என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சங்கரன்கோவிலில் டாஸ்மாக் ஊழியர் தற்கொலை
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அருகே உள்ள பனவடலிசத்திரத்தை சேர்ந்தவர் ராஜபாண்டியன் (வயது 41). இவரது மனைவி மகேஸ்வரி (35). ராஜபாண்டியன் தஞ்சாவூரில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை செய்து வருகிறார். இவருக்கு பல நாட்களாக வயிற்று வலி இருந்து வந்துள்ளது. அதோடு அவர் குடிப்பழக்கத்திற்கும் அடிமையாகி விட்டதாக கூறப்படுகிறது.
வயிற்று வலிக்கு பல இடங்களில் மருத்துவம் பார்த்தும் தீரவில்லை என கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் மிகவும் விரக்தி அடைந்த நிலையில் காணப்பட்டார். இந்நிலையில் கடையில் விடுமுறை எடுத்து விட்டு சொந்த ஊருக்கு வந்துள்ளார். வந்தவர் நேற்று சங்கரன்கோவிலுக்கு வந்தார்.
பின்னர் பொட்டல் அருகில் உள்ள நகர்நல மையத்தின் அருகில் விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தார். அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சங்கரன்கோவில் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்