search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "search"

    • ரேஷன் அரிசி மூட்டைகளை வருவாய் துறையினர் பறிமுதல் செய்தனர்.
    • தப்பியோடிய சத்தியசீலனை போலீசார் போலீசார் தேடி வருகின்றனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கஞ்சாநகரம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சத்தியசீலன்.

    இவர் அதே பகுதியில் உள்ள ஒரு இடத்தில் ரேசன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக கஞ்சாநகரம் கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் தரங்கம்பாடி வட்ட வழங்கல் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார்.

    இதைத் தொடர்ந்து தரங்கம்பாடி வட்ட வழங்கல் அலுவலர் விஜயகுமார் தலைமையிலான வருவாய்த் துறையினர் விரைந்து வந்து சோதனை நடத்தியதில் அங்கு 310 மூட்டைகளில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

    இதனை அடுத்து ரேஷன் அரிசி மூட்டைகளை வருவாய் துறையினர் பறிமுதல் செய்தனர்.

    மேலும் இதுகுறித்து குடிமை பொருள் வழங்கல் குற்றப் பிரிவு புலனாய்வு துறைக்கு புகார் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் சத்தியசீலன் தப்பியோடி விட்டார் அவரை போலீசார் போலீசார் தேடி வருகின்றனர்.

    கைப்பற்றப்பட்ட அரிசி மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூரில் உள்ள நுகர்வோர் வாணிபக் கழக கிடங்குக்கு கொண்டு செல்லப்படும் என வட்ட வழங்கல் அலுவலர் விஜயகுமார் தெரிவித்தார்.

    • மசாஜ் சென்டரில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பதாக தெரியவந்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விபசாரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணத்தில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட 2 பெண் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

    கும்பகோணத்தில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழிலில் ஈடுபடுவதாக திருவிடைமருதூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதைத் தொடர்ந்து நேற்று இரவு திருவிடைமருதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாபர் சித்திக் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ராஜேஷ், நாகலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்திவாசன் மற்றும் போலீசார் திருவிடைமருதூர் மெயின் ரோடு ஐந்து தலைப்பு வாய்க்கால் அருகில் உள்ள மசாஜ் சென்டர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது மசாஜ் சென்டரில் இருந்த தரகர் தாமஸ் என்பவரை பிடித்து விசாரணை மேற் ெகாண்டனர்.

    விசாரணையில் அவர் பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுப்பட்டதை ஒப்பு கொண்டார்.

    மேலும் அவர் கும்பகோணம் மீன் மார்க்கெட் அருகில் மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடப்பதாக தெரிவித்தார். இதை தொடர்ந்து போலீசார் அங்கு ரோந்து பணியில் ஈடுப்பட்டு விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் கும்பகோணம் மீன் மார்க்கெட் அருகில் உள்ள மசாஜ் சென்டரில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பதாக தெரிய வந்தது.

    இது தொடர்பாக கும்பகோணம் மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விபசாரத்தில் ஈடுபட்ட மசாஜ் சென்டரின் தரகர் மணிகண்டன் மற்றும் 2 பெண் உட்பட 3 பேரை கைது செய்தனர். மேலும் இவ்வழக்கில் மூன்று பேரை தேடி வருகின்றனர் .

    3 பேரும் திடீரென்று முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆரங்கியை சரமாரியாக உருட்டு கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    கடலூர்:

    கடலூர் அருகே உள்ள எம்.புதூரை சேர்ந்தவர் ஆரங்கி. (வயது 55) முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். இவர் தனது மகள் சந்தியாவுடன் அரிசி பெரியாங்குப்பம் பகுதியில் உள்ள வாழை தோப்பில் இருந்தார். அப்போது அடையாளம் தெரியாத 3 பேர் கொண்ட கும்பல் குடிபோதையில் நின்று கொண்டிருந்தனர். அப்போது ஆரங்கி, அங்கிருந்த கும்பலிடம் யார் என விசாரித்துக் கொண்டிருந்தார்.

    அப்போது 3 பேரும் திடீரென்று முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆரங்கியை சரமாரியாக உருட்டு கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.இதில் காயமடைந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆரங்கி கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அடையாளம் தெரியாத 3பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர். கடலூர் அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரை மர்மகும்பல் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • குடோனில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பதாக தகவல் கிடைத்தது.
    • 3 டன்களுக்கு மேல் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    சுவாமிமலை:

    திருவிடைமருதூர் அருகே அம்மாசத்திரத்தில் குடோனில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து கடைகளில் விற்பனை செய்து வருவதாக கிடைத்த தகவலின்படி போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

    சோதனையில் குடோனில் இருந்த 3 டன்களுக்கு மேல் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பாக திருவிடைமருதூர் இன்ஸ்பெக்டர் அம்மாசத்திரம் சந்தன கணபதி ெதருவை சேர்ந்த செல்வகுமார் (வயது 43) மற்றும் நேரு நகர், மல்லிகை வீதியை சேர்ந்த வெங்கடேசு (43) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • வாஞ்சூர் மற்றும் நாகூர் பகுதிகளில் உள்ள 7 கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.
    • ஒரு கடையில் புகையிலை பொருட்கள் வைத்திருந்ததற்காக ரூ.5000 அபராதம் விதித்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் நாகூர் பகுதிகளில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் சிவராமன் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் வாஞ்சூர் மற்றும் நாகூர் பகுதிகளில் உள்ள 7 கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.

    இந்த சோதனையில் இரண்டு கடைகளில் குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தனர்.

    அதனை கைப்பற்றி அந்த இரண்டு கடைகளுக்கும் சீல் வைத்தனர். மேலும் ஒரு கடையில் புகையிலை பொருட்கள் வைத்திருந்ததற்காக ரூ.5000 அபராதம் விதித்தனர்.

    இது போன்ற தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் எச்சரிக்கை விடுத்தார்.

    • எங்கள் வீட்டில் சோதனை நடத்தியது அத்துமீறிய செயல் என 7 பேர் குடும்பத்தினர் பேட்டியளித்துள்ளனர்.
    • செல்போன்கள், லேப்-டாப்கள், சிடி, புத்தகங்கள், ரூ.3 லட்ச ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்து சென்றதாக கூறினர்.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று அதிகாலை 7 வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினார்கள். இது இஸ்லாமியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த நிலையில் சோதனை நடத்தப்பட்ட 7 பேர் குடும்பத்தினர் இன்று காலை கோரிப்பாளையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர்.

    அப்போது அவர்கள் கூறியதாவது:-

    எங்களின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அத்துமீறி நுழைந்து சோதனை நடத்தினர். அதன் பிறகு 7 பேரையும் தரதரவென இழுத்துச் சென்றனர். அவர்கள் தற்போது எங்கு உள்ளனர்? என்ற விவரம் கூட எங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை.

    எங்கள் வீட்டில் இருந்து செல்போன்கள், லேப்-டாப்கள், சிடி, புத்தகங்கள், ரூ.3 லட்ச ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்து சென்றனர்.

    தேசிய புலனாய்வு முகமையின் அத்துமீறல் நடவடிக்கையை கண்டித்து மதுரை நெல்பேட்டை அண்ணா சிலை பகுதியில், இன்று மாலை 5 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

    • மாணவரின் தந்தை ஒருவர் தலைமையாசிரியரிடம் கேட்பது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியது.
    • குட்கா, ஹான்ஸ் போன்ற பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க காவல்துறை அதிரடி சோதனை நடத்தி வருகின்றது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் அரசு பள்ளி ஒன்றில் மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு ஆளாகி இருப்பது குறித்து அப்பள்ளியில் பயிலும் மாணவரின் தந்தை ஒருவர் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் கேட்பது போன்றும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியது.

    இதனையடுத்து மயிலாடுதுறை மாவட்டத்தில் கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் போன்ற போதை புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க காவல்துறை அதிரடி சோதனை நடத்தி வருகின்றது.

    அதன்படி சீர்காழி காவல்துறை மற்றும் வருவாய் துறை சார்பில் சீர்காழி, வைத்தீஸ்வரன் கோயில், கொள்ளிடம் உள்ளிட்ட பகுதிகளில் கடைகளில் தடை செய்யப்பட்ட போதை, புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு செய்தனர்.

    சீர்காழி தாசில்தார் செந்தில்குமார், டி. எஸ். பி. பழனிசாமி, சீர்காழி இன்ஸ்பெக்டர் மணிமாறன் கொண்ட குழுவினர்.

    இவ்வாறு 50 கடைகளில் திடீர் ஆய்வு மேற்கண்டனர். அப்போது சீர்காழி கொள்ளிடம் முக்கூட்டு, புத்தூர் செங்கமேடு உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்தபோது அங்கு தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

    இதனை அடுத்து புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் அந்த நான்கு கடைகளுக்கும் பூட்டி சீல் வைத்தனர்.

    • அணைக்கட்டு பாதி விழுப்புரம் மாவட்ட பகுதியிலும், பாதி கடலூர் மாவட்ட பகுதியிலும் உள்ளது.
    • நெல்லிக்குப்பம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே தென்பெண்ணணை ஆற்றின் குறுக்கே சொர்ணாவூர் அணைக்கட்டு உள்ளது. இந்த அணைக்கட்டு பாதி விழுப்புரம் மாவட்ட பகுதியிலும், பாதி கடலூர் மாவட்ட பகுதியிலும் உள்ளது. இந்த அைணக்கட்டில நேற்று மாலை நண்பர்கள் 5 பேர் குளித்தனர். அப்போது அவர்களில் ஒருவர் தண்ணீரில் மூழ்கினார். உடனே 4 பேரும் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை.

    இதுகுறித்து நெல்லிக்குப்பம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய அலுவலர் சிவா தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று ேதடுதல் பணியில் ஈடுபட்டனர். விசாரணையில் அணைக்கட்டு மூழ்கியவர் புதுவை மாநிலம் அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த உதயகுமரன் (வயது 35) என தெரியவந்தது. அவர் கதி என்ன என்று தெரியவில்லை. அவரை தேடும் பணி நடந்து வருகிறது. 

    • அங்கப்பன் மகன் லோகேஷ் (17) ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.
    • திருவெண்ணைநல்லூர் தாசில்தார் பாஸ்கரதாஸ், இன்ஸ்பெக்டர் செல்வ குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் முபாரக்அலிபேக் ஆகியோர் உடன் இருந்தனர்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள ஏனாதி மங்கலம் தென்பெண்ணை யாறு எல்லீஸ் அணைக்கட்டு பகுதியில் நேற்று மாலை விழுப்புரம் காமராஜர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்துவரும் சக மாணவர்கள் ஆற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்தனர். அப்போது விழுப்புரம் தோகைபாடி கிராமத்தைச் சேர்ந்த அங்கப்பன் மகன் லோகேஷ் (17) ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.

    இது பற்றி தகவல் அறிந்த திருவெண்ணைநல்லூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய அலு வலர் சுந்தரராஜன், விழுப்புரம் தீயணைப்பு நிலைய அதிகா ரிகள் வேல்முருகன், பாஸ்கரன் போட் மூல மாகவும் வீரர்கள் மாண வனின் உடலை 2-வது நாளாக தொடர்ச்சியாக தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவ இடத்திற்கு திருவெண்ணைநல்லூர் தாசில்தார் பாஸ்கரதாஸ், இன்ஸ்பெக்டர் செல்வ குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் முபாரக்அலிபேக் மற்றும் அதிகாரிகள் மாணவனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • கடந்த 5 நாட்களுக்கு முன்பு பாளை பெருமாள்புரத்தில் வாடகைக்கு வீடு எடுத்து கொடுத்தது தெரியவந்தது.
    • நிவாரணமாக ரூ.6 லட்சத்தை அவரது பெற்றோரிடம் ஆர்.டி.ஓ. சந்திரசேகர் வழங்கினார்.

    நெல்லை:

    நெல்லை தச்சநல்லூர் பால்கட்டளை பகுதியை சேர்ந்தவர் பேச்சி ராஜா(வயது 26). கட்டிட தொழிலாளி.

    இவர் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்றபோது 3 பேர் கும்பல் அவரை சரமாரி வெட்டிக்கொலை செய்தது. இதுதொடர்பாக தச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அதில், கடந்த 2020-ம் ஆண்டு கரையிருப்பை சேர்ந்த மாசானமூர்த்தி என்பவர் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்குப்பழியாக அவரது நண்பர்கள் திட்டம் தீட்டி பேச்சிராஜாவை கொலை செய்தது தெரியவந்தது.

    இதுதொடர்பாக மானூர் அருகே வேப்பங்குளத்தை சேர்ந்த ராஜவேலு(வயது 30), சுதர்சிங்(30), தச்சநல்லூர் கரையிருப்பை சேர்ந்த ஹரி நாராயணன்(20) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில் மாசான மூர்த்தியின் தந்தை சுடலைமுத்து(65) கொலையாளிகள் 3 பேருக்கும் கடந்த 5 நாட்களுக்கு முன்பு பாளை பெருமாள்புரத்தில் வாடகைக்கு வீடு எடுத்து கொடுத்தது தெரியவந்தது.

    அவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் கொலையாளிகள் 3 பேருக்கும் மோட்டார் சைக்கிள் கொடுத்து உதவிய பாளை மனக்காவலம்பிள்ளை நகரை சேர்ந்த மாரிமுத்து என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    இதற்கிடையே பேச்சி ராஜாவின் உடல் நேற்று அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து நிவாரணமாக ரூ.6 லட்சத்தை அவரது பெற்றோரிடம் ஆர்.டி.ஓ. சந்திரசேகர் வழங்கினார்.

    • உணவகங்கள், காய்கறி, பழக்கடைகள் மற்றும் டீக்கடைகளில் வைக்கப்பட்டிருந்த நெகிழி பொருட்களை பறிமுதல் செய்தனர்.
    • கடைகளில் விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டுள்ள குட்கா போன்ற பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் உள்ள உணவகங்களில் நெகிழிப் பொருட்கள் அதிக அளவு பயன்படுத்தப்படுவதாக வந்த புகாரை அடுத்து திருவெண்காடு வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்மோகன் மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர்கள் கார்த்தி, ஜவகர், சற்குணம் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் அசோகன் பேரூராட்சி பணியாளர்கள் கடைகளில் திடீர் ஆய்வு செய்தனர்.

    அப்போது உணவகங்கள் காய்கறி மற்றும் பழக்கடைகள் டீக்கடைகளில் வைக்கப்பட்டிருந்த நெகிழி பொருட்களை பறிமுதல் செய்தனர். அதேபோல் கடைகளில் விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டுள்ள குட்கா போன்ற பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

    • கடலூரில் கோடை விழாவில் 2 சிறுமிகள் திடீர் மாயமானார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
    • கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் நடைபெறும் கோடை விழாவை முன்னிட்டு பொருட்கள் விற்பனை செய்வதற்கு கடலூர் அரசு பெரியார் கலைக் கல்லூரி அருகில் தங்கி இருந்தனர்.

    கடலூர்:

    கடலூர் அருகே திருவந்திபுரம் சாலக்கரை சேர்ந்தவர் பரமசிவம். இவரது மகள் சவுந்தர்யா (வயது 9). அதே பகுதியை சேர்ந்த தாமோதரன் இவரது மகள் தாமரைச்செல்வி (9). இவர்கள் 2 பேரும் தனது உறவினரான ரேணுகா என்பவருடன் கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் நடைபெறும் கோடை விழாவை முன்னிட்டு பொருட்கள் விற்பனை செய்வதற்கு கடலூர் அரசு பெரியார் கலைக் கல்லூரி அருகில் தங்கி இருந்தனர்.

    சம்பவத்தன்று இரவு ரேணுகா என்பவர் தூங்கி எழுந்து பார்த்தபோது மேற்கண்ட சவுந்தர்யா மற்றும் தாமரைச்செல்வி ஆகிய 2 பேரும் காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ரேணுகா எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து தேவனாம் பட்டினம் போலீஸ் நிலை யத்தில் கொடுத்த புகாரின் பேரில் 2 சிறுமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

    ×