search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதிப்பெண்"

    • மாணவர்களுக்கு இனி பொதுத் தோ்வு முடிவில் மதிப்பெண்கள் மட்டுமே வழங்கப்படும்.
    • பிப்ரவரி 15-ந் தேதி பொதுத் தோ்வுகள் தொடங்க உள்ள நிலையில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    புதுடெல்லி:

    மாணவா்களிடையே தேவையற்ற போட்டி மனப்பான்மையைத் தவிா்க்கும் வகையில், தோ்வில் முதலிடம் பிடித்த மாணவா் என்பது போன்ற தனிப்பட்ட மாணவா்களின் பட்டியலை வெளியிடுவதை சி.பி.எஸ்.இ. ஏற்கெனவே நிறுத்திவிட்டது. அதன் தொடா்ச்சியாக, தற்போது ஒட்டுமொத்த மதிப்பெண் சதவீதம், தரவரிசை போன்ற விவரங்கள் வெளியீட்டையும் நிறுத்த சி.பி.எஸ்.இ. முடிவு செய்துள்ளது.

    இதுகுறித்து சி.பி.எஸ்.இ. தோ்வுக் கட்டுப்பாட்டாளா் சன்யம் பரத்வாஜ் கூறியதாவது:-

    10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இனி பொதுத் தோ்வு முடிவில் மதிப்பெண்கள் மட்டுமே வழங்கப்படும். மாணவா் பெற்ற ஒட்டுமொத்த மதிப்பெண் விவரம், ஒட்டுமொத்த மதிப்பெண் சதவீதம், தரவரிசை, அனைத்துப் பாடங்களில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவா்கள் பட்டியல் போன்ற விவரங்கள் வெளியிடப்படாது.

    எனவே, உயா் கல்வி நிறுவனங்கள் அல்லது வேலைவாய்ப்பு அளிக்கும் நிறுவனங்கள் சி.பி.எஸ்.இ. மாணவா்களின் பாட மதிப்பெண்களின் அடிப்படையில், அவா்கள் பெற்ற மொத்த மதிப்பெண்ணையும், மதிப்பெண் சதவீதத்தையும் கணக்கிட்டுக்கொள்ள வேண்டும்' என்றாா்.

    சி.பி.எஸ்.இ. 10, 12-ம் வகுப்பு பொதுத் தோ்வுகள் வரும் 2024, பிப்ரவரி 15-ந் தேதி தொடங்க உள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    • பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த நாடு முழுவதும் 30 ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை
    • 8 மற்றும் 10-ம் வகுப்புகளில் 60 சதவீதம் மற்றும் அதற்கும் அதிகமாக மதிப்பெண்கள் பெற்ற அனைத்து மாணவர்களும் தேசிய கல்வி உதவித்தொகை

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    இதர பிற்படுத்தப் பட்டோர், பொருளா தாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த நாடு முழுவதும் 30 ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் 9-ம் வகுப்பு, 11 -ம் வகுப்பு பயின்றுவரும் 3,093 மாணவர்களுக்கு இக்கல்வி உதவித் தொகை வழங்கப் படும் எனவும் அதில் குறிப்பி டப்பட்டிருந்தது. இத்திட்டத்தின்கீழ் பயன்பெறும் பயனாளிகள், தேசியத் தேர்வு முகமையால் 29.09.2023 அன்று நடத்தப்பட விருந்த யசஸ்வி நுழைவுத் தேர்வில் பெற்ற தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுபவர் என தெரிவிக்கப்ப ட்டிருந்த நிலையில் தற்போது எழுத்து தேர்வானது காலப்பற்றாமை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    மேலும், 8 மற்றும் 10-ம் வகுப்புகளில் 60 சதவீதம் மற்றும் அதற்கும் அதிகமாக மதிப்பெண்கள் பெற்ற அனைத்து மாணவர்களும் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் விண்ணப்பிக்க தகுதியான வர்கள் எனவும், மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்ப டையிலேயே இந்த ஆண்டிற்கான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு இக்கல்வி உதவித் தொகை யானது வழங்கப்படும் எனவும் மத்திய அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்கள் அறிந்திட https://scholarships.gov.in மற்றும் ஒன்றிய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணையதளத்தினை (http://socialjustice.gov.in) தொடர்ந்து நோக்கி கல்வி உதவித்தொகை பெற்று பயன்பெறலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • 9, 10-ம் வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடக்கிறது.
    • அரசு கல்லூரிகளில் படிக்கும் வகையில் முதல் நிலையில் மதிப்பெண் பெற வேண்டும்.

    ராமநாதபுரம்

    தமிழக பள்ளிக் கல்வித்துறையின் மூலம் தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களில் அரசு மாதிரி பள்ளி நடைபெறு கிறது. இந்த மாதிரி பள்ளியில் சேர்க்கை என்பது அரசு பள்ளியில் படித்து வரும் மாணவ, மாண விகளின் கல்வித் திறன் அடிப்படையில் தேர்வு செய்து மாதிரி பள்ளிக்கு அனுமதிக்கப் படுகிறது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் முதல் 11,12 ஆகிய வகுப்புகள் ராமநாதபுரம் மாவட்டம் செய்யது அம்மாள் இன்ஜினியரிங் கல்லூரி வளாகத்தில் வகுப்புகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று

    9,10-ம் வகுப்பு சேர்க்கை தொடங்கியது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 9,10 ஆகிய வகுப்புகளின் படித்து சிறப்பும் அதிக மதிப்பெண்கள் பெற்ற 80 பேர் தேர்வு செய்யப்பட்டு இது குறித்து அந்த மாணவர்க ளுக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. தொடர்ந்து நேற்று காலை பெற்றோர் மற்றும் உறவினர்க ளுடன் பள்ளிக்கு வந்து விண்ணப் படிவத்தை பூர்த்தி செய்து அலுவலர்க ளிடம் கொடுத்தனர்.

    இது குறித்து பள்ளி முதல்வர் ரவி கூறியதாவது:-

    கல்வி வகையில் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி மாணவர்க ளின் விருப்பத்திற் கேற்ப கல்வி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாவட்டம் தோறும் அரசு மாதிரி பள்ளி தொடங்கப் பட்டு அதில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாணவ, மாணவிகள் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு உண்டு உறைவிட பள்ளி யாக அனைத்து வசதிகளும் வழங்கி கல்வி கற்பிக்கப்ப டுகின்றன.

    நடப்பா ண்டில் கூடுதலாக 9-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. விரைவில் வகுப்புகள் தொ டங்க உள்ளது. மாணவ, மாணவி கள் சிறந்த முறையில் பயி ன்று உயர்கல்வி படிப்புக்கான அரசு தேர்வு களில் அதிக மதி ப்பெண் பெற்று மருத்து வம், பொறியியல், சட்டப் படிப்பு, வேளாண்மை படிப்பு போன்றவற்றில் அரசு கல்லூரிகளில் படிக்கும் வகையில் முதல் நிலையில் மதிப்பெண் பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கீழப்பெரம்பலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 10, 12-ம் வகுப்பில் முதல் முன்று இடங்கள் பிடித்த மாணவர்களுக்கு பரிசு தொகை வழங்கப்பட்டது
    • ஊராட்சி மன்றத் தலைவர் பரிசுத்தொகையை வழங்கினார்

    அகரம்சீகூர்

    பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அடுத்துள்ள கீழப்பெரம்பலூர் ஊராட்சியில் அமைந்துள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 77-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் சத்யா காமராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

    பின்பு10 -ம் வகுப்பு மற்றும் 12 -ம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிக்கு 3000 (ரூபாய்) பரிசு தொகையும் இரண்டாம் மதிப்பெண் பெற்ற மாணவிக்கு 2000 (ரூபாய்) பரிசு தொகையும் மூன்றாம் இடம் பிடித்த மாணவிக்கு ஆயிரம் (ரூபாய்) பரிசு தொகையும் வழங்கினார்.

    இதேபோல் பள்ளி ஆசிரியை ஹேமலதாவும் பரிசுத்தொகையை வழங்கினார். மேலும் 10-ம் வகுப்பு மற்றும் 12 -ம் வகுப்பில் 100% தேர்ச்சியை பெற்றதை முன்னிட்டு அனைத்து ஆசிரியர்களுக்கும் ஊராட்சி மன்ற தலைவர் சத்யா காமராஜ் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பொன்னாடை அணிவித்தனர். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர் பிரபாகரன், ஊராட்சி மன்ற தலைவர் சத்யா காமராஜ், வார்டு உறுப்பினர் ஜான்சி ராணி தமிழ் செல்வன், பாலு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் செல்வராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



    • தகுதியான மாணவர்களை கண்டறிந்து, பள்ளி மேலாண்மை குழு மூலம் பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
    • சான்றிதழ் வேண்டி விண்ணப்பித்தவர்களின் விபரங்களை, பிரத்யேகமாக எமிஸ் இணையதளத்தில் குறிப்பிட வேண்டும்.

    திருப்பூர்,ஜூலை.30-

    10-ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில் பங்கேற்காதவர்கள், தோல்வியடைந்தவர்கள், துணை பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்காத மாணவர்களை கண்டறிந்து அரசின் தொழிற்பயிற்சி நிலையம், பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்க்குமாறு, தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இதற்கு தகுதியான மாணவர்களை கண்டறிந்து, பள்ளி மேலாண்மை குழு மூலம் பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    குறிப்பாக, ஐ.டி.ஐ., படிப்பில் சேர 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும். இதற்கு பள்ளிகளில் அணுகுவோருக்கு, மதிப்பெண் சான்றிதழ் வழங்குமாறு, தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    8-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் வேண்டி விண்ணப்பித்தவர்களின் விபரங்களை, பிரத்யேகமாக எமிஸ் இணையதளத்தில் குறிப்பிட வேண்டும்.இடைநிற்றல் தழுவியோருக்கு, இந்த வாய்ப்பை வகுப்பு ஆசிரியர்கள் மூலம் எடுத்துரைக்குமாறு அறிவுறுத்த ப்பட்டுள்ளது. 

    • 10, 12-ம் வகுப்பு தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
    • முடிவில், மதுரை நாடார் உறவின் முறை பொதுச் செயலாளர் வி.பி.மணி நன்றி கூறினார்.

    மதுரை

    மதுரை நாடார் உறவின் முறை சார்பில் பெருந்த–லைவர் காமராஜரின் 121-வது பிறந்தநாளை முன் னிட்டு கல்வி மேற்படிப்பு ஊக்கத்தொகை வழங்கும் விழா ம.நா.உ.சுப்புராஜ நாடார் கிருஷ்ணம்மாள் மன்றத்தில் நடைபெற்றது. விழாவுக்கு மதுரை நாடார் உறவின்முறை துணைத் தலைவர் ஆர்.முத்தரசு தலைமை தாங்கினார்.

    பொதுச்செயலாளர் எஸ்.கே.மோகன் வரவேற் றார். ஜெயராஜ் நாடார் மேல் நிலைப்பள்ளி கே.பி.எஸ்.வி.டி. மாணவர் விடுதி செயலாளர் ப.குமார், பாரத பெருந்தலைவர் காமராஜர் அறநிலைய தலைவர் ஜெமினி எஸ்.பால்பாண்டி–யன், துணைத்தலைவர் எம்.எஸ்.சோமசுந்தரம், பொதுச் செயலாளர் கே.பி.எம்.எம்.காசிமணி, டி.பாலசுப்பிரம–ணியன்,

    ஜெயராஜ் அன்னபாக்கி–யம் மெட்ரிக்குலேசன் மேல் நிலைப்பள்ளி இணைச் செயலாளர் ஒய்.சூசை அநா் தோணி ஆகியோர் வாழ்த் துரை வழங்கினர். தனியார் தொலைக்காட்சி புகழ் பட்டிமன்ற நடுவர் அவனி மாடசாமி சிறப்புரையாற்றி–னார்.

    சாக்ஸ் எம்.ஏ.வி.எம்.எம். பொறியியல் கல்லூரி செயலாளர் ஜி.கணேசன் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 450 மதிப்பெண்க–ளுக்கு மேல் பெற்ற 25 மாணவ, மாணவிகளுக்கு ரூ.1 லட்சத்து 25 ஆயிரமும்,

    12-ம் வகுப்பு பொதுத் ேதர்வில் 500 மதிப்பெண்க–ளுக்கு மேல் பெற்ற 61 மாணவ, மாணவிகளுக்கு ரூ.6 லட்சத்து 10 ஆயிரமும் என மொத்தம் ரூ.7 லட்சத்து 35 ஆயிரம் கல்வி மேற்ப–டிப்பு ஊக்கத்தொகையாக வழங்கினார். முடிவில், மதுரை நாடார் உறவின் முறை பொதுச் செயலாளர் வி.பி.மணி நன்றி கூறினார்.

    • பொது தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு மற்றும் பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • மாணவிகளுக்கு தங்க நாணயம் வழங்கப்பட்டது.

    மங்கலம் :

    இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாணவரணி அமைப்பான முஸ்லிம் மாணவர் பேரவை- மங்கலம் கிளை சார்பில் காயிதே மில்லத் பிறந்த தினத்தை முன்னிட்டு மங்கலம் சமுதாயகூடத்தில் 10,12-ம் வகுப்பு பொது தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு மற்றும் பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு மங்கலம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் சாதிக் அலி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி., மூர்த்தி பரிசுகளை வழங்கினார். தமுமுக., எஸ்.டி.பி.ஐ.,கட்சியின் நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கினர். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் மங்கலம் இப்ராஹிம் ,இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாவட்ட தலைவர் சையது முஸ்தபா, முஸ்லிம் மாணவர் பேரவை அமைப்பின் தேசிய துணைத்தலைவர் புளியங்குடி அல்அமீன் ஆகியோர் கலந்து கொண்டு விழா சிறப்புரையாற்றினர்.

    இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் இளைஞரணி மற்றும் மாணவர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.இந்த நிகழ்ச்சியில் மங்கலம் அரசுப் பள்ளிகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 18 மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது, மேலும் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவிகளுக்கு மங்கலம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தாஹாநசீர் ஏற்பாட்டில் தங்க நாணயம் வழங்கப்பட்டது.இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுக்குழு உறுப்பினர் அபுதாஹீர் மாணவிகளுக்கு தேவையான கல்வி உபகரணங்களை வழங்கினார்.

    • தேர்வு முடிவுகளில் 347 ஒரே மதிப்பெண் பெற்று ஆச்சர்யத்தை ஏற்படுத்தினர்.
    • கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் இனிப்புகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

    தொப்பூர்:

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் தொப்பூர் அருகே சின்னகனவாய் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன்-தீனா தம்பதியருக்கு முதலாவதாக பெண் குழந்தையும். அதனை தொடர்ந்து 2007 ம் ஆண்டு இரண்டாவதாக இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. கிருஷ்ணன் தம்பதியினர் கூலி வேலை செய்து வந்தாலும் முதலில் பிறந்த இரட்டை பெண் குழந்தைகள் உள்பட 3 மகள்களையும் அங்குள்ள அரசு பள்ளியில் தொடர்ந்து படிக்க வைத்து வந்தனர்.

    இந்நிலையில் இரட்டையர்களான ராமதேவி, லட்சுமி தேவி இவர்கள் இருவரும் தொப்பூர் அருகே உள்ள தொ.காணிகரஅள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி 10-ம் வகுப்பு படித்து வந்துள்ளனர். இந்நிலையில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவிகள் இருவரும் நேற்று தேர்வு முடிவுகள் வெளியானது. ஒரே நாளில் பிறந்த இருவருக்கும் நேற்றைய தேர்வு முடிவுகளில் இதில் அதிசயதக்கும் விதமாக ஒரே நாள் பிறந்த இரட்டையர் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் 347 ஒரே மதிப்பெண் பெற்று ஆச்சர்யத்தை ஏற்படுத்தினர். பொதுமக்களும் அவர்கள் பெற்றோர்கள் மற்றும் பள்ளி ஆசிரியைகள், ஆசிரியர்கள் அனைவரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

    ஒரே மதிப்பெண் பெற்ற இரட்டையர் மாணவிகளுக்கு அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் இனிப்புகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். 

    • போன் நேரு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 தேர்வில் 584 மதிப்பெண் பெற்று திருவெண்ணெ நல்லூர் வட்டார அளவில் சாதனை படைத்துள்ளது,
    • இப்பள்ளியில் பிளஸ்-2 மேனகா என்ற மாணவி 584 மதிப்பெண்களை பெற்று முதல் இடத்தைப் பெற்றுள்ளார்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் போன் நேரு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 தேர்வில் 584 மதிப்பெண் பெற்று திருவெண்ணெ நல்லூர் வட்டார அளவில் சாதனை படைத்துள்ளது.இப்பள்ளியில் பிளஸ்-2 மேனகா என்ற மாணவி 584 மதிப்பெண்களை பெற்று முதல் இடத்தைப் பெற்றுள்ளார். இவர் கணிதம் பாடத்தில் 100 மதிப்பெண்களும், இயற்பியல் பாடத்தில் 100 மதிப்பெண்களும், உயிரியல் பாடத்தில் 100 மதிப்பெண்களும், வேதியியல் பாடத்தில் 99 மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்துள்ளார்.கமலீஸ்வரி என்ற மாணவி 563 மதிப்பெண்கள் பெற்று 2-ம் இடத்தையும், ரேவதி என்ற மாணவி 557 மதிப்பெண்களை பெற்று 3-ம் இடத்தையும் பெற்றுள்ளனர்.பள்ளியில் பிளஸ்-2 தேர்வெழுதிய 44 பேரில் 43 பேர் தேர்ச்சி பெற்றனர். பள்ளியின் தேர்ச்சி விகிதம் 98 சதவீதமாகும். தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவ மாணவிகளுக்கு பள்ளித் தாளாளர் வாசுதேவன், மற்றும் ஆசிரியர்கள் சால்வை அணிவித்து இனிப்புகள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

    • பிளஸ்-2 தேர்வில் கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சாதனை படைத்தது.
    • லுப்னா சுலைஹா 577 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பெற்று உள்ளார்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் உள்ள இஸ்லாமியா மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி மாணவிகள் பிளஸ்-2 தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    அதன்படி இந்த பள்ளியில் படித்த மாணவி லுப்னா சுலைஹா 577 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பெற்று உள்ளார். மாணவி அல் அப்ரா 575 மதிப்பெண்கள் பெற்று 2-ம் இடத்தையும், நுபிரா பாத்திமா 573 மதிப்பெண்கள் பெற்று 3-ம் இடத்தையும் பெற்று உள்ளனர்.

    அதற்கு அடுத்து மாணவி ருஷ்தா பாத்திமா 572 மதிப்பெண்ணும், ஹதீஜா பாத்திமா 571 மதிப்பெண்ணும், பாத்திமா பரா, ஐனுல் ஹீதா 571 மதிப்ெபண்கள் பெற்று அடுத்தடுத்து இடத்தை பிடித்து உள்ளனர்.

    பிளஸ்-2 தேர்வில் 9 மாணவிகள் கணக்கு பதிவியல், வணிகவியல், விலங்கியல், தாவரவியல், கணினி அறிவியல் ஆகிய பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்து உள்ளனர். இதேபோல் 20 மாணவிகள் 550 மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் எடுத்து பள்ளிக்கு பெருமை சேர்த்து உள்ளனர்.

    அதிக மதிப் பெண் பெற்று சாதனை படைத்த மாணவிகளுக்கு இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் எம்.எம்.கே. முகைதீன் இபுராஹீம், முதல்வர் நேபிள் ஜெஸ்டஸ், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் பாராட்டினர்.

    • காரைக்குடி புதுவயல் வித்யாகிரி கல்வி குழும பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    • மாணவி சாய்வர்ஷா 588 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார்.

    காரைக்குடி

    மார்ச் 2023 - ல் நடை பெற்ற பிளஸ்-2 பொதுத் தேர்வில் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மற்றும் புதுவயலில் உள்ள வித்யாகிரி கல்வி குழுமத்தின் மெட்ரிக் பள்ளியைச் சார்ந்த மாணவி சாய்வர்ஷா 588 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். இவர் வணிகவியலில் 188 மதிப்பெண்கள் மற்றும் கணிப்பொறி பயன்பாட்டி யலில் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மாணவி அலமுப்பிரியா 582 மதிப்பெண்கள் பெற்றுள் ளார். மாணவன் கேசவ நிவேதிதன் 581 மதிப்பெண் கள் பெற்றுள்ளார்.

    இவர் இயற்பியல், கணிதம் மற்றும் வேதியியல் ஆகியவற்றில் 100 மதிப் பெண்களும் பெற்று ள்ளார். தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று 100 சதவீதம் வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர் களை பள்ளி குழுத் தலைவர் கிருஷ்ணன், தாளாளர் டாக்டர் சுவாமி நாதன், பொருளாளர் ஹாஜி முகமது மீரா, வித்யா கிரி கல்வி நிறுவனங்களின் முதன்மை நிர்வாக அதிகாரி ஐஸ்வர்யா சரண் சுந்தர், வித்யா கிரி பள்ளிமுதல்வர் ஹேமமாலினி சுவாமி நாதன், புதுவயல் பள்ளி முதல்வர் குமார் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் அனைவரும் பாராட்டி வாழ்த்தினர்.

    • அனைத்து மாவட்டங்களை சேர்ந்த இளநிலை பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள் ஏராளமானோர் எழுதினர்.
    • காலக்கெடு முடிந்த பிறகு மதிப்பெண் பட்டியல் இணையதளத்தில் காட்டப்படாது.

    சேலம்:

    இந்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி) தாள்-1, தாள்-2, தாள்-3 மற்றும் நேர்முக தேர்வு, மருத்துவ பரிசோதனை என பல்வேறு கட்ட தேர்வுகளை நடத்தி தகுதியானவர்களை தேர்வு செய்து, அவர்களை மத்திய அமைச்சகங்களில் உள்ள பதவிகளில் பணி அமர்த்தி வருகிறது.

    அந்த வகையில், உதவி தணிக்கை அதிகாரி, உதவி பிரிவு அலுவலர், இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர், ஆடிட்டர், கணக்காளர், உதவியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான ஒருங்கிணைந்த பட்டதாரி நிலைத் தேர்வு-2022 அறிவிப்பு கடந்த ஆண்டு தேர்வாணையம் வெளியிட்டது. இதையடுத்து தாள்-1 தேர்வு நடத்தப்பட்டது.

    இதில் சென்னை, கோவை, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கரூர், ஈரோடு என தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களை சேர்ந்த இளநிலை பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள் ஏராளமானோர் எழுதினர்.

    இந்நிலையில் தேர்வு முடிவுகள் கடந்த பிப்ரவரி மாதம் 9-ந்தேதி அன்று இந்திய அரசு பணியாளர் தேர்வாணையம் தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிட்டது. அதனை தொடர்ந்து மதிப்பெண் விபரங்களை தேர்வர்கள் நேரடியாக தெரிந்து கொள்ளும் வகையில் மதிப்பெண் பட்டியலை இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. தேர்வர்கள் தாங்கள் எழுதிய தாள்-1-ல் எடுத்த மதிப்பெண்களை அதில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

    பதிவு எண் மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி விண்ணப்பதாரர்கள் தங்கள் டாஷ்போர்டில் உள்ள ரிசல்ட், மார்க்ஸ் இணைப்பைக் கிளிக் செய்து தங்களின் இந்த தனிப்பட்ட மதிப்பெண்களை சரிபார்த்து கொள்ளலாம்.

    இந்த வசதி 27.02.2023 இரவு 8 மணி முதல் 13.03.2023 காலை 8 வரை மட்டுமே இருக்கும். மதிப்பெண் பட்டியலை பிரிண்ட் எடுக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த காலக்கெடு முடிந்த பிறகு மதிப்பெண் பட்டியல் இணையதளத்தில் காட்டப்படாது.

    இந்த தகவலை இந்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

    ×