search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சொத்து தகராறில் தந்தையை தாக்கிய மகன் கைது
    X

    சொத்து தகராறில் தந்தையை தாக்கிய மகன் கைது

    • தனக்கு சொத்தை பிரித்து தருமாறு கேட்டு அடிக்கடி தகராறு செய்து வந்தார்.
    • இந்த சம்பவம் குறித்து பொங்கியண்ணன் புஞ்சை புளியம்பட்டி போலீசில் புகார் செய்தார்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் நம்பி யூர் அருகே உள்ள வெள்ளக் கோவில்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பொங்கி யண்ணன் (வயது 70). இவரது மகன் நாகராஜ் (42). விவசாயி. இவருக்கு இன்னும் திருமணம் ஆக வில்லை.

    நாகராஜ் தனது தந்தை யிடம் தனக்கு சொத்தை பிரித்து தருமாறு கேட்டு அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பொங்கி யண்ணன் புஞ்சை புளிய ம்பட்டி அடுத்த காரப்பாடி யில் உள்ள அவரது மகள் வீட்டுக்கு சென்று அவருடன் தங்கி இருந்தார்.

    ஆனாலும் நாகராஜ் அங்கு சென்று தொடர்ந்து தகராறு செய்து வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று நாகராஜ் மீண்டும் காரப்பாடிக்கு சென்று அவரது தந்தை பொங்கியண்ணனை தாக்கி சொத்தை பிரித்து தருமாறு தகராறு செய்தார்.

    இது குறித்து பொங்கிய ண்ணன் புஞ்சைபுளியம்பட்டி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ் பெக்டர்கள் செந்தில்குமார், செல்வம் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து நாகராஜை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×