search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை
    X

    கோவையில் தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை

    • சிறப்பு முகாம் இன்று முதல் 30-ம் தேதி வரை மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • தெருநாய்கள் சம்பந்தமான புகார்களை தெரிவிக்க தன்னார்வலர்களின் கைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    கோவை,

    கோவை மாநகரில் தெருநாய்களுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள சிறப்பு முகாம் இன்று முதல் 30-ம் தேதி வரை மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கோவை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் தெருநாய்களை கட்டுப்படுத்தும் பணியானது, இரு தொண்டு நிறுவனங்கள் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், கிழக்கு, தெற்கு மற்றும் மத்திய மண்டலங்கள், பிராணி மித்ரன் என்ற தொண்டு நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

    மேற்கு, வடக்கு மண்ட லங்களுக்கு ஹியூமன் அனிமல் சொசைட்டி என்ற தொண்டு நிறுவனத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு தெருநாய்களை பிடிக்க வாகனங்கள் வழங்கப்பட்டு உள்ளன.மேலும், சீரநாய்க்கன்பாளையம், ஒண்டிப்புதூர், உக்கடம், ஆகிய பகுதிகளில் ஆதரவற்ற நாய்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் வெறிநோய் தடுப்பூசி செலுத்த முகாம் நடைபெறுகிறது. மக்கள், தெருநாய்கள் சம்பந்தமான புகார்களை தெரிவிக்க 99444 34706, (பிராணி மித்ரன்), 93661 27215 (ஹியூமன் அனிமல் சொசைட்டி) ஆகிய தன்னார்வலர்களின் கைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    சம்பந்தப்பட்ட மாநகராட்சி உதவி ஆணையர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் சுகாதார அலுவலர்களைத் தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். சாலை மற்றும் தெருக்களில் போக்குவரத்துக்கும், மக்களுக்கும் இடையூறு ஏற்படுத்துவதால், தன்னார்வலர்களைக் கொண்டு வாகனங்கள் மூலமாக தெருநாய்களை பிடிக்க ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    தன்னார்வலர்களுக்கு, மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    Next Story
    ×