என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நிரம்பி வெளியேறும் சாக்கடை கழிவுநீர்
- நிரம்பி வெளியேறும் சாக்கடை கழிவுநீரால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
- கவுன்சிலர், மாநகராட்சி அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
மதுரை
மதுரை தெற்கு கிருஷ்ணன் கோவில் தெருவில் உள்ள தென்னோ லைகாரத் தெருவில் ஆயிரத் துக்கும் மேற்பட்ட குடும்பங் கள் வசித்து வருகின்றன.
குறுகிய சந்துகளை கொண்ட இப்பகுதியில் அடிக்கடி பாதாள சாக்கடைகள் நிரம்பி வெளியேறி வரு கின்றன. பழைய பாதாள சாக்கடை குழாய்கள் இருப்பதால் இந்த பிரச்சனை நீடித்து வருகிறது.
பாதாள சாக்கடைகள் நிரம்பி கழிவு நீர் வெளி யேறுவதால் காம்பவுண்டு களிலும், வீடுகளுக்குள்ளும் சாக்கடை நீர் புகுந்து விடுகிறது. இதன் காரணமாக தென்னோலைக்கார தெருவில் சுகாதார சீர்கேடு அடைந்து கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அந்த தெருவில் வசிக்கும் பொது மக்கள் கூறுகையில், தினந்தோறும் சாக்கடை நிரம்பி வழிவது நடந்து வருகிறது. இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரியிடம் பலமுறை புகார் தெரி வித்தும் கண்டு கொள்ள வில்லை.
ஊழியர்களை அழைத்தால் அதிக அளவில் பணம் கேட்கிறார்கள். சாக்கடை பிரச்சினை காரணமாக தெருவில் நடந்து செல்ல கூட முடியாத நிலையில் உள்ளது. எனவே இதுதொடர்பாக கவுன்சிலர், மாநகராட்சி அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்