search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குழந்தைகளுக்கான கலை போட்டிகள்
    X

    குழந்தைகளுக்கான கலை போட்டிகள்

    • சிவகங்கை செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேச பள்ளியில் குழந்தைகளுக்கான கலை போட்டிகள் நடந்தது.
    • பாட்டு, மாறுவேடம், நடனம் மற்றும் பேச்சுப்போட்டி என 4 பிரிவுகளில் போட்டிகள் நடந்தன.

    காரைக்குடி

    காரைக்குடி செல்ல ப்பன் வித்யா மந்திர் சர்வதேசப்பள்ளி மற்றும் காரைக்குடி சிட்டி லயன்ஸ் சங்கம் இணைந்து, 2 முதல் 6 வயது வரையிலுள்ள குழந்தைகளுக்கான பல்வேறு போட்டிகளை நடத்தியது.

    பாட்டு, மாறுவேடம், நடனம் மற்றும் பேச்சுப்போட்டி என 4 பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. காரைக்குடி மற்றும் அதன் சுற்றுப்பகுதியிலுள்ள பள்ளிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இதில் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு ரொக்கப்பரிசு, பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.மொத்தம் 72 வகையான பரிசுகள் வழங்கப்பட்டது.

    பரிசளிப்பு விழாவுக்கு பள்ளியின் தாளாளர் சத்தியன் தலைமை தாங்கினார். காரைக்குடி லயன்ஸ் சங்கத்தின் முன்னாள் மாவட்ட கவர்னர் ஜானகிராமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். முதல்வர் ராணி போஜன் வரவேற்றார். பள்ளியின் கல்வி அதிகாரி டாக்டர் ராஜேஸ்வரி முன்னிலை வகித்தார். காரைக்குடி லயன்ஸ் சங்கத்தின் முன்னாள் கேபினட் செயலாளர் பாதம் பிரியன், மாவட்ட லியோ தலைவர் மதிவாணன், மண்டலத்தலைவர் முத்துகுமார், ஜோன் தலைவர் முத்துகண்ணன், பொருளாளர் லட்சுமணன், செயலா ளர் பழனிவேல், பிரெ சிடெண்ட் சண்முகசு ந்தரம், லியோ செயலாளர் தீப்ஷா, ஒருங்கிணைப்பாளர் ஆஷிஷ் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×