search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "suffering"

    • மதுரையில் 3 மணி நேரம் கொட்டி தீர்த்த கனமழை.
    • மழையால் மின்தடை-மக்கள் அவதியடைந்தனர்.

    மதுரை

    மதுரையில் கடந்த சில நாட்களாக அக்னி நட்சத்தி–ரத்தை மிஞ்சும் அளவுக்கு கடுமையான வெயில் வாட்டி வதைத்தது. இதனால் பகல் நேரங்களில் வெயிலின் தாக்கத்தால் வெப்பத்தின் அளவு அதிகரித்தது. அதிக வெப்பம் காரணமாக பொது ––மக்கள் சாலைகளில் சென்று வர மிகவும் சிரமப் பட்டனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இந்த மழை தொடர்ந்து 3 மணி நேரம் மதுரையின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக கொட்டி தீர்த்தது. பின்னர் மழை முடிந்தாலும் தூறல் நிற்காமல் நள்ளிரவு 11 மணி வரை சாரல் மழை போல மழை பெய்தது. இந்த கன மழை காரணமாக மதுரையின் பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தன.

    ஏ.ஏ. ரோடு பகுதியில் மரம் விழுந்ததில் ஆட்டோ சேதம் அடைந்தது. மணி நகரத்தில் உள்ள கர்டர் பாலம் முற்றிலுமாக மழை வெள்ளத்தால் நிரம்பின. தத்தனேரி சுரங்கப்பாதையும் மழை நீரால் நிரம்பியதால் போக்குவரத்து வேறு பாதை–யில் திருப்பி விடப்பட்டன.

    கனமழை காரணமாக பெரியார் பஸ் நிலையம், காளவாசல், கோரிப்பாளை–யம், தல்லாகுளம், பழங்கா–நத்தம், திருப்பரங்குன்றம், திருநகர் உள்ளிட்ட பகுதிக–ளில் மழை வெள்ளம் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் இரு சக்கர வாகனங்களில் சென்றவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மேலும் பள்ளி முடிந்து வீடு செல் லும் மாணவ, மாணவர்கள் நனைந்தவாறு சென்றனர்.

    மேல பொன்னகரம் பகு–தியில் மின்கம்பம் சரிந்து விழுந்தது இதனால் அந்த பகுதியில் நீண்ட நேரம் மின்தடை ஏற்பட்டது. இதே–போல் தொடர் மழை கார–ணமாக பல்வேறு இடங்க–ளில் நீண்ட நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மதுரை–யில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்ட பணி–களுக்காக பல்வேறு வார்டு–களில் குழிகள் தோண்டப் பட்டு பணிகள் அரைகுறை–யாகவே நடைபெற்று வரு–கின்றன. இந்த மழை கார–ணமாக அந்த பகுதியில் அனைத்தும் சேறும், சகதி–யுமாக காட்சியளித்தது.

    இதனால் பொதுமக்கள் அந்த வழியாக செல்ல முடியாமல் கடும் அவதி அடைந்தனர். முக்கிய சாலை–களில் தேங்கிய மழை–நீரை வெளியேற்ற மாநக–ராட்சி பணியாளர்கள் நீண்ட நேரம் போராடினர். கர்டர் பாலம், தத்தனேரி சுரங்கப்பாதை ஆகிய இடங்களில் குளம் போல தேங்கிய நீரை அகற்ற மாந–கராட்சி ஊழியர்கள் தீவி–ரமாக ஈடுபட்டனர்.

    ஆரப்பாளையம், பெத்தா–னி–யாபுரம், புதுஜெயில் ரோடு, கண்மாய் கரை உள்ளிட்ட பகுதியில் மரங் கள் வேரோடு சாய்ந்தது. வீடுகளின் முன்பு நிறுத்தப் பட்டிருந்த வாகனங்கள் மீதும் மரக்கி–ளைகள் முறிந்து விழுந்ததில் ஆட்டோ, கார், இருசக்கர வாகனங்கள் சேதம் அடைந் தன.

    நாகமலை புதுக்கோட்டை நான்குவழிச்சாலையில் தனியார் மண்டபம் முன்பு வயர் அறுந்து விழுந்தது. அப்பகுதியில் உள்ள தியேட்டர் அருகில் மரம் விழுந்ததில் மின்கம்பங்கள் சாய்ந்ததால் அப்பகுதியிலும் மின் தடை ஏற்பட்டது. 

    • தார் சாலை விரிவாக்க பணியின் போது குடிநீர் குழாய் உடைந்ததால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்
    • அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் நொய்யல் குறுக்கு சாலை முதல் கந்தம்பாளையம் வரை தார் சாலையின் இருபுறமும் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு பழுதடைந்த தார் சாலையை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. வேட்டமங்கலம், கோம்புப் பாளையம் ஊராட்சிகளில் பொதுமக்களுக்கு குடிநீர் சப்ளை செய்வதற்காக தார் சாலையில் இருபுறமும் குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டு கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் தார் சாலையில் இருபுறமும் சுமார் 3 அடி ஆழத்திற்கு சாலை விரிவாக்க பணிக்காக குழிகள் பறிக்கப்பட்டதால் தார் சாலையின் இருபுறமும் போடப்பட்டிருந்த பிளாஸ்டிக் குடிநீர் குழாய்கள் நொறுங்கி சேதம் அடைந்து விட்டது. இதனால் குடியிருப்பு வீடுகளுக்கு கடந்த 3 மாதத்திற்கும் மேலாக குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை. இதனால் ஏராளமான பொதுமக்கள் குடிநீரின்றி அவதிப்பட்டு வருகின்றனர்.

    இதையடுத்து அப்பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இதுகுறித்து கரூர் வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர். அதேபோல் குடிநீர் குழாயை உடைத்த ஒப்பந்ததாரர் உடனடியாக தார் சாலையின் இருபுறமும் குடிநீர் குழாய் பதித்து தர வேண்டும் என பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சாலையோரம் மலை போல் தேங்கி இருக்கும் குப்பைகளால் வாகன ஓட்டிகள் சிரமைப்படுகின்றனர்.
    • தேங்கியுள்ள குப்பைகளை அகற்றவும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    திருமங்கலம்

    திருமங்கலம் விமான நிலைய சாலை செல்லும் பகுதியில் நகராட்சி எல்லைக்கு அடுத்தபடியாக வடகரை ஊராட்சி அமைந்துள்ளது. ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சாலையோர வீடுகள் கடைகள் இருந்து வெளி யேற்றப்படும் குப்பைகள் கொட்டப்படுகிறது.

    குறிப்பாக உணவகங்களில் மீதமாகும் உணவு கழிவுகள் சிக்கன் கடைகளில் இருந்து வெளி யேற்றப்படும் கோழிக்கழிவு கள் மூட்டை, மூட்டையாக கட்டப்பட்டு கொட்டப்படு கிறது.

    குப்பைகளை நாய்கள் கிளறுவதால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசப்படுகிறது. காற்று வீசும்போது பறக்கும் குப்பையால் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    எனவே விமான நிலைய சாலை செல்லும் சாலையில் சாலையோரம் குப்பை கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும், குப்பை மேடாக தேங்கியுள்ள குப்பைகளை அகற்றவும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இந்த குப்பைகளால் அந்தப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. குப்பைகளில் கொட்டப் படும் கழிவுகளை உண்ப தற்காக வரும் நாய், பன்றி, மாடுகள் போன்றவை களுக்குள் ஏற்படும் சண்டையால் அவைகள் சாலைகளில் ஓடிவரு கின்றன. இதனால் விபத்துக்கள் ஏற்படும் சூழல் ஏற்படுகிறது.

    மேலும் கொட்டப்படும் குப்பைகளை தீ வைத்து எரிப்பதால் அந்தப்பகுதி முழுவதும் புகை சூழ்ந்து சுவாச பிரச்சினைகள் ஏற்படுவதுடன், வாகன ஓட்டிகளும் அவதிக் குள்ளாகி வருகின்றனர்.

    எனவே ஊராட்சி நிர்வாகம் குப்பைகள் கொட்டுவதற்கு தடை விதிக்கவும், குப்பைகளை கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும், குப்பைகளை வாங்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கடந்த பல நாட்களாக 102 முதல் 104 டிகிரி வெயில் அளவு பதிவாகி வந்தது.
    • திடீர் பலத்த இடி மின்னல் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வந்தது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் வெப்ப சலனம் காரணமாக கடந்த சில மாதங்களாக சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர். மேலும் கடந்த பல நாட்களாக 102 முதல் 104 டிகிரி வெயில் அளவு பதிவாகி வந்தது. கடும் வெயில் காரணமாக பொதுமக்கள் குளிர்பானங்கள், பழ வகைகள் பல்வேறு குளுமையான பொருட்களை உட்கொண்டு வெயிலின் தாக்கத்தை குறைத்து வந்தனர். இதனை தொடர்ந்து காலையில் கடும் வெயிலும், மாலையில் திடீர் பலத்த இடி மின்னல் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வந்தது. இந்த நிலையில் மீண்டும் கடந்த 2 நாட்களாக காலை நேரங்களில் வழக்கத்தை விட அதிக அளவில் வெயில் அளவு இருந்து வந்ததால் பொதுமக்கள் மீண்டும் வெயிலின் தாக்கத்தால் அவதி அடைந்து வந்தனர்.

    நேற்று மாலை முதல் கடலூர் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்ததோடு குளிர்ந்த காற்று வீசி மழை பெய்து வந்தது. கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார்கோவில் ஸ்ரீமுஷ்ணம், விருத்தாச்சலம், சிதம்பரம் ,லால்பேட்டை, ட்டை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. ஒரு சில இடங்களில் திடீர் மழை காரணமாக மின்தடை ஏற்பட்டது. இந்த நிலையில் ஒருபுறம் கடும் வெயிலும் மற்றொருபுறம் திடீர் மழையும் இருந்து வருவதால் சீதோஷ்ண மாற்றம் ஏற்பட்டு பொதுமக்களுக்கு உடல்நிலை பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது.

    கடலூர் மாவட்டத்தில் பெய்த மழையளவு மில்லி மீட்டரில் வருமாறு:- விருத்தாசலம் - 12.0, பரங்கிப்பேட்டை - 11.2 , மீ-மாத்தூர் - 8.0 4. லால்பேட்டை - 6.0 , ஸ்ரீமுஷ்ணம் -5.1 6, காட்டுமன்னார்கோயில் - 4.0 7. ,குப்பநத்தம் - 3.2 , கொத்தவாச்சேரி - 3.0 , பண்ருட்டி - 2.0 , குறிஞ்சிப்பாடி - 2.0 11. அண்ணாமலைநகர் - 2.0 , புவனகிரி - 2.0 , சேத்தியாதோப்பு - 2.0 .. பெல்லாந்துறை - 1.8 , சிதம்பரம் - 1.5 , கலெக்டர் அலுவலகம் - 1.4 , கடலூர் - 1.3 , வடக்குத்து - 1.௦ கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 69.50 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

    • லேசான காற்று மழை பெய்தாலும் உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்படுகின்றது.
    • திருவோணம் அரசு மருத்துவமனை பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.

    திருவோணம்:

    தஞ்சை மாவட்டம் திருவோணம் பகுதியில் கடந்த சில நாட்களாக லேசான காற்று மழை பெய்தாலும் உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்படுகின்றது.

    பிறகு இரவு முழுவதும் மின்சாரம் தடை செய்யப்படுகிறது. பிறகு மறுநாள் காலையில் மின்சாரம் இயக்கப்படுகின்றது.

    இதனால் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் குழந்தைகள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

    குறிப்பாக காரியாவிடுதி, எஸ்.எஸ்.ஊரணிபுரம் பிடரில் இருந்து விநியோகிக்கப்படும் மின்சாரம் அடிக்கடி தடைபடுவதாகவும் கூறப்படுகிறது.

    மேலும் திருவோணம் அரசு மருத்துவமனை பகுதிகளில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கருத்தில் கொண்டு உடனடியாக சரி செய்யும் படி இப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

    • நேற்று இரவு 8 மணி அளவில் லேசான மழை பெய்தது.
    • இரவு முழுவதும் மின்சாரம் இல்லாமல் வீடுகளில் இருக்கும் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்தனர்.

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி ராமநத்தம், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று இரவு 8 மணி அளவில் லேசான மழை பெய்தது. இதனால் ராமநத்தம் சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கபட்டது. மேலும் வாகையூரில் இரவு முழுவதும் மின்சாரம் இல்லாமல் வீடுகளில் இருக்கும் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்தனர். லேசான மழை பெய்தால் இந்த பகுதியில் மின்சாரத்தை துண்டித்து விடுகின்றனர். இதனையடுத்து அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் நாள் கணக்கில் மின்சாரம் வழங்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது. இதுகுறித்து மின்சார துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுகின்றனர்.

    • சுமார் 100-க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
    • வாகன ஓட்டிகள் பெரிதும் அவதி அடைகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே விழுந்தமாவடி மணல்மேடு கிராமம் உள்ளது.

    இங்கு சுமார் 100-க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இவர்களுக்கு காய்கறி சாகுபடியே பிரதான தொழிலாக உள்ளது.

    இக் கிராமத்திலிருந்து அடுத்து உள்ள மீனவர் காலனி செல்லும் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு கப்பி மற்றும் மணல் சாலையாகவே உள்ளது.

    இதனால் இவ்வழியே செல்லும் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் விவசாய பணிகளை மேற்கொள்ள முடியவில்லை என விவசாயிகள் மிகவும் சிரமப்படு கின்றனர்.

    மேலும் மழைக்காலங்களில் சாலைகள் குண்டும் குழியுமாக மழைநீர் தேங்கி நிற்கிறது.

    இதனால் வாகன ஒட்டிகள் பெரிதும் அவதி அடைகிறார்கள்.

    இதனால் இந்த சாலையை தார் சாலையாக மாற்றி அமைத்துதர வேண்டும் என கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மதுரை 20-வது வார்டு பகுதியில் சேதமடைந்த சாலையால் பொதுமக்கள் அவதியடைகின்றனர்.
    • வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது.

    மதுரை

    மதுரை 20-வது வார்டு பகுதியில் மாநகராட்சி சார்பில் பாதாள சாக்கடை, குடிநீர் போன்ற அடிப்படை தேவைகளுக்காக சாலைகளை ஜே.சி.பி. எந்திரம் மூலம் தோண்டுகின்றனர்.

    அப்போது ஊழியர்களின் கவனக்குறைவால் குடிநீர் குழாய்கள் உடைக்கப்பட்டு சேதமடைகிறது. இதனால் கடந்த 45 நாட்களுக்கு மேலாக பொது மக்களுக்கு குடிநீர் கிடைக்காமல் உள்ளது. கடந்த 10 நாட்களுக்கு மேலாக தொடர் மழையின் காரணமாக தோண்டிய சாலைகளை சரி செய்யாமல் இருப்பதால் சேறும், சகதியுமாக காட்சிய ளிக்கிறது. இதனால் இந்த பகுதி மக்கள் இரு சக்கர வாகனத்தில் கூட செல்ல முடியாமல் சாகசங்கள் செய்து மெயின் ரோட்டுக்கு வர வேண்டியுள்ளது.

    இதுகுறித்து கவுன்சிலர் நாகஜோதி சித்தன் மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் சரி செய்யப்படவில்லை. போராட்டங்கள் நடத்தியும் பிரச்சினை முடிவுக்கு வரவில்லை. இதனால் பொது மக்கள் சாலையில் வர முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது.

    • நேற்று மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை கபிலர்மலை துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் விநியோகிக்கப்படும் பகுதிகளுக்கு மின்தடை ஏற்பட்டது.
    • வீடுகளில் மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் கொசு கடியால் தூங்க முடியாமல் அவதிப்பட்டனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை துணை மின் நிலையத்திலிருந்து கபிலர்மலை சுற்றுவட்டார பகுதிகளான கபிலர்மலை, கபிலக்குறிச்சி, பள்ளக்காடு, பெரிய சோளிபாளையம், சின்ன சோளி பாளையம், பாகம் பாளையம், ஆனங்கூர், அய்யம்பாளை யம், அண்ணா நகர், பொன்மலர் பாளையம், சேளூர், செல்லப்பம்பாளை யம், குன்னத்தூர், பாண்ட மங்கலம், பொத்தனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதி களுக்கு மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் நேற்று மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை கபிலர்மலை துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் விநியோகிக்கப்படும் பகுதிகளுக்கு மின்தடை ஏற்பட்டது. வீடுகளில் மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் கொசு கடியால் தூங்க முடியாமல் அவதிப்பட்டனர்.

    கபிலர்மலை துணைமின் நிலையத்திலிருந்து மின்சாரம் விநியோகம் செய்யப்படும் பகுதிகளில் மின்தடை ஏற்படுவது தொடர்கதையாக நடந்து வருகிறது.

    கடந்த 3 நாட்களுக்கு முன்பு இரவில் 8 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. மின்வாரிய அதிகாரிகள் இதுகுறித்து எந்த நட வடிக்கையும் எடுக்கவில்லை. தினமும், மின்தடை ஏற்படுவதால் இப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

    இதுகுறித்து மின்வாரிய அதிகாரியிடம் கேட்டால், மின் கம்பி செல்லும் வழியில் தென்னை மரங்கள் இருப்பதால், அடிக்கடி தென்னை மட்டை கம்பி களில் விழுந்து மின்தடை ஏற்படுகிறது. உயர் அழுத்த மின்சாரம் திடீரென வரும்போது பல பகுதிகளில் கம்பி அறுந்து விழுந்து விடுகிறது என்றார்.

    கடந்த சில ஆண்டுகளாக தினசரி மின்தடை என்பது வாடிக்கையாகி விட்டது. தென்னை மரம் வழியாக செல்லும் மின் கம்பிகளை மாற்றி, அதற்கு பதிலாக தரமான கம்பிகள் அமைத்து மின் தடை ஏற்படுவதை தவிர்க்க வேண்டும்.

    தடையில்லாமல் மின்சாரம் கிடைக்க மின் வாரிய அதிகாரிகள் நட வடிக்கை எடுக்க வேண்டும் என மின்தடையால் தொடர்ந்து அவதிப்பட்டு வரும் விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • கடந்த 7-ந் தேதி முதல் உடல்நலக்குறைவு ஏற்பட்டு அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    • வேலைக்கு அமர்த்தியவர்கள் எனது தாயாரை அங்கிருந்து இந்தியாவுக்கு அனுப்ப மறுக்கிறார்கள்.

    திருப்பூர்:

    திருப்பூர் அனுப்பர்பாளையத்தை சேர்ந்த பாஸ்கரனின் மகள் பர்வீன். இவர் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தார். அந்த மனுவில், 'எனது தாயார் ஜெயபிரியா கடந்த ஜனவரி மாதம் குவைத் நாட்டுக்கு, வீட்டு வேலை செய்வதற்காக முகவர்கள் மூலமாக சென்றார். அவருக்கு கடந்த 7-ந் தேதி முதல் உடல் நலக்குறைவு ஏற்பட்டு அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் சொந்த ஊருக்கு வர விரும்புகிறார். ஆனால் வேலைக்கு அமர்த்திவர்கள் எனது தாயாரை அங்கிருந்து இந்தியாவுக்கு அனுப்ப மறுக்கிறார்கள். எனவே எனது தாயாரை இந்தியாவுக்கு அழைத்து வர உதவ வேண்டும். ஏற்கனவே இதுகுறித்து மனு கொடுத்துள்ளேன்' என்று கூறியுள்ளார்.

    • நிரம்பி வெளியேறும் சாக்கடை கழிவுநீரால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
    • கவுன்சிலர், மாநகராட்சி அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    மதுரை

    மதுரை தெற்கு கிருஷ்ணன் கோவில் தெருவில் உள்ள தென்னோ லைகாரத் தெருவில் ஆயிரத் துக்கும் மேற்பட்ட குடும்பங் கள் வசித்து வருகின்றன.

    குறுகிய சந்துகளை கொண்ட இப்பகுதியில் அடிக்கடி பாதாள சாக்கடைகள் நிரம்பி வெளியேறி வரு கின்றன. பழைய பாதாள சாக்கடை குழாய்கள் இருப்பதால் இந்த பிரச்சனை நீடித்து வருகிறது.

    பாதாள சாக்கடைகள் நிரம்பி கழிவு நீர் வெளி யேறுவதால் காம்பவுண்டு களிலும், வீடுகளுக்குள்ளும் சாக்கடை நீர் புகுந்து விடுகிறது. இதன் காரணமாக தென்னோலைக்கார தெருவில் சுகாதார சீர்கேடு அடைந்து கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து அந்த தெருவில் வசிக்கும் பொது மக்கள் கூறுகையில், தினந்தோறும் சாக்கடை நிரம்பி வழிவது நடந்து வருகிறது. இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரியிடம் பலமுறை புகார் தெரி வித்தும் கண்டு கொள்ள வில்லை.

    ஊழியர்களை அழைத்தால் அதிக அளவில் பணம் கேட்கிறார்கள். சாக்கடை பிரச்சினை காரணமாக தெருவில் நடந்து செல்ல கூட முடியாத நிலையில் உள்ளது. எனவே இதுதொடர்பாக கவுன்சிலர், மாநகராட்சி அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    நாமக்கல் ரெயில் நிலையத்துக்கு பஸ் வசதி இல்லாததால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
    நாமக்கல்:

    நாமக்கல் ரெயில்வே நிலையத்துக்கும், பஸ் நிலையத்துக்கும்  இடைப்பட்ட தூரம் 3 கி.மீ. ஆகும்.  நாமக்கல் ரெயில் நிலையத்துக்கு வந்து தினமும் ஏராளமான பயணிகள் ரெயிலில் பயணம் செய்கின்றனர்.

    தினமும் 4 ரெயில்கள் நாமக்கல்லை கடந்து செல்கின்றன. ரெயில் நிலையத்திலிருந்து, ரெயில்கள் நின்று செல்லும் நேரங்களில், ரெயில்  நிலையத்தில் போதிய பஸ் வசதி இல்லாததால் பல மடங்கு ஆட்டோவுக்கு கட்டணம் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. 

    பொதுமக்களின் நலன் கருதி, ரெயில் நிலையத்திலிருந்து, புதிய, பழைய பஸ் நிலையங்கள் வரை நேரடி பேருந்தும், சுற்றி செல்லும் பேருந்தும் இயக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    தினமும் காலையில் கரூரில் இருந்து நாமக்கல் வழியாக சேலம் செல்லும்  பயணிகள் ரெயில் காலை 9.15 மணிக்கு நாமக்கல்லுக்கு வருகிறது. அதே ரெயில் மாலை 6:30 மணிக்கு சேலத்தில் இருந்து நாமக்கல் வருகிறது. பயணிகள் ரெயில் 4 முறை இயக்கப்பட்ட நிலையில் தற்போது  2 முறை மட்டும் இயக்கப்படுகின்றன.

    எனவே நிறுத்தப்பட்ட பயணிகள் ரெயில்களை மீண்டும் இயக்க வேண்டும். மேலும் நிறுத்தப்பட்டுள்ள நாகர்கோவில் முதல் கச்சிக்கூடா, திருப்பதி வரை வாரம் ஒருமுறை இயக்கப்பட்டு வந்த ரெயில், திருச்சி முதல் சேலம் வரை செல்லும் பயணிகள் ரெயில் ஆகியவற்றையும் மீண்டும் இயக்க வேண்டும்.

     பல்வேறு வேலைகளுக்கு செல்பவர்கள் வசதிகேற்ப சேலம் முதல் மதுரை வரை அதிவிரைவு ரெயில் இயக்க வேண்டும் என்பது பயணிகளின் கோரிக்ககையாக உள்ளது.

    இதுகுறித்து ரெயில் பயணிகள் நலச்சங்க தலைவர் கார்த்திக் கூறுகையில், நாமக்கல் ரெயில்வே நிலையத்துக்கு, ஏழை மக்கள் பயன்பெறும் வகையில், பேருந்து வசதி செய்ய வேண்டும். தற்போது அதிகாலை 4 மணிக்கு மட்டும் ஒரே ஒரு பஸ்  இயக்கப்படுகிறது.

    இதனால் பயணிகள் பஸ் வசதி இல்லாமல் தினந்தோறும் கடும் சிரமம் அடைகின்றனர் என்றார்.
    ×