search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடல் நலக்குறைவால் அவதி: குவைத்தில் இருக்கும் தாயாரை அழைத்து வர வேண்டும் - கலெக்டர் அலுவலகத்தில் பெண் மனு
    X

    கோப்புபடம். 

    உடல் நலக்குறைவால் அவதி: குவைத்தில் இருக்கும் தாயாரை அழைத்து வர வேண்டும் - கலெக்டர் அலுவலகத்தில் பெண் மனு

    • கடந்த 7-ந் தேதி முதல் உடல்நலக்குறைவு ஏற்பட்டு அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    • வேலைக்கு அமர்த்தியவர்கள் எனது தாயாரை அங்கிருந்து இந்தியாவுக்கு அனுப்ப மறுக்கிறார்கள்.

    திருப்பூர்:

    திருப்பூர் அனுப்பர்பாளையத்தை சேர்ந்த பாஸ்கரனின் மகள் பர்வீன். இவர் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தார். அந்த மனுவில், 'எனது தாயார் ஜெயபிரியா கடந்த ஜனவரி மாதம் குவைத் நாட்டுக்கு, வீட்டு வேலை செய்வதற்காக முகவர்கள் மூலமாக சென்றார். அவருக்கு கடந்த 7-ந் தேதி முதல் உடல் நலக்குறைவு ஏற்பட்டு அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் சொந்த ஊருக்கு வர விரும்புகிறார். ஆனால் வேலைக்கு அமர்த்திவர்கள் எனது தாயாரை அங்கிருந்து இந்தியாவுக்கு அனுப்ப மறுக்கிறார்கள். எனவே எனது தாயாரை இந்தியாவுக்கு அழைத்து வர உதவ வேண்டும். ஏற்கனவே இதுகுறித்து மனு கொடுத்துள்ளேன்' என்று கூறியுள்ளார்.

    Next Story
    ×