search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "art competitions"

    • பண்பாட்டுத்துறை சார்பில் நடக்கிறது
    • கலெக்டர் தகவல்

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் கலை பண்பாட்டுத்துறை சார்பில் போட்டிகள் நடைபெறும் என கலெக்டர் பா.முருகேஷ் தெரிவித்தார்.

    தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் கலைத்துறையில் சிறந்து விளங்கும் இளைஞர்களை கண்டறிந்து ஊக்கப்படுத்தும் விதமாக மாவட்ட, மாநில அளவிலான கலைப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது.

    திருவண்ணாமலை மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் வருகிற 19-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள மாவட்ட அரசு இசைப்ப ள்ளியில் நடைபெற உள்ளது. குரலிசை, கருவி இசை, பரதநாட்டியம், கிராமிய நடனம், ஓவியம் ஆகிய தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்படுகிறது.

    17 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் இந்த போட்டிகளில் கலந்துகொள்ளலாம். மாவட்ட அளவில் முதலிடம் பிடிப்பவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

    கலைப் போட்டிகள் குறித்து கூடுதல் விவரங்களை பெற 044-27269148, 86673 99314 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.

    • பள்ளிகள் இடையிலான கலைப்போட்டிகள் வருகிற 30-ந் தேதி நடக்கிறது.
    • மதுரை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மதுரை

    தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மதுரை மாவட்ட பள்ளிகள் இடையே நடத்தப்படும் கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள் வருகிற 30-ந்தேதி உலக தமிழ்ச் சங்க கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டிகளில் அனைத்து அரசு, தனியார், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11, 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் பங்கேற்கலாம்.

    போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களை தாங்கள் படிக்கும் பள்ளி யின் தலைமை ஆசிரியர் ஒப்புதலுடன் மதுரை மாவட்டம் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்திற்கு நேரிலோ அஞ்சல் மூலமாகவோ மின்னஞ்சல் மூலமாகவோ வருகிற 27-ந்தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

    போட்டிகள் நடைபெறும் அன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.7ஆயிரம், 3-வது பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.

    மாவட்ட அளவில் முதல் பரிசு பெறும் மாணவர்கள் மட்டும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள பரிந்துரை செய்யப்படுவர்.

    போட்டி களுக்கான ஏற்பாடுகளை மதுரை மாவட்ட தமிழ் வளர்ச்சி துணை இயக்குநர் சுசீலா செய்து வருகிறார்.

    இந்த தகவல் மதுரை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 5-8, 9-12, 13-16 என்ற வயது வரம்பில் போட்டிகள் நடைபெறும்.
    • குரலிசை போட்டி, பரதநாட்டியபோட்டி, கிராமிய நடனப்போட்டி நடைபெறும்.

    திருப்பூர் :

    தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் திருப்பூர் மாவட்டக்கலைப்போட்டிகள் திருப்பூர் மாவட்டம் மண்ணரை கிராமம் சத்யா காலனி (கிழக்கு) ல்உள்ள நைருதி வித்யாபவன் மேல்நிலைப்பள்ளியில்வருகிற 17 -ந்ேததி( சனிக்கிழமை) அன்றுநடைபெற உள்ளது.இப்போட்டிகள் குரலிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம்மற்றும்ஓவியம் ஆகிய பிரிவுகளில் நடைபெறுகிறது. மேலும் 5-8, 9-12, 13-16 என்ற வயதுவரம்பில்போட்டிகள் நடைபெறும்.ஜுன் 17-ந்தேதி அன்று காலை 10 மணிக்கு குரலிசை போட்டி, பரதநாட்டியபோட்டி, கிராமியநடனப்போட்டி நடைபெறும். குரலிசை போட்டியில் முறையாக கர்நாடக இசை பயிலும் சிறார்கள் பங்குபெறலாம். தமிழில் அமைந்த இசை வடிவங்கள்பாட வேண்டும். பரதநாட்டியம் மற்றும் கிராமிய நடனப்போட்டியில் அதிகபட்சம் 3நிமிடம் ஆட அனுமதிக்கப்படுவார்கள். இப்போட்டியில் சினிமாபாடல்களுக்கான நடனம்மற்றும் குழு நடனம் அனுமதி இல்லை. கிராமிய நடனப்போட்டியில் நமதுபாரம்பரிய கரகம், காவடி , பொய்க்கால்குதிரை போன்ற நடனங்கள் மட்டும் ஆடப்பெறவேண்டும்.

    மதியம் 2 மணிக்கு ஓவியப்போட்டி நடைபெறும். ஓவியத்தாள், வண்ணங்கள்தூரிகைகள்உட்பட தங்களுக்குத் தேவையானவற்றைப் போட்டியாளர்களே கொண்டுவருதல் வேண்டும்.தலைப்புகள் போட்டி தொடங்கும் போது அறிவிக்கப்படும்.

    பங்குபெறும் அனைவருக்கும் பங்கேற்புசான்றிதழ் வழங்கப்படும். 9-12, 13-16 என்ற வயது வரம்பில் முதல் பரிசு பெறும் சிறார்கள் அரசின்செலவில் மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பப்படுவர். மேலும் விவரம் வேண்டுவோர்கோயம்புத்தூர் மண்டலக் கலைபண்பாட்டு மைய அலுவலகத்தை 0422 2610290, 94422 13864 ஆகியஎண்களில்தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.  

    • சசூரி நிறுவனங்களுக்கு இடையேயான மாணவர்களுக்கு கலைப் போட்டிகள் நடைபெற்றது.
    • மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளுடன் விழா நிறைவு பெற்றது.

    திருப்பூர் :

    திருப்பூர் விஜயமங்கலம் சசூரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் சசூரி நிறுவனங்கள் மற்றும் அடையாறு புற்றுநோய் நிறுவனம் சார்பில் சிரிஸ்டா-2023 கலைப்போட்டிகள் 3 நாட்கள் நடைபெற்றது. முதல் நாள் பல்வேறு பள்ளி மாணவர்களுக்கு இடையேயான கலைப்போட்டிகள், இரண்டாம் நாள் கல்லூரிக்கு இடையேயான மாணவர்களுக்கு கலைப்போட்டிகள் மற்றும் மூன்றாம் நாள் சசூரி நிறுவனங்களுக்கு இடையேயான மாணவர்களுக்கு கலைப்போட்டிகள் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு சசூரி நிறுவனத்தின் தாளாளர் கந்தசுவாமி தலைமை தாங்கினார்.கல்லூரியின் செயலாளர் சவிதா மோகன்ராஜ் விழாவை தொடங்கி வைத்தார் . சசூரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் ராம்குமார் வரவேற்று பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக விஜய் டிவி புகழ் தர்ஷன், மணிமேகலை, நடிகை காயத்ரி சங்கர், ஸ்ருதிகா, அருண் அரவிந்த் மற்றும் விஜய் விருஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் குழுநடனம் , தனிநபர் நடனம்,மௌனப்படம், புகைப்படம் எடுத்தல், காய்கறி செதுக்குதல், நகக்கலை, குறும்படம், மெஹந்தி உள்பட பல்வேறு போட்டிகளில் மாணவர்கள் தங்கள் பன்முகத்திறனை வெளிப்படுத்தி வெற்றி பெற்றனர்.

    வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர்களால் பரிசு வழங்கப்பட்டது. முடிவில் நைருதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் அன்பரசு நன்றி கூறினார். மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளுடன் விழா நிறைவு பெற்றது.

    • சசூரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் ராம்குமார் வரவேற்று பேசினார்.
    • இதில் மாணவர்கள் தங்கள் பன்முக திறனை வெளிப்படுத்தி வெற்றி பெற்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் விஜயமங்கலம் சசூரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் சசூரி நிறுவனங்கள் மற்றும் அடையாறு புற்றுநோய் நிறுவனம் சார்பில் சிரிஸ்டா-2023 நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவின் முதல் நாளாக பள்ளி மாணவர்களுக்கான கலைப்போட்டிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சசூரி நிறுவனத்தின் தாளாளர் கந்தசுவாமி தலைமை தாங்கினார். செயலாளர் சவிதா மோகன்ராஜ் விழாவினை துவக்கி வைத்தார். சசூரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் ராம்குமார் வரவேற்று பேசினார்.

    நைருதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் அன்பரசு வாழ்த்தி பேசினார். சிறப்பு விருந்தினராக தாராபுரம் மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கப்பள்ளி) சிவானந்தம் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். மேலும் பல்வேறு பள்ளிகளிலிருந்து 2500க்கும் மேற்பட்ட மாணவர்கள் விழாவில் பங்கேற்றனர்.

    குழு நடனம், தனிநபர் நடனம், மௌனப்படம், ரங்கோலி, கழிவுகளிலிருந்து கைவினை பொருட்கள் தயாரித்தல் மெஹந்தி, கையெழுத்து போட்டி, சுவரொட்டி தயாரித்தல், அறிவியல் கண்காட்சி, குறும்படம், வண்ணம் தீட்டுதல், காய்கறிகள் செதுக்குதல், திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, புகைப்படம் எடுத்தல், நகக்கலை போன்ற பல்வேறு விதமான போட்டிகள் நடைபெற்றது. இதில் மாணவர்கள் தங்கள் பன்முக திறனை வெளிப்படுத்தி வெற்றி பெற்றனர்.

    • பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகிறது.
    • கிரேடு முறையில் மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப் பட உள்ளது

    திருப்பூர் :

    திருப்பூர் சசூரி கல்வி நிறுவனங்கள் மற்றும் அடையார் புற்றுநோய் நிறுவனம் சார்பில் சிரிஸ்டா-2023 விழா நாளை 23-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை 4 நாட்கள் நடக்கிறது. திருப்பூர் விஜயமங்கலம் சசூரி கலைக்கல்லூரி வளாகத்தில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகிறது.

    குரூப் டான்ஸ், சோலோ டான்ஸ், மிமீ, மெகந்தி ஆர்ட், நெய்ல் ஆர்ட், ரங்கோலி, வெஜிடபிள், புரூட் கார்விங், கிராப்ட், ஹேண்ட் ரைட்டிங், பெயிண்டிங், போட்டோ கிராபி, போஸ்டர் மேக்கிங், ஸ்பெல் பீ, சயின்ஸ் எக்ஸ்போ, லிட்டில் செப், திருக்குறள், செஸ், யோகா, சிலம்பம், கராத்தே, வாலிபால், கபடி, கிரிக்கெட்,பாஸ்கட் பால், குறும்படம் , பேஸ் பெயிண்டிங் என பல்வேறு விதவிதமான போட்டிகள் நடத்தப்படுகிறது. வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.2 லட்சம் வரை பரிசுகள் வழங்கப்பட உள்ளது. 6 முதல் 8-ம்வகுப்பு வரை, 9 முதல் 12-ம்வகுப்பு வரை என்ற கிரேடு முறையில் மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட உள்ளது. 

    • சிவகங்கை செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேச பள்ளியில் குழந்தைகளுக்கான கலை போட்டிகள் நடந்தது.
    • பாட்டு, மாறுவேடம், நடனம் மற்றும் பேச்சுப்போட்டி என 4 பிரிவுகளில் போட்டிகள் நடந்தன.

    காரைக்குடி

    காரைக்குடி செல்ல ப்பன் வித்யா மந்திர் சர்வதேசப்பள்ளி மற்றும் காரைக்குடி சிட்டி லயன்ஸ் சங்கம் இணைந்து, 2 முதல் 6 வயது வரையிலுள்ள குழந்தைகளுக்கான பல்வேறு போட்டிகளை நடத்தியது.

    பாட்டு, மாறுவேடம், நடனம் மற்றும் பேச்சுப்போட்டி என 4 பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. காரைக்குடி மற்றும் அதன் சுற்றுப்பகுதியிலுள்ள பள்ளிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இதில் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு ரொக்கப்பரிசு, பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.மொத்தம் 72 வகையான பரிசுகள் வழங்கப்பட்டது.

    பரிசளிப்பு விழாவுக்கு பள்ளியின் தாளாளர் சத்தியன் தலைமை தாங்கினார். காரைக்குடி லயன்ஸ் சங்கத்தின் முன்னாள் மாவட்ட கவர்னர் ஜானகிராமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். முதல்வர் ராணி போஜன் வரவேற்றார். பள்ளியின் கல்வி அதிகாரி டாக்டர் ராஜேஸ்வரி முன்னிலை வகித்தார். காரைக்குடி லயன்ஸ் சங்கத்தின் முன்னாள் கேபினட் செயலாளர் பாதம் பிரியன், மாவட்ட லியோ தலைவர் மதிவாணன், மண்டலத்தலைவர் முத்துகுமார், ஜோன் தலைவர் முத்துகண்ணன், பொருளாளர் லட்சுமணன், செயலா ளர் பழனிவேல், பிரெ சிடெண்ட் சண்முகசு ந்தரம், லியோ செயலாளர் தீப்ஷா, ஒருங்கிணைப்பாளர் ஆஷிஷ் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • மதுரையில் வருகிற 17-ந் தேதி இளைஞர்களுக்கான கலைப்போட்டிகள் நடக்கிறது.
    • வருகிற 14-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என நேரு யுவகேந்திரா துணை இயக்குனர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    மதுரை

    மதுரை நேரு யுவகேந்திரா துணை இயக்குனர் செந்தில்குமார் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மத்திய விளையாட்டு துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மதுரை மாவட்ட நேரு யுவ கேந்திரா சார்பில் இளையோர் திருவிழா, அய்யர்பங்களா, நாகனாகுளத்தில் வருகிற 17-ந் தேதி நடக்கிறது.

    இதையொட்டி இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்துடன் தொடர்புடைய ஓவியப் போட்டி, இளம் எழுத்தாள ருக்கான கவிதைபோட்டி, புகைப்படம் எடுத்தல் போட்டி, இந்தியா @ 2047 என்ற தலைப்பில் ஆங்கில பேச்சுப் போட்டி, நாட்டுப்புற கிராமிய இசையுடன் கூடிய வீதி நாடகம், இந்தியா @ 2047 இளையோர் கருத்தரங்கம் ஆகியவை நடக்கிறது.

    இதில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த 15 வயது முதல் 20 வயது வரையான மாணவ-மாணவிகள் கலந்து கொள்ளலாம். இளையோருக்கான போட்டிகளில் 15 வயது முதல் 29 வயது வரையானவர்கள் பங்கேற்கலாம்.

    போட்டிகளில் வெற்றி பெறும் முதல் 3 பேருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்படும். இது தவிர முதல்,2-ம் நிலை வெற்றி பெற்றவர்கள், மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கலாம்.

    இந்த நிகழ்ச்சிகளில் பங்கு பெற விரும்புவோர், அதற்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து துணை இயக்குநர், நேரு யுவ கேந்திரா, ஆசாத் தெரு, காந்தி நகர் என்ற முகவரியில் வருகிற 14-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    கலை போட்டிகள் நடத்த விரும்பும் பள்ளிகள் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என கலெக்டர் கணேஷ் தெரிவித்து உள்ளார்.
    புதுக்கோட்டை:

    கலை போட்டிகள் நடத்த விரும்பும் பள்ளிகள் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என கலெக்டர் கணேஷ் தெரிவித்து உள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையத்தின் சார்பில், மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்கிடும் வகையில், ஆரோக்கிய பாரத பயணம் எனும் தொடர் சைக்கிள் பயணம் தேசிய அளவில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக சரியாக உணவு உண்ணும் இயக்கத்தின் படி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பங்கு பெறும் வகையில், போஸ்டர் போட்டிகள், சுவர் வண்ண போட்டிகள் மற்றும் மின்னணு கலை போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

    முதல் கட்டமாக இந்த போட்டிகளை பள்ளி அளவில் நடத்த விரும்பும் பள்ளிகள் அனைத்தும் https://fssai.gov.in/creativitychallenge என்ற இணைய தளத்தில் பதிவு செய்ய வேண்டும். இந்த போட்டிகளில் கலந்து கொள்ளும் பள்ளி மாணவ, மாணவிகள் அந்தந்த பள்ளிகள் மூலம் snfatschool@fssai.gov.in என்ற மின்னஞ்சல் மூலம் தங்களின் பெயரினை பதிவு செய்ய வேண்டும். பள்ளி அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளலாம்.

    உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு போட்டிகளில் தேர்ந்தெடுக்கப்படும் போஸ்டர்கள் தேசிய அளவிலான தேர்வுக்கு அனுப்பப்படும். மின்னணு கலை போட்டிக்கு பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி கல்லூரி மாணவ-மாணவிகளும் கலந்து கொள்ளலாம். இந்த போட்டிகளில் பங்கு பெறுவதன் மூலம் மாணவ-மாணவிகளின் திறன் மேம்படும். உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்பட்டு மாணவ-மாணவிகள் ஆரோக்கியம் மேம்படுவதுடன், தங்களது குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டுக்கும் உதவியாக இருக்கும். எனவே இந்த போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ-மாணவிகளை பங்கேற்க செய்ய, ஆசிரியர்கள், பெற்றோர்கள் மாணவ-மாணவிகளை உற்சாகப்படுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி ரமேஷ் பாபுவை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். 
    ×