search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈஞ்சம்பாக்கத்தில் வீட்டு பூட்டை உடைத்து 94 பவுன் நகை கொள்ளை
    X

    ஈஞ்சம்பாக்கத்தில் வீட்டு பூட்டை உடைத்து 94 பவுன் நகை கொள்ளை

    ஈஞ்சம்பாக்கத்தில் வீட்டு பூட்டை உடைத்து 94 பவுன் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவான்மியூர்:

    நீலாங்கரையை அடுத்த ஈஞ்சம்பாக்கம், சாய்பாபா கோவில் தெருவில் வசித்து வருபவர் பட்டுவர்தன். மகராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த இவர் அங்குள்ள மாநகராட்சியில் ஊழியராக இருந்து ஓய்வு பெற்றவர்.

    நேற்று மாலை அவர் வீட்டை பூட்டி விட்டு மகளுடன் வெளியில் சென்றார். இரவு திரும்பி வந்த போது வீட்டின் பின்பக்க சமையல் அறை கதவு உடைந்து கிடந்தது.

    உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 94 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் ரொக்கம் கொள்ளை போய் இருப்பது தெரிந்தது. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்ம கும்பல் நகை-பணத்தை சுருட்டி சென்று உள்ளனர்.

    இது குறித்து நீலாங்கரை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கொள்ளையில் ஈடுபட்டது அப்பகுதியை சேர்ந்த நபர்களாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பாலவாக்கம் பல்கலை நகரில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் 80 பவுன் நகை கொள்ளை போனது. இந்த வழக்கில் இதுவரை குற்றவாளிகள் சிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #tamilnews

    Next Story
    ×