search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "selvaperunthagai"

    • பி.எம்.கேர்ஸ் நிதியத்தை பொறுத்தவரையில் நாம் எழுப்பியிருக்கிற குற்றச்சாட்டுகளுக்கு பா.ஜ.க. தலைவர்கள் பதில் சொல்ல வேண்டும்
    • பிரதமர் மோடியின் ஊழலுக்கு உரிய படிப்பினையை வருகிற மக்களவை தேர்தல் மூலம் மக்கள் புகட்டுவார்கள் என்பது உறுதி

    ஊழலே உன் பெயர் தான் நரேந்திர மோடியா என்று மக்கள் கூறுகிற அளவிற்கு ஊழலின் ஊற்றுக் கண்ணாக பா.ஜ.க. அரசு செயல்பட்டிருக்கிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.

    செல்வபெருந்தகை இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

    "பா.ஜ.க. ஆட்சியில் ஊழலை அணு அளவும் அனுமதிக்க மாட்டேன் என்று பிரதமர் மோடி பலமுறை கூறிவந்த நிலையில் ரபேல் ஊழல், நெடுஞ்சாலைத்துறை ஊழல், தேர்தல் பத்திர நன்கொடை மெகா ஊழல் என தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் ஊழலின் உச்சத்தை தொடுகிற வகையில் பி.எம். கேர்ஸ் மோசடி ஊழல் பரபரப்பாக அம்பலமாகி உள்ளது. தேர்தல் பத்திர நன்கொடையில் பா.ஜ.க. பெற்றது ரூபாய் 8252 கோடி. ஆனால், பி.எம்.கேர்ஸ் மூலம் ரூபாய் 12,700 கோடி பிரதமர் மோடி பெற்றுள்ளார். இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத வழிமுறைகளில் ஒரு பிரதமரே முறைகேடாக பணம் வசூல் செய்த மிகப்பெரிய மோசடி அம்பலமாகியிருக்கிறது.

    பி.எம்.கேர்ஸ் என்ற நிதி எதற்காக தொடங்கப்பட்டது ? யாருக்காக தொடங்கப்பட்டது ? இதற்கு நன்கொடை வழங்கியவர்கள் யார் ? இதை நிர்வகிப்பவர்கள் யார் ? என்பது எதுவுமே வெளியே தெரியாமல் பூடகமாக மறைக்கப்பட்டிருக்கிறது. தேர்தல் பத்திர நன்கொடையில் எத்தனை வகையான ரகசியம் பின்பற்றப்பட்டதோ, அதைப் போலவே பி.எம்.கேர்ஸ் நிதி திரட்டலிலும் கையாளப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பிரதமரின் மேற்பார்வையில் நிதியை அவர் யாருக்கு வழங்க வேண்டுமென்று விரும்புகிறாரோ அதை தன்னிச்சையாக வழங்குவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதுவரை பி.எம்.கேர்ஸ் நிதிக்கு யார் பணம் கொடுத்தார்கள் ? எவ்வளவு கொடுத்தார்கள் என்பது இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கத்தில் செயல்படுகிற துணிவுமிக்க சில ஊடகங்கள் இதை பொதுவெளிக்கு கொண்டு வந்திருக்கின்றன. அவர்கள் மூலம் வெளியிடப்பட்ட நன்கொடை பட்டியலின்படி பி.எம்.கேர்ஸ் நிதிக்கு ரிலையன்ஸ் குழுமம் ரூபாய் 500 கோடி, அதானி குழுமம் ரூபாய் 100 கோடி, பேடிஎம் ரூபாய் 500 கோடி, ஜிண்டால் ஸ்டீல் குழுமம் ரூபாய் 100 கோடி என பட்டியல் நீளுகிறது.

    பி.எம்.கேர்ஸ் நிதியை பொறுத்தவரை சி.ஏ.ஜி. மற்றும் தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு கட்டுப்பட்டதல்ல. இதற்கு கூறப்படுகிற காரணம் இதற்கான நிதி ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் ஒதுக்கப்படுவதில்லை. ஆனால், பிரதமரே முன்னின்று வசூல் வேட்டை நடத்துவதால் எந்த விவரத்தையும், எவருக்கும் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. பி.எம்.கேர்ஸ் நிதிக்கும், அரசுக்கும் சம்மந்தம் இல்லை என்று கூறப்படுகிற அதேநேரத்தில் ஒன்றிய அரசினால் நடத்தப்படுகிற 38 பொதுத்துறை நிறுவனங்கள் பெருமளவில் பி.எம்.கேர்ஸ்க்கு நிதி வழங்கியுள்ளன. இந்நிறுவனங்கள் ஏறத்தாழ ரூபாய் 2105 கோடி வழங்கியிருக்கிறது. இதைத் தவிர பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுகிற ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்து ரூபாய் 150 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

    சுதந்திரத்திற்கு பிறகு நமது நாட்டின் நாடாளுமன்றம் தேசிய நிவாரண நிதி, தேசிய பாதுகாப்பு நிதி, பிரதமர் நிவாரண நிதி என்ற பெயர்களில் சட்டப்படி மூன்று அமைப்புகளை ஏற்படுத்தி அவசர காலத்திற்கான நிவாரண நிதியாக இதுவரை வழங்கப்பட்டு வந்தது. இதன் நோக்கம் புயல், மழை, வெள்ளம், வறட்சி, விபத்துகள், இயற்கை பேரிடர்கள் போன்றவற்றின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதியாக வழங்கப்படுவது நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த அமைப்புகளின் வரவு-செலவு கணக்குகள் யாவும் அரசு கணக்கு தணிக்கை அதிகாரி மூலம் தணிக்கை செய்யப்பட்டு பொதுமன்றத்தில் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு வருகின்றன. ஆனால், இதில் எந்த நடைமுறையையும் பின்பற்றாமல் பி.எம்.கேர்ஸ் என்ற நிதியம் இந்திய அரசாங்கத்தின் இணைய முகவரி பெயரிலும், பிரதமர் அசோகத் தூண் ஆகியவற்றை அடையாளமாக கொண்டிருப்பதாலும் இது இந்திய அரசையே முன்னிறுத்துகிறது. அரசு அதிகாரிகளால் விளம்பரம் செய்யப்படுகிறது. அரசு நிர்வாகம் முழுமையாக பயன்படுத்தப்படுகிறது.

    ஆனால் கணக்கு, வழக்குகளை கேட்டால் மட்டும் இது தனியார் அறக்கட்டளை என்பதால் தகவல் அறியும் உரிமைச் சட்டம் இதற்கு பொருந்தாது என்று விதண்டாவாதம் பேசப்படுகிறது. இதை ஒரு அறக்கட்டளையாக காட்டப்படுவதால் இதற்கு வருமான வரித்துறை 100 சதவிகித வரிவிலக்கு அளித்திருக்கிறது.

    இந்தியாவின் பாதுகாப்பை அச்சுறுத்துகிற வகையில் வெளிநாடுகளில் இருந்து குறிப்பாக, அண்டை நாடான சீன நாட்டு நிறுவனங்களிடமிருந்து நன்கொடை பெற்றிருப்பது வெளிவந்துள்ளது. இதில் சீன நாட்டை சேர்ந்த டிக்டாக் ரூபாய் 30 கோடி, ஷாவ்மி ரூபாய் 10 கோடி, ஹ{வாய் ரூபாய் 7 கோடி, ஒன்பிளஸ் ரூபாய் 1 கோடி என்று நன்கொடைகள் பெறப்பட்டுள்ளன. அண்டை நாடான சீன நாட்டுடன் லடாக் மற்றும் அருணாச்சல பிரதேசங்களில் நமது எல்லைகளில் ஊடுருவி பதற்றமான பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நிலவுகிற வேளையில் இத்தகைய நிதிகளை பிரதமர் மோடி எப்படி பெற்றார் என்பதற்கு உரிய விளக்கத்தை அவர் தர வேண்டும்.

    நாடாளுமன்றத்தின் அனுமதி இல்லாமல் எந்தவிதமான சட்ட ஒப்புதலுமின்றி ஒரு நாட்டின் பிரதமர் இவ்வளவு பெரிய அளவில் நிதி திரட்டி, தன்னிச்சையாக செலவு செய்வதை விட மிகப்பெரிய ஊழல் என்ன இருக்க முடியும் ? நாட்டின் உயர்ந்த அதிகார மையமாக இருக்கிற பிரதமர் அலுவலகம் பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி திரட்டுவதும், பிரதமர் தன் விருப்பம் போல் தன்னிச்சையாக நிதி வழங்குவதும் அப்பட்டமான சட்டவிரோத செயலாகும். இதில் பொறுப்புடைமை இல்லை. தணிக்கை இல்லை. வெளிப்படைத்தன்மை இல்லை. இதனால் பலவித சந்தேகங்களுக்கு இடம் தருகிற வகையில் அரசியல் சட்ட கோட்பாடுகளுக்கு முரணாக பி.எம்.கேர்ஸ் நிதி ரகசியமாக செலவு செய்யப்பட்டு வருகிறது.

    பா.ஜ.க. தலைவர்கள் தங்களது பரப்புரையில் மோடி ஒரு மகா உத்தமர் என்று திரும்ப திரும்ப கூறி வருகிறார்கள். பி.எம்.கேர்ஸ் நிதியத்தை பொறுத்தவரையில் நாம் எழுப்பியிருக்கிற குற்றச்சாட்டுகளுக்கு பா.ஜ.க. தலைவர்கள் பதில் சொல்ல வேண்டும். இதற்கு பதில் கூறாமல் விதண்டாவாதம் பேசுவதை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஊழலே உன் பெயர் தான் நரேந்திர மோடியா என்று மக்கள் கூறுகிற அளவிற்கு ஊழலின் ஊற்றுக் கண்ணாக பா.ஜ.க. அரசு செயல்பட்டிருக்கிறது. ஊழலுக்கு மேல் ஊழல் வெளிவந்து கொண்டிருக்கிறது. சிலரை சில காலம் ஏமாற்றலாம், பலரை பல காலம் ஏமாற்றலாம். ஆனால் எல்லாரையும், எல்லா காலத்திலும் ஏமாற்ற முடியாது." என்று அவர் கூறியுள்ளார். 

    • வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித் தாடுகிறது.
    • தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டிருக்கிறது.

    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கடந்த 10 ஆண்டுகளாக கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் பிரச்சனைகளை திசைத் திருப்பி மக்களை ஏமாற்றி வாக்குகளை அபகரித்து விடலாம் என்று மோடியும், பா.ஜ.க.வினரும் நயவஞ்சகமாக பேசி வருகிறார்கள்.

    ஆனால், மிகப்பெரிய பொருளாதார பேரழிவிற்கு வித்திட்ட பிரதமர் மோடியின் ஆட்சியால் பலனடைந்த ஏழை, எளிய மக்கள் எவரும் இல்லை. அதற்கு மாறாக இந்திய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது.


    விலைவாசி உயர்ந்திருக்கிறது. வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித் தாடுகிறது. விவசாயிகளின் வருமானம் இருமடங்காக வாக்குறுதியின்படி கூடவில்லை. மாநில உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன.

    தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. தமிழகம் திட்டமிட்டு வஞ்சிக்கப்பட்டு வருகிறது. இதற்கெல்லாம் விமோசனம் காண பாசிச, சர்வாதிகார பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவு கட்ட இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு தமிழக வாக்காளர்கள் ஆதரவு அளிக்க வேண்டுமென அன்போடு கேட்டுக் கொள்கிறேன். இதன்மூலமே சர்வாதிகாரம் வீழ்த்தப்படும், ஜனநாயகம் காப்பாற்றப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பிரதமர் மோடி பேசுவதை அங்குள்ள நாளேடுகள் கவலையோடு எச்சரித்திருக்கின்றன.
    • தமிழகத்தில் இந்தியா கூட்டணிக்கு மக்கள் ஆதரவளித்து வெற்றி பெறச் செய்வார்கள்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இலங்கையில் தமிழர்களுடைய உரிமைகளின் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கின்ற வகையில் கச்சத்தீவு பிரச்சனை குறித்து நரேந்திர மோடியும், நிர்மலா சீதாராமனும் பேசியது இலங்கை தமிழர்களிடையே பதற்றமான சூழலை உருவாக்கி உள்ளது.

    பிரதமருடைய பேச்சுகளால் இலங்கை உடனான நமது உறவுகள் பாதிக்கப்படுமேயானால் ஏற்கனவே சீனாவின் வலையில் சிக்கியிருக்கிற அந்நாடு, நமது புவிசார் பாதுகாப்பிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலுக்கு ஆளாகிவிடும் என்பதை மறந்து பிரதமர் மோடி பேசுவதை அங்குள்ள நாளேடுகள் கவலையோடு எச்சரித்திருக்கின்றன.

    ஒரு மாநிலத் தேர்தலில் அரசியல் ஆதாயம் தேடுவதற்காக இந்தியாவின் பாதுகாப்பு நலன்களை தாரை வார்க்கிற பிரதமர் மோடியை எவருமே மன்னிக்க மாட்டார்கள்.


    சீனாவோடு 13 முறை பேச்சுவார்த்தை நடத்தியும், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள 2000 சதுர கி.மீ. நிலத்தை மீட்பதற்கு பிரதமர் மோடி இதுவரை எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.

    நிர்மலா சீதாராமன் தனது நிதியமைச்சகத்தை தொழிலதிபர்களுக்காகத் தான் பயன்படுத்தினார் என்பதை ஆதாரத்தோடு தெரிந்து கொள்ளலாம். விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யாத நிர்மலா சீதாராமன், கார்ப்பரேட்டுகளின் வாராக் கடனை தள்ளுபடி செய்ததை விட விவசாயிகள் விரோத நடவடிக்கை வேறு என்ன இருக்க முடியும்?

    எனவே, பிரதமர் மோடி, நிர்மலா சீதாராமன், 20 ஆயிரம் புத்தகங்களை படித்த அறிவு ஜீவி என்று தன்னைத் தானே கூறிக் கொள்கிற அண்ணாமலை ஆகியோரின் ஆதாரமற்ற அவதூறான கோயபல்ஸ் பிரசாரத்தினால் தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள். கடந்த மக்களவைத் தேர்தலை விட வருகிற தேர்தலில் மிகத் தெளிவாக தமிழகத்தில் இந்தியா கூட்டணிக்கு மக்கள் ஆதரவளித்து வெற்றி பெறச் செய்வார்கள் என்பதில் எவருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • உலக கோட்டீஸ்வரர்கள் வரிசையில் 2014 ஆம் ஆண்டு 609 இடத்தில் இருந்த அதானி, இன்றைக்கு 13-வது இடத்தில் உயர்வதற்கு யார் காரணம்? யார் பொறுப்பு?
    • தேர்தல் பத்திர நன்கொடை ஊழல் மூலம் ரூபாய் 6572 கோடி குவித்த பிரதமர் மோடி ஊழலைப் பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் இல்லை.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப் பெருந்தகை வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக பா.ஜ.க. அரசு எப்போதும் செயல்பட்டதில்லை என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.

    கடந்த 9 ஆண்டுகளில் மோடியின் நெருங்கிய நண்பரான அதானியின் சொத்து 2229 சதவிகிதமும், அம்பானியின் சொத்து 400 சதவிகிதமும் அதிகரித்து இருக்கிறது. உலக கோட்டீஸ்வரர்கள் வரிசையில் 2014 ஆம் ஆண்டு 609 இடத்தில் இருந்த அதானி, இன்றைக்கு 13-வது இடத்தில் உயர்வதற்கு யார் காரணம்? யார் பொறுப்பு? மோடி ஆட்சியால் கார்ப்பரேட்டுகள் பயனடைந்தார்கள். அதனால் தேர்தல் பத்திர நன்கொடை ஊழல் மூலம் ரூபாய் 6572 கோடி குவித்த பிரதமர் மோடி ஊழலைப் பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் இல்லை.

    போதை பொருள் தடுப்புக்காக கொண்டு வரப்பட்ட சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தை அரசியல் காரணங்களுக்காக எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற்கு பா.ஜ.க. பயன்படுத்தி வருகிறது. இத்தகைய பாசிச, சர்வாதிகார ஆட்சி நடத்தி வருகிற பிரதமர் மோடி வருகிற மக்களவை தேர்தலில் மக்கள் உரிய தீர்ப்பை வழங்கி ஜனநாயகத்தை காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கை இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • 4-ந்தேதி (வியாழக்கிழமை)-காலை 11 மணி-ஊட்டி, இரவு 7 மணி-திண்டுக்கல் பொதுக்கூட்டம்.
    • 5-ந்தேதி (வெள்ளிக்கிழமை)-காலை 11 மணி-சோழவந்தான், பகல் 12 மணி-மதுரை, மாலை 4 மணி-பரமக்குடி, மாலை 6 மணி-விருதுநகர் தேர்தல் பொதுக்கூட்டம்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் ஊடகம் மற்றும் செய்தி தெடர்புத்துறை தலைவர் ஆனந்த் ஸ்ரீநிவாசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நாளை (திங்கட்கிழமை) முதல் வருகிற 17-ந்தேதி வரை சூறாவளி பிரசாரம் செய்கிறார். அதன் விவரம் வருமாறு:-

    நாளை (ஏப்ரல் 1-ந்தேதி) காலை 9 மணி-சென்னையில் இருந்து புறப்படுதல், (சாலை வழி), காலை 11.30 மணி-ஆற்காடு, மதியம் 3 மணி-வேலூர், மாலை 4 மணி-திருப்பத்தூர், இரவு 7 மணி-கிருஷ்ணகிரி தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

    2-ந்தேதி (செவ்வாய்க்கிழமை)-காலை 11 மணி-சேலம், மதியம் 1 மணி-நாமக்கல், மாலை 6 மணி-கரூர் தேர்தல் பொதுக்கூட்டம்.

    3-ந்தேதி (பதன்கிழமை)-காலை 11 மணி-ஈரோடு, பிற்பகல் 3 மணி-திருப்பூர், மாலை 4 மணி-பொள்ளாச்சி, இரவு 7 மணி-கோவை தேர்தல் பொதுக்கூட்டம்.

    4-ந்தேதி (வியாழக்கிழமை)-காலை 11 மணி-ஊட்டி, இரவு 7 மணி-திண்டுக்கல் பொதுக்கூட்டம்.

    5-ந்தேதி (வெள்ளிக்கிழமை)-காலை 11 மணி-சோழவந்தான், பகல் 12 மணி-மதுரை, மாலை 4 மணி-பரமக்குடி, மாலை 6 மணி-விருதுநகர் தேர்தல் பொதுக்கூட்டம்.

    6-ந்தேதி (சனிக்கிழமை)-காலை 11 மணி-ஸ்ரீவில்லிபுத்தூர், மதியம் 3 மணி-கோவில்பட்டி, இரவு 7 மணி-திருநெல்வேலி தேர்தல் பொதுக்கூட்டம்.

    7-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை)-காலை 11 மணி-ராதாபுரம், மாலை 4 மணி-விளவங்கோடு, இரவு 7 மணி-நாகர்கோவில் தேர்தல் பொதுக்கூட்டம்.

    8-ந்தேதி (திங்கட்கிழமை)-சென்னை சத்தியமூர்த்தி பவன் வருகிறார்.

    9-ந்தேதி-காலை 9.35 மணிக்கு சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் புறப்படுகிறார். பகல் 12 மணி-பெரம்பலூர், மாலை 4 மணி-திருச்சி, இரவு 7 மணி-சிவகங்கையில் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

    10-ந்தேதி-காலை 11 மணி-தஞ்சாவூர், பிற்பகல் 3 மணி-திருவாரூர், இரவு 7 மணி-கும்பகோணம், இரவு 11 மணி-ரெயில் மூலம் சென்னைக்கு புறப்படுகிறார்.

    11, 12, 13-ந்தேதிகளில் சென்னை சத்தியமூர்த்தி பவன்.

    14-ந்தேதி-காலை 10 மணிக்கு சென்னை துறைமுகத்தில் உள்ள அம்பேத்காரின் சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்துகிறார்.

    மாலை 4 மணி-விழுப்புரம், இரவு 7 மணி-சிதம்பரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

    15-ந்தேதி-காலை 11 மணி-புதுச்சேரியில் தேர்தல் பிரசாரம் செய்கிறார். மதியம் 2 மணி முதல் 8 மணி வரை-கடலூர் பிரசாரம் மற்றும் பொதுக்கூட்டம்.

    இரவு 11 மணிக்கு கார் மூலம் சென்னை புறப்படுகிறார்.

    16-ந்தேதி-மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் பிரசாரம் செய்கிறார்.

    17-ந்தேதி காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை திருவள்ளூர் சாலை வழியாக தேர்தல் பிரசாரம் செய்கிறார்.

    மதியம் 2.30 மணிக்கு திருவள்ளூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும்போது தொகுதிகள் மாறுவது தவிர்க்க முடியாது.
    • திருநாவுக்கரசருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்காவிட்டாலும் அவருக்கு பெரிய பதவியை கட்சி வழங்கும்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சத்தியமூர்த்தி பவனில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    எம்.பி.யாக இருக்கும் மத்திய மந்திரி எல்.முருகனையும் கவர்னராக இருந்த டாக்டர் தமிழிசையையும் தேர்தலில் போட்டியிட வைத்துள்ளீர்கள்.

    ஆனால் தென்சென்னையில் பிறந்த ஜெய்சங்கரையும் திருச்சியில் பிறந்த நிர்மலா சீதாராமையும் போட்டியிட வைக்கவில்லை. இதற்கான உண்மையான காரணத்தை பா.ஜனதா தெளிவுபடுத்த வேண்டும்.

    இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தொழிலாளர்களுக்கு மருத்துவ காப்பீடு, சமூக பாதுகாப்பு அளிக்கப்படும். வயதான அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு பாதுகாப்புச் சட்டம் கொண்டுவரப்படும். இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மறுக்கிறது பா.ஜனதா. ஆனால் சாதிவாரி கணக்கெடுப்பை வற்புறுத்தியும் சமூக நீதி பற்றி பேசியும் வரும் பாட்டாளி மக்கள் கட்சி பா.ஜனதா உடன் கூட்டணி அமைத்துள்ளது. அந்தக் கட்சி சமூக நீதிக்கு எதிராக சென்று கொண்டிருக்கிறது.

    கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும்போது தொகுதிகள் மாறுவது தவிர்க்க முடியாது. அந்த வகையில் திருச்சி தொகுதி மாறியது. எங்கள் கட்சியின் மூத்த தலைவரான திருநாவுக்கரசருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்காவிட்டாலும் அவருக்கு பெரிய பதவியை கட்சி வழங்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முதற்கட்ட தேர்தல் நடைபெறும் பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் செய்வது பற்றி டெல்லி மேலிடத்தில் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.
    • ராகுல் பிரசாரம் 10-ந் தேதிக்கு பிறகுதான் இருக்கும் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி வரவிருப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வபெருந்தகை கூறினார்.

    முதற்கட்ட தேர்தல் நடைபெறும் பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் செய்வது பற்றி டெல்லி மேலிடத்தில் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

    இதற்கிடையில் அந்த அந்த மாநிலங்களில் ராகுல் காந்தி எந்தெந்த தொகுதிகளுக்கு செல்ல வேண்டும் என்பது பற்றி பயண திட்டங்களை வகுக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளனர்.

    தமிழ்நாட்டிலும் ராகுல் காந்தி சுற்றுப்பயணம் தொடர்பாக செல்வ பெருந்தகை மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    கடந்த தேர்தலில் ஒரே நாளில் 4 இடங்களில் பிரசாரம் செய்தார். இந்த முறையும் 3 அல்லது 4 இடங்களில் பிரசாரம் செய்யும் வகையில் பயண திட்டம் தயாரிக்க திட்டமிட்டுள்ளார்கள்.

    கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் ஆகிய தொகுதிகளை உள்ளடக்கிய ஏதாவது ஒரு இடம்.

    கரூர், திண்டுக்கல், ஈரோடு, திருச்சி தொகுதிகள் சார்ந்த ஒரு இடம்.

    கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் தொகுதிகளை சார்ந்த ஒரு இடம்.

    திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் தொகுதிகளில் ஒரு இடம், இடம்பெறும் என்று கூறப்படுகிறது.

    ராகுல் பிரசாரம் 10-ந் தேதிக்கு பிறகுதான் இருக்கும் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • தென்சென்னையில் பிறந்த மத்திய மந்திரி ஜெய்சங்கரை ஏன் தென்சென்னையில் நிறுத்தவில்லை?
    • அடுத்து வரும் சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்களில் முஸ்லிம்களுக்கு தொகுதி ஒதுக்கப்படும்.

    சென்னை:

    சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாராளுமன்ற மாநிலங்களவை பதவி காலம் 5 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் போது எல்.முருகனை எதற்காக நீலகிரியில் வேட்பாளராக அறிவித்தீர்கள். கவர்னராக இருந்த டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனை ராஜினாமா செய்ய சொல்லிவிட்டு தென்சென்னையில் வேட்பாளராக அறிவித்தது ஏன்? தென்சென்னையில் பிறந்த மத்திய மந்திரி ஜெய்சங்கரை ஏன் தென்சென்னையில் நிறுத்தவில்லை? திருச்சியில் பிறந்த மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு ஏன் திருச்சியில் சீட் கொடுக்கவில்லை?

     ஜெய்சங்கருக்கும், நிர்மலா சீதாராமனுக்கும் ஒரு நீதி, பட்டியல் இனத்தில் பிறந்த எல்.முருகனுக்கும், பிற்படுத்தப்பட்ட இனத்தில் பிறந்த தமிழிசை சவுந்தரராஜனுக்கும் ஒரு நீதியா? இதுதான் பாசிச பா.ஜனதா. நிர்மலா சீதாராமனையும், ஜெய்சங்கரையும் மேட்டுக்குடிகளாக வைத்துக்கொண்டு எல்.முருகனையும், தமிழிசை சவுந்தரராஜனையும் வெயிலில் வாக்கு சேகரிக்க அனுப்பியுள்ளார்கள். இது தான் பா.ஜனதாவின் பாசிச முகம்.

    நாங்கள் ஒரு கிறிஸ்துவர், ஒரு முஸ்லிமுக்கு தொகுதி ஒதுக்க முயற்சித்தோம். நாங்கள் கேட்ட தொகுதி கிடைக்காததால் முஸ்லிமுக்கு ஒதுக்க முடியவில்லை. கிறிஸ்தவருக்கு தொகுதி ஒதுக்கி உள்ளோம். ராமநாதபுரத்தில் போட்டியிடும் இந்தியா கூட்டணி சார்பாக போட்டியிடும் ஐ.யூ.எம்.எல். வேட்பாளர் எங்கள் வேட்பாளர் தான். அடுத்து வரும் சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்களில் முஸ்லிம்களுக்கு தொகுதி ஒதுக்கப்படும்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க உள்ளார்கள். விரைவில் சுற்றுப்பயண விவரத்தை வெளியிடுவோம்

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • சமூகம் சார்ந்த முற்போக்கு சிந்தனையாளரான இவருக்குள்ள அசாத்திய இசைத்திறமையின் அடிப்படையில்தான் விருது கொடுக்கப்படுகிறது.
    • "வெறுப்பின் சந்தையில் அன்பின் கடையை திறப்போம்" என்று ராகுல் காந்தி அடிக்கடி கூறுவார்.

    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    சமூக சிந்தனையாளர், சுற்றுசூழல் ஆர்வலர், எழுத்தாளர் மற்றும் சிறந்த கர்நாடக இசைப் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு தி மியூசிக் அகாடமியின் 'சங்கீத கலாநிதி' விருதுக்குத் தேர்வாகி இருப்பதற்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சமூகம் சார்ந்த முற்போக்கு சிந்தனையாளரான இவருக்குள்ள அசாத்திய இசைத்திறமையின் அடிப்படையில்தான் விருது கொடுக்கப்படுகிறது. ஆனால், அவர் விருது பெறுவதில் குழப்பம் ஏற்படுத்தும் சிலரின் முயற்சி வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

    "வெறுப்பின் சந்தையில் அன்பின் கடையை திறப்போம்" என்று ராகுல் காந்தி அடிக்கடி கூறுவார். அதுபோன்று அனைவரின் மீதும் அன்பு செலுத்துவோம் என கூறியுள்ளார்.

    • தேசிய காங்கிரஸ் தேர்தல் குழு ஆலோசனைக்கு பிறகு இறுதி செய்யப்பட்ட வேட்பாளர்கள் பட்டியல் நாளை இரவுக்குள் வெளியிடப்படும்.
    • ஒரு தொகுதிக்கு 3 வேட்பாளர்கள் பெயரை பரிந்துரை செய்துள்ளோம்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் திருவள்ளூர் (தனி), கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி, புதுச்சேரி ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது. இத்தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் தமிழக காங்கிரஸ் தீவிரமாக ஈடுபட்டு வந்தது.

    இந்நிலையில், தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் நாளை இரவுக்குள் வெளியிடப்படும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

    மேலும் செல்வப்பெருந்தகை கூறியதாவது:- தேசிய காங்கிரஸ் தேர்தல் குழு ஆலோசனைக்கு பிறகு இறுதி செய்யப்பட்ட வேட்பாளர்கள் பட்டியல் நாளை இரவுக்குள் வெளியிடப்படும். ஒரு தொகுதிக்கு 3 வேட்பாளர்கள் பெயரை பரிந்துரை செய்துள்ளோம் என்றார்.

    • பா.ஜனதா மின்னணு எந்திரத்தை நம்பியே தேர்தலில் நிற்கிறார்கள்.
    • பிரதமர் மோடி தமிழகத்துக்கு 6, 7 முறை படையெடுத்துள்ளார். ஆனால் தேர்தல் பத்திரம் பற்றி ஏன் வாய் திறக்கவில்லை.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சத்திய மூர்த்தி பவனில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வெற்றி வேட்பாளர்கள் பட்டியல் இன்னும் 2 அல்லது 3 நாட்களில் வெளியிடப்படும். கன்னியாகுமரி தொகுதியில் விஜய் வசந்த் போட்டியிடுவது பற்றி கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும். தம்பியை எதிர்த்து அக்கா தமிழிசை போட்டியிட்டால் டெபாசிட் கூட வாங்க மாட்டார்.

    பாரதிய ஜனதாவுடன் பா.ம.க. கூட்டணி அமைந்திருப்பதன் மூலம் மூழ்கும் கப்பலில் ஏறி அந்த கட்சி மூழ்கப் போகிறது. தமிழகம் புதுவையில் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் 40 பேரையும் ஆதரித்து ராகுல் காந்தி சூறாவளி பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும் பிரசாரம் செய்ய உள்ளார். இவர்களது சுற்றுப்பயண தேதியை விரைவில் அறிவிப்போம்.

    பா.ஜனதா மின்னணு எந்திரத்தை நம்பியே தேர்தலில் நிற்கிறார்கள். நாங்கள் மக்களை நம்பியே நிற்கிறோம். தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையம் மீண்டும் வெளியிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்திருப்பதை வரவேற்கிறோம். மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தமிழக மக்களை பிச்சைக்காரர்கள் என்று கூறியதை வன்மையாக கண்டிக்கிறோம்.

    இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். தமிழகத்துக்கு வெள்ள நிவாரண நிதியாக மத்திய அரசு ஒரு பைசா கூட வழங்கவில்லை. இதன் மூலம் மத்திய அரசு தமிழக மக்களை அவமதித்துள்ளது.

    தேர்தல் பத்திரம் தொடர்பாக பா.ஜனதா ஆதாரங்களை கொடுக்க மறுப்பது ஏன்? பிரதமர் மோடியின் ஆட்சி முடிவுக்கு வரப்போகிறது. பா.ஜனதாவின் முகத்திரை தினம் தினம் கிழிந்து வருகிறது.

    பிரதமர் மோடி தமிழகத்துக்கு 6, 7 முறை படையெடுத்துள்ளார். ஆனால் தேர்தல் பத்திரம் பற்றி ஏன் வாய் திறக்கவில்லை.

    இவ்வாறு செல்வப்பெருந்தகை கூறினார்.

    பேட்டியின் போது முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் ராஜேஷ்குமார், பொருளாளர் ரூபி மனோகரன், அசன் மவுலானா எம்.எல்.ஏ., கோபண்ணா, அனந்த சீனிவாசன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • தேர்தல் பத்திரங்களில் அரசியல் கட்சிகள் பெற்ற நிதிகள் குறித்து விவரங்களை வெளியிட வேண்டும் என்று போராட்டம் நடத்தியது காங்கிரஸ் கட்சிதான்.
    • எங்கள் மடியில் கனமில்லை. எனவே எங்களுக்கு பயமில்லை.

    ஆலந்தூர்:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று காலை சென்னையில் இருந்து மும்பை புறப்பட்டு சென்றார்.

    முன்னதாக அவர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்காக ராகுல் காந்தி தமிழ்நாட்டில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறார். தமிழ்நாட்டின் எல்லாப் பகுதிகளுக்கும் ராகுல் காந்தி பிரசாரம் செய்வதற்கான ஏற்பாடுகள் இருக்கிறது. இன்று மும்பையில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை சந்தித்து அதற்கான சுற்றுப்பயணத் திட்டங்கள் வகுக்கப்படும்.

    தேர்தல் பத்திரங்களில் அரசியல் கட்சிகள் பெற்ற நிதிகள் குறித்து விவரங்களை வெளியிட வேண்டும் என்று போராட்டம் நடத்தியது காங்கிரஸ் கட்சிதான். எங்கள் மடியில் கனமில்லை. எனவே எங்களுக்கு பயமில்லை. இதனால்தான் நாங்கள் தைரியமாக அதை வெளியிடச் சொல்லி வலியுறுத்தினோம். இப்போது ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டு இருக்கிறது. வருமானவரி சோதனை, அமலாக்கத்துறை சோதனை, சி.பி.ஐ. சோதனை ஆகியவற்றுக்கு பின்னர் நிதிகளைப் பெறுகின்றனர். இதில் பெருமளவு உள்நோக்கங்கள் உள்ளன. தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் மோடி இதற்கெல்லாம் பதில் சொல்வாரா?


    முதல் கட்டத்திலேயே தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடக்கப்போகிறது என்பது, மோடிக்கு எப்படி முதலாவது தெரிந்தது? அதனால் தான் அவர் தமிழ்நாட்டை மையமாக வைத்து முதலில் தொடர்ந்து பிரசாரம் செய்து கொண்டு இருந்தாரா?. இதையெல்லாம் பார்க்கும் போது பாராளுமன்ற தேர்தலை, தேர்தல் ஆணையம் சுதந்திரமாக சுயமாக நடத்துகிறதா? இல்லையேல் மோடிக்கு ஆதரவாகவா என்ற சந்தேகம் மக்களுக்கு எழுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×