search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஈஞ்சம்பாக்கம்"

    ஈஞ்சம்பாக்கத்தில் வீடுகளை அகற்றுவதை கண்டித்து 1000க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    சோழிங்கநல்லூர்:

    சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரில் 3 ஆயிரம் வீடுகளில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கடந்த 20 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.

    இப்பகுதி காஞ்சீபுரம் மாவட்டத்தில் இருந்து சமீபத் தில் சென்னை மாவட்டத்தில் இணைக்கப்பட்டது. அப்போது முதலே அரசு அதிகாரிகள் நீதிமன்ற நடவடிக்கையை காரணம் காட்டி வீடுகளை அகற்ற முற்பட்டனர்.

    இந்த மாதத்திற்குள்ளாக வீடுகளை காலி செய்ய வேண்டும் என நோட்டீஸ் வழங்கப்பட்டது. இது அங்குள்ளவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதனால் பொங்கல் பண்டிகையை புறக்கணித்து விட்டு வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி இந்த பொங்கலை கருப்பு பொங்கலாக அனுசரித்தனர்.

    அரசு தங்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு இப்பகுதியில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்கிட வலியுறுத்தி கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கத்தில் கருப்பு உடை அணிந்து சுமார் 1000க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    5 ஆண்டுகள் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்க அரசு ஆணை உள்ள நிலையில் தங்கள் வீடுகளை அகற்றக்கூடாது என்றும் அப்பகுதியினர் தெரிவித்தனர்.

    இந்த போராட்டத்தில் தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ், தி.மு.க. எம்.எல்.ஏ, அரவிந்த் ரமேஷ் மற்றும் அ.ம.மு.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ஈஞ்சம்பாக்கத்தில் அம்மா உணவகத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கையில் தட்டு ஏந்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். #AmmaUnavagam
    சோழிங்கநல்லூர்:

    நீலாங்கரையை அடுத்த ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது.

    இந்த இடம் வனத்துறைக்கு சொந்தமான சதுப்பு நிலத்தில் இருப்பதாகவும் இதனால் பறவைகள் பாதிக்கப்படுவதாகவும் அதே பகுதியை சேர்ந்த சேகர் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இதையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி ‘அம்மா’ உணவகத்தை இடித்து அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறையினர் இன்று காலை அங்கு வந்தனர்.

    இதுபற்றி அறிந்ததும் ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டனர். அவர்கள் அம்மா உணவகத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து கையில் தட்டு ஏந்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    சம்பவ இடத்துக்கு தி.மு.க. எம்.எல்.ஏ. அரவிந்த் ரமேஷ் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர், தே.மு.தி.க.வினர் ஏராளமானோர் திரண்டனர்.

    அவர்கள் உணவகத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர்.

    நீலாங்கரை இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். #AmmaUnavagam

    ஈஞ்சம்பாக்கத்தில் வீட்டு பூட்டை உடைத்து 94 பவுன் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவான்மியூர்:

    நீலாங்கரையை அடுத்த ஈஞ்சம்பாக்கம், சாய்பாபா கோவில் தெருவில் வசித்து வருபவர் பட்டுவர்தன். மகராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த இவர் அங்குள்ள மாநகராட்சியில் ஊழியராக இருந்து ஓய்வு பெற்றவர்.

    நேற்று மாலை அவர் வீட்டை பூட்டி விட்டு மகளுடன் வெளியில் சென்றார். இரவு திரும்பி வந்த போது வீட்டின் பின்பக்க சமையல் அறை கதவு உடைந்து கிடந்தது.

    உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 94 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் ரொக்கம் கொள்ளை போய் இருப்பது தெரிந்தது. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்ம கும்பல் நகை-பணத்தை சுருட்டி சென்று உள்ளனர்.

    இது குறித்து நீலாங்கரை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கொள்ளையில் ஈடுபட்டது அப்பகுதியை சேர்ந்த நபர்களாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பாலவாக்கம் பல்கலை நகரில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் 80 பவுன் நகை கொள்ளை போனது. இந்த வழக்கில் இதுவரை குற்றவாளிகள் சிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #tamilnews

    ஈஞ்சம்பாக்கம் அருகே வேலைப்பளுவால் போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவான்மியூர்:

    சென்னை நீலாங்கரையை அடுத்த ஈஞ்சம்பாக்கம், தட்கல் நகர் பொதிகை தெருவை சேர்ந்தவர் விஜய ரங்கன். இவரது மகன் பால முருகன் (வயது28). ஐ.டி. முடித்த இவர் போலீஸ் வேலைக்கு சேர்ந்தார்.

    அசோக்நகரில் உள்ள போலீஸ் பயிற்சி அகாடமியில் 2 வருடமாக பயிற்சி பெற்று வந்தார். அவருக்கு கம்ப்யூட்டர் டைப் செய்யும் பிரிவில் பணி வழங்கப்பட்டு இருந்தது.

    பாலமுருகனுக்கு விடுமுறை கொடுக்காமல் இரவு பகலாக பணி வழங்கப்பட்டது. அதிக வேலைப்பளு காரணமாக அவர் அவதிப்பட்டு வந்தார்.

    இதுதொடர்பாக அவர் தனதுதந்தையிடம் கூறி வருத்தப்பட்டார். அவரிடம் தந்தை ஐ.டி.படித்துவிட்டு ஏன் போலீஸ் வேலைக்கு போக வேண்டும்? வேறு ஏதாவது வேலைப்பார்க்கலாம் என்று கூறி சமாதானப்படுத்தினார். இதனால் கடந்த 2 நாட்களாக பாலமுருகன் வேலைக்கு செல்லவில்லை.

    நேற்று இரவு உடனே வேலைக்கு வருமாறு பாலமுருகனுக்கு அழைப்பு வந்தது. இதனால் மன உளைச்சல் அடைந்த அவர் மீண்டும் தனது தந்தையிடம் கூறி புலம்பினார். அவர் மகனை சமாதாப்படுத்தினார். ஆனால் பாலமுருகன் ஆறுதல் அடையவில்லை.

    இன்று அதிகாலை பாலமுருகன் தனது அறையில் தாயாரின் சேலையை மின்விசிறியில் கட்டி தூக்கில் தொங்கினார். இன்று காலையில் மகனை எழுப்புவதற்காக விஜயரங்கன் அறைக்கதவை திறந்தார். அப்போது மகன் மின்விசிறியில் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உடனடியாக தூக்கில் இருந்து மகனை இறக்கி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், பாலமுருகன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews

    ×