search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Suryakumar Yadav"

    • சூர்யகுமார் யாதவுக்கு பதிலாக சஞ்சு சாம்சனை முயற்சித்து பார்க்க வேண்டும் என்று முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் கருத்து தெரிவித்தார்.
    • சூர்யகுமார் யாதவை 7-வது வரிசையில் இறக்கியதற்கு சில காரணங்கள் இருந்திருக்க வேண்டும்.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணி பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ், 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

    ஆனால் ஒருநாள் போட்டியில் அவர் தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 ஒருநாள் போட்டியிலும் சூர்யகுமார் யாதவ் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். இந்த ஆட்டங்களில் முதல் பந்திலேயே ஆட்டம் இழந்தார். இதனால் அவர் கடும் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறார்.

    ஒருநாள் போட்டியில் சூர்யகுமார் யாதவுக்கு பதிலாக சஞ்சு சாம்சனை முயற்சித்து பார்க்க வேண்டும் என்று முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் கருத்து தெரிவித்தார். இதே போல் சில முன்னாள் வீரர்களும் எதிர்ப்பு தெரி வித்து இருக்கிறார்கள்.

    இந்த நிலையில் சூர்ய குமார் யாதவுக்கு இந்திய முன்னாள் கேப்டன் கபில் தேவ் ஆதரவு தெரிவித்து உள்ளார்.

    சூர்யகுமார் போன்ற திறமையான வீரரை ஆதரிப்பதன் மூலம் அணி நிர்வாகம் சரியானதை செய்வதாக நான் கருதுகிறேன். நன்றாக விளையாடிய வீரருக்கு எப்போதும் அதிக வாய்ப்புகள் கிடைக்கும்.

    சூர்யகுமார் யாதவை சஞ்சு சாம்சனுடன் ஒப்பிடாதீர்கள். இது சரியானதல்ல. சஞ்சுசாம்சன் மோசமாக செயல்பட்டால் வேறுயாரையாவது பற்றி பேசுவீர்கள். அணி நிர்வாகம் சூர்யகுமார் யாதவை ஆதரிக்க முடிவு செய்திருந்தால் அவருக்கு அதிக வாய்ப்புகள் வழங்க வேண்டும். மக்கள் தங்களது கருத்துக்களை தெரிவிப்பார்கள். ஆனால் இறுதி முடிவு நிர்வாகத்தின் கையில் தான் உள்ளது.

    ஒருநாள் போட்டியில் பேட்டிங் வரிசையை மாற்றுவது ஒன்றும் புதிதல்ல. சூர்யகுமார் யாதவை 7-வது வரிசையில் இறக்கியதற்கு சில காரணங்கள் இருந்திருக்க வேண்டும். போட்டி முடிந்ததும் பேசுவது மிகவும் எளிதானது. சூர்யகுமார் யாதவை 7-வது வரிசையில் களம் இறக்கிய பின்னணியில் அவர் போட்டியை வெற்றிகரமாக முடிக்க வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தொடர்ந்து 3 ஒருநாள் போட்டிகளில் டக்கில் வெளியேறிய 6-வது இந்திய வீரர் என்ற மோசமான சாதனையை இவர் படைத்திருக்கிறார்.
    • சச்சின் டெண்டுல்கர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தொடர்ந்து 3 முறை டக் அவுட்டில் வெளியேறியிருக்கிறார்.

    இந்தியா -ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்று முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 269 ரன்கள் எடுத்தது.

    இதையடுத்து 270 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடியது. முதல் விக்கெட்டுக்கு ரோகித் சர்மா, சுப்மன் கில் இருவரும் இணைந்து 65 ரன்கள் சேர்த்தனர். ரோகித் சர்மா 30 ரன்களில் ஆட்டமிழக்க, சுப்மன் கில் 37 பந்துகளில் ஆட்டமிழந்தார். விராட் கோலி தன் பங்கிற்கு 54 ரன்கள் சேர்த்துக் கொடுத்தார். ஹர்திக் பாண்டியா 40 ரன்னிலும், ஜடேஜா 18 ரன்னிலும், ஷமி 14 ரன்னிலும் வெளியேறினர். முதல் 2 ஒருநாள் போட்டிகளில் கோல்டன் டக் முறையில் வெளியேறிய சூர்யகுமார் யாதவ் இந்த போட்டியிலும் கோல்டன் டக்கில் வெளியேறி மோசமான சாதனை படைத்தார்.

    தொடர்ந்து 3 ஒருநாள் போட்டிகளில் கோல்டன் டக்கில் வெளியேறிய 6-வது இந்திய வீரர் என்ற மோசமான சாதனையை இவர் படைத்திருக்கிறார்.

    இதற்கு முன்னதாக இந்திய ஜாம்பவன் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் (1994 ஆம் ஆண்டு) ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தொடர்ந்து 3 முறை டக் அவுட்டில் வெளியேறியிருக்கிறார். அவர் மட்டுமின்றி அனில் கும்ப்ளே (1996 ஆம் ஆண்டு), ஜாகீர் கான் (2003-04), இஷாந்த் சர்மா (2010-11), ஜஸ்ப்ரித் பும்ரா (2017 - 2019) ஆகியோர் 3 ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து 3 முறை டக் அவுட்டில் ஆட்டமிழந்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • உலகக் கோப்பை மிகப்பெரிய போட்டி. இந்தியாவில் 9 நகரங்களில் நடக்கிறது.
    • சூர்யகுமார் யாதவ் நிறைய 20 ஓவர் கிரிக்கெட்டில் விளையாடி இருக்கிறார்.

    சென்னை:

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியையொட்டி இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) நடக்கிறது. அதற்கு முன்பாக உள்ளூரில் இந்த சீசனில் 9 ஒரு நாள் போட்டிகளில் விளையாட வேண்டி இருந்தது. அதில் 8 ஆட்டங்களில் விளையாடி விட்டோம். இன்றைய ஆட்டம் முடிந்ததும் நிறைய விஷயங்களில் எங்களுக்கு தெளிவு கிடைக்கும். அதை தொடர்ந்து வலுப்படுத்த வேண்டியது முக்கியம்.

    உலகக் கோப்பை மிகப்பெரிய போட்டி. இந்தியாவில் 9 நகரங்களில் நடக்கிறது. வெவ்வேறு சீதோஷ்ண நிலையில் ஆட வேண்டி இருப்பதால் தான் இப்போது பரிசோதனை முயற்சியாக ஆடும் லெவனில் பல்வேறு மாற்றங்களை செய்து களம் காணுகிறோம். நிலைமைக்கு தக்கபடி மாற்றம் செய்யும் வகையில் அணியில் வீரர்கள் வேண்டும். உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணிக்கு ஏறக்குறைய 17-18 வீரர்களை அடையாளம் கண்டு விட்டோம். அதில் சிலர் காயத்தில் இருந்து மீண்டு வர வேண்டி உள்ளது.

    துரதிர்ஷ்டவசமாக ஸ்ரேயாஸ் அய்யர் காயத்தால் இந்த தொடரில் விளையாட முடியாமல் போய் விட்டது. அனேகமாக 4-வது வரிசையில் அவருக்கு தான் அண்மை காலமாக அதிகமான வாய்ப்புகள் வழங்கப்பட்டது. இப்போது அவர் இல்லாததால் சூர்யகுமார் அந்த வரிசையில் ஆடுகிறார். முதல் இரு ஆட்டங்களிலும் சூர்யகுமார் 'டக்-அவுட்' ஆனாலும் உண்மையில் அவரது பார்ம் குறித்து கவலைப்படவில்லை. அவர் இரண்டு நல்ல பந்தில் தான் ஆட்டமிழந்தார். சூர்யகுமார் யாதவ் நிறைய 20 ஓவர் கிரிக்கெட்டில் விளையாடி இருக்கிறார். ஐ.பி.எல்.-ல் மட்டும் 10 ஆண்டுகள் விளையாடி உள்ளார். அதே சமயம் அவர் ஒரு நாள் கிரிக்கெட்டை அதிகமாக விளையாடியதில்லை. 50 ஓவர் கிரிக்கெட்டில் இப்போது தான் நிறைய கற்று வருகிறார். எனவே அவருக்கு போதுமான வாய்ப்புகளை வழங்கி பொறுமை காக்க வேண்டியது அவசியம். நிச்சயம் அவர் நல்ல நிலையை எட்டுவார்.

    இவ்வாறு டிராவிட் கூறினார்.

    • ஸ்டார்க் போன்ற வீரரை எதிர்கொள்வது சவாலான காரியம்தான்.
    • 3-வது போட்டியிலும் சூர்யகுமார் யாதவுக்கு வாய்ப்பு இருக்கிறதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    மும்பை:

    ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி சென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் வரும் புதன்கிழமை நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் வெல்லும் அணி தொடரையும் வெல்லும்.

    ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் முதல் பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டாகி விக்கெட்டை இழந்திருந்தார் சூர்யகுமார் யாதவ். ஆஸ்திரேலிய அணியின் ஸ்டார்க் வேகத்தில் இந்த தொடரில் இரண்டு முறையும் அவர் தனது விக்கெட்டை இழந்திருந்தார்.

    இந்நிலையில் 3-வது ஒருநாள் போட்டியில் சூர்யகுமாருக்கு பதிலாக சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் கருத்து தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-


    நாம் இந்த தொடரில் சூர்யகுமார் யாதவ் விக்கெட் இழந்த விதத்தை பார்த்து அவர் மீது அனுதாபம் கொண்டிருக்கலாம். மணிக்கு 145+ கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் இடது கை பந்துவீச்சாளரான ஸ்டார்க் போன்ற வீரரை எதிர்கொள்வது சவாலான காரியம்தான். அதில் சந்தேகம் இல்லை. அவர் ஸ்டம்பை அட்டாக் செய்ய பார்ப்பார். அது தெரிந்ததுதான். ஆனால், மீண்டும் சூர்யகுமார் அதனை எதிர்கொண்ட போது அதற்கு தயார் நிலையில் வந்திருக்க வேண்டும்.

    3-வது போட்டியில் அணி நிர்வாகம் அவருக்கு வாய்ப்பு கொடுக்கிறதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டி உள்ளது. அதே நேரத்தில் அணியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்கலாம். அது நிச்சயம் தவறான ஆப்ஷனாக அமையாது. அணியில் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவர் சிறப்பாக செயல்பட்டுள்ளார்.

    என்று வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார்.

    • சூர்யகுமார் யாதவ் திறமை வாய்ந்த வீரர்.
    • சூர்யகுமார் யாதவை 6-வது இடத்தில் களமிறக்க வேண்டும்.

    இந்தியா -ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணியும் 2-வது போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றுள்ளனர். இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி 22-ந் தேதி சென்னையில் நடக்க இருக்கிறது.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி 2-வது ஒரு நாள் போட்டியிலும் சூர்யகுமார் யாதவ் கோல்ட டக் முறையில் ஆட்டமிழந்தார். இதன் காரணமாக அவர் மீது விமர்சனம் எழுந்தது. மேலும், அவருக்குப் பதிலாக சஞ்சு சாம்சனை அணியில் சேர்க்க வேண்டும் என்றும் கருத்து எழுந்தது.

    இந்த நிலையில், சூர்யகுமார் யாதவ்விற்கு ஆதரவு தினேஷ் கார்த்திக் கருத்து தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:

    சூர்யகுமார் யாதவ் திறமை வாய்ந்த வீரர். அவரை அணியிலிருந்து நீக்குவதற்குப் பதிலாக அவர் களமிறங்கும் இடத்தை வேண்டுமென்றால் மாற்றலாம். ஹர்திக் பாண்டியா டாப் ஆர்டரில் களமிறங்கி விளையாட விருப்பம் கொண்டவர்.

    ஆதலால், அவருக்கு 4-வது இடம் கொடுத்துவிட்டு, சூர்யகுமார் யாதவை 6-வது இடத்தில் களமிறக்க வேண்டும். அவர் கடைசி 18 முதல் 20 ஓவர்களில் சிறப்பாக விளையாடுவார். ஆகையால் அதற்கேற்ப அவரை பயன்படுத்திக் கொண்டால் அணிக்கு நல்லது.

    என்று அவர் கூறியுள்ளார்.

    • முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து அய்யர் விலகியிருந்தார்.
    • 2-வது டெஸ்டில் அவர் இடம் பெறுவது அவரது உடற்தகுதி அறிக்கைக்கு உட்பட்டது என இந்திய வாரியத்தின் வட்டாரம் தெரிவித்துள்ளது.

    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் மோதவுள்ளது. முதலில் டெஸ்ட் தொடர் நடைபெறும். இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இந்த மாதம் 9-ம் தேதி நாக்பூரில் தொடங்க உள்ளது.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் ஐயர் விளையாடமாட்டார். முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இருந்து விலக வேண்டியிருந்தது. மேலும் அவரது மறுவாழ்வுக்காக பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார்.

    அவரது காயம் எதிர்பார்த்தபடி குணமடையவில்லை. மேலும் அவர் மீண்டும் கிரிக்கெட் விளையாட குறைந்தது இரண்டு வாரங்கள் ஆகும். அவர் நிச்சயமாக முதல் டெஸ்ட்டில் விளையாட முடியாது. இரண்டாவது டெஸ்டில் அவர் இடம் பெறுவது அவரது உடற்தகுதி அறிக்கைக்கு உட்பட்டது என்று இந்திய வாரியத்தின் வட்டாரம் தெரிவித்துள்ளது.

    இதனால் முதல் டெஸ்ட் போட்டியில் ஷ்ரேயாஸ் அய்யருக்கு பதிலாக டி20 கிரிக்கெட்டின் அதிரடி பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் விளையாட வாய்ப்பு இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது பேட்டிங்கை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

    • மைதானத்தின் தன்மை சற்று வித்தியாசமாக இருந்தது. அதனால் இறுதி வரை கொண்டு சென்று விளையாட வேண்டும் என்று நினைத்தேன்.
    • வாஷிங்டன் சுந்தர் ஆட்டம் இழந்ததும் நிச்சயம் ஒருவர் கடைசி வரை நிக்க வேண்டும் என்பதனாலேயே நான் இறுதிவரை களத்தில் நின்றேன்.

    இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டியில் இந்தியா கடைசி ஓவரில் த்ரில் வெற்றியை பெற்றது. இதனால் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது இந்தியா.

    இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்ற சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்த போட்டியில் வாஷிங்டன் ரன் அவுட் ஆனதற்கு நானே காரணம் என சூர்யகுமார் யாதவ் கூறினார்.

    இது குறித்து சூர்யகுமார் யாதவ் கூறியதாவது:-

    இன்றைய போட்டியில் நான் விளையாடிய விதம் மிகவும் வித்தியாசமாகவே இருந்தது. ஏனெனில் மைதானத்தில் உள்ள சூழ்நிலையை நாம் கருத்தில் கொண்டு விளையாட வேண்டியது அவசியம். அந்த வகையில் நான் இன்று பேட்டிங் செய்ய களமிறங்கும் போது மைதானத்தின் தன்மை சற்று வித்தியாசமாக இருந்தது. அதனால் இறுதி வரை கொண்டு சென்று விளையாட வேண்டும் என்று நினைத்தேன்.


    வாஷிங்டன் சுந்தர் ஆட்டம் இழந்ததும் நிச்சயம் ஒருவர் கடைசி வரை நிக்க வேண்டும் என்பதனாலேயே நான் இறுதிவரை களத்தில் நின்றேன். வாஷிங்டன் சுந்தர் ஆட்டம் இழந்தது முற்றிலுமாக என்னுடைய தவறுதான். அது கண்டிப்பாக ரன் கிடையாது. ஆனால் நான் பந்து எங்கு சென்றது என்று கவனிக்காமலே ஓடி வந்து அவர் ஆட்டமிழக்க காரணமாக அமைந்தேன்.

    இந்த மைதானத்தில் பேட்டிங் செய்வது மிகவும் கடினமாக இருந்தது. முதல் இன்னிங்சை விட இரண்டாவது இன்னிங்ஸில் பந்து அதிக அளவு திரும்பியது. எனவே பொறுமையாக இருந்து இறுதிவரை அணியை கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்தேன். அதேபோன்று இறுதி நேரத்தில் ஹார்டிக் பாண்டியா என்னிடம் வந்து கண்டிப்பாக இந்த பந்தில் உன்னால் போட்டியை ஃபினிஷிங் செய்ய முடியும் என்று எனக்கு தைரியத்தை அளித்தார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உலகில் பல்வேறு வீரர்கள் செய்ய முயற்சித்து வரும் விஷயங்களை சூர்யகுமார் அசால்ட்டாக செய்துவிடுகிறார்.
    • 2022-ம் ஆண்டு மட்டும் 31 டி20 போட்டிகளில் விளையாடிய 1,164 ரன்களை விளாசி ஐசிசி-யின் சிறந்த டி20 வீரர் என்ற விருதை பெற்றார்.

    மும்பை:

    இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரராக வலம் வருபவர் சூர்யகுமார் யாதவ். இவர் 2022-ம் ஆண்டு மட்டும் 31 டி20 போட்டிகளில் விளையாடிய 1,164 ரன்களை விளாசி ஐசிசி-யின் சிறந்த டி20 வீரர் என்ற விருதை பெற்றார்.

    டி20 கிரிக்கெட்டில் கலக்கிய சூர்யகுமார் யாதவ் அடுத்ததாக 50 ஓவர் கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்களிலும் தடம் பதித்து வருகிறார். நியூசிலாந்து தொடரில் முழுமையாக வாய்ப்பை பெற்ற சூர்யகுமார் யாதவ், அடுத்த மாதம் வரவுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் தேர்வாகியுள்ளார்.

    இந்நிலையில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சூர்யகுமார் யாதவை போல ஒரு வீரரை பார்த்ததே கிடையாது என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கிப் பாண்டிங் புகழ்ந்து தள்ளியுள்ளார்.

    இது குறித்து ரிக்கி பாண்டிங் கூறியதாவது:-

    ஆட்டத்தின் சிந்தனைகள், திறமைகளை வைத்து பார்த்தால் டி20 கிரிக்கெட்டில் சூர்யகுமார் யாதவை போல ஒரு வீரரை நான் பார்த்ததே இல்லை. உலகில் பல்வேறு வீரர்கள் செய்ய முயற்சித்து வரும் விஷயங்களை சூர்யகுமார் அசால்ட்டாக செய்துவிட்டு, அடுத்த சவால்களுக்கு சென்றுவிடுகிறார்.

    இந்தாண்டு ஐபிஎல் தொடரில் சூர்யகுமார் யாதவ் செய்வதை போலவே நிறைய வீரர்கள் செய்ய முயற்சிப்பார்கள் என நான் கேள்விப்பட்டு வருகிறேன். இது கேட்பதற்கே எவ்வளவு நன்றாக உள்ளது. 360 டிகிரியிலும் அடிக்கிறார் என நாம் பேசி வருகிறோம். ஆனால் விக்கெட் கீப்பருக்கு பின்னால் அவர் அடிக்கும் சிக்ஸர்கள், ஃபைன் லெக் திசையில் அடிக்கும் ஷாட்கள் அவரின் பெயரை கூறும் அளவிற்கு உள்ளது. 

    சூர்யகுமார் 5 - 6 ஆண்டுகளாக ஐபிஎல்-ல் விளையாடி வருகிறார். ஆனால் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு உடலை ஃபிட்டாக வைத்திருக்கிறார். இந்திய அணியில் விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், போன்று சூர்யகுமாரும் தரமான ஃபிட்னஸுடன் இருக்கிறார். இப்படியே இருந்தால் நிச்சயம் ஒரு அசைக்க முடியாத வீரராக உருவெடுப்பார் என ரிக்கிப் பாண்டிங் கூறியுள்ளார்.

    • டி20 வரலாற்றிலேயே சிறப்பான சாதனை படைத்துள்ளார் சூர்யகுமார் யாதவ் என ஐ.சி.சி. புகழாரம் சூட்டியுள்ளது.
    • ஒரு காலண்டர் ஆண்டில் டி20 சர்வதேச போட்டிகளில் இந்திய பேட்ஸ்மேன் 1000 ரன்களுக்கு மேல் எடுப்பது இதுவே முதல் முறையாகும்.

    மும்பை:

    2022ம் ஆண்டின் சிறந்த டி20 கிரிக்கெட் வீரருக்கான ஐ.சி.சி. விருதை இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் தட்டி சென்றார். டி20 வரலாற்றிலேயே சிறப்பான சாதனை படைத்துள்ளார் சூர்யகுமார் யாதவ் என ஐ.சி.சி. புகழாரம் சூட்டியுள்ளது.

    இவர் 2022-ம் ஆண்டில் 31 டி20 போட்டிகளில் விளையாடி 1164 ரன்கள் குவித்துள்ளார். 46.56 சராசரி மற்றும் 187.46 ஸ்ட்ரைக் ரேட்டில் இந்த ரன்களை எடுத்துள்ளார். ஒரு காலண்டர் ஆண்டில் டி20 சர்வதேச போட்டிகளில் இந்திய பேட்ஸ்மேன் 1000 ரன்களுக்கு மேல் எடுப்பது இதுவே முதல் முறையாகும். கடந்த ஆண்டில் சூர்யகுமார் யாதவ் 68 சிக்சர்களை விளாசியுள்ளார். 2 சதங்கள் மற்றும் 9 அரை சதங்களை பதிவு செய்துள்ளார்.

    மொத்தம் 45 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 1578 ரன்கள் குவித்துள்ளார். அதில் 3 சதங்களும் 13 அரை சதங்களும் அடங்கும்

    • டி20 கிரிக்கெட்டில் சூரியகுமார் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக வலம் வருகிறார்.
    • சூரியகுமார் போன்ற வீரர்கள் நூற்றாண்டுக்கு ஒருமுறை மட்டுமே வருவார்கள் என்றார் கபில்தேவ்.

    புதுடெல்லி:

    இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் 51 பந்துகளில் 7 பவுண்டரி, 9 சிக்சருடன் 112 ரன்கள் விளாசி பிரமிக்க வைத்தார்.

    இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் 'நம்பர் ஒன்' பேட்ஸ்மேனாக வலம் வரும் அவருக்கு, இந்திய முன்னாள் கேப்டன் கபில் தேவ் புகழாரம் சூட்டியுள்ளார். இதுதொடர்பாக கபில்தேவ் அளித்த பேட்டியில் கூறியதாவது:

    சூர்யகுமார் யாதவின் இன்னிங்சை விவரிக்க சில சமயம் வார்த்தைகளே கிடைக்காது. சச்சின் டெண்டுல்கர், ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்டோர் விளையாடுவதை பார்க்கும்போது, இவர்களை போன்ற ஒரு ஆட்டக்காரர் எப்போதாவது வருவார் என்று நாம் நினைப்போம். அந்த வரிசையில் இப்போது சூர்யகுமார் யாதவ் இணைந்து விட்டார் என்று நினைக்கிறேன்.

    சூர்யகுமார் யாதவ் கிரிக்கெட் விளையாடும் விதம் அற்புதம். குறிப்பாக 'பைன் லெக்' திசைக்கு மேல் அடிக்கும் சிக்சர்கள் பந்து வீச்சாளர்களை பயமுறுத்துகிறது. அவரால் நின்ற இடத்திலேயே 'மிட் ஆன்' மற்றும் 'மிட் விக்கெட்' திசையிலும் சிக்சர்கள் விரட்ட முடிகிறது. பந்து வீச்சாளர்கள் சரியான அளவில் பந்தை பிட்ச் செய்து வீசினாலும் அதையும் தெறிக்க விடுகிறார். அதனால் அவருக்கு எதிராக பவுலர்கள் சிறப்பாக செயல்படுவது கடினம்.

    எனது வாழ்நாளில் விவியன் ரிச்சர்ட்ஸ், சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங், டிவில்லியர்ஸ், விராட் கோலி உள்ளிட்ட சிறந்த பேட்ஸ்மேன்களின் ஆட்டத்தைப் பார்த்து இருக்கிறேன். ஆனால் ஒரு சிலரே சூர்யகுமார் போன்று பந்தை துல்லியமாக நொறுக்குகிறார்கள். அவருக்கு பாராட்டுகள். அவரை போன்ற வீரர்கள் நூற்றாண்டுக்கு ஒருமுறை மட்டுமே வருவார்கள் என தெரிவித்தார்.

    • ஒருவேளை அவர் பாகிஸ்தானியராக இருந்திருந்தால், 30 வயதுக்கு மேல் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் ஆட வாய்ப்பே பெற்றிருக்கமாட்டார்.
    • ரமீஸ் ராஜா இருந்தபோது 30 வயதுக்கு மேல் எந்த வீரரும் அறிமுகமாக முடியாது என்ற விதியை வகுத்திருந்தார்.

    சர்வதேச டி20 கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக சூர்யகுமார் யாதவ் வெறும் ஓராண்டில் வளர்ந்துள்ளார். மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்தை பறக்கவிடக்கூடிய வீரர் என்பதால் டிவில்லியர்ஸுக்கு பின் மிஸ்டர் 360 என அழைக்கப்படுபவர் சூர்யகுமார் யாதவ்.

    இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் கடைசி ஆட்டத்தில் சதம் விளாசி ஆட்டத்தின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். மேலும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 1500 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிய வீரர் என்ற சாதனையையும் படைத்தார். டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மாவுக்கு (4 சதங்கள்) அடுத்து 2-வது இடத்தில் இவர் உள்ளார். விரைவில் ரோகித் சர்மாவின் சாதனையை முறியடித்துவிடுவார் என எதிர் பார்க்கபடுகிறது.

    30 வயதில் இந்திய அணியில் முதல் முறையாக ஆட வாய்ப்பு பெற்றார். அதன்பின்னர் இந்த 2 ஆண்டில் மிகப்பெரிய வீரராக வளர்ந்திருக்கிறார்.

    இந்நிலையில், சூர்யகுமார் யாதவை வைத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தையும், அமைப்பையும் சல்மான் பட் கடுமையாக விமர்சித்துள்ளார்.

    இதுகுறித்து சல்மான் பட் பேசியதாவது:-

    சூர்யகுமார் யாதவ் 30 வயதுக்கு மேல் தான் சர்வதேச கிரிக்கெட்டில் ஆடவே தொடங்கினார் என படித்திருக்கிறேன். நல்வாய்ப்பாக சூர்யகுமார் யாதவ் இந்தியராக பிறந்துவிட்டார். ஒருவேளை அவர் பாகிஸ்தானியராக இருந்திருந்தால், 30 வயதுக்கு மேல் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் ஆட வாய்ப்பே பெற்றிருக்கமாட்டார்.

    பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவராக ரமீஸ் ராஜா இருந்தபோது 30 வயதுக்கு மேல் எந்த வீரரும் அறிமுகமாக முடியாது என்ற விதியை வகுத்திருந்தார்.

    என்று சல்மான் பட் பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பை கடுமையாக விமர்சித்தார்.

    • 20 ஓவர் போட்டிகளில் ஒரே ஆண்டில் 68 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.
    • இந்த ஆண்டில் இரு சதங்கள் மற்றும் ஒன்பது அரை சதங்களுடன், யாதவ் சிறந்த 20 ஓவர் பேட்ஸ்மேனாக திகழ்கிறார்.

    துபாய்:

    ஐசிசியின் இந்த ஆண்டின் சிறந்த டி20 கிரிக்கெட் வீரருக்கான விருதுக்கு இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். 2022 இல் முன்மாதிரியாக இருந்த வீரர்களான சிக்கந்தர் ராசா, சாம் குர்ரான் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோருடன் பரிந்துரைக்கப்பட்ட ஒரே இந்திய வீரர் சூர்யகுமார் மட்டுமே.

    சூர்யகுமார் யாதவ், 2022 ஆம் ஆண்டு ஆட்டத்தின் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஒரே வருடத்தில் 1000 ரன்களுக்கு மேல் எடுத்த இரண்டாவது பேட்ஸ்மேன் ஆவார். அவர் 187.43 என்ற அபத்தமான ஸ்டிரைக் ரேட்டில் 1164 ரன்களை எடுத்து, அதிக ரன் எடுத்தவராக இந்த ஆண்டை முடித்தார்.

    டி20 போட்டிகளில் ஒரே ஆண்டில் 68 சிக்ஸர்கள் அடித்துள்ளார். இந்த ஆண்டில் இரு சதங்கள் மற்றும் ஒன்பது அரை சதங்களுடன், யாதவ் சிறந்த 20 ஓவர் பேட்ஸ்மேனாக திகழ்கிறார்.

    கடந்த ஆண்டு ஐசிசி மகளிர் டி20 கிரிக்கெட் வீராங்கனை என்ற பெருமையை பெற்ற மந்தனா, குறுகிய வடிவிலான நிலைத்தன்மையை வெளிப்படுத்தினார்.

    இந்திய வீராங்கனைகளில் அதிவேகமாக அரைசதம் அடித்த வீராங்கனையாக மந்தனா திகழ்கிறார். (வெறும் 23 பந்துகளில்) அடித்து டி20களில் 2500 ரன்களை கடந்ததுள்ளார்.

    ×