கடைகளில் குட்கா- நெகிழி பொருட்கள் பறிமுதல்

உணவகங்கள், காய்கறி, பழக்கடைகள் மற்றும் டீக்கடைகளில் வைக்கப்பட்டிருந்த நெகிழி பொருட்களை பறிமுதல் செய்தனர். கடைகளில் விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டுள்ள குட்கா போன்ற பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
கடைகளில் சோதனை செய்த அதிகாரிகள்.
கடைகளில் சோதனை செய்த அதிகாரிகள்.
Published on

சீர்காழி:

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் உள்ள உணவகங்களில் நெகிழிப் பொருட்கள் அதிக அளவு பயன்படுத்தப்படுவதாக வந்த புகாரை அடுத்து திருவெண்காடு வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்மோகன் மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர்கள் கார்த்தி, ஜவகர், சற்குணம் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் அசோகன் பேரூராட்சி பணியாளர்கள் கடைகளில் திடீர் ஆய்வு செய்தனர்.

அப்போது உணவகங்கள் காய்கறி மற்றும் பழக்கடைகள் டீக்கடைகளில் வைக்கப்பட்டிருந்த நெகிழி பொருட்களை பறிமுதல் செய்தனர். அதேபோல் கடைகளில் விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டுள்ள குட்கா போன்ற பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com