search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு
    X

    எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

    • குமரி மாவட்டத்தில் 95.99 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி
    • மாநில அளவில் 4-வது இடம் பிடித்தது

    நாகர்கோவில் :

    தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.

    இதில் தமிழக அளவில் தேர்ச்சி விழுக்காட்டில் குமரி மாவட்டம் 4-வது இடத்தை பிடித்துள்ளது. 23 ஆயிரத்து 141 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதி யதில் 22 ஆயிரத்து 213 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விழுக்காடு 95.99 சதவீதமாகும்.

    11 ஆயிரத்து 657 மாண வர்கள் தேர்வு எழுதியதில் 10 ஆயிரத்து 932 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விழுக்காடு 93.78 சதவீதமாகும். 11 ஆயிரத்து 484 மாணவிகள் தேர்வு எழுதியதில் 11 ஆயிரத்து 281 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விழுக்காடு 98.23 சதவீதமாகும்.

    மாணவர்களை காட்டி லும் மாணவிகளே அதிக அளவு தேர்ச்சி பெற்று சாதனை புரிந்துள்ளனர். சாதனை படைத்த மாணவ-மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்தினார்கள். 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு முதன்மை கல்வி அதிகாரி முருகன் பாராட்டு தெரிவித்துள் ளார்.

    கடந்த ஆண்டு 10-ம் வகுப்பு தேர்ச்சி விழுக் காட்டில் குமரி மாவட்டம் முதலிடம் பிடித்திருந்தது.

    இந்த ஆண்டு 4-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது

    Next Story
    ×