search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பாராளுமன்ற தேர்தலில் மைக் சின்னத்தில் போட்டி: சீமான்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    பாராளுமன்ற தேர்தலில் "மைக்" சின்னத்தில் போட்டி: சீமான்

    • பா.ஜனதா கட்சிக்கு தேசிய மலரான தாமரை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
    • ஒவ்வொரு தேர்தலிலும் அரசியல் கட்சிகள் புதுப்புது சின்னங்களில் போட்டியிட வேண்டும்.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாராளுமன்ற தேர்தலில், ஏற்கனவே தங்கள் கட்சி பயன்படுத்திய கரும்பு விவசாயி சின்னத்தை தரும்படி, தலைமை தேர்தல் ஆணையத்திடம் கேட்டார்.

    ஆனால் அந்த சின்னம் கர்நாடகாவை சேர்ந்த ஒரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதையடுத்து அந்த சின்னத்தை கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் நாம் தமிழர் கட்சி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

    இந்த நிலையில், நாம் தமிழர் கட்சிக்கு 'மைக்' சின்னம் ஒதுக்கப்பட்டது. அதை ஏற்க மறுத்து அதற்கு பதிலாக படகு, கப்பல் அல்லது தீப்பெட்டி சின்னங்களில் ஏதாவது ஒன்றை தங்கள் கட்சிக்கு வழங்கும்படி தேர்தல் ஆணையத்திடம், நாம் தமிழர் கட்சி கோரிக்கை விடுத்தது.

    நாம் தமிழர் கட்சியின் கோரிக்கையை, தேர்தல் கமிஷன் நிராகரித்தது. நாம் தமிழர் கட்சிக்கு ஏற்கனவே ஒதுக்கியுள்ள 'மைக்' சின்னம் தான் என்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளது.

    இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி மைக் சின்னத்தில் போட்டியிடும் என்று சீமான் இன்று அறிவித்தார். சென்னையில் அவர் மைக் சின்னத்தை அறிமுகப்படுத்தினார். பின்னர் சீமான் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் மைக் சின்னத்தில் போட்டியிடுவார்கள். கூட்டணி வைத்திருந்தால் நான் கேட்ட சின்னம் கிடைத்து இருக்கும். கூட்டணி வைத்தவர்களுக்கு சைக்கிள், குக்கர் சின்னம் போல் எனக்கும் கிடைத்து இருக்கும். தேர்தல் ஆணையம், சி.பி.ஐ. உள்ளிட்ட அமைப்புகள் சுதந்திரமாக இயங்கவில்லை.

    சின்னத்தில் விவசாயம் இல்லை என்றால் என்ன நான் எப்போதும் விவசாயி தான். இந்த நாட்டில் நல்ல அரசியலை உருவாக்க வேண்டும் என விரும்புகிறேன்.

    நாம் தமிழர் கட்சி 40 தொகுதிகளிலும் விவசாயி சின்னத்திலேயே போட்டியிடுவதற்காக கடைசி நொடி வரையும் போராடினோம். அது கிடைக்காததால் தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ள மைக் சின்னத்தில் போட்டியிடுகிறோம். அம்பேத்கர், காமராஜர், அண்ணா மற்றும் உலக தலைவர்களான ஸ்டாலின், பெடல் காஸ்ட்ரோ என பல மேதைகளை இந்த "மைக்"கே உருவாக்கி இருக்கிறது.

    எனவே மக்கள் மத்தியில் இந்த சின்னத்தை கொண்டு சேர்த்து அந்த மேதைகளை போல நாங்களும் தேர்தலில் புரட்சி செய்வோம்.

    எந்த சூழலிலும் யாருட னும் கூட்டணி அமைக்க மாட்டோம் என்பதில் உறுதியாக இருக்கிறோம். பிரபாகரனின் மகனான நான் இதில் எந்த சமரசமும் செய்ய மாட்டேன். 7 சதவீத ஓட்டுகளை வாங்கியதற்கே எங்கள் மீது இவ்வளவு பயமா? வரும் காலங்களில் எப்படி வருகிறோம் பாருங்கள்.

    பா.ஜனதா கட்சிக்கு தேசிய மலரான தாமரை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே தேர்தல் முடிந்த பிறகு எங்களுக்கு தேசிய விலங்கான புலி சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று கோர உள்ளோம்.

    ஒவ்வொரு தேர்தலிலும் அரசியல் கட்சிகள் புதுப்புது சின்னங்களில் போட்டியிட வேண்டும். இல்லையென்றால் எண்களில் களம் இறங்க வேண்டும். அப்போதுதான் உண்மையான பலம் என்ன என்பது தெரிய வரும்.

    பா.ஜனதா களம் இறங்கும் தொகுதிகளில் தி.மு.க. வலுவான போட்டியை உருவாக்கவில்லை என்பதே உண்மையாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையை சீமான் வெளியிட்டார். அதில் தேர்தலில் சீர்திருத்தம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இடம் பெற்றுள்ளன. தேர்தலில் சின்னம் இருக்க கூடாது, வாக்கு எந்திரங்களுக்கும், ஊழல் செய்பவர்களுக்கும் தடை விதிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

    Next Story
    ×