search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சங்கரன்கோவிலில் டாஸ்மாக் ஊழியர் தற்கொலை
    X

    சங்கரன்கோவிலில் டாஸ்மாக் ஊழியர் தற்கொலை

    சங்கரன்கோவில் அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த டாஸ்மாக் ஊழியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அருகே உள்ள பனவடலிசத்திரத்தை சேர்ந்தவர் ராஜபாண்டியன் (வயது 41). இவரது மனைவி மகேஸ்வரி (35). ராஜபாண்டியன் தஞ்சாவூரில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை செய்து வருகிறார். இவருக்கு பல நாட்களாக வயிற்று வலி இருந்து வந்துள்ளது. அதோடு அவர் குடிப்பழக்கத்திற்கும் அடிமையாகி விட்டதாக கூறப்படுகிறது.

    வயிற்று வலிக்கு பல இடங்களில் மருத்துவம் பார்த்தும் தீரவில்லை என கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் மிகவும் விரக்தி அடைந்த நிலையில் காணப்பட்டார். இந்நிலையில் கடையில் விடுமுறை எடுத்து விட்டு சொந்த ஊருக்கு வந்துள்ளார். வந்தவர் நேற்று சங்கரன்கோவிலுக்கு வந்தார்.

    பின்னர் பொட்டல் அருகில் உள்ள நகர்நல மையத்தின் அருகில் வி‌ஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தார். அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சங்கரன்கோவில் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×