என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Seeman"
- இந்தியாவிற்கென தனிக்கட்சி தேவையில்லை. மாநிலக் கட்சிகளே போதும்.
- காமராஜர், முத்துராமலிங்கத்தேவர், கக்கன், வ.உ.சி ஆகியோர் வழியில் வந்த நாம் தூய அரசியலை உருவாக்க நாம் தமிழருக்கு ஆதரவளிக்க வேண்டும்.
ஆலங்குளம்:
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
இந்த தேர்தலில் வெற்றி என்பது ஒரு சாதாரண நிகழ்வல்ல. உங்கள் பிள்ளைகள் எங்களின் வெற்றி என்பது வரலாற்றிலே மாபெரும் புரட்சி என்பதை நினைவில் வைத்துக் கொண்டு நீங்கள் இந்த தேர்தலில் எங்களுக்கு வாக்கு செலுத்த வேண்டும்.
ஒன்றிய அரசு மாநிலத்தின் மொத்த வருமானத்தையும் தன்னகத்தே வைத்துக் கொண்டு, மாநிலங்கள் மீது அதிகாரத்தை செலுத்த முயலுகின்றது. அதிகாரம் பரவலாக வேண்டும் என்பது தான் நம்முடைய நோக்கம்.
மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தின் தன்னாட்சி என்பதுதான் நம்முடைய இலக்கு. இந்தியாவிற்கென தனிக்கட்சி தேவையில்லை. மாநிலக் கட்சிகளே போதும்.
அப்படியென்றால் இந்தியாவை யார் ஆள்வது என்ற கேள்வி எழுகிறது. வெற்றி பெறும் மாநிலக் கட்சிகள் சுழற்சி முறையில் இந்தியாவை ஆள வேண்டும். அதுதான் மிகச்சிறந்த ஜனநாயகமாக இருக்க முடியும்.
பேரிடர் காலங்களில் ஆடு, மாடு போன்றவற்றை இழந்து நிற்கும் நேரங்களில் நம்முடைய வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.விற்கு நமது வாக்கை செலுத்தக்கூடாது.
இது மற்றவர்களுக்கு தேர்தல் களம், நமக்கு போர்க்களம். இந்த போர்க்களத்தில் அண்ணன், தம்பி, சித்தப்பா, பெரியப்பா, மாமன் என வேறுபாடு பார்க்க கூடாது. உடலோடு ஒட்டிப்பிறந்த அண்ணன், தம்பியாக இருந்தால் கூட லட்சியத்திற்காக வென்றால் வெட்டி வீசுவதுதான் சரியான அணுகுமுறையாக இருக்கும். பெற்ற தாய் தந்தையரே வந்தால் கூட எதிரிகள் தான்.
காமராஜர், முத்துராமலிங்கத்தேவர், கக்கன், வ.உ.சி ஆகியோர் வழியில் வந்த நாம் தூய அரசியலை உருவாக்க நாம் தமிழருக்கு ஆதரவளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- என் பிள்ளைக்கு தமிழ் தெரியலங்கிறது, எனக்கு அவமானம் இல்லை.
- என் பிள்ளைகள் தமிழ் படிக்க இங்கே பள்ளிக்கூடங்கள் இல்லை
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாராளுமன்ற தேர்தலில், ஏற்கனவே தங்கள் கட்சி பயன்படுத்திய கரும்பு விவசாயி சின்னத்தை தரும்படி, தலைமை தேர்தல் ஆணையத்திடம் கேட்டார்.
ஆனால் அந்த சின்னம் கர்நாடகாவை சேர்ந்த ஒரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதையடுத்து அந்த சின்னத்தை கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் நாம் தமிழர் கட்சி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த நிலையில், நாம் தமிழர் கட்சிக்கு 'மைக்' சின்னம் ஒதுக்கப்பட்டது. அதை ஏற்க மறுத்து அதற்கு பதிலாக படகு, கப்பல் அல்லது தீப்பெட்டி சின்னங்களில் ஏதாவது ஒன்றை தங்கள் கட்சிக்கு வழங்கும்படி தேர்தல் ஆணையத்திடம், நாம் தமிழர் கட்சி கோரிக்கை விடுத்தது.
நாம் தமிழர் கட்சியின் கோரிக்கையை, தேர்தல் கமிஷன் நிராகரித்தது. நாம் தமிழர் கட்சிக்கு ஏற்கனவே ஒதுக்கியுள்ள 'மைக்' சின்னம் தான் என்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளது.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி மைக் சின்னத்தில் போட்டியிடும் என்று சீமான் இன்று அறிவித்தார்.
அப்போது விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் நா.த.க வேட்பாளர் கௌசிக், வேட்பு மனுதாக்கலின்போது தமிழ் படிக்கத் தெரியாமல் திணறியது குறித்து, அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர், "என் பிள்ளைக்கு தமிழ் தெரியலங்கிறது, எனக்கு அவமானம் இல்லை. வீழ்வது நாமாகினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் என்கிற வெற்று முழக்கத்தை முன்வைத்து எங்களை வீழ வைத்தவர்கள்தான் அவமானப்பட வேண்டும். நாங்கள் ஏன் அவமானப்பட வேண்டும்.
"என் மகன்கள் இருவரும் (வளர்ப்பு மகன் உட்பட) ஆங்கில வழியில்தான் படிக்கின்றனர். நான் அவமானப்படுகிறேன். என் பிள்ளைகள் தமிழ் படிக்க இங்கே பள்ளிக்கூடங்கள் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.
- மைக் சின்னத்திற்கு பதிலாக படகு, கப்பல் சின்னங்களில் ஏதாவது ஒன்றை ஒதுக்க நாம் தமிழர் கட்சி கோரிக்கை
- இறுதியாக நாம் தமிழர் கட்சிக்கு தேர்தல் ஆணையம் 'மைக்' சின்னம் ஒதுக்கியது
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாராளுமன்ற தேர்தலில், ஏற்கனவே தங்கள் கட்சி பயன்படுத்திய கரும்பு விவசாயி சின்னத்தை தரும்படி, தலைமை தேர்தல் ஆணையத்திடம் கேட்டார்.
ஆனால் அந்த சின்னம் கர்நாடகாவை சேர்ந்த ஒரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதையடுத்து அந்த சின்னத்தை கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் நாம் தமிழர் கட்சி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த நிலையில், நாம் தமிழர் கட்சிக்கு 'மைக்' சின்னம் ஒதுக்கப்பட்டது. அதை ஏற்க மறுத்து அதற்கு பதிலாக படகு, கப்பல் அல்லது தீப்பெட்டி சின்னங்களில் ஏதாவது ஒன்றை தங்கள் கட்சிக்கு வழங்கும்படி தேர்தல் ஆணையத்திடம், நாம் தமிழர் கட்சி கோரிக்கை விடுத்தது.
நாம் தமிழர் கட்சியின் கோரிக்கையை, தேர்தல் கமிஷன் நிராகரித்தது. நாம் தமிழர் கட்சிக்கு ஏற்கனவே ஒதுக்கியுள்ள 'மைக்' சின்னம் தான் என்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளது.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி மைக் சின்னத்தில் போட்டியிடும் என்று சீமான் இன்று அறிவித்தார். சென்னையில் சீமான் மைக் சின்னத்தை அறிமுகப்படுத்தி பேசத் தொடங்கினார். அப்போது சீமானின் பின்னால் நின்றிருந்த ஒருவரின் செல்போன் ரிங் டோன், 'ரத்த கொதிப்பு எங்க மாமனாருக்கு ரத்த கொதிப்பு' என்ற பாடலுடன் சப்தமாக ஒலித்தது. இதனால் சீமான் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மிகவும் கோபமடைந்தனர். உடனே அந்த நபரும் அங்கிருந்து வேகமாக வெளியேறினார்.
- பா.ஜனதா கட்சிக்கு தேசிய மலரான தாமரை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
- ஒவ்வொரு தேர்தலிலும் அரசியல் கட்சிகள் புதுப்புது சின்னங்களில் போட்டியிட வேண்டும்.
சென்னை:
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாராளுமன்ற தேர்தலில், ஏற்கனவே தங்கள் கட்சி பயன்படுத்திய கரும்பு விவசாயி சின்னத்தை தரும்படி, தலைமை தேர்தல் ஆணையத்திடம் கேட்டார்.
ஆனால் அந்த சின்னம் கர்நாடகாவை சேர்ந்த ஒரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதையடுத்து அந்த சின்னத்தை கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் நாம் தமிழர் கட்சி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த நிலையில், நாம் தமிழர் கட்சிக்கு 'மைக்' சின்னம் ஒதுக்கப்பட்டது. அதை ஏற்க மறுத்து அதற்கு பதிலாக படகு, கப்பல் அல்லது தீப்பெட்டி சின்னங்களில் ஏதாவது ஒன்றை தங்கள் கட்சிக்கு வழங்கும்படி தேர்தல் ஆணையத்திடம், நாம் தமிழர் கட்சி கோரிக்கை விடுத்தது.
நாம் தமிழர் கட்சியின் கோரிக்கையை, தேர்தல் கமிஷன் நிராகரித்தது. நாம் தமிழர் கட்சிக்கு ஏற்கனவே ஒதுக்கியுள்ள 'மைக்' சின்னம் தான் என்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளது.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி மைக் சின்னத்தில் போட்டியிடும் என்று சீமான் இன்று அறிவித்தார். சென்னையில் அவர் மைக் சின்னத்தை அறிமுகப்படுத்தினார். பின்னர் சீமான் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் மைக் சின்னத்தில் போட்டியிடுவார்கள். கூட்டணி வைத்திருந்தால் நான் கேட்ட சின்னம் கிடைத்து இருக்கும். கூட்டணி வைத்தவர்களுக்கு சைக்கிள், குக்கர் சின்னம் போல் எனக்கும் கிடைத்து இருக்கும். தேர்தல் ஆணையம், சி.பி.ஐ. உள்ளிட்ட அமைப்புகள் சுதந்திரமாக இயங்கவில்லை.
சின்னத்தில் விவசாயம் இல்லை என்றால் என்ன நான் எப்போதும் விவசாயி தான். இந்த நாட்டில் நல்ல அரசியலை உருவாக்க வேண்டும் என விரும்புகிறேன்.
நாம் தமிழர் கட்சி 40 தொகுதிகளிலும் விவசாயி சின்னத்திலேயே போட்டியிடுவதற்காக கடைசி நொடி வரையும் போராடினோம். அது கிடைக்காததால் தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ள மைக் சின்னத்தில் போட்டியிடுகிறோம். அம்பேத்கர், காமராஜர், அண்ணா மற்றும் உலக தலைவர்களான ஸ்டாலின், பெடல் காஸ்ட்ரோ என பல மேதைகளை இந்த "மைக்"கே உருவாக்கி இருக்கிறது.
எனவே மக்கள் மத்தியில் இந்த சின்னத்தை கொண்டு சேர்த்து அந்த மேதைகளை போல நாங்களும் தேர்தலில் புரட்சி செய்வோம்.
எந்த சூழலிலும் யாருட னும் கூட்டணி அமைக்க மாட்டோம் என்பதில் உறுதியாக இருக்கிறோம். பிரபாகரனின் மகனான நான் இதில் எந்த சமரசமும் செய்ய மாட்டேன். 7 சதவீத ஓட்டுகளை வாங்கியதற்கே எங்கள் மீது இவ்வளவு பயமா? வரும் காலங்களில் எப்படி வருகிறோம் பாருங்கள்.
பா.ஜனதா கட்சிக்கு தேசிய மலரான தாமரை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே தேர்தல் முடிந்த பிறகு எங்களுக்கு தேசிய விலங்கான புலி சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று கோர உள்ளோம்.
ஒவ்வொரு தேர்தலிலும் அரசியல் கட்சிகள் புதுப்புது சின்னங்களில் போட்டியிட வேண்டும். இல்லையென்றால் எண்களில் களம் இறங்க வேண்டும். அப்போதுதான் உண்மையான பலம் என்ன என்பது தெரிய வரும்.
பா.ஜனதா களம் இறங்கும் தொகுதிகளில் தி.மு.க. வலுவான போட்டியை உருவாக்கவில்லை என்பதே உண்மையாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையை சீமான் வெளியிட்டார். அதில் தேர்தலில் சீர்திருத்தம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இடம் பெற்றுள்ளன. தேர்தலில் சின்னம் இருக்க கூடாது, வாக்கு எந்திரங்களுக்கும், ஊழல் செய்பவர்களுக்கும் தடை விதிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
- படகு அல்லது பாய்மரப் படகு சின்னத்தை நாம் தமிழர் கட்சி சார்பில் கேட்கப்பட்டது.
- தேர்தல் ஆணையத்தில் மின்னஞ்சல், நேரில் மனு அளித்திருந்தனர்.
பாராளுமன்ற தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி தமிழகம் மற்றும புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தது.
தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது.
இதை அடுத்து உச்ச நீதிமன்றத்தில் சீமான் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு, மேல்முறையீட்டு மனுவுக்கு ஏப்ரல் 1-ந் தேதிக்குள் பதில் அளிக்க தேர்தல் ஆணையத்திற்கும், பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கும் உத்தரவிட்டு இருந்தது.
தொடர்ந்து, பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு "மைக்" சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்தது.
மைக் சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில் படகு அல்லது பாய்மரப் படகு சின்னத்தை நாம் தமிழர் கட்சி சார்பில் கேட்கப்பட்டது.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் தான் என சீமான் வைத்த கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.
மாற்று சின்னம் கோரி நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், தேர்தல் ஆணையத்தில் மின்னஞ்சல், நேரில் மனு அளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது.
- தமிழ் படிக்கத் தெரியாதவர்களை வேட்பாளராக்கி, தற்போது அதனை நாம் தமிழர் கட்சி சமாளிப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன
பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்பாளர்களை அறிவித்து இருந்தார்.
இந்நிலையில், திருவள்ளூர் மக்களவைத் தொகுதி நாதக வேட்பாளர் ஜெகதீஸ் சுந்தர் இன்று வேட்புமனுத் தாக்கலின்போது, தமிழில் எழுதி இருந்த உறுதிமொழிப் பத்திரத்தை படிக்கத் தெரியாமல் திக்கி நின்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பின்னர், தேர்தல் நடத்தும் அதிகாரி பிரபு சங்கர் வாசிக்க, ஜெகதீஸ் சுந்தர் அதனை திரும்ப சொல்லி உறுதிமொழி எடுத்துக் கொண்டார். முகப்பேரில் உள்ள பள்ளியில் ரோபோட்டிக் பயிற்சி ஆசிரியராக இவர் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
பதட்டமாக இருந்ததால் உறுதிமொழியை படிக்க சிரமப்பட்டேன் என்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெகதீஸ் சந்தர் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக, விருதுநகர் மக்களவைத் தொகுதியின் வேட்பாளர் கௌசிக் நேற்று வேட்புமனு தாக்கல் செய்வதற்காக தேர்தல் நடத்தும் அலுவலகம் சென்றார் அப்போது உறுதிமொழி வாசிக்க அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில் வேட்பாளர் கௌசிக்கிற்கு தமிழ் படிக்கத் தெரியாததால் உறுதிமொழி முழுவதையும் விருதுநகர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயசீலன் படிக்க, தொடர்ந்து படித்தார் நாம் தமிழர் வேட்பாளர் கௌசிக்.
இது குறித்து நாம் தமிழர் கட்சி கூறுகையில், வேட்பாளர் கௌசிக் ஓமன் நாட்டில் படித்ததால் தமிழ் படிக்கத் தெரியாது என விளக்கம் அளித்துள்ளார்..
ஆனால், தமிழ் படிக்கத் தெரியாதவர்களை வேட்பாளராக்கி, தற்போது அதனை நாம் தமிழர் கட்சி சமாளிப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
- விருதுநகர் மக்களவை தொகுதியில் கௌசிக் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
- நாம் தமிழர் கட்சி சமாளிப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்பாளர்களை அறிவித்து இருந்தார். அந்த வகையில் விருதுநகர் மக்களவை தொகுதியில் கௌசிக் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில் விருதுநகர் மக்களவைத் தொகுதியின் வேட்பாளர் கௌசிக் நேற்று வேட்புமனு தாக்கல் செய்வதற்காக தேர்தல் நடத்தும் அலுவலகம் சென்றார் அப்போது உறுதிமொழி வாசிக்க அறிவுத்தப்பட்டது.
இந்நிலையில் வேட்பாளர் கௌசிக்கிற்கு தமிழ் படிக்கத் தெரியாததால் உறுதிமொழி முழுவதையும் விருதுநகர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயசீலன் படிக்க, தொடர்ந்து படித்தார் நாம் தமிழர் வேட்பாளர் கௌசிக்.
இது குறித்து நாம் தமிழர் கட்சி கூறுகையில், வேட்பாளர் கௌசிக் ஓமன் நாட்டில் படித்ததால் தமிழ் படிக்கத் தெரியாது என விளக்கம் அறித்துள்ளனர்.
ஆனால், தமிழ் படிக்கத் தெரியாதவரை வேட்பாளராக்கி, தற்போது அதனை நாம் தமிழர் கட்சி சமாளிப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
- நாம் தமிழர் கட்சி 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தது.
- நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்தது.
பாராளுமன்ற தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி தமிழகம் மற்றும புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தது.
தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது.
இதை அடுத்து உச்ச நீதிமன்றத்தில் சீமான் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு, மேல்முறையீட்டு மனுவுக்கு ஏப்ரல் 1-ந் தேதிக்குள் பதில் அளிக்க தேர்தல் ஆணையத்திற்கும், பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கும் உத்தரவிட்டு இருந்தது.
தொடர்ந்து, பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்து அறிவித்தது.
இந்நிலையில், தங்களுக்கு வேறு சின்னம் ஒதுக்கி தரும்படி நாம் தமிழர் கட்சி தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளது.
மைக் சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில் படகு அல்லது பாய்மரப் படகு சின்னத்தை நாம் தமிழர் கட்சி சார்பில் கேட்கப்பட்டுள்ளது.
- நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது.
- ஒவ்வொரு தேர்தலிலும் சீமான் பொதுக்கூட்டங்களில் மட்டுமே பேசி பிரசாரம் செய்வது வழக்கம்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. தமிழகம், புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் 20 பெண் வேட்பாளர்கள், 20 ஆண் வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளனர்.
தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி, பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி என 3 அணிகளையும் எதிர்த்து சீமான் ஆண்களுக்கு பாதி, பெண்களுக்கு பாதி என சரிசமமாக பிரித்து வேட்பாளர்களை நிறுத்தி உள்ளார்.
இதற்கு முன்பு நடைபெற்ற தேர்தல்களில் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சிக்கு இந்த தேர்தலில் அந்த சின்னத்தை தேர்தல் கமிஷன் ஒதுக்கவில்லை. கர்நாடகாவை சேர்ந்த ஒரு கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதை எதிர்த்து நாம் தமிழர் கட்சி சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கு வருகிற 26-ந்தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
இதற்கிடையே நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது. இருப்பினும் வருகிற 26-ந்தேதி நடைபெற உள்ள வழக்கு விசாரணையின்போது கரும்பு விவசாயி சின்னத்தில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்று அக்கட்சியினர் நம்புகிறார்கள்.
எந்த சின்னத்தில் போட்டியிடுவது? என்று இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படாத நிலையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் சின்னத்தை கூறி ஓட்டு கேட்க முடியாத நிலையில் உள்ளனர்.
இருப்பினும் 26-ந்தேதி சின்னம் விவகாரத்தில் முடிவு எட்டப்பட வாய்ப்பு இருப்பதாக கட்சியினர் கூறியுள்ளனர். இதையடுத்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வருகிற 27-ந்தேதி கன்னியாகுமரியில் இருந்து தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். ஒவ்வொரு தேர்தலிலும் சீமான் பொதுக்கூட்டங்களில் மட்டுமே பேசி பிரசாரம் செய்வது வழக்கம். இந்த முறையும் அதே பாணியில் சீமான் பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளார்.
- 40 தொகுதிகளின் வேட்பாளர்களையும் சீமான் ஒரே மேடையில் அறிமுகம்.
- நாம் தமிழர் கட்சியின் 40 வேட்பாளர்களில் 20 பேர் பெண் வேட்பாளர்கள்.
மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட உள்ளது.
ஏற்கனவே அறிவித்தபடி, சென்னையில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுக பொதுக் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது.
நாம் தமிழர் கட்சியின் சார்பில் 40 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் ? என்ற பட்டியல் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், 40 தொகுதிகளின் வேட்பாளர்களையும் சீமான் ஒரே மேடையில் அறிமுகம் செய்துள்ளார்.
இதில், கிருஷ்ணிகிரியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக வீரப்பன் மகள் வித்யா ராணி போட்டியிடுவதால் அறிவிக்கப்பட்டுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் 40 வேட்பாளர்களில் 20 பேர் பெண் வேட்பாளர்கள்.
அப்போது அறிமுக கூட்டத்தில் சீமான் பேசியதாவது:-
தனித்து நிற்கிறோம், தனித்துவத்தோடு நிற்கிறோம். தனித்து நின்று உண்மையான உயரத்தை காட்ட வேண்டும் என்பதாலே தனித்து நிற்கிறோம்.
மாற்று மாற்று என்று பேசிவிட்டு பின்பு அதே கட்சியுடன் கூட்டணி வைப்பது ஏமாற்று.
சின்னத்தை பார்த்து வாக்களிப்பதை விட்டுவிட்டு எண்ணத்தை பார்த்து வாக்களியுங்கள்.
இங்கு கூடியிருப்பது சீமானுக்கான கூட்டம் அல்ல. சீமான் ஏற்றுக்கொண்ட தலைவனுக்கான கூட்டம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
- நாம் தமிழர் கட்சியில் இணைந்து தீவிரமாக பணியாற்ற தயாராக இருப்பதாக கூறினார்.
- அதிகாரப் பூர்வ அறிவிப்பை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவிக்க உள்ளார்.
சந்தன கடத்தல் வீரப்பனின் மகள் வித்யாராணி 4 ஆண்டுகளுக்கு முன்பு பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து அரசியலில் ஈடுபட்டார். பாரதிய ஜனதாவில் தனக்கு முக்கிய பொறுப்புகள் தருவார்கள் என்று எதிர்பார்த்தார்.
ஆனால் பாரதிய ஜனதாவில் அவருக்கு உரிய இடம் கிடைக்கவில்லை. இதனால் பா.ஜ.க. கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்து வந்தார்.
இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு மீண்டும் அவரது நடவடிக்கைகள் தீவிரமாகி உள்ளன. கடந்த மாதம் அவர் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானை சந்தித்து பேசினார். அப்போது நாம் தமிழர் கட்சியில் இணைந்து தீவிரமாக பணியாற்ற தயாராக இருப்பதாக கூறினார்.
அதை சீமானும் ஏற்றுக் கொண்டதால் வித்யாராணி நாம் தமிழர் கட்சியில் இணைந்து இருப்பதாக தெரிகிறது. அவரை மீண்டும் பாரதிய ஜனதாவில் செயல்பட வைக்க சிலர் முயற்சி செய்தனர். ஆனால் அதற்கு வெற்றி கிடைக்கவில்லை.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் வித்யாராணி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகி இருக்கிறது. அவர் கிருஷ்ணகிரி தொகுதியில் நாம் தமிழர் வேட்பாளராக களம் இறங்குகிறார். இன்று (சனிக்கிழமை) மாலை இதற்கான அதிகாரப் பூர்வ அறிவிப்பை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவிக்க உள்ளார்.
- நாம் தமிழர் கட்சிக்கு எந்த சின்னம் கொடுத்தாலும் பிரச்சனையில்லை, வெற்றி பெறுவோம்.
- எங்களுடைய சின்னத்தை வேறு ஒருவருக்கு கொடுத்து விட்டார்கள்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. இதை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் அந்த கட்சியின் தலைவர் சீமான் மேல்முறையீடு செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, 'கர்நாடகத்தை சேர்ந்த பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது தன்னிச்சையானதோ, அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணானதோ இல்லை' என்று கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்தது.
இந்த உத்தரவுக்கு எதிராக சீமான் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு கடந்த 15-ந் தேதி விசாரித்தது.
வாதங்களை பதிவு செய்துகொண்ட சுப்ரீம் கோர்ட்டு, கரும்பு விவசாயி சின்னம் கோரும் நாம் தமிழர் கட்சியின் மேல்முறையீட்டு மனுவுக்கு ஏப்ரல் 1-ந் தேதிக்குள் பதில் அளிக்க தேர்தல் ஆணையத்திற்கும், பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
இந்நிலையில் சென்னையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* நாம் தமிழர் கட்சிக்கு எந்த சின்னம் கொடுத்தாலும் பிரச்சனையில்லை, வெற்றி பெறுவோம்.
* எங்களுடைய சின்னத்தை வேறு ஒருவருக்கு கொடுத்து விட்டார்கள்.
* மாற்றாக விவசாயத்தை முன்வைத்து ஒரு சின்னம் கேட்டால் அதையும் வேறு ஒருவருக்கு கொடுத்து விடுகிறார்கள் என்று கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்