search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sourav Ganguly"

    இந்திய கிரிக்கெட் அணி முன்னேற்றம் காண வீரர்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும் விராட்கோலிக்கு கங்குலி அறிவுரை கூறி உள்ளார். #SouravGanguly #ViratKohli
    கொல்கத்தா:

    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரில் இந்திய அணி 1-4 என்ற கணக்கில் தோல்வி அடைந்ததை தொடர்ந்து கேப்டன் விராட்கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் மீது விமர்சனம் எழுந்துள்ளது. இருப்பினும் முன்னாள் வீரர்கள் பலரும் விராட்கோலிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி, கேப்டன் விராட்கோலிக்கு சில அறிவுரைகளை வழங்கி இருக்கிறார். இது தொடர்பாக கங்குலி அளித்த ஒரு பேட்டியில், ‘இந்திய அணியில் உள்ள திறமையான வீரர்களை அங்கீகரிக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். எந்தவொரு அணியும் முன்னேற்றம் காண வேண்டும் என்றால் இதனை செய்ய வேண்டியது அவசியமானதாகும். புஜாரா, ரஹானே, லோகேஷ் ராகுல் ஆகியோர் இங்கிலாந்து போட்டி தொடரில் வெளிப்படுத்திய பேட்டிங் திறன் 10 மடங்கு சிறந்ததாக இருந்தது.

    இந்திய அணியில் திறமை வாய்ந்த வீரர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இதற்கு எடுத்துக்காட்டாக ரிஷாப் பான்ட் ஆட்டத்தை குறிப்பிடலாம். திறமையான வீரர்களை அடையாளம் கண்டு அவர்களிடம் இருந்து சிறந்த திறனை வெளிக்கொணர வேண்டியது கேப்டனின் முக்கிய பொறுப்பாகும். கேப்டன் வீரர்களின் தோளில் கை போட்டு அரவணைத்து பேசினால் அணி தானாகவே முன்னேற்றம் காணும்’ என்று தெரிவித்தார்.  #SouravGanguly #ViratKohli
    ஓவல் டெஸ்டில் அரைசதம் அடித்ததன் மூலம் அறிமுக போட்டியில் அரைசதம் கடந்த சாதனையில் டிராவிட், கங்குலியுடன் இணைந்தார் விஹாரி. #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான கடைசி டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து 332 ரன்களில் ஆல்அவுட் ஆனதும், இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது.

    டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பிய நிலையில் அறிமுக வீரரான ஹனுமா விஹாரி சிறப்பாக விளையாடி 56 ரன்கள் சேர்த்தார். இதன்மூலம் இங்கிலாந்து மண்ணில் அறிமுக போட்டியில் 50 ரன்களுக்கு மேல் அடித்த வீரர் என்ற பெருமை பெற்றுள்ள ராகுல் டிராவிட், கங்குலியுடன் இணைந்துள்ளார்.



    இதற்கு முன் 1946-ல் ருசி மோடி ஆட்டமிழக்காமல் 57 ரன்கள் அடித்துள்ளார். 1996-ல் கங்கு 131 ரன்களும், ராகுல் டிராவிட் 95 ரன்களும் அடித்துள்ளனர். தற்போது நான்காவது வீரராக ஹனுமான் விஹாரி 56 ரன்கள் அடித்துள்ளார். ஒட்டுமொத்தமாக அறிமுக போட்டியில் அரைசதம் கடந்த 6-வது வீரர் ஹனுமான் விஹாரி ஆவார்.
    இங்கிலாந்து தொடரை இழந்தது குறித்து ரவி ஷாஸ்திரி, பாங்கர் பதில் அளிக்காவிடில் வெளிநாட்டு தொடரை வெல்லது இம்பாசிபில் என கங்குலி தெரிவித்துள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்று முடிந்துள்ள நான்கு போட்டிகளில் இங்கிலாந்து மூன்றில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. இந்திய அணியில் விராட் கோலியை தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடவில்லை.

    தற்போதைய இந்திய அணியால் இங்கிலாந்து மண்ணில் தொடரை கைப்பற்ற முடியும் என்று முன்னாள் வீரர்கள் நம்பினார்கள். ஆனால் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்ட போதிலும், மோசமான பேட்டிங்கால் இந்தியா தோல்வியை சந்தித்ததால், அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை.

    இந்நிலையில் இந்தியாவின் தோல்விக்கு ரவி ஷாஸ்திரி, பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் ஆகியோர் பதில் அளிக்க வேண்டும். இல்லையெனில் இந்தியா வெளிநாட்டு மண்ணில் தொடரை வெல்வது இயலாத காரியம் ஆகிவிடும் என்று கங்குலி தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து கங்குலி கூறுகையில் ‘‘தற்போதுள்ள இந்திய வீரர்களின் பேட்டிங் திறமை குறைந்து விட்டது என்று நம்புகிறேன். இதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. புஜாரா அல்லது ரகானே ஆகியோரிடம் உறுதிப்பாடு மிகவும் குறைந்து காணப்பட்டது. நான்கு வருடத்திற்கு முன்பு, அடிலெய்டில் விராட் கோலி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அந்த உத்வேகம் இந்த தொடரில் இல்லை. புஜாராவிற்கும் அப்படித்தான்.

    ஒரு பேட்ஸ்மேன் சிறப்பாக விளையாடியபோது மற்ற இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்பியதற்கு தலைமை பயிற்சியாளரான ரவி ஷாஸ்திரி முழு பொறுப்பேற்க வேண்டும். அதேபோல் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் பதில் அளிக்க வேண்டும். இந்த கேள்விக்கு பதில் அளிக்கவில்லை என்றால் தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா மண்ணில் தொடரை வெல்வது நடக்கக்கூடிய விஷயமாக இருக்காது’’ என்றார்.
    சச்சின் தெண்டுல்கர், கங்குலி, லஷ்மண் ஆகியோரை கொண்ட கவுரவ கமிட்டியை பெய்டு குழுவாக மாற்ற பிசிசிஐ முடிவு செய்துள்ளது. #BCCI
    இந்திய டெஸ்ட் அணி கடந்த 2014-ம் ஆண்டு இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. டோனி தலைமையிலான இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-3 என இழந்தது. இதனால் தலைமை பயிற்சியாளரான டங்கன் பிளெட்சர் அதிரடியாக நீக்கப்பட்டார்.

    அதன்பிறகு ரவி ஷாஸ்திரி மானேஜராக நியமிக்கப்பட்டார். இவர் தலைமை பயிற்சியாளராகவும் செயல்பட்டார். நீண்ட நாட்கள் ரவி ஷாஸ்திரி தலைமை பயிற்சியாளராக செயல்பட்டார். அதன்பிறகு நிரந்தரமாக தலைமை பயிற்சியாளர் ஒருவரை நியமிக்க பிசிசிஐ சச்சின் தெண்டுல்கர், சவுரவ் கங்குலி, லஷ்மண் ஆகியோர் கொண்ட கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி (CAC) அமைத்தது.

    இந்த குழுவின் முக்கிய வேலை ஆண்கள் மற்றும் பெண்கள் அணிக்கு சிறப்பான பயிற்சியாளர்கள் பெயரை பரிந்துரை செய்வதுதான். இவர்கள் பரிந்துரை செய்யும் ஒரு நபரை பிசிசிஐ பயிற்சியாளராக நியமிக்கும்.

    இந்த பணிக்கு நாங்கள் சம்பளம் வாங்கமாட்டோம். கவுரவமாக இந்த பணியை செய்கிறோம என்றனர். இதனால் கிரிக்கெட் ஆலோசனைக் கமிட்டியை கவுரவ பதவியை பிசிசிஐ வைத்திருந்தது. இந்நிலையில் இந்த குழுவிற்கு சம்பளம் வழங்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.



    ஒருவேளை இந்த மூன்று பேருக்கும் சம்பளம் வழங்கப்பட இருந்தால், பிசிசிஐ-யின் இரட்டைப் பதவி ஆதாயத்தில் சிக்குவார்கள். கங்குலி மேற்கு வங்காளம் கிரிக்கெட் சங்கத் தலைவராக உள்ளார். லஷ்மண் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் ஆலோசகராக உள்ளார். சச்சின் தெண்டுல்கரின் மகன் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான இந்திய அணியில் விளையாடுகிறார்.

    ஆகையால் ஏதாவது ஒன்றை இவர்கள் இழக்க வேண்டும். ஒருவேளை இது அமல்படுத்தப்பட்டால் மூன்று பேரும் ஆலோசனைக் குழுவில் இருப்பார்களா? என்பது சந்தேகம்.
    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்தின் தலைவராக இருந்த அனுராக் தாகூரை பதவியில் இருந்து தூக்கிய சுப்ரீம் கோர்ட், அதற்கென தனி குழுவை நியமித்தது. நீதிபதி லோதா குழு பரிந்துரைத்த நிர்வாகிகளின் கீழ் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தற்போது இயங்கிக் கொண்டிருக்கின்றது. 

    இந்நிலையில், அடுத்த பிசிசிய தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி நியமிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தலைவராக இருப்பவர்களுக்கு என சில தகுதிகளை நீதிபதி லோதா குழு பரிந்துரைத்தது. இந்த தகுதிகள் கங்குலிக்கு இருப்பதால் அவர் நியமிக்கப்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது.

    தற்போது, மேற்கு வங்க கிரிக்கெட் சங்க தலைவராக இருக்கும் கங்குலி, இந்திய கிரிக்கெட் தொழில்நுட்ப பிரிவு, ஐபிஎல் ஒழுங்கமர்வு குழு உறுப்பினர், கிரிக்கெட் ஆலோசகர் குழு என பலவற்றில் இடம்பிடித்துள்ளார். கங்குலிக்கு மூத்த வீரர்கள் பலரின் ஆதரவும் இருப்பதால் அவர் தலைவராவதில் சிக்கல் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் குறித்து இந்திய கேப்டன் விராட் கோலிக்கு முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் அறிவுரை வழங்கியுள்ளார். #ENGvIND #ViratKohli #Ganguly
    இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இந்திய அணி போராடி தோல்வி அடைந்த நிலையில் 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 9-ந்தேதி லண்டன் லார்ட்சில் தொடங்குகிறது. இதையொட்டி இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி ‘இன்ஸ்டாகிராம்’ பக்கத்தில் எழுதியிருப்பதாவது:-தோல்விக்கு அணியின் கேப்டனை விமர்சிப்பதும், வெற்றி பெற்றால் கேப்டனை பாராட்டுவதும் கிரிக்கெட்டில் சகஜம். தோல்வியால் துவண்டு போய் உள்ள இந்திய வீரர்களுக்கு விராட் கோலி புது நம்பிக்கை கொடுக்க வேண்டும். அவரால் மட்டுமே அவர்களது மனநிலையை மாற்ற முடியும்.

    அவர் தங்கள் அணி வீரர்களுடன் உட்கார்ந்து பேச வேண்டும். என்னால் ரன் குவிக்க முடிகிறது என்றால் உங்களாலும் ஏன் முடியாது என்று எடுத்து கூற வேண்டும். களம் இறங்கி பயமின்றி விளையாடும்படி அறிவுறுத்த வேண்டும். அது மட்டுமின்றி அவர்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த போதிய வாய்ப்பு அளிக்க வேண்டும்’ என்று கங்குலி அதில் கூறியுள்ளார். #ENGvIND #ViratKohli #Ganguly
    ராகுல் 4-வது வீரர் வரிசைக்கு தான் பொருத்தமானவர் அவரை கண்டிப்பாக இந்த வரிசையில் களம் இறக்க வேண்டும் என்று கோலிக்கு முன்னாள் கேப்டனும் கங்குலி அறிவுரை கூறியுள்ளார். #INDvENG #Virat #Ganguly #Rahul
    புதுடெல்லி:

    விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 20 ஓவர் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஆனால் 3 போட்டிக்கொண்ட 20 ஓவர் தொடரை இந்தியா 1-2 என்ற கணக்கில் இழந்தது.

    கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோற்று தொடரை இழந்தது. கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. லீட்ஸ் மைதானத்தில் நடந்த கடைசி ஆட்டத்தில் கே.எல்.ராகுல், உமேஷ்யாதவ், சித்தார்த் கவூல் ஆகியோர் நீக்கப்பட்டு தினேஷ்கார்த்திக், புவனேஷ்வர்குமார், ‌ஷர்துல் தாகூர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் வீரர்கள் தேர்வு முறைக்கு முன்னாள் கேப்டனும், டெலிவிசன் வர்ணனையாளருமான கங்குலி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    சிறந்த பேட்ஸ்மேன்கள் கே.எல்.ராகுல், ரகானே ஆகியோருக்கு போதுமான வாய்ப்புகளை வழங்கவில்லை. அடிக்கடி மிடில் ஆர்டரை (நடுவரிசை) மாற்றி சோதிப்பது முன்கள பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கங்குலி கூறியதாவது:-

    இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் ரோகித்சர்மா, தவான், விராட்கோலி ஆகியோர் சர்வதேச அணிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறார்கள். இவர்கள் வலுவான பேட்ஸ்மேன்கள்.

    ஆனால் இந்த டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சில நேரங்களில் விரைவில் ஆட்டம் இழந்து ரன் எடுக்க முடியாமல் போகும் போது அடுத்தடுத்து களம் இறங்கும் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி ஏற்படும். இது அணிக்கு மிகப்பெரிய பிரச்சினையாக மாறும்.

    இதனால் மிடில் ஆர்டர் வரிசையை பலப்படுத்துவது அவசியம். இந்த வரிசையை அடிக்கடி மாற்றி சோதிப்பது டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடியை அதிகரிக்கும்.

    ராகுல், ரகானே ஆகிய 2 பேட்ஸ்மேன்களையும் அணி நிர்வாகம் போதுமான அளவு பயன்படுத்தவில்லை.

    4-வது வீரர் வரிசைக்கு ராகுல் தான் பொருத்தமானவர் அவரை கண்டிப்பாக இந்த வரிசையில் களம் இறக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நானாக இருந்தால் கண்ணை மூடிக்கொண்டு ராகுலை 4-வது இடத்தில் பேட் செய்யுங்கள் என்று கூறிவிடுவேன். உங்களுக்கு 15 வாய்ப்புகள் தருகிறோம். விளையாடுங்கள் என்று கூறுவேன்.



    மான்செஸ்டர் போட்டியில் சதம் அடித்த ராகுலை கடைசி ஒருநாள் போட்டியில் நீக்கியது ஏன்? என்று தெரியவில்லை. இதுபோன்ற சிறந்த வீரர்களை உங்களால் உருவாக்க முடியாது.

    5-வது வரிசையில் ரகானேயை பயன்படுத்தலாம். அதன்பின்னர் 6-வது இடத்துக்கு தினேஷ் கார்த்திக் அல்லது டோனியா? என்பதை முடிவு செய்யப்படும். 7-வது வீரராக ஹர்த்திக் பாண்ட்யாவுக்கு வாய்ப்பு கொடுக்கலாம்.

    ரகானேயை ஒருநாள் தொடரில் இருந்து நீக்கியது வேதனை அளித்தாலும் அவரின் சேவை டெஸ்ட் தொடருக்கு முக்கியம் என்பதை அணி நிர்வாகம் உணர்ந்து இருக்கிறது. இருவரையும் வேண்டுமென்றே அணி நிர்வாகம் ஒதுக்கிவிட்டது என்று நான் கூறவில்லை.

    2019 உலக கோப்பையில் டோனி இடம் பிடிக்க வேண்டுமானால் அவரின் வழக்கமான ஆட்டத்துக்கு திரும்ப வேண்டும். 25 ஓவர்கள் வரை மீதம் இருக்கும்போது அவர் தன்னை நிலைப்படுத்தி கொண்டு நன்றாக விளையாடலாம். ஆனால் டோனி தடுமாறுகிறார்.

    இந்திய அணியின் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக வலம் வந்தவர் டோனி. ஆனால் தற்போது பேட்டிங்கில் திணறுகிறார். அவர் தனது திறமையை அதிகரித்து இன்னும் 1ஆண்டுக்கு அணியில் நீடிக்க வேண்டும்.

    இவ்வாறு கங்குலி கூறியுள்ளார். #INDvENG #Virat #Ganguly #Rahul
    இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விராட் கோலி 4-வது இடத்தில் களம் இறங்கி பேட்ஸ்மேன் செய்ய வேண்டும் என்று கங்குலி தெரிவித்துள்ளார். #ENGvIND
    இந்திய அணி உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் இலங்கையில் நடைபெற்ற தொடரின்போது இந்திய அணி பல்வேறு பரிசோதனை செய்தது. அப்போது கேஎல் ராகுல், கேதர் ஜாதவ், மணிஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், ரகானே ஆகியோரை நான்காவது இடத்தில் களமிறக்கியது.

    ஆனால் எந்த வீரரும் அந்த இடத்தில் சரியாக விளையாடவில்லை. இங்கிலாந்திற்கு எதிராக டி20 தொடரில் கேஎல் ராகுலை 3-வது இடத்தில் களமிறக்கி கோலி 4-வது இடத்தில் களமிறங்கினார். இதற்கு நல்ல ரிசல்ட் கிடைத்தது. கேஎல் ராகுல் முதல் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். கோலி கடைசி இரண்டு போட்டியில் தலா 40 ரன்களுக்கு மேல் அடித்தார்.

    இந்நிலையில் விராட் கோலி ஒருநாள் போட்டியில் 4-வது இடத்தில் களமிறங்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் கங்குலி தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து கங்குலி கூறுகையில் ‘‘டி20 தொடரை பார்த்தீர்கள் என்றால், பேட்டிங் வரிசை சரியாக அமைந்ததாக நான் நினைக்கிறேன். கேஎல் ராகுல் 3-வது இடத்திலும், விராட் கோலி 4-வது இடத்திலும் களம் இறங்கி விளையாடியதால், பேட்டிங்கில் இருந்து வந்த பிரச்சனை தீர்ந்ததாக நினைக்கிறேன்.

    ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு இதுபோன்று களம் இறங்குவது சிறப்பானதாக அமையும் என்பது என்னுடைய ஒட்டுமொத்த நம்பிக்கை. விராட் கோலி ஒருநாள் தொடரில் இந்த எண்ணத்தோடுதான் களம் இறங்குவார் என்று நினைக்கிறேன்’’ என்றார்.
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான கிரிக்கெட் தொடரின்போது வர்ணனையாளராக செயல்பட இருக்கிறார் முன்னாள் கேப்டன் கங்குலி. #ENGvIND #Ganguly
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான மூன்று டி20, மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர் அடுத்த இரண்டரை மாதங்களாக நடக்க இருக்கிறது. இந்த போட்டியின்போது இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், மேற்கு வங்காள கிரிக்கெட் சங்கத் தலைவரும் ஆன சவுரவ் கங்குலி வர்ணனையாளராக செயல்பட இருக்கிறார். இந்த தொடரை இந்தியாவில் ஒளிப்பரப்பு உரிமை பெற்றுள்ள டிவி கங்குலியை நியமித்துள்ளது.

    இதுகுறித்து கங்குலி கூறுகையில் ‘‘கடந்த காலங்களில் இங்கிலாந்து சூழ்நிலை பெரும்பாலான இந்திய அணிக்கு சவாலாக இருந்துள்ளது. எனினும், தற்போதுள்ள மிகச்சிறந்த அணியால் தொடரில் மிகவும் நெருக்கமான போட்டியை வெளிப்படுத்துவோம் என்று நினைக்கிறேன்.



    இங்கிலாந்தில் நான் விளையாடிய குறித்து ஏராளமான நினைவுகள் உள்ளன. இந்த தொடரின்போது என்னுடைய நினைவுகளை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ள காத்துக் கொண்டிருக்க முடியாது’’ என்றார்.

    கங்குலி உடன் சுனில் கவாஸ்கர், ஆஷிஷ் நெஹ்ரா, சஞ்சய் மஞ்ச்ரேக்கர், ஸ்வான் ஆகியோரும் வர்ணனையாளராக செயல்பட இருக்கின்றனர்.
    இங்கிலாந்து தொடருக்காக தயாராகும்போது இந்திய அணி கேப்டன் விராட் கோலி பயப்பட்டார் என்று சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். #ENGvIND
    இந்திய அணி கடந்த 2014-ம் ஆண்டு இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. அப்போது இந்திய அணியில் விராட் கோலி இடம்பிடித்திருந்தார். அவர் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் 10 இன்னிங்சில் 134 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். சராசரி 13.40. இந்த தொடருக்கு பின் வீறுகொண்டு எழுந்த விராட் கோலி தற்போது தலைசிறந்த வீரர்களில் ஒருவராக திகழ்கிறார்.

    இங்கிலாந்து மண்ணில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய நிலையில் கோலி உள்ளார். இந்த தொடருக்கு முன்னோட்டமாக கவுன்ட்டி கிரிக்கெட்டில் விளையாட முடிவு செய்தார். இதற்கு தயாராகி வரும்போது, ஐபிஎல் தொடரில் விளையாட அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் கவுன்ட்டி போட்டியில் இருந்து விலகினார். தற்போது 100 சதவிகிதம் உடற்தகுதி பெற்றுள்ள அவர், இங்கிலாந்து சென்றுள்ளார்.

    இந்நிலையில் இங்கிலாந்து தொடருக்கு தயாராகும்போது விராட் கோலிக்கு பயம் இருந்தது என சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து கங்குலி கூறுகையில் ‘‘விராட் கோலி தலைசிறந்த வீரர். இந்த தொடரில் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். இங்கிலாந்து தொடருக்கு முன் அவர் கவுன்ட்டி போட்டியில் விளையாடாதது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் கவுன்ட்டி போட்டியில் விளையாட ஆர்வமாக இருந்தார். ஏனென்றால், கடந்த முறை  சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாத பயம் அவரிடம் இருந்ததாக நினைக்கிறேன்.

    இந்திய அணி தொடரை கைப்பற்ற பிரகாசமான வாய்ப்பு உள்ளது. அதேவேளையில் இங்கிலாந்து நல்ல ஃபார்மில் உள்ளது. இது மிகவும் சவாலான தொடராக இருக்கும்’’  என்றார்.
    இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா வெல்லும் என சவுரவ் கங்குலி நம்பிக்கை தெரிவித்துள்ளார். #ENGvIND
    இந்திய அணி இங்கிலாந்து சென்று ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இதற்கு முன் ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடுகிறது. இங்கிலாந்து மண்ணில் இந்தியா எப்போதும் சிறப்பாக விளையாடியது கிடையாது.

    ஆனால், இந்த முறையை நிச்சயம் இந்தியா டெஸ்ட் தொடரை வெல்லும் என முன்னாள் இந்திய அணி கேப்டன் கங்குலி அசைக்க முடியாத தனது நம்பிக்கையை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து குறித்து கங்குலி கூறுகையில் ‘‘இங்கிலாந்து தொடரில் இந்தியா வெற்றி பெறும் என எனக்கு அதிக நம்பிக்கை உள்ளது. தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய மாதிரி, உத்வேகத்தை பெற்றால், வெற்றி நமக்கே. பாகிஸ்தானை விட இந்தியா சிறந்த அணி. இதனால் இந்தியா தொடரை வெல்ல சிறப்பான வாய்ப்பு உள்ளது’’ என்றார்.



    மேலும், சச்சின் தெண்டுல்கர் மகன் அர்ஜூன் 19 வயதிற்குட்பட்டோருக்கான இந்திய அணியில் இடம்பிடித்தது குறுித்து கூறுகையில் ‘‘அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். அவன் விளையாடியதை நான் பார்த்தது இல்லை. அவன் சிறப்பாக விளையாடுவான் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றார்.
    எதிர்கால கிரிக்கெட்டான பகல்-இரவு டெஸ்டிலவ் இந்தியாவல் வெற்றி பெற முடியும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி தெரிவித்துள்ளார். #PinkBallTest
    20 ஓவர் கிரிக்கெட் அறிமுகமான பின்பு 50 ஓவர் மற்றும் டெஸ்ட் போட்டிக்கான ஆதரவு ரசிகர்களிடையே வெகுவாக குறைந்துள்ளது. ஒரு கிரிக்கெட் வீரரின் திறமையை அறிந்து கொள்வதற்கு டெஸட் கிரிக்கெட்டுதான் முக்கியமானதாக கருதப்பட்டு வருகிறது. அதேவேளையில் ரசிகர்கள் ஐந்து நாட்கள் டெஸ்ட் போட்டியை உட்கார்ந்து பார்ப்பதற்கு விரும்பவில்லை. இதனால் டெஸ்ட் கிரிக்கெட்டை அழித்து விடக்கூடாது என்பதில் அனைத்து கிரிக்கெட் வாரியங்களும் கவனமாக இருக்கின்றன.

    மைதானத்திற்கு ரசிகர்களை கொண்டு வருவதற்காக ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் பிங்க்-பந்தில் விளையாடப்படும் டே-நைட் டெஸ்டை அறிமுகப்படுத்தியது. இதற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. அதிக அளவில் மைதானத்திற்கு வந்து போட்டியை ரசிக்கும் நிலை ஏற்பட்டது.

    இந்தியா, வங்காள தேச அணிகளைத் தவிர மற்ற அணிகள் எல்லாம் டே-நைட் டெஸ்டில் விளையாடிவிட்டன. இந்தியா இந்த வருடம் கடைசியில் ஆஸ்திரேலியா சென்று விளையாடுகிறது. அப்போது டே-நைட் டெஸ்டில் விளையாடும்படி ஆஸ்திரேலியா கேட்டுக்கொண்டது.

    ஆனால் இந்தியா டே-நைட் டெஸ்டிற்கு சம்மதம் தெரிவிக்க மறுத்துவிட்டது. இந்தியா தயாராவதற்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் ஆகும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், டே-நைட் டெஸ்டிற்கு ஆதரவாக இருக்கும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனாக சவுரவ் கங்குலி, இந்திய அணியால் டே-நைட் டெஸ்டில் வெற்றிபெற முடியும் என்று தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து சவுரவ் கங்குலி கூறுகையில் ‘‘டே-நைட் டெஸ்ட் போட்டிதான் முன்னோக்கிச் செல்லும் வழி. ஒவ்வொரு நாடும் டே-நைட் டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ளது. இந்தியா சற்று ஒத்திவைத்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டிற்கான நீண்ட கால வரையறை டே-நைட் போட்டிதான்.

    இந்தியா சிறந்த அணியாக உள்ளது. அவர்களால் டே-நைட் டெஸ்டை வெற்றி பெற முடியும். டே-நைட் டெஸ்டில் பந்து மட்டும்தான் மாறுபட்டவை. மற்றபடி எந்த மாற்றத்தையும் நான் அதில் பார்க்கவில்லை. இந்திய அணியில் தலைசிறந்த வீரர்கள் உள்ளனர். அவர்களால் வெற்றி பெற முடியும்’’ என்றார்.
    ×