search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எஸ்.எஸ்.எல்.சி"

    • காலை 10 மணிக்கு எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளும், மதியம் 2 மணிக்கு 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டன. 13394 மாணவர்கள், 14511 மாணவிகள் என 27905 மாணவ- மனைவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது 92.16 சதவீதம் மாணவ- மாணவிகள் தேர்ச்சி அடைந்து ள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் 11-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 5-ந் தேதி வரை நடைபெற்றது.

    எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு ஏப்ரல் 6-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி வரை நடத்தப்பட்டது. இதையடுத்து விடைத்தாள்கள் திருத்தும் பணி முடிந்து மதிப்பெண் பதிவேற்றம் உள்பட இதர பணிகளும் முடிவடைந்தன.

    இதனை தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி மற்றும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.

    அதன்படி இன்று காலை 10 மணிக்கு எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளும், மதியம் 2 மணிக்கு 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டன.

    தமிழத்தில் எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வில் 91.39 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    தஞ்சை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வை 15066 மாணவர்களும், 15213 மாணவிகளும் என மொத்தம் 30279 பேர் எழுதினர். இதில் 13394 மாணவர்கள், 14511 மாணவிகள் என 27905 மாணவ- மனைவிகள் தேர்ச்சி பெற்றுள்ள னர். அதாவது 92.16 சதவீதம் மாணவ- மாணவிகள் தேர்ச்சி அடைந்து ள்ளனர்.

    இதேபோல் இன்று மதியம் 11-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

    • குமரி மாவட்டத்தில் 95.99 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி
    • மாநில அளவில் 4-வது இடம் பிடித்தது

    நாகர்கோவில் :

    தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.

    இதில் தமிழக அளவில் தேர்ச்சி விழுக்காட்டில் குமரி மாவட்டம் 4-வது இடத்தை பிடித்துள்ளது. 23 ஆயிரத்து 141 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதி யதில் 22 ஆயிரத்து 213 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விழுக்காடு 95.99 சதவீதமாகும்.

    11 ஆயிரத்து 657 மாண வர்கள் தேர்வு எழுதியதில் 10 ஆயிரத்து 932 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விழுக்காடு 93.78 சதவீதமாகும். 11 ஆயிரத்து 484 மாணவிகள் தேர்வு எழுதியதில் 11 ஆயிரத்து 281 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விழுக்காடு 98.23 சதவீதமாகும்.

    மாணவர்களை காட்டி லும் மாணவிகளே அதிக அளவு தேர்ச்சி பெற்று சாதனை புரிந்துள்ளனர். சாதனை படைத்த மாணவ-மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்தினார்கள். 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு முதன்மை கல்வி அதிகாரி முருகன் பாராட்டு தெரிவித்துள் ளார்.

    கடந்த ஆண்டு 10-ம் வகுப்பு தேர்ச்சி விழுக் காட்டில் குமரி மாவட்டம் முதலிடம் பிடித்திருந்தது.

    இந்த ஆண்டு 4-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது

    ×