search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழக அரசின் சார்பில் பள்ளி  மாணவர்களுக்கான கலைப்போட்டிகள் 17-ந் தேதி நடக்கிறது
    X

    கோப்புபடம்.

    தமிழக அரசின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான கலைப்போட்டிகள் 17-ந் தேதி நடக்கிறது

    • 5-8, 9-12, 13-16 என்ற வயது வரம்பில் போட்டிகள் நடைபெறும்.
    • குரலிசை போட்டி, பரதநாட்டியபோட்டி, கிராமிய நடனப்போட்டி நடைபெறும்.

    திருப்பூர் :

    தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் திருப்பூர் மாவட்டக்கலைப்போட்டிகள் திருப்பூர் மாவட்டம் மண்ணரை கிராமம் சத்யா காலனி (கிழக்கு) ல்உள்ள நைருதி வித்யாபவன் மேல்நிலைப்பள்ளியில்வருகிற 17 -ந்ேததி( சனிக்கிழமை) அன்றுநடைபெற உள்ளது.இப்போட்டிகள் குரலிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம்மற்றும்ஓவியம் ஆகிய பிரிவுகளில் நடைபெறுகிறது. மேலும் 5-8, 9-12, 13-16 என்ற வயதுவரம்பில்போட்டிகள் நடைபெறும்.ஜுன் 17-ந்தேதி அன்று காலை 10 மணிக்கு குரலிசை போட்டி, பரதநாட்டியபோட்டி, கிராமியநடனப்போட்டி நடைபெறும். குரலிசை போட்டியில் முறையாக கர்நாடக இசை பயிலும் சிறார்கள் பங்குபெறலாம். தமிழில் அமைந்த இசை வடிவங்கள்பாட வேண்டும். பரதநாட்டியம் மற்றும் கிராமிய நடனப்போட்டியில் அதிகபட்சம் 3நிமிடம் ஆட அனுமதிக்கப்படுவார்கள். இப்போட்டியில் சினிமாபாடல்களுக்கான நடனம்மற்றும் குழு நடனம் அனுமதி இல்லை. கிராமிய நடனப்போட்டியில் நமதுபாரம்பரிய கரகம், காவடி , பொய்க்கால்குதிரை போன்ற நடனங்கள் மட்டும் ஆடப்பெறவேண்டும்.

    மதியம் 2 மணிக்கு ஓவியப்போட்டி நடைபெறும். ஓவியத்தாள், வண்ணங்கள்தூரிகைகள்உட்பட தங்களுக்குத் தேவையானவற்றைப் போட்டியாளர்களே கொண்டுவருதல் வேண்டும்.தலைப்புகள் போட்டி தொடங்கும் போது அறிவிக்கப்படும்.

    பங்குபெறும் அனைவருக்கும் பங்கேற்புசான்றிதழ் வழங்கப்படும். 9-12, 13-16 என்ற வயது வரம்பில் முதல் பரிசு பெறும் சிறார்கள் அரசின்செலவில் மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பப்படுவர். மேலும் விவரம் வேண்டுவோர்கோயம்புத்தூர் மண்டலக் கலைபண்பாட்டு மைய அலுவலகத்தை 0422 2610290, 94422 13864 ஆகியஎண்களில்தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×