search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடோனில் பதுக்கிய புகையிலை பொருட்கள் பறிமுதல்
    X

    குடோனில் பதுக்கிய புகையிலை பொருட்கள் பறிமுதல்

    • குடோனில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பதாக தகவல் கிடைத்தது.
    • 3 டன்களுக்கு மேல் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    சுவாமிமலை:

    திருவிடைமருதூர் அருகே அம்மாசத்திரத்தில் குடோனில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து கடைகளில் விற்பனை செய்து வருவதாக கிடைத்த தகவலின்படி போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

    சோதனையில் குடோனில் இருந்த 3 டன்களுக்கு மேல் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பாக திருவிடைமருதூர் இன்ஸ்பெக்டர் அம்மாசத்திரம் சந்தன கணபதி ெதருவை சேர்ந்த செல்வகுமார் (வயது 43) மற்றும் நேரு நகர், மல்லிகை வீதியை சேர்ந்த வெங்கடேசு (43) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×