search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "surgery"

    • நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள வீரணம்பாளையத்தை சேர்ந்தவர் சீரங்கன் ( 65). இவர் இடது முழங்கால் வலி காரணமாக தொடர்ந்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார்.
    • பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனையில் அனைத்து மூட்டு வலிக்கும் சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் இந்த வாய்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள வீரணம்பாளையத்தை சேர்ந்தவர் சீரங்கன் ( 65). இவர் இடது முழங்கால் வலி காரணமாக தொடர்ந்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் குணமாகவில்லை. இந்த நிலையில் பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனையில் முழங்கால் வலி காரணமாக மருத்துவ பரிசோதனைக்கு சென்றார். அவரை பரிசோதனை செய்த டாக்டர் கோகுல் தலைமையிலான குழுவினர் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்தனர். இதையடுத்து அரசு மருத்துவமனையில் உள்ள டாக்டர்கள் குழுவினர் சீரங்கனுக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனர். மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட சீரங்கன் நலமுடன் வீடு திரும்பியுள்ளார். பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனையில் அனைத்து மூட்டு வலிக்கும் சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் இந்த வாய்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

    • மாடியில் இருந்து தவறி கீழே விழுந்ததில் பலத்த அடிபட்டது.
    • கை, கால்கள் மீண்டும் செயல்பட்டு பழைய நிலைக்கு திரும்பி உள்ளார்.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி அடுத்த ஆசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் (40) கூலி தொழிலாளி. இவர் கடந்த ஜூன் மாதம் 16-ந் தேதி தனது வீட்டு மாடியில் இருந்து தவறி கீழே விழுந்ததில் பலத்த அடிபட்டு கழுத்து எலும்பில் முறிவு ஏற்பட்டு, முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு, கை, கால்கள் செயலிழந்து மயக்க நிலையில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அவருக்கு கல்லூரி டீன் கீதாஞ்சலி தலைமையில் எலும்பியல் துறை தலைவர் அறிவழகன் ,டாக்டர்கள் அஞ்சன் ராமச்சந்திரநாத், விக்ரம், பொன்னப்பன், மயக்கவியல் நிபுணர்கள் டாக்டர்கள் செந்தில்குமார், தோசிப் சுப்பிரமணியம், மணிகண்டன் மற்றும் செவிலியர்கள் கொண்ட மருத்துவ குழுவினர் கடந்த ஜூலை மாதம் 8-ந் தேதி முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை செய்து கழுத்து எலும்பில் பிளேட் பொரு த்தினர். இதையடுத்து தீவிர சிகிச்சை அளிக்க ப்பட்டதன் பேரில் தற்போது கை, கால்கள் மீண்டும் செயல்பட்டு பழைய நிலைக்கு திரும்பி உள்ளார். தற்பொழுது அவர் முழுமையாக குணமாகி எவ்வித துணையும் இன்றி தனியாக நடக்கின்றார்.

    இது போன்ற மருத்துவ சிகிச்சையை வெளியே தனியார் மருத்து வமனையில் செய்தால் ரூபாய் 3.5 லட்சம் செலவாகும்.மாவட்டத்தில் உள்ள ஏழை எளிய மக்கள் இது போன்ற அறுவை சிகிச்சைகளுக்கு அரசு மருத்துவமனையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கல்லூரி முதல்வர் கீதாஞ்சலி தெரிவித்தார். உண்டு உைறவிட டாக்டர் ரவிக்குமார், துணை உண்டு உறைவிட டாக்டர் வெங்கடேசன், நிர்வாக அலுவலர் சிங்காரம் மற்றும் அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள் குழுவினர் உடன் இருந்தனர்.

    • முகாமில் பங்கேற்றவர்களுக்கு இலவச கண் கண்ணாடி வழங்கும் விழா கடலூர் மஞ்சக்குப்பத்தில் நடைபெற்றது.
    • ஏற்பாடுகளை நிர்வாகிகள் சிவகுருநாதன், ராஜகுரு, சக்திவேல், முருகன், அமுதா செய்திருந்தனர்.

    கடலூர்:

    தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, தி.மு.க., சார்பில் கடலுார், மஞ்சக்குப்பம் வரதம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த இலவச கண் சிகிச்சை முகாமில் 10 பேருக்கு கண்புரை அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. முகாமில் பங்கேற்ற வர்களுக்கு இலவச கண் கண்ணாடி வழங்கும் விழா கடலூர் மஞ்சக்குப்பத்தில் நடைபெற்றது.விழாவிற்கு டாக்டர் பிரவீன் அய்யப்பன் தலைமை தாங்கினார். விழாவில் அய்யப்பன் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 100 பேருக்கு 1 லட்சம் ரூபாய்க்கு மேல் மதிப்பிலான கண் கண்ணாடிகளை வழங்கி னார். விழாவில், முன்னாள் மாவட்ட பொருளாளர் குணசேகரன், மாநகராட்சி கவுன்சிலர்கள் கீதா குண சேகரன், பிரகாஷ், சரத் தினகரன், தமிழரசன், சுமதி ரங்கநாதன், மகேஸ்வரி விஜயன், ராதிகா பிரேம்குமார், கீர்த்தனா ஆறுமுகம், பாரூக் அலி, கர்ணன், அரசு காண்டிராக்டர் ராஜசேகர், முன்னாள் ஊராட்சித் தலைவர் சுதாகர் ஆகியோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை நிர்வாகிகள் சிவகுருநாதன், ராஜகுரு, சக்திவேல், முருகன், அமுதா செய்திருந்தனர்.

    • ஒரு உறுப்புக்கு பதில் இன்னொரு உறுப்பை எடுத்து மாட்டும் அற்புதத்தை மருத்துவர்கள் நிகழ்த்துகிறார்கள்.
    • தசை பொருந்தாவிட்டால் விரல் அசையாது. ரத்த நாளம் வழியாக ரத்தம் சென்றால்தான் விரல் இயங்கும்.

    சென்னை:

    மருத்துவ துறையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை என்பது இயந்திரங்களின் பாகங்களை கழட்டி மாட்டுவது போல் மனிதர்களின் உறுப்புகளையும் கழட்டி பொருத்தி மருத்துவர்கள் சாதித்து வருகிறார்கள்.

    சிறுநீரகம், இதயம், கல்லீரல், கண் போன்ற உறுப்புகளில் மாற்று அறுவை சிகிச்சை சாதாரணமாகிவிட்டது. அதே போல் உடலில் அத்தியாவசிய தேவை எனும் போது ஒரு உறுப்புக்கு பதில் இன்னொரு உறுப்பை எடுத்து மாட்டும் அற்பு தத்தை மருத்துவர்கள் நிகழ்த்துகிறார்கள்.

    32 வயதான இளைஞர் ஒருவர் தான் பணிபுரியும் தொழிற்சாலையில் எந்திரத்தில் கை சிக்கியதில் வலது கை கட்டை விரலும், சுட்டு விரலும் துண்டித்து விழுந்தது.

    தனியாக துண்டிக்கப் பட்ட அந்த 2 விரல்களுடன் அந்த வாலிபர் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு சென்றுள்ளார். துண்டித்த விரலை எப்படியாவது பொருத்திவிடுவார் கள் என்ற நம்பிக்கையில் சென்றுள்ளார்.

    அந்த விரல்களை பரிசோதித்த மருத்துவமனையின் முடநீக்கியல் துறை அறுவை சிகிச்சை பிரிவு தலைவர் டாக்டர் சீனிவாசன் ராஜப்பா விரல்கள் சிதைந்து பொருத்த முடியாத நிலையில் இருந்ததை பார்த்துள்ளார்.

    அதே விரல்களை மீண்டும் பொருத்துவது சாத்தியமில்லை என்று கூறியிருக்கிறார்.

    ஆனால் வலது கையில் விரல்கள் அவசியம். அதிலும் கட்டை விரல் கட்டாயம் தேவை என்பதால் மாற்று வழிகள் பற்றி மருத்துவர்களிடம் அந்த வாலிபர் கேட்டுள்ளார்.

    அதற்கு கால் விரலை எடுத்து கையில் பொருத்த முடியும் என்று டாக்டர் ராஜப்பா கூறியிருக்கிறார். காலில் ஒரு விரலை எடுப்பதால் எந்த பாதிப்பும் இல்லை என்பதால் அதற்கு ஒத்துக் கொண்டார்.

    இதையடுத்து இந்த சிக்கலான உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை டாக்டர் சீனிவாசன் ராஜப்பா தலைமையிலான மருத்துவக் குழுவினர் தொடங்கினார்கள்.

    அந்த வாலிபரின் இடது காலின் 2-வது விரலை துண்டித்து எடுத்து கை கட்டை விரலாக பொருத்த முடிவு செய்தனர். திட்டமிட்டபடி அறுவை சிகிச்சை செய்து அந்த வாலிபரின் கட்டை விரலுக்கு பதில் கால் விரல் வெற்றிகரமாக பொருத்தப்பட்டு தற்போது அவர் நல்ல நிலையில் தனது வழக்கமான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்த அறுவை சிகிச்சை பற்றி டாக்டர் சீனிவாசன் ராஜப்பா கூறியதாவது:-

    இது மிகவும் சிக்கலான ரிஸ்க் நிறைந்த அறுவை சிகிச்சை. ஏனெனில் கால் விரல் பகுதியின் ரத்த நாளங்கள் மிகவும் நுண்ணியது. கிட்டத்தட்ட ஒரு தலைமுடி அளவு விட்டம் கொண்டது. அவற்றை துல்லியமாக கண்டறிந்து துண்டித்து கையில் மிக துல்லியமாக பொருத்த வேண்டும்.

    தசை பொருந்தாவிட்டால் விரல் அசையாது. ரத்த நாளம் வழியாக ரத்தம் சென்றால்தான் விரல் இயங்கும். எலும்பு பொருந்தினால்தான் பலம் இருக்கும். இல்லாவிட்டால் அடித்தளம் இல்லாத கட்டிடம் போல் ஆகிவிடும்.

    இத்தனை ரிஸ்க்கையும் சவாலாக ஏற்று மிக துல்லியமாக கால் விரலை துண்டித்து மருத்துவ நுண்ணோக்கியில் துல்லியமாக பார்த்து பார்த்து ரத்த நாளங்களை இணைத்தோம். 8 மணி நேரம் நடந்த இந்த ஆபரேசன் வெற்றிகரமாக முடிந்தது.

    விபத்து நேரிடும் போது உறுப்புகள் துண்டிக்க நேர்ந்தால் அதை சுத்தமான பிளாஸ்டிக் உரையில் வைத்து கட்டி, ஐஸ்கட்டிகள் நிரப்பிய பாத்திரத்தில் எடுத்து வர வேண்டும். துண்டிக்கப்பட்ட பாகங்களில் ஐஸ்கட்டியோ, தண்ணீரோ நேரடியாக படக்கூடாது. இந்த மாதிரி உறுப்புகளை மாற்றுவது சாத்தியமே.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாணவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து இருந்தார்.
    • ஸ்டான்லி மருத்துவமனை நிபுணர்கள் நெல்லையில் தங்கியிருக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரி பெருந்தெருவை சேர்ந்த பிளஸ்-2 மாணவர் சின்னதுரை மற்றும் அவரது சகோதரி சந்திரா செல்வி ஆகிய 2 பேரும், சக பள்ளி மாண வர்கள் உள்ளிட்ட கும்பலால் அரிவாளால் வெட்டப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த 2 பேருக்கும் நெல்லை அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்பேரில் நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் அமைச்சர்களும் நேரடியாக ஆஸ்பத்திரிக்கு வந்து மாணவருக்கு ஆறுதல் தெரிவித்து உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளனர்.

    நேற்று மதியம் மாணவர் சின்னத்துரையை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து டாக்டர்களிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்த அவர், மாணவர் சின்னத்துரையின் கையில் பலத்த வெட்டுக்காயங்கள் இருப்பதால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் மாணவரை இங்கிருந்து இடமாற்றம் செய்வதில் சிரமம் உள்ளதால், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து நிபுணர்கள் குழு வரவழைக்கப்பட்டு மாணவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து இருந்தார்.

    தொடர்ந்து அமைச்சரின் உத்தரவின்பேரில், ஸ்டான்லி மருத்துவமனை முதல்வர் பாலாஜியின் அறிவுறுத்தலின்படி இன்று சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து கை அறுவை சிகிச்சை செய்வதில் நிபுணத்துவம் பெற்ற 3 பேர் கொண்ட டாக்டர்கள் குழு விமானம் மூலம் தூத்துக்குடி வந்தனர். அங்கிருந்து நெல்லை அரசு மருத்துவமனைக்கு வரும் அந்த குழு, முதல் கட்டமாக மாணவருக்கு இதுவரை அளிக்கப்பட்டுள்ள சிகிச்சைகள் குறித்து விரிவாக கேட்டறிந்தனர்.

    அதன்பின்னர் மாணவரின் கையில் ஏற்பட்டுள்ள வெட்டு காயங்களின் தன்மை, தற்போதைய நிலை உள்ளிட்டவற்றை அறிந்து கை அறுவை சிகிச்சை செய்வது குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவருக்கு அறுவை சிகிச்சை முடியும் வரை ஸ்டான்லி மருத்துவமனை நிபுணர்கள் நெல்லையில் தங்கியிருக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    • மைனருக்கு சம்மதமின்றி பாலியல் அறுவை சிகிச்சை செய்வது, அந்த குழந்தையின் தனியுரிமை மற்றும் கண்ணியத்தை சீர்குலைக்கும் என்று ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.
    • ஒப்புதல் இல்லாமல் அறுவை சிகிச்சை செய்வது குழந்தையின் கண்ணியம் மற்றும் தனியுரிமையை மீறவதாகும்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தை சேர்ந்த ஒரு தம்பதி, தெளிவற்ற பிறப்புறுப்பு கொண்ட தங்களது 7 வயது குழந்தைக்கு பிறப்புறுப்பு மறுசீரமைப்பு அறுவை சிகிச்சைக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கேரள ஜகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

    அந்த மனு விசாரணைக்கு வந்தது. அதில் மைனருக்கு சம்மதமின்றி பாலியல் அறுவை சிகிச்சை செய்வது, அந்த குழந்தையின் தனியுரிமை மற்றும் கண்ணியத்தை சீர்குலைக்கும் என்று ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது. ஐகோர்ட்டு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    பிறப்புறுப்பு மறு சீரமைப்பு அறுவை சிகிச்சைக்குஅனுமதி வழங்குவது இந்திய அரசியலமைப்பு சட்டம் 14, 19 மற்றும் 21-வது பிரிவுகளின கீழ் உத்திரவாதம் அளிக்கப்பட்ட உரிமைகளை தடுக்கும். ஒப்புதல் இல்லாமல் அறுவை சிகிச்சை செய்வது குழந்தையின் கண்ணியம் மற்றும் தனியுரிமையை மீறவதாகும்.

    இந்த அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தை மாற்றப்பட்டதை தவிர, இளமை பருவத்தை அடைந்ததும், குழந்தை பாலினத்தை நோக்கிய நோக்கநிலையை வளர்த்துக் கொண்டால் அத்தகைய அனுமதியை வழங்குவது கடுமையான உணர்ச்சி மற்றும் உளவியல் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும்.

    மனுதாரர்களின் குழந்தையை மருத்துவ வாரியம் 2 மாதங்களுக்குள் பரிசோதித்து, தெளிவற்ற பிறப்புறுப்பு காரணமாக குழந்தை உயிருக்கு ஏதேனும் ஆபத்தான் சூழ்நிலையை எதிர்கொள்கிறதா? என்பதை தீர்மானிக்க வேண்டும். அப்படியென்றால் அறுவை சிகிச்சை செய்ய அனுமதி வழங்கலாம்.

    இவ்வாறு ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.

    • ராஜேஷ்க்கு கடந்த 5 மாதமாக மூக்கடைப்பு மற்றும் மூச்சு விடுதலில் சிரமம் இருந்து வந்துள்ளது.
    • மூக்கினுள் இருந்த காளான் கண்ணுக்குள் ஊடுருவியதை அகற்றினர்.

    கள்ளக்குறிச்சி:

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே கச்சிமைலூர் கிராமத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் மகன் ராஜேஷ் (வயது 7) இவர் அதே பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு கடந்த 5 மாதமாக மூக்கடைப்பு மற்றும் மூச்சு விடுதலில் சிரமம் இருந்து வந்துள்ளது.இந்நிலையில் இவர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை மருத்துவர்கள் கணேஷ் ராஜா, வாசவி, ஞானவேல் மற்றும் மயக்கமருந்து மருத்துவர்கள் மகேந்திரவர்மன், தினேஷ், சிலம்பரசன், முத்துக்குமார், சாந்தி, சரண்ராஜ் ஆகியோர் அடங்கிய குழுவினர் பரிசோதனை செய்தனர். அதில் அவரது மூக்கில் சிறிய அளவிலான 3 பேட்டரிகள் இருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவருக்கு எண்டோஸ்கோபி மூலம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மூக்கில் இருந்த பேட்டரிகளை அகற்றினர்.

    தொடர்ந்து இதே மருத்துவ குழுவினர் எலவனாசூர் கோட்டை கீழப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மகன் அருண்குமார் (27) பொறியியல் படித்துள்ளார். இவருக்கும் மூச்சு விடுதலில் சிரமம் மற்றும் தலைவலி கண் பார்வைத் திறன் குறைபாடு இருந்துள்ளது. இவருக்கு அறுவை சிகிச்சை மூலம் அவரது மூக்கினுள் இருந்த காளான் கண்ணுக்குள் ஊடுருவியதை அகற்றினர். மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தென்தொரசலூர் கிராமத்தைச் சேர்ந்த தேவராஜ் மகன் இளையராஜா (29), சங்கராபுரம் அருகே காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த ஜிந்தா குமார் மகன் ஹரிதாஸ் (11) மற்றும் கடலூர் மாவட்டம் மங்களூர் ஊராட்சியை சேர்ந்த சரவணன் (35) ஆகியோருக்கு குறட்டை வியாதி இருந்துள்ளது. இதையொட்டி இவர்கள் 3- பேரும் கள்ளக்குறிச்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குறட்டை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அனைவருக்கும் சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பினர்.

    இதுகுறித்து அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் உஷா செய்தியாளர்களிடம் கூறியதாவது, எண்டோஸ்கோபி, பூஞ்சை நோய், குறட்டை வியாதி ஆகியவற்றிற்கு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை பிரிவு மருத்துவர்கள் சிறந்த முறையில் சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். இதில் பயனாளிகள் அனைவருக்கும் தமிழக அரசின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தமிழ்நாட்டில் குறட்டை வியாதிக்கு 8 பேருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3 பேருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது மேலும் தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட 11 மருத்துவக் கல்லூரியில் அதிக பிரசவம் நமது கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெறுகிறது என கூறினார். அப்போது மருத்துவமனை கண்காணிப்பாளர் நேரு, துணை முதல்வர் ஷமீம், நிலைய மருத்துவர் அனுபமா, உதவி நிலைய மருத்துவர்கள் பழமலை, பொற்செல்வி மற்றும் அனைத்து துறை தலைவர்களும் கலந்து கொண்டனர்.

    • தனியார் மருத்துவமனையுடன் அரசு ஒப்பந்தம்
    • மத்தியதிட்ட ஒருங்கிணைப்பாளர் ரகுநாதன், டாக்டர் முத்துக்குமரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை ராஜீவ்காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனையில் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு இலவச இருதய சிகிச்சை திட்டத்தை சென்னை அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனையுடன் இணைந்து வழங்க புதுவை அரசு முடிவு செய்துள்ளது.

    இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சட்டசபை வளாகத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமி முன்னிலையில் கையெழுத்தானது. ஒப்பந்தத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் அப்பல்லோ அதிகாரிகள் கையெழுத்திட்டு ஆவணங்களை பரிமாறிக் கொண்டனர்.

    நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை செயலர் உதயகுமார், அரசு செயலர் நெடுஞ்செழியன், இயக்குனர் ஸ்ரீராமுலு, மத்தியதிட்ட ஒருங்கிணைப்பாளர் ரகுநாதன், டாக்டர் முத்துக்குமரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மம்தா பானர்ஜி கூறியிருந்தார்.
    • அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

    மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கடந்த 27-ந்தேதி வடக்கு வங்காள பகுதியில் ஹெலிகாப்டரில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது மோசமான வானிலை காரணமாக செவோக் விமானப்படை தளத்தில் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

    இதில் மம்தா பானர்ஜிக்கு இடது கால் மூட்டு மற்றும் இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகிறார்.

    பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மம்தா பானர்ஜி கூறியிருந்தார்.

    இந்நிலையில், மம்தா பானர்ஜிக்கு நேற்று மூட்டு அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் மற்றும் முதல்வர் சக்கர நாற்காலியில் வீடு திரும்பினார்.

    இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில்," முதல்வர் மம்தா பானர்ஜி இப்போது நன்றாக இருக்கிறார். ஆனால், அவர் வீட்டில் ஓய்வில் இருக்க வேண்டும். அடுத்தகட்ட சிகிச்சைக்காக இன்னும் சில நாட்களில் அழைப்போம்" என்றார்.

    • சிறப்பு முகாம் இன்று முதல் 30-ம் தேதி வரை மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • தெருநாய்கள் சம்பந்தமான புகார்களை தெரிவிக்க தன்னார்வலர்களின் கைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    கோவை,

    கோவை மாநகரில் தெருநாய்களுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள சிறப்பு முகாம் இன்று முதல் 30-ம் தேதி வரை மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கோவை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் தெருநாய்களை கட்டுப்படுத்தும் பணியானது, இரு தொண்டு நிறுவனங்கள் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், கிழக்கு, தெற்கு மற்றும் மத்திய மண்டலங்கள், பிராணி மித்ரன் என்ற தொண்டு நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

    மேற்கு, வடக்கு மண்ட லங்களுக்கு ஹியூமன் அனிமல் சொசைட்டி என்ற தொண்டு நிறுவனத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு தெருநாய்களை பிடிக்க வாகனங்கள் வழங்கப்பட்டு உள்ளன.மேலும், சீரநாய்க்கன்பாளையம், ஒண்டிப்புதூர், உக்கடம், ஆகிய பகுதிகளில் ஆதரவற்ற நாய்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் வெறிநோய் தடுப்பூசி செலுத்த முகாம் நடைபெறுகிறது. மக்கள், தெருநாய்கள் சம்பந்தமான புகார்களை தெரிவிக்க 99444 34706, (பிராணி மித்ரன்), 93661 27215 (ஹியூமன் அனிமல் சொசைட்டி) ஆகிய தன்னார்வலர்களின் கைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    சம்பந்தப்பட்ட மாநகராட்சி உதவி ஆணையர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் சுகாதார அலுவலர்களைத் தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். சாலை மற்றும் தெருக்களில் போக்குவரத்துக்கும், மக்களுக்கும் இடையூறு ஏற்படுத்துவதால், தன்னார்வலர்களைக் கொண்டு வாகனங்கள் மூலமாக தெருநாய்களை பிடிக்க ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    தன்னார்வலர்களுக்கு, மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • இந்த தொடரின் லீக் போட்டிகளில் டோனி விளையாடும் போது முழங்காலில் காயம் ஏற்பட்டது.
    • சில போட்டிகளில் கீப்பிங் செய்யும்போது அதை காண முடிந்தது.

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இந்த சீசனில் முதல் முறையாக 3 நாட்கள் ஐபிஎல் இறுதிப் போட்டி நடந்தது. அகமதாபாத்தில் நடந்த இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் 5 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே வெற்றி பெற்றது. இதன் மூலமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5-வது முறையாக சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது.

    இந்த தொடரின் லீக் போட்டிகளில் டோனி விளையாடும் போது முழங்காலில் காயம் ஏற்பட்டது. சில போட்டிகளில் கீப்பிங் செய்யும்போது அதை காண முடிந்தது. அந்த காயத்துடன் தற்காலிகமாக சிகிச்சை எடுத்துக் கொண்ட நிலையில் இறுதிப்போட்டி வரை அவர் விளையாடி விளையாடினார்.

    இந்த நிலையில், முழங்கால் காயம் உள்பட பல காயங்கள் காரணமாக இன்னும் ஒரு வாரத்தில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட இருக்கிறார். இந்த வாரம் மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் முழங்கால் காயம் தொடர்பான பல பரிசோதனைகளுக்காக அனுமதிக்கப்பட உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

    • காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் மூளை தண்டுவட அறுவை சிகிச்சை முகாம் நடைபெற்றது.
    • பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ சிகிச்சையும் மருத்துவ ஆலோசனைகளயும் பெற்று பயனடைந்தார்கள்.

    புதுச்சேரி:

    காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில், 2சனிக்கிழமைகளில் புதுச்சேரியில் அமைந்துள்ள ஜிப்மர் ஆஸ்பத்திரி சார்பில், சிறப்பு மருத்துவ நிபுணர்களின் சிறப்பு மருத்துவமுகாம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, நேற்று புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை சார்பில், நரம்பியல் மற்றும் மூளை தண்டுவட அறுவை சிகிச்சை முகாம் நடைபெற்றது. புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியிலிருந்து சிறப்பு டாக்டர்கள் குழு காரைக்கால் வருகை தந்து , பொதுமக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சையும் மற்றும் ஆலோசனைகளையும் வழங்கினார்கள். காலை 9மணிக்கு தொடங்கிய இந்த சிறப்பு முகாம் மதியம் 12 மணி வரை நடைபெற்றது. முகாமில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ சிகிச்சையும் மருத்துவ ஆலோசனைகளயும் பெற்று பயனடைந்தார்கள்.

    ×