search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தந்தையை பாட்டிலால் குத்திய மகன் கைது
    X

    கோப்பு படம்

    தந்தையை பாட்டிலால் குத்திய மகன் கைது

    • தந்தைக்கும், மகனுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியது
    • இதில் பலத்த காயமடைந்த தந்தை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்


    திண்டுக்கல் :

    திண்டுக்கல் அருகே தந்தையை பாட்டிலால் குத்திய மகனை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல்லை அடுத்துள்ள மாலைப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி(56). இவரது மகன் ெஜகன் (25), இருவரும் பெயிண்டராக பணிபுரிந்து வருகின்றனர்.

    தந்தைக்கும், மகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஜெகன் திடீரென அருகில் கிடந்த பாட்டிலை உடைத்து சுப்பிரமணியை குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெகனை கைது செய்தனர்.

    Next Story
    ×