search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mother attack"

    • நிலத்தை பாகம் பிரித்து தர வேண்டுமென சீனிவாசலு ரெட்டி பெற்றோரிடம் தகராறில் ஈடுபட்டார்.
    • தந்தையை பிடித்து கீழே தள்ளி மிதித்து கன்னத்தில் அறைந்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், மதனபள்ளி அடுத்த குண்டவாரி பள்ளியை சேர்ந்தவர் வெங்கட்ரமணா ரெட்டி. இவரது மனைவி லஷ்மியம்மா. இவர்களுக்கு மனோகர் ரெட்டி, ஸ்ரீனிவாசலு ரெட்டி என 2 மகன்கள் உள்ளனர்.

    விவசாய நிலத்தை பாகம் பிரித்து தர வேண்டுமென சீனிவாசலு ரெட்டி பெற்றோரிடம் தகராறு செய்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் நிலத்தை பாகம் பிரித்து தர வேண்டுமென சீனிவாசலு ரெட்டி பெற்றோரிடம் தகராறில் ஈடுபட்டார்.

    இதற்கு பெற்றோர் மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரம் அடைந்த சீனிவாசலு ரெட்டி அவரது தாயின் தலை முடியை பிடித்து தரதரவென இழுத்துச் சென்று கீழே தள்ளி காலால் சரமாரியாக உதைத்து தாக்கினார். இதனை தடுக்க வந்த தந்தையை பிடித்து கீழே தள்ளி மிதித்து கன்னத்தில் அறைந்தார்.

    இந்த சம்பவங்களை அங்கிருந்த நபர் ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.

    இந்த வீடியோ பார்ப்பவர்களின் கண்களை கலங்க செய்தது. இதனைக் கண்ட போலீசார் வெங்கட்ராமண ரெட்டி மற்றும் அவரது மனைவியிடம் புகாரை பெற்று சீனிவாசலு ரெட்டியை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    ஆண்டிப்பட்டி அருகே போதையில் தாயை தாக்க முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.

    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி அருகில் உள்ள எஸ்.ரெங்கநாதபுரத்தை சேர்ந்த வெங்கடசாமி மனைவி பாப்பம்மாள் (வயது90). இவரது மகன் செல்வம் (50). குடிபழக்கத்திற்கு அடிமையானவர். குடித்து விட்டு மனைவியிடம் டார்ச்சர் செய்துள்ளார்.

    இதனால் அவர் கடந்த 6 வருடங்களுக்கு முன்பே பிரிந்து சென்று விட்டார். இதனால் செல்வம் தனது தாயிடம் குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். பாப்பம்மாள் தனது 2-வது மகன் வீட்டிற்கு சென்று அழுது புலம்பி உள்ளார்.

    இதனால் செல்வத்தின் தம்பி அவரை கண்டித்தார். தன்னை பற்றி தம்பியிடம் கூறியதால் ஆத்திரம் அடைந்த செல்வம் குடிபோதையில் தனது தாயை தரக்குறைவாக திட்டி தாக்க முயன்றதுடன் கொலை மிரட்டலும் விடுத்தார். இது குறித்து ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வத்தை கைது செய்தனர்.

    வயதான தாயாரை அடித்து துன்புறுத்திய மகனை கைது செய்த போலீசாரிடம் மகனை மன்னித்து விடுமாறு தாய் கெஞ்சி உள்ளார்.
    கொல்கத்தா:

    மேற்குவங்க மாநிலத்தில் 82 வயது மூதாட்டியை தினமும் அவரது இளைய மகன் அடித்து துன்புறுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் சாந்திபிரவா தேவி, இவருக்கு வயது 82. இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கணவர் அரசு பணியில் இருக்கும்போதே மரணமடைந்துவிட்டார். அவரது பணி இவரது மூத்த மகன் விகாஷ்க்கு கிடைத்துள்ளது. பணி கிடைக்கவும், தனது தாயைப் பிரிந்து மனைவி, குழந்தைகளுடன் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு துத்தபுகுருக்கு விகாஷ் சென்றுவிட்டார். இதனால் தனது இளைய மகன் புலு பிரசாத் தேப்புடன் மூதாட்டி சாந்திபிரவா வசித்து வந்தார்.

    இந்த நிலையில் தினமும் தனது தாயை புலு கொடுமைப்படுத்தி வந்துள்ளார். அனைத்து வேலைகளையும் அவரையே செய்யச் சொல்லியுள்ளார். காலால் எட்டி மிதித்துள்ளர். இதை பக்கத்து வீட்டில் வசிக்கும் பிரத்யஸா ராய் சவுத்ரி வீடியோவில் பதிவு செய்து தனது பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்துள்ளார்.

    இது சமூக வலைதளங்களில் வேகமாக பரவியுள்ளது. இதையடுத்து போலீசார் புலுவை கைது செய்தனர். இதைத் தொடர்ந்து மூதாட்டி சாந்திபிரவாவை வடக்கு தும்தும் நகராட்சி பராமரித்து வருகிறது. மகனிடம் அடி வாங்கியும், தனது மகனை மன்னித்து விடுமாறு சாந்திபிரவா கெஞ்சியுள்ளார்.
    ×