என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "son arrested"
- வருவாய்த் துறை அதிகாரிகள் அரசு இடத்தை ஆக்கிரமிக்க முயன்றது குறித்து பெண்ணிடம் விசாரித்தனர்.
- அரசு இடத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
நிலக்கோட்டை:
திண்டுக்கல் மாவட்டம், விளாம்பட்டியைச் சேர்ந்த ராணி(62). நிலக்கோட்டையில் பத்திர எழுத்தராக உள்ளார். இவர் அணைப்பட்டி - நிலக்கோட்டை சாலையில் திரவியம் நகர் பகுதியில் உள்ள அரசு இடத்தை கடந்த சில தினங்களாக சுத்தம் செய்து, கம்பி வேலி போட முயற்சி செய்து கொண்டிருந்தார்.
இதை அறிந்த நிலக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் தலைமையில் வருவாய்த் துறை அதிகாரிகள் ராணியிடம் சென்று அரசு இடத்தை ஆக்கிரமிக்க முயன்றது குறித்து விசாரித்தனர்.
அப்போது ராணி அவரது மகன் விஜயபாஸ்கர் ஆகியோர் கிராம நிர்வாக அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜிடம் கொடுத்த புகாரின்படி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தயாநிதி வழக்குப்பதிவு செய்து ராணி மற்றும் விஜயபாஸ்கர் 2 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
அரசு இடத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கள்ளக்குறிச்சி அருகே தந்தையை கொலை செய்த பட்டதாரி மகன் கைது செய்யப்பட்டார்.
- தனது தந்தை பழனிவேலை இரும்பு பைப்பால் தலையில் தாக்கியதாக கூறப்படுகிறது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி அருகே க.மாமனந்தல் கிராமத்தைசேர்ந்தவர் கலியன் மகன் பழனிவேல் (50). விவசாயி, இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பழனிவேல் அவரது மனைவி சின்ன பொண்ணு, 2 வது மகன் பால கிருஷ்ணன் (27) ஆகியோர் வீட்டில் சாப்பிட்டுக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது பாலகிருஷ்ணன் சாப்பிட்ட தட்டை கழுவி தண்ணீரை வெளியேஊற்றுவதில் தந்தை மகனுக்கிடையே வாய்த்தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆத்திரமுற்ற பாலகிருஷ்ணன் தனது தந்தை பழனிவேலை இரும்பு பைப்பால் தலையில் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த பழனிவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த கள்ளக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்குசென்று பழனிவேல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலகிருஷ்ணனை கைது செய்தனர். பாலகிருஷ்ணன் பி.காம். படித்து முடித்த பட்டதாரி என்பது குறிப்பிடத்தக்கது.
- தனக்கு சொத்தை பிரித்து தருமாறு கேட்டு அடிக்கடி தகராறு செய்து வந்தார்.
- இந்த சம்பவம் குறித்து பொங்கியண்ணன் புஞ்சை புளியம்பட்டி போலீசில் புகார் செய்தார்.
பு.புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் நம்பி யூர் அருகே உள்ள வெள்ளக் கோவில்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பொங்கி யண்ணன் (வயது 70). இவரது மகன் நாகராஜ் (42). விவசாயி. இவருக்கு இன்னும் திருமணம் ஆக வில்லை.
நாகராஜ் தனது தந்தை யிடம் தனக்கு சொத்தை பிரித்து தருமாறு கேட்டு அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பொங்கி யண்ணன் புஞ்சை புளிய ம்பட்டி அடுத்த காரப்பாடி யில் உள்ள அவரது மகள் வீட்டுக்கு சென்று அவருடன் தங்கி இருந்தார்.
ஆனாலும் நாகராஜ் அங்கு சென்று தொடர்ந்து தகராறு செய்து வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று நாகராஜ் மீண்டும் காரப்பாடிக்கு சென்று அவரது தந்தை பொங்கியண்ணனை தாக்கி சொத்தை பிரித்து தருமாறு தகராறு செய்தார்.
இது குறித்து பொங்கிய ண்ணன் புஞ்சைபுளியம்பட்டி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ் பெக்டர்கள் செந்தில்குமார், செல்வம் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து நாகராஜை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- தந்தைக்கும், மகனுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியது
- இதில் பலத்த காயமடைந்த தந்தை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்
திண்டுக்கல் :
திண்டுக்கல் அருகே தந்தையை பாட்டிலால் குத்திய மகனை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல்லை அடுத்துள்ள மாலைப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி(56). இவரது மகன் ெஜகன் (25), இருவரும் பெயிண்டராக பணிபுரிந்து வருகின்றனர்.
தந்தைக்கும், மகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஜெகன் திடீரென அருகில் கிடந்த பாட்டிலை உடைத்து சுப்பிரமணியை குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்த புகாரின் பேரில் திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெகனை கைது செய்தனர்.
வண்டலூரை அடுத்த ஊனமாஞ்சேரி இருளர் நகரை சேர்ந்தவர் வைரமணி. இவருடைய மனைவி சாந்தி (46). இவர்கள் மகன் ஆனந்தராஜ் (26).
வைரமணி இறந்து விட்டார். எனவே சாந்தி மகன் ஆனந்தராஜுடன் வசித்து வந்தார். இவருக்கு தனது தாய் வேறு ஆண்களுடன் பழகுவதாக சந்தேகம் இருந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் ஆனந்தராஜ் வேலைக்கு சென்றுவிட்டு மதுபோதையில் வீடு திரும்பினார். அப்போது அவருடைய தாய் சாந்தி வீட்டின் வெளியே ஒரு ஆணுடன் பேசிக்கொண்டு இருந்தார். இதனால் ஆனந்த ராஜின் சந்தேகம் மேலும் அதிகரித்தது.
எனவே ஆத்திரம் அடைந்த அவர் தன் தாயை உருட்டுக்கட்டையால் தாக்கினார். இதில் சாந்தி சுருண்டு விழுந்தார். அவர் இறந்துவிட்டதாக கருதி ஆனந்தராஜ் தாயை அருகில் உள்ள ஏரிக்கு கொண்டு சென்றார். அங்கு சாந்தி உடலில் பெட்ரோல் ஊற்றி எரித்தார். அப்போது அங்கு வந்த சாந்தியின் சகோதரர் மணிகண்டன் இதை பார்த்து விட்டார். தன்னை காட்டிக் கொடுத்துவிடுவார் என்று பயந்த ஆனந்தராஜ் தனது தாய்மாமா மணிகண்டன் மீதும் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பி ஓடி விட்டார்.
தீக்காயம் அடைந்த மணி கண்டன் கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்தநிலையில் ஓட்டேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி இன்று ஆனந்தராஜை கைது செய்தார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
சேலம் மாவட்டம் நங்கவள்ளி கே.எம்.பி.நகரை சேர்ந்தவர் வெங்கடேசன். மீன் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி வைடூரியம் (வயது 58). இவர்களது மகன் செந்தில்குமார் (35).
செந்தில்குமாருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மூலக்காட்டை சேர்ந்த பரமேஸ்வரி (26) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. அவருடன் அடிக்கடி செந்தில்குமார் தகராறில் ஈடுபட்டதால் அவரும் கடந்த 2 மாதத்திற்கு முன்பு பிரிந்து சென்று விட்டார்.
இந்த நிலையில் வைடூரியத்திற்கும், மகன் செந்தில்குமாருக்கும் இடையே கடந்த சில மாதங்களாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்றிரவு மீண்டும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.
தகராறு முற்றியதும் ஆத்திரம் அடைந்த செந்தில்குமார் வீட்டின் அருகில் கிடந்த அரிவாள் மற்றும் உருட்டு கட்டையால் தாயை சரமாரியாக தாக்கினார். அதனை தடுக்க வந்த தந்தை வெங்கடேசனையும் அவர் கட்டையால் தாக்கினார்.
இதில் நிலைகுலைந்த 2 பேரும் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அவர்கள் வைடூரியத்தை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று அதிகாலை 1.45 மணியளவில் வைடூரியம் பரிதாபமாக உயிரிழந்தார். வெங்கடேசனுக்கு மேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே செந்தில்குமார் தப்பியோடி விட்டார்.
தகவல் அறிந்த நங்கவள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது செந்தில்குமாருக்கு சற்று மனநிலை பாதிப்பு உள்ளதும், அமாவாசை மற்றும் பவுர்ணமி காலங்களில் அது அதிகரிப்பதும், பவுர்ணமியான நேற்று அதிகரித்ததால் தாயுடன் தகராறில் ஈடுபட்டு வெறித்தனமாக அவரை அடித்து கொலை செய்ததும் தெரிய வந்தது.
இதற்கிடையே அந்த பகுதியில் தலைமறைவாக இருந்த செந்தில்குமாரை பிடித்து நங்கவள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணை முடிவில் வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த கல்லப்பாடி அருகேயுள்ள கதிர்குளம் கொல்லைமேடு பகுதியை சேர்ந்தவர் கோபால் (வயது 75), விவசாயி. இவருடைய மனைவி ஜெயலட்சுமி. இவர்களுக்கு கீதா என்ற மகளும், பாலு என்கிற பாலசந்தர் (45) என்ற மகனும் உள்ளனர்.
கீதா திருமணமாகி கணவருடன் ஆந்திராவில் வசித்து வருகிறார். ஆட்டோ டிரைவரான பாலு அதே பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
கோபாலுக்கு சொந்தமான விவசாய நிலத்தை தனது பெயருக்கு மாற்றி எழுதி தரும்படி கடந்த சில நாட்களுக்கு முன்பாக பாலு கேட்டுள்ளார். அதற்கு அவர் எழுதி கொடுக்க மறுத்துள்ளார். ஆனாலும் பாலு தொடர்ந்து நிலத்தை மாற்றி தரும்படி வலியுறுத்தி வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று காலை பாலு தனது தந்தையிடம் சென்று ‘உங்களுக்கு வயதாகி விட்டதால் நிலத்தை எனது பெயருக்கு மாற்றிக் கொடுங்கள்’ என்று கேட்டார் அப்போதும் கோபால் மறுத்துள்ளார்.
அதனால் ஆத்திரம் அடைந்த பாலு சிறிது நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.
பிற்பகல் 3 மணியளவில் கோபால், தனது வீட்டின் எதிரேயுள்ள மரத்தடியில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பாலு அருகே கிடந்த பாறாங்கல்லை எடுத்து கோபாலின் தலையில் போட்டார். இதில், தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் கே.வி.குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா, பரதராமி சப்-இன்ஸ்பெக்டர்கள் கிருபாகரன், சங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக பரதராமி போலீசார் வழக்குப்பதிந்து பாலுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்