search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SSLC"

    எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவு இன்று (திங்கட்கிழமை) வெளியிடப்படுகிறது. மாணவ-மாணவிகள் மதிப்பெண்களை இணையதளம் மற்றும் செல்போனில் பார்க்கலாம். #SSLC #ExamResult
    சென்னை:

    எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு கடந்த மாதம் (மார்ச்) 14-ந் தேதி தொடங்கி 29-ந் தேதியுடன் முடிவடைந்தது. இந்த தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் என மொத்தம் 9 லட்சத்து 97 ஆயிரத்து 794 மாணவ- மாணவிகள் எழுதினார்கள்.

    ரேங்க் பட்டியல் முறையை கல்வித்துறை ரத்து செய்து, தேர்ச்சி சதவீதத்தை மட்டுமே வெளியிட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தான், இந்த ஆண்டும் தேர்வு முடிவு வெளியிடப்படுகிறது. இன்று (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவை மாணவ-மாணவிகள் தெரிந்து கொள்ளலாம்.

    தேர்வு முடிவுகளை மாணவ-மாணவிகள் www.tnr-esults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளங்களில் பதிவு எண், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து பார்க்கலாம்.

    பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்ணுடன் கூடிய தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். மேலும் பள்ளி மாணவர்கள் அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த செல்போன் எண்ணுக்கும், தனித்தேர்வர்கள் ஆன்லைனில் தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது கொடுத்திருந்த செல்போன் எண்ணுக்கும் மதிப்பெண் குறுஞ்செய்தியாக அனுப்பப்பட இருக்கிறது.

    கடந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 10 லட்சத்து 1,140 பேர் எழுதினார்கள். இதில் 94.5 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.  #SSLC #ExamResult 
    எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு நாளை மறுதினம் வெளியிடப்படும் என்றும், மாணவர்களின் செல்போன் எண்ணுக்கு மதிப்பெண் குறுஞ்செய்தியாக வரும் என்றும் அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. #SSLCExam
    சென்னை:

    எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு நாளை மறுதினம் வெளியிடப்படும் என்றும், மாணவர்களின் செல்போன் எண்ணுக்கு மதிப்பெண் குறுஞ்செய்தியாக வரும் என்றும் அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கடந்த மாதம் நடந்தது. பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் இந்த தேர்வை எழுதினார்கள். தேர்வு முடிவு 29-ந் தேதி (நாளை மறுதினம்) காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது.

    தேர்வர்கள் www.tnr-esults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளங்களில் சென்று தங்களுடைய பதிவு எண், பிறந்த தேதி, மாதம், வருடத்தை பதிவு செய்து தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

    பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறியலாம். பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட்டு இருந்த செல்போன் எண்ணுக்கும், தனித்தேர்வர்களுக்கு ஆன்-லைனில் விண்ணப்பித்தபோது அவர்கள் வழங்கிய செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தியாக மதிப்பெண் வரும்.

    பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி தலைமை ஆசிரியர் வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மைய தலைமை ஆசிரியர் வழியாகவும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை அடுத்த மாதம் (மே) 2-ந்தேதி பிற்பகல் முதல் பெற்றுக்கொள்ளலாம். அடுத்த மாதம் 6-ந்தேதி பிற்பகல் முதல் பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் பிறந்த தேதி மற்றும் பதிவு எண் குறிப்பிட்டு மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    தேர்வு எழுதிய விடைத்தாள்களின் மதிப்பெண் மறுகூட்டலுக்கு அடுத்த மாதம் 2-ந்தேதி முதல் 4-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களும், தேர்வில் கலந்து கொள்ள முடியாதவர்களுக்கும் சிறப்பு துணை தேர்வு ஜூன் 14-ந்தேதி தொடங்கி 22-ந்தேதி வரை நடக்கிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #SSLCExam
    தமிழக கல்வித்துறை சார்பில் நடத்தப்படும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. #SSLCExam
    புதுச்சேரி:

    தமிழக கல்வித்திட்டத்தை பின்பற்றும் புதுவையிலும் இன்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. தேர்வுகள் முதல் முறையாக மதியம் 2 மணிக்கு தொடங்கி 4.45 மணிக்கு முடிவடைகிறது. மாணவர்கள் கேள்வித்தாளை படித்துப்பார்க்க 15 நிமிடம் அவகாசம் அளிக்கப்படுகிறது.

    புதுவையில் உள்ள 239 பள்ளிகளில் இருந்து 6 ஆயிரத்து 988 மாணவர்களும், 6 ஆயிரத்து 970 மாணவிகளும் என மொத்தம் 13 ஆயிரத்து 948 பேர் 36 மையங்களில் தேர்வு எழுதினர். தனித்தேர்வர்கள் ஆயிரத்து 294 பேர் 6 மையங்களில் தேர்வு எழுதினர்.

    காரைக்காலில் உள்ள 63 பள்ளிகளில் இருந்து ஆயிரத்து 335 மாணவர்களும், ஆயிரத்து 477 மாணவிகளும் என மொத்தம் 2 ஆயிரத்து 812 பேர் 13 மையங்களில் தேர்வு எழுதினர். தேர்வு மையங்களில் மொத்தம் 800 ஆசிரியர்கள் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 144 நிலைக்குழுவும், 8 பேர் கொண்ட 2 பறக்கும் படையும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். #SSLCExam

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. சுமார் 10 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். #SSLCExam
    சென்னை:

    2018-19-ம் கல்வியாண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. வருகிற 29-ந் தேதி வரை இந்த தேர்வு நடைபெற இருக்கிறது. இந்த ஆண்டு மொழிப்பாடங்களுக்கான தேர்வுகள் (தமிழ், ஆங்கிலம்) மட்டும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 4.45 மணி வரை நடைபெறும். மற்ற பாடங்களுக்கான தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 12.45 மணி வரை நடக்கும். இன்று பிற்பகல் தமிழ் முதல் தாள் தேர்வு தொடங்கியது.

    எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 12 ஆயிரத்து 546 பள்ளிகளில் இருந்து 9 லட்சத்து 59 ஆயிரத்து 618 மாணவ-மாணவிகளும், தனித்தேர்வர்களாக 38 ஆயிரத்து 176 பேரும் என மொத்தம் 9 லட்சத்து 97 ஆயிரத்து 794 மாணவ-மாணவிகள் இந்த தேர்வை எழுதுகின்றனர்.



    தமிழ்நாடு, புதுச்சேரியில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுக்கு மொத்தம் 3 ஆயிரத்து 731 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டை காட்டிலும் 133 தேர்வு மையங்கள் அதிகம் ஆகும்.

    சென்னை மாநகரில் 567 பள்ளிகளில் இருந்து 213 தேர்வு மையங்களில் 50 ஆயிரத்து 678 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.  வேலூர், கடலூர், சேலம், கோவை, மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி மற்றும் புழல் சிறைகளில் உள்ள 152 சிறைவாசிகள் புழல், திருச்சி, பாளையங்கோட்டை மற்றும் கோவை ஆகிய 4 சிறைகளில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் தேர்வு எழுதுகின்றனர்.

    தேர்வுக்காக 49 ஆயிரம் ஆசிரியர்கள் அறை கண்காணிப்பாளர் பணியில் ஈடுபட்டுள்ளனர். தேர்வு பணியில் அனைத்து நிலைகளிலும் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் கழிப்பிட வசதிகள் சிறப்பான முறையில் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    காப்பி அடிப்பதை தடுக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் சுமார் 5 ஆயிரத்து 500 எண்ணிக்கையிலான பறக்கும் படை மற்றும் நிலையான படை உறுப்பினர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். #SSLCExam

    எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. தமிழகம், புதுச்சேரியில் 9 லட்சத்து 97 ஆயிரத்து 794 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். #SSLC
    சென்னை:

    2018-19-ம் கல்வியாண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. வருகிற 29-ந் தேதி வரை இந்த தேர்வு நடைபெற இருக்கிறது. இந்த ஆண்டு மொழிப்பாடங்களுக்கான தேர்வுகள் (தமிழ், ஆங்கிலம்) மட்டும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 4.45 மணி வரை நடைபெறும். மற்ற பாடங்களுக்கான தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 12.45 மணி வரை நடக்கும்.

    எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 12 ஆயிரத்து 546 பள்ளிகளில் இருந்து 9 லட்சத்து 59 ஆயிரத்து 618 மாணவ-மாணவிகளும், தனித்தேர்வர்களாக 38 ஆயிரத்து 176 பேரும் என மொத்தம் 9 லட்சத்து 97 ஆயிரத்து 794 மாணவ-மாணவிகள் இந்த தேர்வை எழுதுகின்றனர்.

    தமிழ்நாடு, புதுச்சேரியில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுக்கு மொத்தம் 3 ஆயிரத்து 731 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. இது கடந்த ஆண்டை காட்டிலும் 133 தேர்வு மையங்கள் அதிகம் ஆகும்.



    சென்னை மாநகரில் 567 பள்ளிகளில் இருந்து 213 தேர்வு மையங்களில் 50 ஆயிரத்து 678 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத இருக்கின்றனர். வேலூர், கடலூர், சேலம், கோவை, மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி மற்றும் புழல் சிறைகளில் உள்ள 152 சிறைவாசிகள் புழல், திருச்சி, பாளையங்கோட்டை மற்றும் கோவை ஆகிய 4 சிறைகளில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் தேர்வு எழுதுகின்றனர்.

    தேர்வுக்காக 49 ஆயிரம் ஆசிரியர்கள் அறை கண்காணிப்பாளர் பணியில் ஈடுபடுத்தப்பட இருக்கின்றனர். தேர்வு பணியில் அனைத்து நிலைகளிலும் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் கழிப்பிட வசதிகள் சிறப்பான முறையில் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன.

    காப்பி அடிப்பதை தடுக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு மையங்களை பார்வையிடுவதற்கு சுமார் 5 ஆயிரத்து 500 எண்ணிக்கையிலான பறக்கும் படை மற்றும் நிலையான படை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    தேர்வு மைய வளாகத்தில் மாணவ-மாணவிகள் செல்போன் எடுத்து வருவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களும் தேர்வு அறையில் தங்களுடன் செல்போனை வைத்திருப்பதற்கும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இதை மீறும் பட்சத்தில் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாணவ-மாணவிகள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால், விதிமுறைகளின்படி உரிய தண்டனைகள் வழங்கப்படும்.

    தேர்வு தொடர்பான புகார்கள், கருத்துகளை தெரிவிக்க 9385494105, 9385494115, 9385494120, 9385494125 ஆகிய எண்களில் நாளை முதல் 29-ந்தேதி வரை ஒவ்வொரு நாளும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.

    மேற்கண்ட தகவல் அரசு தேர்வுத்துறை இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #SSLC
    10, பிளஸ்-2 துணைதேர்வு எழுத உள்ள அனைத்து தனித்தேர்வர்களும் வரும் 17-ந்தேதி முதல் இணையதளத்தின் மூலம் தேர்வுக்கு நுழைவு சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
    புதுச்சேரி:

    புதுவை பள்ளி கல்விதுறை இணை இயக்குனர் குப்புசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடைபெற உள்ள பிளஸ்-2 துணைதேர்வு எழுத அரசு தேர்வு துறையால் அறிவிக்கப்பட்ட நாட்களில் விண்ணப்பித்த அனைத்து தனித்தேர்வர்களும் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) பிற்பகல் 2 மணி முதல் இணையதளத்தின் மூலம் தேர்வுக்கு நுழைவு சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    இணையதளத்தில் நுழைவு சீட்டு என்பதனை கிளிக் செய்து தங்களது விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்தால் அவர்களுடைய தேர்வு கூட அனுமதிசீட்டு திரையில் தோன்றும். அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    எழுத்து தேர்வு மற்றும் செய்முறை அடங்கிய பாடங்களில் செய்முறைத்தேர்வில் 40 மதிப்பெண்களுக்கு குறைவாக பெற்று தேர்ச்சி அடையாதவர்கள் கண்டிப்பாக செய்முறை தேர்வினை மீண்டும் செய்வதோடு எழுத்து தேர்விற்கும் வருகை புரிய வேண்டும். அதிகபட்ச மதிப்பெண் 200 கொண்ட செய்முறை மட்டும் உள்ள பாடத்தில் தேர்ச்சி பெறாதவர்கள் மீண்டும் செய்முறை தேர்விற்கு வருகைதர வேண்டும்.

    இதேபோல் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடைபெற உள்ள 10-ம்வகுப்பு துணைத்தேர்வு எழுத அரசுதேர்வு துறையால் அறிவிக்கப்பட்ட நாட்களில் விண்ணப்பித்த அனைத்து தனித்தேர்வர்களும் இன்று (சனிக்கிழமை) பிற்பகல் முதல் இணையதளத்தின் மூலம் தேர்வுகூட அனுமதி சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். உரிய தேர்வு கூட அனுமதி சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

    இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
    தமிழ்வழியில் படிக்கும் எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபி அருகே கூகலூரில் உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் ‘ஸ்மார்ட்’ வகுப்பு தொடக்க விழா நடந்தது. விழாவில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கலந்து கொண்டு ‘ஸ்மார்ட்’ வகுப்பை தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

    1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு அடுத்த ஆண்டு முதல் சீருடைகள் மாற்றி அமைக்கப்படும். இதன் மூலம் தனியார் பள்ளிக்கும், அரசு பள்ளிக்கும் இடையே உள்ள வேறுபாடு அகலும். அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழி கல்விக்காக 50 சதவீதம் இடம் ஒதுக்கி அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

    9, 10, பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகள் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட உள்ளது. இதன் மூலம் மாணவ-மாணவிகள் உலக செய்திகளை தெரிந்து கொள்ளலாம். பட்டயக் கணக்காளர் படிப்பு படிக்க பிளஸ்-2 முடித்த 25 ஆயிரம் பேருக்கு இந்த ஆண்டு முதல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

    மேலும், பிளஸ்-2 படித்தவுடன் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்ற உத்தரவாதத்துடன் இந்த அரசு பல்வேறு புதிய பாடத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த கல்வி ஆண்டில் அரசு பள்ளிக்கூடங்களில் 1 லட்சம் மாணவ-மாணவிகள் கூடுதலாக சேர்ந்து உள்ளனர். வரும் கல்வி ஆண்டில் 3 லட்சம் மாணவ, மாணவிகளை அரசு பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    தமிழகத்தில் 4 ஆயிரத்து 622 நூலகங்கள் உள்ளன. இதில் கடந்த ஒரு மாதத்தில் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக சேர்ந்து உள்ளனர். இலங்கையில் உள்ள நூலகத்துக்கு 1 லட்சம் சிறந்த நூல்கள் அரசின் சார்பில் விரைவில் வழங்கப்பட உள்ளது. தமிழ் வழி கல்வி படிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த அரசு ஊக்கத்தொகை வழங்க உள்ளது.

    அதன்படி பள்ளியில் சிறந்த வருகை, ஒழுக்கம், நல்ல மதிப்பெண், சமூக சேவையில் ஆர்வம் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் 10-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு ரூ.10 ஆயிரமும், பிளஸ்-2 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ரூ.20 ஆயிரமும் என மொத்தம் 960 பேருக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது.

    இதற்காக 5 பேர் கொண்ட குழு அமைக்கப்படும். அவர் கள் சிறந்த மாணவ, மாணவிகளைத் தேர்வு செய்வார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    10-ம் வகுப்பு தேர்வில் எதிர்பார்த்த அளவுக்கு மார்க் கிடைக்காததால் பிளஸ்-1 வகுப்பில் சேர முடியாமல் மாணவர்களும், பெற்றோர்களும் திண்டாடுகின்றனர்.
    சென்னை:

    எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு கடந்த 23-ந்தேதி வெளியானது. தேர்வு எழுதிய 9.5 லட்சம் மாணவர்களில் 8.97 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

    கடந்த காலங்களை ஒப்பிடும்போது இந்த வருடம் வினாக்கள் மிகவும் கடினமாக இருந்ததால் மாணவ- மாணவிகள் அதிக மதிப்பெண்கள் பெற முடியாமல் போனது. பொதுவாக கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய 3 பாடங்களில் எளிதாக 100-க்கு 100 பெறுவார்கள்.

    ஆனால் இந்த வருடம் எத்தனை மணவர்கள் பாட வாரியாக தேர்ச்சி பெற்றார்கள் என்ற விவரத்தை தேர்வுத்துறை வெளியிடவில்லை. அதற்கு பதிலாக சதவிகிதம் அடிப்படையில் தேர்ச்சியை குறிப்பிட்டு இருந்தனர்.

    இந்த வருடம் கணிதம், சமூக அறிவியல், அறிவியல் பாடங்களில் கேட்கப்பட்ட வினாக்கள் கடினமாக இருந்ததால் ‘சென்டம்’ பெறக்கூடிய மாணவர்கள் வாய்ப்பை இழந்தனர்.

    அதேபோல பெரும்பாலான மாணவர்கள் 300 முதல் 400 மதிப்பெண்கள்தான் பெற முடிந்தது. 400-க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கையும் குறைந்தது. மேலும் 200 முதல் 300 மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது. தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காததால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    10-ம் வகுப்பு தேர்வில் எதிர்பார்த்த அளவுக்கு மார்க் கிடைக்காததால் பிளஸ்-1 வகுப்பில் சேர முடியாமல் மாணவர்களும், பெற்றோர்களும் திண்டாடுகின்றனர். தாங்கள் படித்த அதே பள்ளியில் பிளஸ்-1 வகுப்பை தொடர்வதற்கு விரும்பிய பாடப்பிரிவு கிடைக்காமல் தவிக்கின்றனர்.

    தாங்கள் படித்த பள்ளியில் இடம் கிடைக்காத மாணவர்கள் வேறு பள்ளிகளை நோக்கி செல்கிறார்கள். கணிதப் பாடப்பரிவு, அறிவியல், வணிகவியல் பாடப்பிரிவுகளில் சேர போதிய மார்க் இல்லாததால் ஒவ்வொரு பள்ளிகளாக ஏறி இறங்குகிறார்கள்.

    தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் தாங்கள் கேட்கிற பாடப்பிரிவு கிடைக்கவில்லை என்று மாணவர்கள் ஆதங்கப்படுகிறார்கள். அரசு பள்ளிகளிலும் குறிப்பிட்ட பாடப் பிரிவுகளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. #Tamilnews
    சிவகங்கை மாவட்டம் 10-ம் வகுப்பு தேர்வு முடிவில் தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் மாவட்ட அளவில் முதன்மை பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்று முதன்மை கல்வி அதிகாரி கூறியுள்ளார்.
    சிவகங்கை:

    தமிழகம் முழுவதும் இன்று எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் சிவகங்கை மாவட்டம் முதலிடம் பெற்று உள்ளது. ஈரோடு மாவட்டம் 2-ம் இடமும், விருதுநகர் மாவட்டம் 3-ம் இடமும் பெற்று உள்ளன.

    10-ம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் சிவகங்கை மாவட்டம் இந்த முறை சாதனை படைத்துள்ளது. இந்த மாவட்டத்தில் 98.5 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். மாவட்டத்தில் 275 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் 9 ஆயிரத்து 395 பேரும், மாணவிகள் 9 ஆயிரத்து 442 பேர் என 18 ஆயிரத்து 837 தேர்வு எழுதினர். இதில் 18 ஆயிரத்து 855 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

    இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆஞ்சலோ இருதயராஜ் கூறுகையில், சிவகங்கை மாவட்டத்தில் 10-ம் வகுப்பு தேர்வில் சிவகங்கை மாவட்டம் முதன்மை பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. மாணவ, மாணவிகள் சிறந்த முறையில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பள்ளிகளில் சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டன.

    வருங்காலத்திலும் பிளஸ்-2, 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் இன்னும் மாணவ, மாணவிகள் சிறப்பாக தேர்ச்சி பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
    10 லட்சத்து 1,140 மாணவர்கள் எழுதிய எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நாளை (புதன்கிழமை) வெளியாகிறது. இணையதளத்தில் காலை 9.30 மணிக்கு முடிவுகளை பார்க்கலாம். #SSLC #ExamResult
    சென்னை:

    10-ம் வகுப்பு எனப்படும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 16-ந் தேதி முதல் ஏப்ரல் 20-ந் தேதி வரை நடைபெற்றது. இத்தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 12 ஆயிரத்து 337 பள்ளிகளில் இருந்து 9 லட்சத்து 64 ஆயிரத்து 491 மாணவர்களும், 36 ஆயிரத்து 649 தனி தேர்வர்களும் என மொத்தம் 10 லட்சத்து 1,140 பேர் எழுதினர்.

    இதில் மாணவிகள் 4 லட்சத்து 81 ஆயிரத்து 371 பேரும், மாணவர்கள் 4 லட்சத்து 83 ஆயிரத்து 120 பேரும் அடங்குவர். மாணவிகளை விட 1,749 மாணவர்கள் கூடுதலாக தேர்வு எழுதினர். தனித்தேர்வர்களில் 5 திருநங்கைகளும், 186 சிறை கைதிகளும் தேர்வு எழுதினர்.

    எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் மே 23-ந் தேதி (அதாவது, நாளை) வெளியிடப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஏற்கனவே அறிவித்தார். அதன்படி விடைத்தாள் திருத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து முடிந்தது.

    மதிப்பெண்கள் பட்டியல் மீண்டும் சரிப்பார்க்கப்பட்டு, இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகளும் நடந்து முடிந்தன. இதையடுத்து எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நாளை (புதன்கிழமை) வெளியாகிறது.

    இதுதொடர்பாக அரசு தேர்வுகள் துறை இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் புதன்கிழமை (நாளை) காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும். www.dge.tn.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதள முகவரிகளில் தேர்வு முடிவை பார்க்கலாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  #SSLC #ExamResult
    ×