKohli #HappyPongal2019
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று அடிலெய்டில் தொடங்கியது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஷான் மார்ஷின் அபாரமான சதத்தால் ஆஸ்திரேலியா 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 298 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து, 299 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. ரோகித் சர்மா 43 ரன்னிலும், ஷிகர் தவான் 32 ரன்னிலும் அவுட்டாகினர்.அம்பதி ராயுடு 24 ரன்னில் வெளியேறினார்.
விக்கெட்டுகள் ஒருபுறம் வீழ்ந்தாலும் கேப்டன் விராட் கோலி பொறுப்புடன் ஆடினார். அவருக்கு எம் எஸ் டோனி ஒத்துழைப்பை தந்தார்.
இந்நிலையில், விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் 39வது சதமடித்து அசத்தினார். இவர் 108 பந்துகளில் 2 சிக்சர், 5 பவுண்டரிகள் உள்பட 104 ரன்களை எடுத்து அவுட்டானார். #AUSvIND #ViratKohli #HappyPongal2019
Next Story






