search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Self destruction"

    கோவையில் விரும்பிய கல்லூரியில் ‘சீட்’ கிடைக்காததால் மனமுடைந்த கல்லூரி மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கோவை:

    கோவை சேரன்மாநகரை சேர்ந்தவர் முத்துராமலிங்கம். இவர் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார்.

    இவரது மகள் தாரணி (வயது 20) பீளமேடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பே‌ஷன் டெக்னாலஜி படித்துள்ளார்.

    இவர் கொச்சியில் உள்ள ‘நே‌ஷனல் இன்ஸ்டிடியூட் டெக்னாலஜி’ மேல்படிப்பு படிக்க விரும்பினார். ஆனால் அவருக்கு அந்த கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் மனமுடைந்த தாரணி வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்த தகவலின் பேரில் பீளமேடு போலீசார் சம்பவஇடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செங்கல்பட்டு அருகே போலீஸ் மிரட்டியதால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு அருகே உள்ள புலிப்பாக்கத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் ஜெயக்குமார். தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

    கடந்த 2 மாதத்துக்கு முன்பு ஜெயக்குமார் தரப்பினருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. இதுகுறித்து இரு தரப்பினரும் செங்கல்பட்டு தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    இதில் எதிர்தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் ஜெயக்குமார் மற்றும் அவரது நண்பர்கள் கைது செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில் ஜெயக்குமார் ஜாமீனில் வெளியே வந்த பின்னரும் அவரது நண்பர்கள் குறித்து போலீசார் அவரிடம் அடிக்கடி விசாரித்தனர். அவர்களை அடையாளம் காட்டும்படி மிரட்டியதாக தெரிகிறது. மேலும் கொடுத்த புகாரை வாபஸ் பெறும்படி நிர்பந்தித்ததாக கூறப்படுகிறது.

    இதனால் மனவேதனை அடைந்த ஜெயக்குமார் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

    போலீசார் மிரட்டியதால் தான் ஜெயக்குமார் தற்கொலை செய்ததாக கூறி அவரது உறவினர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை சென்னை-திருச்சி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் அனைத்தும் புறவழிச் சாலை வழியாக திருப்பி விடப்பட்டது.

    டி.எஸ்.பி. கந்தன், இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

    இதுகுறித்து ஜெயக்குமாரின் உறவினர்கள் கூறும்போது, “போலீசாரின் மிரட்டலால்தான் ஜெயக்குமார் தற்கொலை செய்து உள்ளார். இதில் சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

    சத்தியமங்கலத்தில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தனியார் ஆஸ்பத்திரியில் நர்சு திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரிந்து வந்தவர் நிவேதா (வயது 20).

    இவரது சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஆகும். தந்தை பெயர் வீரசேகர் விவசாயி. சத்தியமங்கலம் தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வந்த நிவேதா ஆஸ்பத்திரியின் பின்னால் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு தங்கி இருந்தார்.

    இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் ஆஸ்பத்திரிக்கு வேலைக்கு சென்ற நிவேதா மிகவும் மன வேதனையில் இருந்துள்ளார். பிறகு யாரும் இல்லாத ஒரு வார்டு அறையில் உள்ள பேன் கம்பியில் தனது சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வார்டு அறை தனி அறையாக யாரும் செல்லாத அறையாக இருந்ததால் உடனடியாக இதை யாரும் கவனிக்கவில்லை.

    சில மணி நேரம் கழித்து சக ஊழியர்கள் நிவேதா தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பிறகு இது குறித்து ஆஸ்பத்திரி நிர்வாகம் சார்பில் சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பிணமாக தொங்கிய நிவேதா உடலை போலீசார் மீட்டு பிரேதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நிவேதா ஒரு வாலிபரை காதலித்து வந்ததாகவும், இந்த காதலுக்கு வீட்டில் பலத்த எதிர்ப்பு ஏற்பட்டதால் அதிலிருந்து மனம் உடைந்த நிலையில் காணப்பட்டாராம். இதனால் காதல் விவகாரம் தொடர்பாக நர்சு நிவேதா தற்கொலை செய்து இருப்பதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஆஸ்பத்திரியில் நர்சு தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சத்தியமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சங்கரன்கோவில் அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த டாஸ்மாக் ஊழியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அருகே உள்ள பனவடலிசத்திரத்தை சேர்ந்தவர் ராஜபாண்டியன் (வயது 41). இவரது மனைவி மகேஸ்வரி (35). ராஜபாண்டியன் தஞ்சாவூரில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை செய்து வருகிறார். இவருக்கு பல நாட்களாக வயிற்று வலி இருந்து வந்துள்ளது. அதோடு அவர் குடிப்பழக்கத்திற்கும் அடிமையாகி விட்டதாக கூறப்படுகிறது.

    வயிற்று வலிக்கு பல இடங்களில் மருத்துவம் பார்த்தும் தீரவில்லை என கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் மிகவும் விரக்தி அடைந்த நிலையில் காணப்பட்டார். இந்நிலையில் கடையில் விடுமுறை எடுத்து விட்டு சொந்த ஊருக்கு வந்துள்ளார். வந்தவர் நேற்று சங்கரன்கோவிலுக்கு வந்தார்.

    பின்னர் பொட்டல் அருகில் உள்ள நகர்நல மையத்தின் அருகில் வி‌ஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தார். அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சங்கரன்கோவில் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவொற்றியூரில் திருமணத்துக்கு மறுத்த காதலியின் கழுத்தை அறுத்த வாலிபர் வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர் சாத்துமா நகர் காந்தி நகர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் வேணு கோபால். இவரது மகள் பாரதி (25).

    ஆசிரியர் பயிற்சியை முடித்துள்ள இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் புதுவண்ணாரப்பேட்டையில் இரு சக்கர வாகனம் விற்பனை செய்யும் கடையில் பணிபுரிந்து வந்தார். மேடவாக்கத்தை சேர்ந்த பாலாஜி (28) என்ற வாலிபர் மோட்டார் சைக்கிள் வாங்குவதற்காக அங்கு சென்றார்.

    அப்போது பாரதியுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலித்தனர். 2 பேரின் வீட்டுக்கும் காதல் விவகாரம் தெரிந்தது. இதன் பிறகு திருமண ஏற்பாடுகளும் நடந்ததாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே பாலாஜியின் நடவடிக்கைகள் பிடிக்காமல் போனதால் திருமணம் தடைபட்டது. பாரதி, பாலாஜியிடம் பேசுவதையும் குறைத்துக் கொண்டார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த பாலாஜி, பாரதி மீது கடும் கோபத்தில் இருந்தார். நேற்று இரவு பாரதியின் தந்தை வேணுகோபால், அண்ணன் லோகேஷ் ஆகியோர் வெளியில் சென்றிருந்தனர். உடல் நிலை சரியில்லாத தனது தாயை கவனித்துக் கொள்வதற்காக பாரதி மட்டும் வீட்டில் இருந்தார்.

    அப்போது அங்கு சென்ற பாலாஜி, பாரதியிடம் தகராறு செய்தார். பின்னர் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து கழுத்தை அறுத்தார். இதில் பாரதி ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார்.

    சிறிது நேரத்திலேயே பாரதியின் தந்தை வீடு திரும்பி விட்டார். ரத்தம் வடிந்த நிலையில் மகள் உயிருக்கு போராடுவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக பாரதியை மீட்டு ஸ்டேன்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.

    இதற்கிடையே பாலாஜி, அதே பகுதியில் உள்ள மதுக்கடைக்கு சென்று மதுவில் வி‌ஷம் கலந்து குடித்து விட்டு திருவொற்றியூர் போலீஸ் நிலையத்துக்கு சென்று மயங்கி விழுந்தார், போலீசார் அவரை மீட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    வாலிபர் பாலாஜி மீது வழக்குபதிவு செய்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். சிகிச்சை முடிந்த பின்னர் அவரை கைது செய்து சிறையில் அடைக்க முடிவு செய்துள்ளனர். #tamilnews
    காதலி தூக்குப்போட்டு தற்கொலை செய்ததால் மனமுடைந்த மன்னார்குடி வாலிபர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சடகோபன் தெருவை சேர்ந்தவர் மோகன்குமார். இவரது மகன் பாலமுருகபாரதி (வயது 24). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

    இவர் சென்னையில் வசிக்கும் தனது அத்தை மகளை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் விரைவில் திருமணம் செய்வதாக பேசி வந்தனர். இதற்கிடையே திருமணம் குறித்து இருதரப்பு பெற்றோர் வீட்டிலும் பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் மனமுடைந்த அத்தை மகள், கடந்த 19-ந்தேதி சென்னையில் வீட்டில் வைத்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். காதலி தற்கொலை செய்த சம்பவத்தால் பாலமுருகபாரதி மிகவும் மனமுடைந்து இருந்து வந்தார்.

    இதையடுத்து நேற்று மாலை மன்னார்குடி பஸ் நிலையத்தில் உள்ள ஒரு தனியார் கட்டிடம் மீது அவர் ஏறினார். பின்னர் திடீரென மாடியில் இருந்து குதித்தார்.

    இதில் அவருக்கு கழுத்து, கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு வலியால் துடித்தார். உயிருக்கு போராடிய அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பாலமுருக பாரதியை அனுப்பி வைத்தனர். அங்கு தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் பற்றி மன்னார்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    உடுமலை அருகே தனியார் ஆஸ்பத்திரி ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #suicide

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள ராமசாமி நகரை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மகன் மணிகண்டன் (வயது 28). இவர் கோவை பீளமேட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் வரவேற்பாளராக வேலை பார்த்து வந்தார். இவர் குடும்ப தேவைக்காக அந்த பகுதியை சேர்ந்த சிலரிடம் கடன் வாங்கி உள்ளார். வேலையில் போதிய வருமானம் இல்லாததால் கடனை திருப்பி செலுத்த முடியாமல் சிரமப்பட்டு வந்தார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த மணிகண்டன் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து உடுமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட மணிகண்டனின் உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கூத்தாநல்லூர் அருகே குடும்ப தகராறில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள வடகோவினூரை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி விஜயராணி. இவர்களுக்கு 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

    சுரேஷ் மது குடிக்கும் பழக்கம் கொண்டவர். இதனால் அவர் குடும்ப செலவுக்கு சரியாக பணம் கொடுப்பதில்லை என்று கூறப்படுகிறது. இது சம்மந்தமாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் மனமுடைந்த விஜயராணி நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

    இதுபற்றி விஜயராணி அண்ணன் பாஸ்கர் கூத்தாநல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி விஜயராணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    பாலக்காடு அருகே போலீஸ் விசாரணைக்கு அழைத்ததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கோட்டாய் பருத்திபுள்ளி பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன்- பாக்கியம் தம்பதி மகன் சுதீஷ்குமார் (வயது 28). கடந்த வாரம் ஒரு திருட்டு வழக்கில் கோட்டாய் போலீசார் இவரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அனுப்பி விட்டனர்.

    விசாரணைக்கு வருமாறு செல்போன் மூலம் போலீசார் அழைத்தனர். இதனால் மனம் உடைந்த சுதீஷ்குமார் வீட்டில் தூக்குப்போட்டார்.

    தூக்கில் உயிருக்கு போராடிய சுதீஷ்குமாரை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் மீட்டு காழ்ச்சைபரம்பு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

    இது குறித்து அவரது பெற்றோர் கூறும்போது, சந்தேகத்தின் பேரில் போலீசார் எனது மகனை அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது அவருக்கும் திருட்டுக்கும் தொடர்பு இல்லை என்று அனுப்பி விட்டனர்.

    அப்போதே சுதீஷ் குமார் மன உளைச்சலுக்கு ஆளானார். அவருக்கு சமாதானம் செய்தோம். இந்நிலையில் மீண்டும் போலீசார் விசாரணைக்கு அழைத்ததால் மன உளைச்சல் ஏற்பட்டு எங்கள் மகன் தற்கொலை செய்து கொண்டார். கோட்டாய் போலீசார் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கூறினர்.

    ஈஞ்சம்பாக்கம் அருகே வேலைப்பளுவால் போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவான்மியூர்:

    சென்னை நீலாங்கரையை அடுத்த ஈஞ்சம்பாக்கம், தட்கல் நகர் பொதிகை தெருவை சேர்ந்தவர் விஜய ரங்கன். இவரது மகன் பால முருகன் (வயது28). ஐ.டி. முடித்த இவர் போலீஸ் வேலைக்கு சேர்ந்தார்.

    அசோக்நகரில் உள்ள போலீஸ் பயிற்சி அகாடமியில் 2 வருடமாக பயிற்சி பெற்று வந்தார். அவருக்கு கம்ப்யூட்டர் டைப் செய்யும் பிரிவில் பணி வழங்கப்பட்டு இருந்தது.

    பாலமுருகனுக்கு விடுமுறை கொடுக்காமல் இரவு பகலாக பணி வழங்கப்பட்டது. அதிக வேலைப்பளு காரணமாக அவர் அவதிப்பட்டு வந்தார்.

    இதுதொடர்பாக அவர் தனதுதந்தையிடம் கூறி வருத்தப்பட்டார். அவரிடம் தந்தை ஐ.டி.படித்துவிட்டு ஏன் போலீஸ் வேலைக்கு போக வேண்டும்? வேறு ஏதாவது வேலைப்பார்க்கலாம் என்று கூறி சமாதானப்படுத்தினார். இதனால் கடந்த 2 நாட்களாக பாலமுருகன் வேலைக்கு செல்லவில்லை.

    நேற்று இரவு உடனே வேலைக்கு வருமாறு பாலமுருகனுக்கு அழைப்பு வந்தது. இதனால் மன உளைச்சல் அடைந்த அவர் மீண்டும் தனது தந்தையிடம் கூறி புலம்பினார். அவர் மகனை சமாதாப்படுத்தினார். ஆனால் பாலமுருகன் ஆறுதல் அடையவில்லை.

    இன்று அதிகாலை பாலமுருகன் தனது அறையில் தாயாரின் சேலையை மின்விசிறியில் கட்டி தூக்கில் தொங்கினார். இன்று காலையில் மகனை எழுப்புவதற்காக விஜயரங்கன் அறைக்கதவை திறந்தார். அப்போது மகன் மின்விசிறியில் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உடனடியாக தூக்கில் இருந்து மகனை இறக்கி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், பாலமுருகன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews

    ×