என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் சிவகங்கை மாவட்டம் முதலிடம் - முதன்மை கல்வி அதிகாரி மகிழ்ச்சி
Byமாலை மலர்23 May 2018 11:17 AM GMT (Updated: 23 May 2018 11:17 AM GMT)
சிவகங்கை மாவட்டம் 10-ம் வகுப்பு தேர்வு முடிவில் தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் மாவட்ட அளவில் முதன்மை பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்று முதன்மை கல்வி அதிகாரி கூறியுள்ளார்.
சிவகங்கை:
தமிழகம் முழுவதும் இன்று எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் சிவகங்கை மாவட்டம் முதலிடம் பெற்று உள்ளது. ஈரோடு மாவட்டம் 2-ம் இடமும், விருதுநகர் மாவட்டம் 3-ம் இடமும் பெற்று உள்ளன.
10-ம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் சிவகங்கை மாவட்டம் இந்த முறை சாதனை படைத்துள்ளது. இந்த மாவட்டத்தில் 98.5 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். மாவட்டத்தில் 275 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் 9 ஆயிரத்து 395 பேரும், மாணவிகள் 9 ஆயிரத்து 442 பேர் என 18 ஆயிரத்து 837 தேர்வு எழுதினர். இதில் 18 ஆயிரத்து 855 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆஞ்சலோ இருதயராஜ் கூறுகையில், சிவகங்கை மாவட்டத்தில் 10-ம் வகுப்பு தேர்வில் சிவகங்கை மாவட்டம் முதன்மை பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. மாணவ, மாணவிகள் சிறந்த முறையில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பள்ளிகளில் சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டன.
வருங்காலத்திலும் பிளஸ்-2, 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் இன்னும் மாணவ, மாணவிகள் சிறப்பாக தேர்ச்சி பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தமிழகம் முழுவதும் இன்று எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் சிவகங்கை மாவட்டம் முதலிடம் பெற்று உள்ளது. ஈரோடு மாவட்டம் 2-ம் இடமும், விருதுநகர் மாவட்டம் 3-ம் இடமும் பெற்று உள்ளன.
10-ம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் சிவகங்கை மாவட்டம் இந்த முறை சாதனை படைத்துள்ளது. இந்த மாவட்டத்தில் 98.5 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். மாவட்டத்தில் 275 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் 9 ஆயிரத்து 395 பேரும், மாணவிகள் 9 ஆயிரத்து 442 பேர் என 18 ஆயிரத்து 837 தேர்வு எழுதினர். இதில் 18 ஆயிரத்து 855 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆஞ்சலோ இருதயராஜ் கூறுகையில், சிவகங்கை மாவட்டத்தில் 10-ம் வகுப்பு தேர்வில் சிவகங்கை மாவட்டம் முதன்மை பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. மாணவ, மாணவிகள் சிறந்த முறையில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பள்ளிகளில் சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டன.
வருங்காலத்திலும் பிளஸ்-2, 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் இன்னும் மாணவ, மாணவிகள் சிறப்பாக தேர்ச்சி பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X