search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Schools"

    • சமணர்கள் படுக்கும் குகைகள் பள்ளிகள் எனப்பட்டன.
    • சமணமுனிவர்கள் பெரும்பாலும் பள்ளி(குகை)களில் தங்கியே தங்கள் துறவுப்பணிகளை மேற்கொண்டனர்.

    பள்ளுதல் = என்றால் தோண்டுதல்.

    பள்ளப்பட்ட இடமே - பள்ளம்.

    ஒரு இடத்தைப் பள்ளும் போது (தோண்டும் போது) ஆழமாக, பெரிதாகத் தோண்டினால் பள்ளம். குறைவான ஆழத்தில் சிறிதாகத் தோண்டியது பள்ளி(ல்).

    'பள்ளு' இலக்கியம் கேள்விப்பட்டிருப்பீரகள்! வயலைப் பள்ளமிட்டுப் ( ஆழ உழுது) பயிர்த் தொழில் புரிந்த உன்னத மாந்தர்கள் ( பள்ளர்) உருவாக்கியது அந்த இலக்கியம்! அவர்கள் கற்பனைத் திறனும் இசையறிவும் மிக்கவர்கள் கூட! இவர்கள் இசைத்துக் கொண்டே இலக்கியமும் படைத்து, பசியாற உணவும் உண்டாக்கியதால், இந்த இலக்கியம் அவர்கள் பெயராலேயே, 'பள்ளு' எனப்பட்டது.

    படு / படுப்பது என்ற வினைச்சொல்லும் பள் - என்ற மூலத்திலிருந்து உருவானதே. பள்ளப்பட்ட இடத்தில் இரவினில் உடலைச்சாய்த்து ஓய்வெடுப்பதே - படுத்தல் என்ற வினையானது.

    படுத்தல் = கீழாதல், விழுதல், கிடத்தல், தூங்குதல்.

    படுக்கை = கீழ் மட்டத்தில் உள்ள இடம்;

    தாழ்வான இடம்.

    பள்ளிகொள்ளுதல் என்றால் படுத்தல் என்று பொருள்.

    பள்ளியெழுச்சி = படுக்கை விட்டு எழுந்திருத்தல்.

    சமணர்கள் படுக்கும் குகைகள் பள்ளிகள் எனப்பட்டன. சமணமுனிவர்கள் பெரும்பாலும் பள்ளி(குகை)களில் தங்கியே தங்கள் துறவுப்பணிகளை மேற்கொண்டனர்.

    (உதா: குராப்பள்ளி, சிராப்பள்ளி).

    பல நீதி நூல்களை சமணர்கள் இப்பள்ளிகளிலிருந்தே படைத்தனர். இந்தச் சமயப் பள்ளிகளில் பின்னர் கல்வியும் கற்றுக் கொடுக்கப்பட்டதால் - கல்விச் சாலைகள் பள்ளி, பள்ளிக்கூடம் என்ற பெயரில் அழைக்கப்பட்டன.

    -யாகோப்பு அடைக்கலம்

    • பள்ளிகள் இடையிலான கலைப்போட்டிகள் வருகிற 30-ந் தேதி நடக்கிறது.
    • மதுரை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மதுரை

    தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மதுரை மாவட்ட பள்ளிகள் இடையே நடத்தப்படும் கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள் வருகிற 30-ந்தேதி உலக தமிழ்ச் சங்க கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டிகளில் அனைத்து அரசு, தனியார், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11, 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் பங்கேற்கலாம்.

    போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களை தாங்கள் படிக்கும் பள்ளி யின் தலைமை ஆசிரியர் ஒப்புதலுடன் மதுரை மாவட்டம் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்திற்கு நேரிலோ அஞ்சல் மூலமாகவோ மின்னஞ்சல் மூலமாகவோ வருகிற 27-ந்தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

    போட்டிகள் நடைபெறும் அன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.7ஆயிரம், 3-வது பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.

    மாவட்ட அளவில் முதல் பரிசு பெறும் மாணவர்கள் மட்டும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள பரிந்துரை செய்யப்படுவர்.

    போட்டி களுக்கான ஏற்பாடுகளை மதுரை மாவட்ட தமிழ் வளர்ச்சி துணை இயக்குநர் சுசீலா செய்து வருகிறார்.

    இந்த தகவல் மதுரை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அரசு பள்ளியில் இலக்கிய மன்றங்கள் தொடங்கப்பட்டது.
    • பள்ளி தலைமை ஆசிரியர் ராணி தலைமை தாங்கினார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே எளம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்றங்களின் தொடக்க விழா நேற்று நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் ராணி தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் கலைச்செல்வி இலக்கிய மன்றங்களை தொடங்கி வைத்து மன்ற செயல்பாடுகளின் மூலமாக மாணவர்களின் பன்முகத் திறன்கள், நுண்ணறிவு, ஆளுமைப்பண்புகள் மற்றும் களைத்திறன்கள் வளர்வதை குறிப்பிட்டு சிறப்புரையாற்றினார். பள்ளியின் உயர்நிலை உதவி ஆசிரியர் பைரவி, ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முன்னதாக ஆசிரியர் மதியழகன் வரவேற்றார். முடிவில் ஆசிரியர் கமலாசாந்தி நன்றி கூறினார்.

    • தமிழ் சங்கம் வலியுறுத்தல்
    • புதுவையில் 12-ம் வகுப்பு வர தமிழை கட்டாய பாடமாக அரசு அறிவிக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை தமிழ் சங்கம் சார்பில் தமிழ்வழி கல்வி கருத்தரங்கம் தமிழ் சங்கத்தில் நடந்தது.

    சங்க தலைவர் முத்து தலைமை வகித்தார். செயலாளர் சீனு மோகன்தாசு வரவேற்றார். துணை தலைவர்கள் ஆதிகேசவன், திருநாவுக்கரசு, தினகரன் முன்னிலை வகித்தனர். உலக தமிழ் பேரமைப்பு பொதுச்செயலாளர் தமிழ்மணி, புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவன ஓய்வுபெற்ற இயக்குனர் சம்பத் கருத்துரை வழங்கினார்.

    சங்க பொருளாளர் அருள்செல்வம் நன்றி கூறினார். கருத்தரங்கில், புதுவையில் 12-ம் வகுப்பு வர தமிழை கட்டாய பாடமாக அரசு அறிவிக்க வேண்டும்.

    தமிழை பயிற்று மொழியாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • பெற்றோர் தங்களது குழந்தைகளை கவனமாக வளர்க்க வேண்டும்.
    • பெற்றோர்கள் பெண்குழந்தையை வளர்ப்பதில் சிறந்த நண்பராக இருக்க வேண்டும்.

    வல்லம்:

    தஞ்சாவூர் மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழு சார்பில் ஆலக்குடி கிராமத்தில் சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும் மாவட்ட முதன்மை நீதிபதியுமான ஜெசிந்தா மார்ட்டின் தலைமையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    அப்போது அவர் மரக்கன்றுகள் நட்டு வைத்து பேசியதாவது:-

    பெற்றோர்கள் குழந்தைகளை வளர்ப்பதில் கவனமாக இருக்க வேண்டும். பள்ளிகளுக்கு செல்லும் பெண்குழந்தைகளிடம் வெளியில் நடக்கும் விஷயங்களை தாமாக முன்வந்து ஒரு நல்ல நண்பரை போல் அணுகி விசாரிக்க வேண்டும்.

    தற்போதுள்ள சமூக சூழலில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் மீதான பாலியல் கொடுமைகள் அதிகரித்து வருகிறது.

    பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோர் போக்சோ சட்டத்தின் கீழ் கடுமையாக தண்டிக்கபடுவார்கள். பெற்றோர்கள் பெண்குழந்தையை வளர்ப்பதில் சிறந்த நண்பராக இருக்க வேண்டும் .

    பொதுமக்களுக்கு உண்டான பிரச்சனைகள் சட்டம் மற்றும் சட்டம் சார்ந்த பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் மாவட்ட மற்றும் தாலுக்கா அளவிலுள்ள மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுவில் மனு அளித்தால் என்ன பிரச்சனையாக இருந்தாலும் உடனடியாக தீர்வு கிடைக்கும். பொதுமக்கள் அனைவரும் இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் செயலர் மற்றும் சார்பு நீதிபதி இந்திராகாந்தி, அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் சுந்தரராஜன், வக்கீல் பிரகாஷ், சமூக ஆர்வலர் கோவிந்தராசு உள்ளிட்ட பலர் பேசினர்.

    இம்முகாமில் 100- க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்களை அளித்து பயன்அடைந்த னர். முகாமிற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு நிர்வாக அலுவலர் சந்தோஷ்குமார் செய்திருந்தார். முடிவில் ஆலக்குடி ஊராட்சி மன்ற தலைவர் சாந்திசாமி நன்றி கூறினார்.

    • பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வந்தனர்.
    • திருப்பூர் மாவட்டத்தில் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் மொத்தம் 447 உள்ளது.

    திருப்பூர் :

    கோடை விடுமுறை முடிந்து இன்று1 முதல், 5-ம் வகுப்பு வரையிலான தொடக்கப்பள்ளிகள் திறக்கப்பட்டன. திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம், காங்கயம், பல்லடம் , உடுமலை உள்பட அனைத்து இடங்களில் 1 முதல் 5-ம்வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. குழந்தைகள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு வந்தனர். குழந்தைகள் என்பதால் பெற்றோர்கள் அவர்களை பள்ளிக்கு அழைத்து வந்தனர். 1-ம்வகுப்பு சேர்ந்த சில குழந்தைகள் பள்ளிக்கு செல்ல மறுத்து அழுது அடம்பிடித்தனர். அவர்களை பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் ஆசுவாசப்படுத்தி அனுப்பி வைத்தனர். மேலும் குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் ரோஜா பூக்கள் கொடுத்து இனிப்பு வழங்கி வரவேற்றனர்.

    திருப்பூர் மாவட்டத்தில் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் மொத்தம் 447 உள் ளது. இவற்றில் 6முதல், பிளஸ் 2 வகுப்பு வரை ஒரு லட்சத்து, 26 ஆயிரத்து 673 பேர் கல்வி பயில்கின்றனர். பள்ளி திறந்த கடந்த 12ந்தேதி ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 545 பேர் பள்ளிக்கு வருகை புரிந்தனர். 6,128 பேர் (5 சதவீதம்) பள்ளிக்கு வரவில்லை. நடப்பு வாரத்துக்குள் இவர்கள் பள்ளிக்கு திரும்ப தேவையான நடவடிக்கைகளை பள்ளி கல்வித்துறை தொடங்கி உள்ளது. திருப்பூரில் அதிகபட்சமாக 1-ம்வகுப்பில் 2,645 மாணவர்கள் அரசு பள்ளியில் இணைந்துள்ளனர். 2-ம் வகுப்பில் 220, 3-ம் வகுப்பில் 238, 4-ம் வகுப்பில் 241, 5-ம் வகுப்பில் 240, 6-ம் வகுப்பில் 532 பேர் இணைந்துள்ளனர். 7 மற்றும் 8-ம் வகுப்பில் முறையே 65 மற்றும் 62 பேர் என மொத்தம், 4,243 பேர் அரசு பள்ளிகளில் இணைந்துள்ளனர்.

    தமிழை முதன்மை பாடமாக தேர்வு செய்து படிக்க 1,351 மாணவர், 1,290 மாணவிகள் என 2,641 பேர் இணைந்துள்ளனர். ஆங்கில மீடியம் படிப்பை 840 மாணவர், 762 மாணவிகள் என 1,602 பேர் தேர்வு செய்துள்ளனர்.

    மாவட்ட கல்வி அலுவலர் அமுதா கூறுகையில், இன்று பள்ளிக்கு வரும் அனைத்து மாணவருக்கும் நோட்டு வழங்கப்படும். ஒரு வாரத்துக்குள் விடு பட்டவர்களுக்கு வழங்க தேவையான புத்தகம் பள்ளிகளில் இருப்பில் உள்ளது. தலைமை ஆசிரியர்களுக்கு இது குறித்து தெரியப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் சீருடை, காலணி உள்ளிட்ட நலத்திட்டங்களும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் என்றார்.

    • நாளை மறுநாள் 5-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
    • பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் ஒரு மாதம் கோடை விடுமுறைக்கு பிறகு 2022-23-ம் கல்வி ஆண்டிற்கான வகுப்புகள் இன்று முதல் தொடங்கின.

    இன்று 6 முதல் 12-ம் வகுப்பு பள்ளிகள் திறக்கப்பட்டன.

    நாளை மறுநாள் 5-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

    ஒரு மாதத்திற்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதால், ஆர்வமுடன் வந்த மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் காணப்பட்டனர்.

    ஏற்கனவே கடந்த வாரம் அந்தந்த பள்ளிகளுக்கு பாடபுத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. தொடர்ந்து இன்று பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு பாடபுத்தகங்கள் வழங்கப்பட்டன.

    இந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளில் மாணவர்கள் வித்தியாசமான முறையில் வரவேற்கப்பட்டனர்.

    தஞ்சை கல்யாண சுந்தரம் மேல்நிலைப் பள்ளியில் மாணவ-மாணவிகள் நாதஸ்வரம் ,தவில் உள்ளிட்ட இன்னிசை மேளங்கள் முழங்க பேரணியாக அழைத்து வரப்பட்டு, உற்சாகமாக வரவேற்கப்பட்டனர்.

    • ராமநாதபுரம்- விருதுநகர்-சிவகங்கை மாவட்டங்களில் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது.
    • 100-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டது.

    ராமநாதபுரம்

    தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்த நிலையில் நடுநிலை,உயர்நிலை, மேல்நிலை மாணவ-மாணவிகளுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப் பட்டு வகுப்புகள் தொடங்கின.

    ராமநாதபுரம் மாவட்ட த்தில் ராமநாதபுரம், பரமக்குடி, மண்டபம் ஆகிய 3 கல்வி மாவட்டங்கள் உள்ளன. ராமநாதபுரம், பரமக்குடி, திருப்புல்லாணி, மண்டபம், முதுகுளத்தூர், கமுதி, கடலாடி, போகலூர், நயினார் கோயில், ஆர்.எஸ். மங்கலம், திருவாடானை ஆகிய ஊராட்சி ஒன்றி யங்களில் 157 ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிகள், 36 அரசு உதவிபெறும் நடுநிலை பள்ளிகள், 22 தனியார் நடுநிலை பள்ளிகள் உள்ளன.

    66 அரசு உயர்நிலைப் பள்ளிகள், 13 அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளி கள், 27 தனியார் உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 70 அரசு மேல்நிலைப்பள்ளிகள், 36 அரசு உதவி பெறும் மேல் நிலை பள்ளிகள், 56 தனி யார் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன.

    இங்கு படித்த மாணவ-மாணவிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 30-ந் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டிருந்தது. கடந்த வாரம் பள்ளி திறக்கப்பட்ட இருந்த நிலையில் கோடை வெயிலின் தாக்கம் நீடித்ததால் இன்று (12-ந் தேதி) பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்தது.

    அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது. ஒரு மாத காலம் விடுமுறை முடிந்து மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்தனர். அவர்கள் தங்கள் நண்பர்களை பார்த்து நலம் விசாரித்தனர். முதல் நாளில் மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் ஒருவருக்கொருவர் அறிமு கப்படுத்தி கொண்டனர்.

    இதேபோல் விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களிலும் இன்று 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்தது. 2 மாவட்டங்களிலும் 100-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டது.

    வருகிற 14-ந்தேதி அன்று 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படுகிறது.

    • மாணவர்களுக்கு வரும் 12-ந் தேதி முதல் வகுப்புகள் துவங்குகின்றன.
    • தூய்மைப்பணிகள் 80 சதவீதம் மேற்கொள்ளப்பட்டதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருப்பூர் :

    கோடை வெயில் காரணமாக பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 6 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு வரும் 12-ந் தேதி முதல் வகுப்புகள் துவங்குகின்றன.

    இம்மாணவர்கள் பள்ளிக்கு வரும் போது, அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்க ஏற்கனவே உத்தரவிடப்பட்டது. பெரும்பாலான பள்ளிகளில், தூய்மைப்பணிகள் 80 சதவீதம் மேற்கொள்ளப்பட்டதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.சில பள்ளிகளில், போதுமான தூய்மைப்பணியாளர்கள் இல்லாததால் சுத்தம் செய்யும் பணிகள் தற்போது தான் துவங்கப்பட்டுள்ளன.

    பள்ளி திறக்கும் முதல் நாளிலேயே புத்தகங்கள் விநியோகித்து கற்றல், கற்பித்தல் பணிகளை துவங்க வேண்டும். இதற்கு பள்ளிகள் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய, வட்டார கல்வி அலுவலர்கள், ஆய்வு மேற்கொள்ள வேண்டுமென தெரி விக்கப்பட்டுள்ளது.

    இது குறித்துகல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளிவைக்கப்பட்டாலும், மாணவர் சேர்க்கை பணிகள் நடக்கின்றன. புதிய கல்வியாண்டை துவங்க ஆயத்தப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது என்றனர்.

    • கடலூர் மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் கடும் அவதி யடைந்து வருகின்றனர்.
    • நாளை மறுநாள் திறக்க இருந்த பள்ளிகள் 14-ந் தேதி திறக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது

    கடலூர்:

    தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் தொடங்கி சுட்டெரிக்கும் வெயில் பதிவாகி வருகின்றது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் மார்ச் மாதம் முதல் தற்போது வரை சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் கடும் அவதி யடைந்து வருகின்றனர். மேலும் அனல் காற்று வீசி வருவதால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் பாதிப்படைந்து வருவதோடு வெயிலின் தாக்கத்தை குறைப்பதற்காக சாலை ஓரங்களில் உள்ள பழச்சாறுகள், கரும்பு சாறு, இளநீர், நுங்கு, பழ வகைகள் போன்றவற்றை பொது மக்கள் வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். மேலும் மதிய வேளையில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெருமளவில் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டு வருகிறது.

    இது மட்டும் இன்றி காலை முதல் மதியம் வரை கடுமையான வெயில் மற்றும் அனல் காற்று வீசி வருவதால் இரவு நேரங்களில் வழக்கத்தை விட அதிக அளவில் புழுக்கம் ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் தூக்கமின்றி இருப்பதையும் காண முடிந்தது. இந்த நிலையில் கடும் வெயில் காரணமாக தமிழகத்தில் நாளை மறுநாள் திறக்க இருந்த பள்ளிகள் 14-ந் தேதி திறக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடந்த 1 -ந்தேதி 102.2, 2- ந் தேதி 104.5, 3- ந் தேதி 104, 4 -ந் தேதி 104 டிகிரி வெயில் அளவு பதிவாகி இருந்தது. கடலூரில் இன்று காலை 11.30 மணி நிலவரப்படி 101.48 டிகிரி வெயில் பதிவாகியிருந்தது. பொதுமக்கள் கடும் வெயிலால் கடுமையாக பாதிப்படைந்து வரு வது குறிப்பிடத்தக்கதாகும். இது குறித்து வானிலையாளர் பாலமுருகனிடம் கேட்டபோது, கடலூர் மாவட்டத்தில் கோடை வெயில் தொடங்கி தற்போது வரை வழக்கத்தை விட அதிக அளவில் பதிவாகி வருகின்றது. இதில் கடந்த நான்கு நாட்களாக 100 டிகிரிக்கு மேல் வெயில் அளவு பதிவாகி உள்ளது. இந்த நிலையில் கடல் பகுதியில் இருந்து மேற்கு திசை காற்று மிக வலிமையாக வறண்ட காற்றாக வருவதால் அனல் காற்று அதிகரித்து சுட்டெரிக்கும் வெயில் தாக்கி வருகின்றது.

    மேலும் கிழக்கு பகுதியிலிருந்து வரக்கூடிய ஈரக்காற்று மதியம் ஒரு மணி முதல் 2 மணிக்குள் காற்று வந்தால் வெயிலின் தாக்கம் குறையும். ஆனால் தற்போது கிழக்கு காற்று தாமதமாக வருகின்றது. இது மட்டும் இன்றி தென்மேற்கு பருவமழை எப்போதும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் தொடங்கப்படும். ஆனால் இதனால் வரை தென்மேற்கு பருவ மழை கேரளா பகுதியில் தொடங்காததால் தமிழகத்தில் தொடர்ந்து வெயில் தாக்கி வருகின்றது. இந்த வருடம் தென்மேற்கு பருவக்காற்று நிலை இதுவரை அடையாததால் சற்று காலதாமதம் ஆகும் என எண்ணப்படுகிறது. இது மட்டும் இன்றி அந்தமான் பகுதியில் தற்போது தான் தென்மேற்கு பருவ மழை நிலை கொண்டு தொடங்கும் நிலையில் உள்ளது. இதனைத் தொடர்ந்து கேரளா பகுதியில் தென்மேற்கு மழை தொடங்கும் பட்சத்தில் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்படும். எனவே வருகிற 2 நாட்களும் இதே போன்ற வறண்ட நிலை மற்றும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் என தெரிவித்தார். ஆகையால் பொதுமக்கள் தமிழக அரசின் நிபந்தனைக்கு உட்பட்டு வெயிலின் தாக்கத்தை குறைக்கும் வகையில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் 2023 -24ம் கல்வியாண்டு விரைவில் துவங்குகிறது.
    • தூய்மைப் பணியாளர்களைக்கொண்டு பள்ளியில் சுத்தப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

     உடுமலை :

    பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் 2023 -24ம் கல்வியாண்டு விரைவில் துவங்குகிறது.இதற்கான முன்னேற்பாடுகள் அனைத்து அரசு பள்ளிகளிலும் மேற்கொள்ளப்படுகிறது. அவ்வகையில் பள்ளி வளாகம், கழிவறை மற்றும் குடிநீர் தொட்டிகளை பணியாளர்களை கொண்டு சுத்தம் செய்ய தலைமையாசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதன்படி உடுமலை மற்றும் சுற்றுப் பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் தூய்மைப் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

    இது குறித்து பள்ளி தலைமையாசிரியர்கள் கூறியதாவது:- உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிக்கு உட்பட்டு அரசு பள்ளிகள் செயல்படுகின்றன.எனவே அந்தந்த உள்ளாட்சி அமைப்பு தூய்மைப் பணியாளர்களைக்கொண்டு பள்ளியில் சுத்தப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதேபோல பள்ளியில் அமைந்துள்ள மின் சாதனங்கள், இணைப்புகள், மின் பணியாளர்களை கொண்டு சரிபார்க்கப்படுகிறது. சிதிலமடைந்துள்ள கட்டடங்கள் இருந்தால் அவற்றை இடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. குடிநீர் குழாயில் உடைப்பு, கசிவு உள்ளிட்டவை சீரமைக்கப்படுகிறது.வகுப்பறைகள், மாணவர்களுக்கான இருக்கைகள் சுத்தப்படுத்தப்படுகிறது. ஆங்கில வழிப் பிரிவுகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • இப்படி தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளை சம்பந்தப்பட்ட பள்ளிகளில் 29-ந் தேதி சேர்க்க வேண்டும்.
    • நாளை காலையில் சம்பந்தப்பட்ட பள்ளிகளில் நடைபெறும் குலுக்கலில் குறித்த நேரத்தில் கலந்து கொள்ள வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தஞ்சை மாவட்டத்தில் உள்ள 249 சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் 2,922 இடங்கள் 25 சதவீத இடஒதுக்கீட்டில் நிர்ணயம் செய்யப்பட்டு ள்ளது.

    இதற்காக இணையதளம் வழியாக 4,963 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

    தற்போது தஞ்சை மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையற்ற தனியார் சுயநிதியில் செயல்படும் 249 பள்ளிகளில் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களுக்கு மேல் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதால் நாளை (செவ்வாய்கிழமை) 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் முதன்மைக்கல்வி அலுவலரால் நியமிக்கப்படும் கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் முன்னிலையில் குலுக்கல் முறையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

    தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளின் பெயர் பட்டியல் விண்ணப்ப எண்ணுடன் இணையதளம் மற்றும் சம்பந்தப்பட்ட பள்ளியின் தகவல் பலகையில் 24-ந் தேதி வெளியிடப்படும். இப்படி தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளை சம்பந்தப்பட்ட பள்ளிகளில் 29-ந் தேதி சேர்க்க வேண்டும்.

    2023-24-ம் கல்வியாண்டிற்கு 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் நுழைவு வகுப்பான எல்.கே.ஜி. மற்றும் முதல் வகுப்பில் சேர்க்கை செய்வதற்கு இணையதளம் வழியாக விண்ணப்பித்த அனைத்து பெற்றோர்களும் நாளை காலையில் சம்பந்தப்பட்ட பள்ளிகளில் நடைபெறும் குலுக்கலில் குறித்த நேரத்தில் கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×