search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "summer festival"

    • தினமும் ஏராளமானோர் வால்பாறைக்கு வந்து சுற்றுலா தலங்களை பார்த்து ரசித்து செல்கின்றனர்.
    • அரசு துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட உள்ளன.

    வால்பாறை,

    வால்பாறையில் நாளை முதல் 3 நாட்களுக்கு கோடை விழா நடக்கிறது. கோவை மாவட்டம் வால்பாறையில் சின்னக் கல்லாறு நீர்வீழ்ச்சி, நல்லமுடி பூஞ்சோலையாறு அணை, பாலாஜி கோயில், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன.

    தினமும் ஏராளமானோர் வால்பாறைக்கு வந்து சுற்றுலா தலங்களை பார்த்து ரசித்து செல்கின்றனர். கோடை காலங்களில் வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தமிழக முதலமைச்சரின் வழிகாட்டுதல்படி நாளை (26-ந்தேதி) முதல் 28-ந் தேதி வரை 3 நாட்கள் கோடை விழா நடைபெறவுள்ளது.

    கோடை விழாவின் போது தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பொது மக்கள் பார்த்து பயனடையும் வகையில் அரசு துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. மலர் கண்காட்சியும் இடம் பெறுகிறது.

    கலை பண்பாட்டு துறை, பள்ளிக்கல்வித்துறை மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் பரத நாட்டியம், யோகா, நடனம், செண்டை மேளம், நையாண்டி மேளம், கரகம், காவடியாட்டம், படுகர் நடனம், மாரியம்மன் முருகன் வள்ளி கும்மி பாடல், துடும்பாட்டம், பழங்குடியின வாத்தியம், பொய்க்கால் குதிரை, ஜிக்காட்டம், டிரம்ப்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

    காவல்துறை சார்பில் நாய்களின் சாகச நிகழ்ச்சி மற்றும் குன்னூர் டீ போர்டு மூலம் டீ தயாரிப்பு போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படவுள்ளது. மகிழ்ச்சிக்கு காரணம் சொந்த பந்தமா? சொத்து பத்தா? மனிதன் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தது அந்த காலமா? இந்த காலமா? பெற்றோர்களை பேணிக்காப்பவர்கள் மகள்களா? மகன்களா? ஆகிய தலைப்புகளில் சனிக்கிழமை அன்று பட்டிமன்றமும் நடைபெறவுள்ளது.

    இக்கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியின் நிறைவு விழாவில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கவுள்ளார்.

    விழாவில் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

    • வால்பாறையில் சின்னக்கல்லாறு நீர்வீழ்ச்சி, நல்லமுடி பூஞ்சோலை காட்சி முனை, சோலையாறு அணை, பாலாஜி கோவில், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன.
    • போலீசார் சார்பில் நாய்களின் சாகச நிகழ்ச்சி மற்றும் குன்னூர் டீ போர்டு மூலம் சுற்றுலா பயணிகளுக்கு டீ தயாரிப்பு போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

    கோவை:

    கோவை மாவட்டம் வால்பாறையில் சின்னக்கல்லாறு நீர்வீழ்ச்சி, நல்லமுடி பூஞ்சோலை காட்சி முனை, சோலையாறு அணை, பாலாஜி கோவில், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. தினந்தோறும் ஏராளமானோர் வந்து சுற்றுலா தலங்களை பார்த்து ரசித்து செல்கின்றனர்.

    கோடை காலங்களில் வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தமிழக முதல்-அமைச்சரின் வழிகாட்டுதல்படி நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 28-ந் தேதி வரை 3 நாட்கள் கோடை விழா நடைபெறவுள்ளது.

    கோடை விழாவின்போது தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் பார்த்து பயனடையும் வகையில் அரசு துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. இதுதவிர மலர் கண்காட்சியும் இடம்பெறுகிறது.

    கலை பண்பாட்டு துறை, பள்ளிகல்வித்துறை மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் பரத நாட்டியம், யோகா, நடனம், செண்டைமேளம், நையாண்டி மேளம், கரகம், காவடியாட்டம், படுகர் நடனம், மாரியம்மன் முருகன் வள்ளி கும்மி பாடல், துடும்பாட்டம், பழங்குடியின வாத்தியம், பொய்க்கால் குதிரை, ஜிக்காட்டம், டிரம்ப்ஸ் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

    போலீசார் சார்பில் நாய்களின் சாகச நிகழ்ச்சி மற்றும் குன்னூர் டீ போர்டு மூலம் சுற்றுலா பயணிகளுக்கு டீ தயாரிப்பு போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட உள்ளது. மேலும் மகிழ்ச்சிக்கு காரணம் சொந்த பந்தமா? சொத்து பத்தா?, மனிதன் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தது? அந்த காலமா? இந்த காலமா?, பெற்றோர்களை பேணிக்காப்பவர்கள் மகள்களா? மகன்களா? ஆகிய தலைப்புகளில் 27-ந் தேதி அன்று பட்டிமன்றம் நடைபெறவுள்ளது.

    இந்த கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியின் நிறைவு விழாவில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்துகொண்டு பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்குகிறார். விழாவில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

    இந்த தகவலை கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.

    • ஏற்காட்டில் 46-வது கோடைவிழா - மலர் கண்காட்சி நேற்று முன்தினம் தொடங்கி நடந்து வருகிறது.
    • ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 46-வது கோடைவிழா - மலர் கண்காட்சி நேற்று முன்தினம் தொடங்கி நடந்து வருகிறது. இதனை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    அண்ணா பூங்காவில் நடந்த மலர் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள வண்ண மயமான மலர்களையும், மலர்கள், காய்கறிகள் பழங்க ளால் உருவாக்கப்பட்ட காந்தி கண்ணாடி, எறும்பின் உருவம், மேட்டூர் அணை, முயல் உருவம், புலி, செல்பி பாயின்ட் உள்ளிட்டவற்றை கண்டு ரசித்து, செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இதில் மலர்களால் ஆன சின்சான் பொம்மை குழந்தைகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.

    இதேபோல், படகு இல்லத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள், அங்கு குடும்பத்துடன் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். மேலும் ஏரி பூங்கா, மான் பூங்கா, லேடீஸ் சீட், ஜென்ட்ஸ் சீட், பக்கோடா பாயிண்ட் உள்ளிட்ட இடங்களில் குடும்பத்துடன் பொழுதை கழித்தனர்.

    இவ்விழாவை முன்னிட்டு வரும் 28-ந் தேதி வரை நாள்தோறும் பல்வேறு விதமான போட்டி கள், விளை யாட்டுகள், கலை நிகழ்ச்சிகள், கண்காட்சிகள் நடத்தப்பட உள்ளது.

    2-வது நாளான நேற்று ஏற்காடு டவுன் பேசன் ஷோ மைதானத்தில் இளைஞர் நலன் மற்றும் விளை யாட்டுத்துறை சார்பில் இளைஞர்களுக்கான கைப்பந்து போட்டியும், கலைய ரங்கத்தில் கலைப் பண்பாட்டுத்துறை சார்பில் கரகம், மான், மயில், காவடி உள்ளிட்ட கிராமிய கலை நிகழ்ச்சியும், சுற்றுலாத் துறை சார்பில் கலை நிகழ்ச்சிகள், பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள், தாரை, தப்பட்டை நிகழ்ச்சிகளும் நடந்தன. மாலை 4 மணிக்கு கல்வித்துறை சார்பில் பல்சுவை நிகழ்ச்சியும் நடந்தது.

    கோடை விழாவின் 3-ம் நாளான இன்றும், மாவட்ட நிர்வாகம் சார்பில் சுற்றுலா பயணி களுக்கும், இளைஞர்க ளுக்கும், அரசு ஊழியர்க ளுக்கும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.

    இந்த விழாவையொட்டி ஏற்காட்டில் தங்கும் விடுதி, ஓட்டல்களில் அறைகள் நிரம்பியுள்ளன. ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகள் அங்கு விளையும் பலாப்பழம், பச்சை மிளகு, காய்ந்த மிளகு, காப்பிக் கொட்டை, காபி தூள், ஆட்டுக்கால் கிழங்கு, ஆரஞ்சு பழம், கொய்யா, அத்தி, முள் சீத்தா, பேரிக்காய் உள்ளிட்ட பழங்களை ஆர்வமாக வாங்கி செல்கின்றனர்.

    இதனிடையே நேற்று மதியம் ஏற்காட்டில் திடீரென பலத்த மழை பெய்தது. இதனால் அங்கு தாழ்வான இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. ஏற்காடு மலைப்பாதையில் ஆங்காங்கே உள்ள நீரோட்டங்களில் மழைநீர் ஓடியதைக் கண்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர்.

    ஏராளமான சுற்றுலா பயணிகளின் வருகையால், மலைப்பாதையில் வாகனங்கள் அதிகளவில் வந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    • மாவட்ட நிர்வாகம் சார்பில் சில ஆண்டுகள் மட்டும் 'ஆடிப்பெருந்திருவிழா' என்ற தலைப்பில், திருமூர்த்திமலையில் விழா நடத்தப்பட்டது.
    • அரசுத்துறைகளை ஒருங்கிணைத்து, கண்காட்சி, பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடத்தினர்.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலை பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக உள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி, திருமூர்த்தி அணை, நீச்சல் குளம், வண்ண மீன் பூங்கா என பல்வேறு சுற்றுலா அம்சங்களை இப்பகுதி உள்ளடக்கியுள்ளது.திருமூர்த்திமலையில், சுற்றுலாவை மேம்படுத்தவும் அதற்கான வசதிகளை ஏற்படுத்தவும், விடுமுறை காலத்தில் கோடை விழா நடத்த வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்ட பிறகு மாவட்ட நிர்வாகம் சார்பில் சில ஆண்டுகள் மட்டும் 'ஆடிப்பெருந்திருவிழா' என்ற தலைப்பில், திருமூர்த்திமலையில் விழா நடத்தப்பட்டது.

    அரசுத்துறைகளை ஒருங்கிணைத்து, கண்காட்சி, பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடத்தினர். சுற்றுலாத்துறை சார்பில் மாவட்டத்துக்கு தனியாக உதவி சுற்றுலா அலுவலர் நியமிக்கப்பட்ட பிறகு திருமூர்த்திமலையில் கோடை விழா நடத்தி வசதிகள் மேம்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பும் ஏமாற்றமாகியுள்ளது. இந்தாண்டும் கோடை விழா குறித்த எவ்வித அறிவிப்பும் அரசால் வெளியிடப்படவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள், பழங்குடியின மக்கள் உட்பட அனைத்து தரப்பினரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

    • 5 லட்சம் மலர்களால் பிரமாண்ட உருவங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
    • சிறுதானிய உணவு தயார் செய்யும் முறை குறித்து தினமும் செயல் விளக்கம் அளிக்கப்படுகிறது.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில், 46-வது கோடை விழா, மலர் கண்காட்சி இன்று மாலை 5 மணிக்கு தொடங்கி, வருகிற 28-ந் தேதி வரை நடைபெறுகிறது. அமைச்சர்கள் கே.என்.நேரு, பன்னீர்செல்வம், ராமச்சந்திரன், மதிவேந்தன் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர். தொடர்ந்து துறை சார்பில் நிறுவப்பட்டுள்ள 42 அரங்குகளை திறந்து வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.

    அண்ணா பூங்காவில் மலர் கண்காட்சி நிறுவப்பட்டுள்ளது. அதில் 10 ஆயிரம் தொட்டிகளில் பெட்டூனியா, மேரிகோல்டு, சால்வியா உள்பட 45 மலர் வகைகள், சுற்றுலா பயணிகளின் கண்ணுக்கு விருந்தளிக்க தயாராக உள்ளன. 5 லட்சம் மலர்களால் பிரமாண்ட உருவங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக டிராகன் வாரியருக்கு 32 ஆயிரம் பூக்கள், பொன்னியின் செல்வன் படகுக்கு 35 ஆயிரம், தேனீக்களுக்கு 28 ஆயிரம், முயலுக்கு 18 ஆயிரம், சோட்டா பீமுக்கு 15 ஆயிரம், செல்பி பாயிண்டுக்கு 27 ஆயிரம், வளைவுக்கு 55 ஆயிரம், பூங்கொத்து 50 ஆயிரம் பூக்கள் என பல்வகை மலர்கள் கண்களை இதமாக்கி குளிர்விக்க தயாராக உள்ளன.

    உணவு பாதுகாப்புத்துறை சார்பில் சிறுதானிய உணவு தயார் செய்யும் முறை குறித்து தினமும் செயல் விளக்கம் அளிக்கப்படுகிறது. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தில் கொழு, கொழு குழந்தைகள் போட்டி, பாரம்பரிய உணவு போட்டி, மகளிர் திட்டம் சார்பில் கோலப்போட்டி, சுற்றுலாத்துறை சார்பில் படகு போட்டி நடத்தப்படுகிறது.

    கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் நாய்கள் கண்காட்சி, கலை பண்பாடு துறை, சுற்றுலா துறை ஒருங்கிணைந்து இன்னிசை நிகழ்ச்சி, கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இளைஞர்களை ஊக்கப்படுத்த கால்பந்து, கைப்பந்து, கபாடி, கயிறு இழுத்தல், மாரத்தான் உள்ளிட்ட பல்வகை விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசளிக்கப்படுகிறது.

    *** கோடை விழாவையொட்டி ஏற்காட்டில் சுற்றுலாப்பயணிகள் திரண்டுள்ளனர். அங்குள்ள படகு இல்ல பகுதியில் மலர்களால் இதய வடிவில் அமைக்கப்பட்டுள்ளதை பெண்கள் ஆர்வமுடன் பார்வையிட்ட காட்சி.

    • மீனாட்சி அம்மன் கோவிலில் கோடை வசந்த உற்சவம் வருகிற 27-ந் தேதி தொடங்குகிறது.
    • இந்த நாட்களில் மீனாட்சி அம்மன்- சுவாமிக்கு தங்கரத உலா, திருக்கல்யாணம் நடைபெறாது

    மதுரை

    மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் சொக்கநாத பெருமானே பல்வேறு அவதாரங்கள் எடுத்து 64 திருவிளையாடல்கள் புரிந்த புராதன புண்ணிய சேத்திரம் ஆகும். அருளாளர் நால்வரால் பாடல் பெற்றது. மூர்த்தி, தலம், விருட்சம் என்ற பெருமை பெற்றது. புதனுக்கு அதிபதியாக விளங்கும் தலம்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பங்குனி மாதத்தில் நடக்கும் கோடை வசந்த உற்சவ திருவிழா வருகிற 27-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம் 4-ந் தேதி வரை நடக்கிறது. ஏப்ரல் மாதம் 5-ந் தேதி பங்குனி உத்திரம் அன்று காலை 10 மணிக்கு மேல் மீனாட்சி-சுந்தரேசுவரர், பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பாடாகி செல்லூர் வைகை வடகரையில் உள்ள திருவாப்புடையார் கோவிலில் எழுந்தருளு கிறார்கள். அப்போது சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடத்தப்படும்.

    அதன் பிறகு மாலையில் சுந்தரேசுவரர் வெள்ளி ரிஷப வாகனத்திலும், மீனாட்சி அம்மன் மரவர்ண சப்பரத்திலும் எழுந்தருளி கோவிலுக்கு செல்கிறார்கள். சுவாமி சன்னதி, பேச்சி கால் மண்டபத்தில் பாத பிட்சாடனம், தீபாராதனை முடிந்து மீனாட்சி அம்மன் கோவிலில் எழுந்தருள்வார்கள். அதன் பிறகு அங்கு சுவாமி புறப்பாடு நடக்கிறது.

    கோடைகால வசந்த உற்சவ திருவிழா நடக்கும் மேற்கண்ட நாட்களில் மீனாட்சி அம்மன்- சுவாமிக்கு தங்கரத உலா, திருக்கல்யாணம் நடைபெறாது என்று மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    ஏற்காட்டில் கோடை விழா, மலர் கண்காட்சி மற்றும் காய்கறி கண்காட்சி, பழக்கண்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். #TNCM #EdappadiPalanisamy
    சேலம்:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஆண்டுதோறும் மே மாதம் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி இந்த ஆண்டு 43-வது கோடை விழா - மலர் கண்காட்சி இன்று (சனிக்கிழமை) காலை தொடங்கி வருகிற 16-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது.

    ஏற்காடு கோடை விழா மற்றும் ஏற்காடு அண்ணா பூங்காவில் தோட்டக்கலைத் துறை மூலம் 2½ லட்சம் மலர்களை கொண்டு அலங்கரிக்கப்பட்டு உள்ள மலர் கண்காட்சி மற்றும் காய்கறி கண்காட்சி, பழக்கண்காட்சியையும் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.

    பின்னர் ஏற்காடு கலையரங்கில் நடந்த விழாவில் ரூ.17.5 கோடி மதிப்பீட்டில் 29 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். ரூ.4.5 கோடியில் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தும், ரூ.5.12 கோடியில் 2,170 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கியும் சிறப்புரை ஆற்றினார்.

    முன்னதாக, ஏற்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாள் நினைவு வளைவு அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

    சுற்றுலா துறை, கலை பண்பாட்டு துறை சார்பில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் இன்னிசை நிகழ்ச்சிகளும் காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரை நடக்கிறது.

    கால்நடை பராமரிப்பு துறை சார்பில் செல்லப்பிராணிகள் கண்காட்சி, சுற்றுலா துறை சார்பில் சுற்றுலா பயணிகள், பத்திரிகையாளர்களுக்கு படகு போட்டிகள் உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகிறது.

    ஏற்காடு பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகம் முற்றிலும் தடை செய்யப்பட்டு உள்ளதால் பிளாஸ்டிக் அல்லாத ஏற்காடு கோடை விழாவாக கொண்டாட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    மேலும், கோடை விழாவுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு லட்சம் மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

    கோடைவிழா மற்றும் மலர் கண்காட்சியையொட்டி ஏற்காட்டில் இன்று காலை முதலே அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம், சேர்வாராயன் கோவில், பக்கோடா பயிண்ட், மான் பூங்கா உள்பட பல பகுதிகளிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர்.

    ஏற்காட்டியில் லேசான குளிருடன் ரம்மியமான சூழல் நிலவி வருகிறது. கடந்த சில நாட்களாகவே சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ள நிலையில் இந்தாண்டு கோடை விழா முன் கூட்டியே தொடங்கி உள்ளதால் மேலும் சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரிக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.

    சுற்றுலா பயணிகள் எளிதாக சென்று வரும் வகையில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. விழாவையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன் தலைமையில் 1500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    விழாவில், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், துரைக்கண்ணு, வெல்லமண்டி நடராஜன், கலெக்டர் ரோகிணி, சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ., மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், ஏற்காடு தொகுதி எம்.எல்.ஏ. சித்ரா, மற்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். #TNCM #EdappadiPalanisamy
    கோடை விழாவின் தொடக்க நாளான நாளை மறுநாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று மலர் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார்.
    ஏற்காடு:

    ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் வருடந்தோறும் மே மாதத்தில் கோடைவிழா மற்றும் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான கோடை விழா வருகிற 12-ந் தேதி தொடங்கி 16-ந் தேதிவரை 5 நாட்கள் நடைபெறுகிறது. இதற்கான பணிகளில் தோட்டக்கலை துறை மற்றும் மற்ற துறை ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    மலர் கண்காட்சிக்காக ஏற்காடு அண்ணா பூங்காவில் 10 ஆயிரம் பூந்தொட்டிகளை ஊழியர்கள் தயார்படுத்தி வருகிறார்கள். இதில் சால்வியா, மேரிகோல்டு, வின்கா, தினியா, பிரான்சி, மெடானியா, டேலியா, ஜெரியா, காஸ்மாஸ், ஜெர்பேரா, ரோஜா போன்ற ரக பூந்தொட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டு வருகிறது.

    இது தவிர மலர் கண்காட்சிக்காக ஏற்காடு ரோஜா தோட்டத்தில் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக விதவிதமான ரோஜா மலர்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

    கோடை விழாவின் தொடக்க நாளான நாளை மறுநாள் (12-ந் தேதி) முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று மலர் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார்.

    இதையட்டி ஏற்காடு செல்லும் மலை சாலை தூய்மை படுத்தப்பட்டு சாலையின் நடுவில் வெள்ளை கோடு போடும் பணியில் நெடுஞ்சாலை துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    மலை பாதைகளில் நெடுஞ்சாலை துறையினர் பராமரிப்பு பணிகளில் ஈடுபடுவதுடன் கொண்டைஊசி வளைவுகளில் வர்ணம் பூசும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 20 கொண்டை ஊசி வளைவுகளுக்கும் தியாகிகள் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதில் தீரன் சின்னமலை, திருப்பூர் குமரன், வீரன் வாஞ்சிநாதன், வ.உ.சிதம்பரனார், சுப்ரமணியசிவா, வேலு நாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன், தகடூர் அதியமான், வள்ளல் பாரி, வல்வில் ஓரி, சேரன் செங்குட்டுவன், பாண்டிய நெடுஞ்செழியன், கரிகால சோழன், அவ்வையார், கம்பர், பாரதியார், திருவள்ளுவர், கபிலர், பரணர், இளங்கோ அடிகள் ஆகியோரது பெயர்கள் எழுதப்பட்டுள்ளன.

    இந்த ஆண்டு மே மாத தொடக்கத்திலேயே கோடை விழா நடைபெறுவதால் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்காட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க அண்ணாப்பூங்கா, படகு இல்லம் போன்ற பகுதிகளில் சாலையோரம் வைக்கப்பட்டிருந்த கடைகள் அகற்றப்பட்டுள்ளது.

    ஏற்காட்டிற்கு முதல்வர் வருவதாலும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வர இருப்பதாலும் பாதுகாப்பு பணியில் கூடுதல் போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    கோடை விழாவையொட்டி ஏற்காட்டிற்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள் என்பதால் அவர்களின் வசதிக்காக வருகிற 12-ந் தேதி முதல் 5 நாட்களுக்கு தினமும் 50 சிறப்பு பஸ்களை இயக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.


    ×