search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்கம் - 14 ஆயிரம் மாணவர்கள் புதுவையில் தேர்வெழுதினர்
    X

    பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்கம் - 14 ஆயிரம் மாணவர்கள் புதுவையில் தேர்வெழுதினர்

    தமிழக கல்வித்துறை சார்பில் நடத்தப்படும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. #SSLCExam
    புதுச்சேரி:

    தமிழக கல்வித்திட்டத்தை பின்பற்றும் புதுவையிலும் இன்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. தேர்வுகள் முதல் முறையாக மதியம் 2 மணிக்கு தொடங்கி 4.45 மணிக்கு முடிவடைகிறது. மாணவர்கள் கேள்வித்தாளை படித்துப்பார்க்க 15 நிமிடம் அவகாசம் அளிக்கப்படுகிறது.

    புதுவையில் உள்ள 239 பள்ளிகளில் இருந்து 6 ஆயிரத்து 988 மாணவர்களும், 6 ஆயிரத்து 970 மாணவிகளும் என மொத்தம் 13 ஆயிரத்து 948 பேர் 36 மையங்களில் தேர்வு எழுதினர். தனித்தேர்வர்கள் ஆயிரத்து 294 பேர் 6 மையங்களில் தேர்வு எழுதினர்.

    காரைக்காலில் உள்ள 63 பள்ளிகளில் இருந்து ஆயிரத்து 335 மாணவர்களும், ஆயிரத்து 477 மாணவிகளும் என மொத்தம் 2 ஆயிரத்து 812 பேர் 13 மையங்களில் தேர்வு எழுதினர். தேர்வு மையங்களில் மொத்தம் 800 ஆசிரியர்கள் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 144 நிலைக்குழுவும், 8 பேர் கொண்ட 2 பறக்கும் படையும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். #SSLCExam

    Next Story
    ×