search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Agni Nakshatra"

    • ஆண்டுதோறும் அக்னி நட்சத்திர ஆரம்பித்து அது முடியும் நாள் வரை இந்த அபிஷேகம் நடத்தப்படும்.
    • திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் தாராபிஷேகத்திற்கு தனி சிறப்பு உண்டு.

    அக்னி நட்சத்திரம் நேரத்தில் எல்லா சிவன் கோவில்களிலும் தாராபிஷேகம் நடைபெறும். அதிலும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மிகச் சிறப்பாக நடைபெறும்.

    ஆண்டுதோறும் அக்னி நட்சத்திர ஆரம்பித்து அது முடியும் நாள் வரை இந்த அபிஷேகம் நடத்தப்படும். அருணாச்சலேஸ்வரர் கோவில் கிரிவலப்பாதையில் உள்ள திருநேர் அண்ணாமலையார் கோவில் மற்றும் கிரிவலப் பாதையில் உள்ள அஷ்ட லிங்க சன்னதியில் தாராபிஷேகம் தொடங்கப்படும். அனைத்து சிவன் கோவிலிலும் உள்ள மூலவருக்கு மேலே பாத்திரம் ஒன்றைக் கட்டி தொங்க விடுவார்கள். இந்த பாத்திரத்தில் பன்னீர், வெட்டிவேர், விளாமிச்சை வேர் பச்சிலை, ஜடா மஞ்சி, பன்னீர், பச்சை கற்பூரம் ஏலக்காய். ஜாதிக்காய். கடுக்காய். மஞ்சள் தூள் ஆகியவற்றை கலந்த நீரை நிரப்புவார்கள் பாத்திரத்தின் அடியில் உள்ள சிறிய துவாரம் வழியே அருணாச்சலேஸ்வரர் லிங்கம் மீது குளிர்ச்சியான பன்னீர் சொட்டு சொட்டாக விழும்.

    இந்த தாராபிஷேகம் அக்னி நட்சத்திரம் முடியும் நாளான மே 28ஆம் தேதி வரை தொடர்ந்து நடைபெறும். அதேபோல் மற்ற சிவன் கோவில்களிலும் தாராபிஷேகம் தொடங்கப்பட்டுவிட்டது.


    அக்னி நட்சத்திரத்தை ஒட்டி வேலூர் கோட்டை ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோவில் மூலவருக்கு தாராபிஷேகம் தொடங்கிவிட்டது தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தாராபிஷேகம் நடைபெறும். இதே போல் ஏராளமான கோவில்களில் அக்னி நட்சத்திரத்தை ஒட்டி சிவனுக்கு தாராபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சிவனுக்கு தாராபிஷேகம் செய்வதால் கோடையின் வெயிலின் உக்கிரகம் தணிந்து ஓரளவு இதமான சூழ்நிலை ஏற்பட மேகக் கூட்டங்கள் கூடி வரும் சிவபெருமானின் அருள் கிடைக்கும். அதனால் நமக்கு அக்னி நட்சத்திரத்தின் சூட்டின் வேகம் குறையும். முதல் வாரம் அக்னி நட்சத்திரத்தில் இருக்கும். சூட்டின் வேகம் செல்ல செல்ல படிப்படியாக குறைந்து இதமான சூழ்நிலை ஏற்பட்டுவிடும். பல நூறு ஆண்டுகளாக இந்த தாராபிஷேகம் அனைத்து சிவன் கோவில்களிலும் நடைபெறுகின்றன. அதிலும் திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் தாராபிஷேகத்திற்கு தனி சிறப்பு உண்டு. ஏனென்றால் அது அக்னி தலம் அல்லவா!


    கோடையில் தாக்கம் குறைந்து போதிய மழை பெய்யும் என்பது நம்பிக்கை சில தலங்களில் தோஷ நிவர்த்தியாகவும், இந்த அபிஷேகம் செய்யப்படுகிறது. மே 28 தேதி வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    நீங்களும் தாராபிஷேகம் நடைபெறும் கோவிலில் தாராபிஷேகத்துக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து சிவபெருமானின் அருளை பெறலாமே.

    • ஒரு நாளைக்கு இரண்டு முறை குளிப்பது நல்லது.
    • பருத்தி ஆடைகளை அணிவதன் மூலம் வியர்வை உடலிலேயே தேங்காது.

    பொதுவாக ஒவ்வொரு வருடமும் மார்ச், ஏப்ரல், மே போன்ற மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். குறிப்பாக மே மாதத்தில் அக்னி நட்சத்திரம் ஆரம்பித்து விடுவதால் மே மாதம் 4ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும். இந்த வெயிலில் வியர்வை அதிகமாக வெளியேறி உடலை துர்நாற்றம் வீச செய்கிறது.

    வெயிலின் தாக்கத்தினால் வியர்வை வெளியேறுவது, நீர் இழப்பு, உடல் துர்நாற்றம், அரிப்பு, தேமல், அம்மை, வயிற்றுப் பிரச்சனை, சிறுநீரகத்தில் எரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றது.

    குறிப்பாக கோடை காலத்தில் குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள் வரை அதிகமாக வெயிலின் தாக்கத்திற்கு உள்ளாகின்றனர். இதில் குறிப்பாக பலருக்கும் உடலில் ஏற்படும் வியர்வை நாற்றம் மிகப்பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. இந்த வியர்வை நாற்றத்தில் இருந்து நம் உடலை பாதுகாக்கும் வழிமுறைகள்

    1. கோடை காலத்தில் எண்ணெயில் வறுத்த உணவுகள், அதிக எண்ணெய் பலகாரங்கள், காரமான உணவுகள் போன்றவற்றை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்

    2. நீர் சத்து நிறைந்த காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலில் வியர்வை நாற்றம் ஏற்படுவதை தடுக்கலாம்.

    3. உடற்பயிற்சி செய்பவர்களாக இருந்தால் அதிகாலையில் அல்லது வெயில் அதிகமாகுவதற்கு முன்பாகவே செய்து முடித்து விட வேண்டும்.

    4. அதிக வெயில் காலங்களில் ஒரு நாளைக்கு இரண்டு முறை குளிப்பது நல்லது.

    5. காற்றோட்டமான பருத்தி ஆடைகளை அணிவதன் மூலம் வியர்வை உடலிலேயே தேங்காது.

    6. அக்குள் மற்றும் தொடை இடுக்கு பகுதிகளில் டியோ ட்ரெண்ட், கிரீம்கள், லோஷன்கள் உபயோகப்படுத்தலாம். இது போன்ற ஒரு சில செயல்முறைகளின் மூலம் உடலில் அதிகப்படியான வியர்வை நாற்றம் ஏற்படுவதை தடுக்கலாம்.

    • வெப்பத்தை விரட்டி அடிக்க இயற்கை வழிமுறைகளில் ஒன்றான மூச்சுப்பயிற்சியை பின்பற்றலாம்.
    • தொண்டை பகுதியில் குளிர்ச்சியை உணரலாம். உடலும் அதிக உஷ்ணத்திற்கு உள்ளாகாது.

    இந்த ஆண்டு கோடை காலத்தில் வழக்கத்தை விட வெயில் சுட்டெரிக்க தொடங்கிய நிலையில் அக்னி நட்சத்திரமும் சேர்ந்து தனது பங்குக்கு உக்கிரம் காட்டத்தொடங்கி இருக்கிறது. வெப்ப அலையும் அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது.

    இதனால் ஏற்படும் உடல் உஷ்ணத்தில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்ள பலரும் பல்வேறு வழிமுறைகளை கையாள்கிறார்கள். வெப்பத்திடம் இருந்து உடலை தற்காத்து குளிர்ச்சி தன்மை நிலவச்செய்ய ஏ.சி. அறையில் நிறைய பேர் நேரத்தை செலவிடுவார்கள். ஏர்கூலரையும் பயன்படுத்துவார்கள். வெப்பத்தை விரட்டி அடிக்க இயற்கை வழிமுறைகளில் ஒன்றான மூச்சுப்பயிற்சியை பின்பற்றலாம்.

    நாடி சோதன பிரணாயாமம், சிதாலி பிரணாயாமம் உள்ளிட்ட மூச்சுப் பயிற்சிகள் உடலுக்கு குளிர்ச்சி சூழலை தரும் தன்மை கொண்டவை. இதில் சிதாலி பிரணாயாமம் எளிமையானது. நாக்கின் பக்கவாட்டு பகுதிகளை லேசாக மடக்கிக்கொள்ள வேண்டும்.


    வெப்பத்தை விரட்டும் மூச்சுப்பயிற்சி...பின்பு நாக்கின் வழியாக மெதுவாக மூச்சை உள்ளிழுத்து சுவாசிக்க வேண்டும். வாய் வழியாக சுவாசக்காற்று தொண்டை பகுதியை அடையும்போது குளிர்ச்சி தன்மையை உணரலாம்.

    அதன்பிறகு நாக்கு வழியாக நன்றாக மூச்சை இழுத்து உதட்டை மூடிவிட்டு மூக்கு வழியாக சுவாசத்தை வெளியேற்ற வேண்டும். தொடர்ந்து ஐந்தாறு முறை இவ்வாறு செய்து வரலாம்.

    நாக்கை மடக்கி மூச்சை உள் இழுக்க முடியாதவர்கள் வாயை லேசாக திறந்து கொண்டு பற்களின் வழியாக மூச்சுக்காற்றை உள் இழுக்கலாம். பின்னர் மூக்கு வழியாக சுவாசக்காற்றை வெளியேற்றலாம்.

    இவ்வாறு செய்யும்போது வாய், தொண்டை பகுதியில் குளிர்ச்சியை உணரலாம். உடலும் அதிக உஷ்ணத்திற்கு உள்ளாகாது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அஸ்வினி துவங்கி, ரேவதி வரையிலான 27 நட்சத்திரங்களில் அக்னி நட்சத்திரம் கிடையாது.
    • அக்னி தேவனுக்கு உதவ ஒப்புக் கொண்ட கிருஷ்ணனும், அர்ஜூனனும் தங்களுக்கு தேவையான வில், அம்புகள் வேண்டும் என கேட்டனர்.

    கோடை காலம் என்றதுமே நினைவிற்கு வருவது அக்னி நட்சத்திரம் தான். அக்னி நட்சத்திர வெயில், சித்திரை வெயில், கத்தரி வெயில், கோடை வெயில் என பெயர்களில் இது சொல்லப்படுகிறது. ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் வெயின் தாக்கம் அதிகமாக இருக்கும் காலத்தை அக்னி நட்சத்திர காலம் என்கிறோம். உண்மையில் இந்த அக்னி நட்சத்திரம் என்றால் என்ன என்று பலருக்கும் தெரியாது. அக்னி என்பது வெப்பத்தை குறிக்கிறது. ஆனால் இதை நட்சத்திரம் என ஏன் குறிப்பிடுகிறார்கள் என்ற சந்தேகம் வரும்.

    அஸ்வினி துவங்கி, ரேவதி வரையிலான 27 நட்சத்திரங்களில் அக்னி நட்சத்திரம் கிடையாது. அப்படியானால் அக்னி நட்சத்திரம் என்றால் என்ன என்பது பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம்.

    சித்திரை மாதம் 21 ம் தேதி துவங்கி, வைகாசி மாதம் 14 ம் தேதி வரையிலான 21 நாட்களை அக்னி நட்சத்திர காலம் என்கிறோம். சித்திரை மாதத்தில் பரணி 3 ஆம் காலில் சூரியன் பிரவேசிக்கும் காலத்தை அக்னி நட்சத்திர காலம் என பஞ்சாங்கம் கூறுகிறது. இந்த காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படும். அறிவியல் படி சூரியன் என்பது ஒரு கோளாக இருந்தாலும், அதுவும் ஒரு விண்மீன் தான். அக்னி நட்சத்திர காலத்தில் சந்திரன், மட்டுமல்ல பூமியும் சூரியனுக்கு அருகில் இருக்கும்.


    சூரியனின் பயணத்தின் அடிப்படையிலேயே தமிழ் மாதங்கள் கணக்கிடப்படுகின்றன. அப்படி சூரியனின் சஞ்சாரத்தின் அடிப்படையில் அக்னி நட்சத்திர காலத்தில் முதல் மற்றும் கடைசி ஏழு நாட்கள் வெயிலின் தாக்கம் சுமாராகவும், இடையில் ஏழு நாட்கள் அதிகமாகவும் இருக்கும். இதனால் அறுவடை செய்யப்பட்ட வயல்களில் வெடிப்புக்கள் ஏற்படும். இந்த வெடிப்புக்களின் இடையில் இருந்து பூமிக்குள் இருந்து வெப்பம் வெளியாகும்.

    வைகாசி மாத இறுதியில் பெய்யும் மழை, வயல்களின் வெடிப்பின் வழியாக பூமிக்குள் சென்று வெப்பத்தை தணித்ததும் மீண்டும், வெடிப்புக்கள் மூடிக்கொள்ளும். அக்னி நட்சத்திரத்திற்கு இணையான வெப்பத்தை கொண்டது கார்த்திகை நட்சத்திரம் என்பார்கள். கார்த்திகை நட்சத்திரத்திற்குரிய தேவதை அக்னி பகவான் ஆவார். அக்னி நட்சத்திரம் என்ற வெப்ப காலம் எப்படி உண்டாயிற்று என்பதற்கு புராண கதை ஒன்றும் சொல்லப்படுகிறது.

    யமுனை நதிக்கரையில் காண்டவ வனம் என்ற காடு அமைந்திருந்தது. அரிய மூலிகை செடிகள் இருந்ததால் அதிலிருந்து வரும் வாசனை ஆற்றங்கரைக்கு வருபவர்களை கவர்ந்தது இழுத்தது. இந்த மூலிகைகள் நன்கு வளர வேண்டும் என்பதற்காக அடிக்கடி மழையை பொழிய செய்தான் மழையின் அதிபதியான இந்திரன். இயற்கை அழகு நிறைந்திருந்த இந்த காட்டிற்கு அருகில் இருந்த யமுனையில் கிருஷ்ணனும், அர்ஜூனனும் நீராட வந்தனர்.

    அவர்கள் குளித்து விட்டு கரையேறிய போது அந்தணர் ஒருவர் வந்து, எனக்கு அதிக பசியாக உள்ளது. இந்த வனத்தில் உள்ள பசிப்பிணி தீர்க்கும் மருந்துகளை சாப்பிட்டால் எனது பசி போய் விடும். இந்த வனத்திற்குள் செல்ல எனக்கு உதவி செய்ய முடியுமா? என கேட்டார். அவரது தோற்றத்தில் இருக்கும் வித்தியாசத்தை கண்டுபிடித்த கிருஷ்ணன், வந்திருப்பது அக்னி தேவன் என்பதை புரிந்து கொண்டார். அவரிடம் கிருஷ்ணனும், அர்ஜூனனும் விபரம் கேட்டனர்.


    அதற்கு பதிலளித்த அக்னி தேவன், சுவேதசி என்ற மன்னனுக்காக துர்வாச முனிவர் நூறாண்டுகள் தொடர்ந்து யாகம் ஒன்றை நடத்தினார். யாகத்தின் விளைவால் அதிகப்பட்டியான நெய்யை சாப்பிட்டதால் மந்த நோய் என்னை தாக்கி விட்டது. அந்த மந்த நோய் நீங்குவதற்கு ஏற்ற மூலிகைச் செடிகள் இந்த வனத்திற்குள் தான் உள்ளது. ஆனால் நான் இந்த வனத்திற்குள் நுழைய முயற்சி செய்யும் போதெல்லாம் இந்திரன் மழையை பெய்ய வைத்து விடுகிறான். அதனால் என்னால் இந்த வனத்திற்குள் செல்ல முடிவதில்லை எனக் கூறி தனது நிலையை விளக்கினான்.

    அக்னி தேவனுக்கு உதவ ஒப்புக் கொண்ட கிருஷ்ணனும், அர்ஜூனனும் தங்களுக்கு தேவையான வில், அம்புகள் வேண்டும் என கேட்டனர். அக்னி தேவனும் சக்தி வாய்ந்த காண்டீப வில் அம்புகளை அளித்தான். உனது பசி பிணி தீர்த்துக் கொள்ள 21 நாட்கள் மட்டும் இந்த காட்டிற்குள் செல்லலாம். அந்த சமயத்தில் இந்திரன் மழையை பெய்யவிடாமல் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என கிருஷ்ணர் கூறினார். அதே போல் அக்னி தேவன் காட்டிற்குள் சென்றதும் மழையை பெய்ய வைத்தான் இந்திரன். அதனை அம்புகளை எய்தி அர்ஜூனன் தடுத்து நிறுத்த, காட்டிற்குள் இருக்கும் மூலிகைகளை சாப்பிட்டு, தனது பிணியை தீர்த்துக் கொண்டான் அக்னி தேவன்.

    அக்னி தேவன், காண்டவ வனத்தை அழித்து, தனது பசியை தீர்த்துக் கொள்ளும் காலமே அக்னி நட்சத்திர காலமாக மாறியது என புராணங்கள் கூறுகின்றன. இதற்கு ஏற்ற படி அக்னி நட்சத்திர காலத்தில் என்ன செய்யலாம், என்னவெல்லாம் செய்யக் கூடாது, சாப்பிடும் உணவு பழக்கங்கள் உள்ளிட்ட அனைத்தையும் நமது முன்னோர்கள் மாற்றி அமைத்துள்ளனர்.

    • கடலூர் மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் கடும் அவதி யடைந்து வருகின்றனர்.
    • நாளை மறுநாள் திறக்க இருந்த பள்ளிகள் 14-ந் தேதி திறக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது

    கடலூர்:

    தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் தொடங்கி சுட்டெரிக்கும் வெயில் பதிவாகி வருகின்றது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் மார்ச் மாதம் முதல் தற்போது வரை சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் கடும் அவதி யடைந்து வருகின்றனர். மேலும் அனல் காற்று வீசி வருவதால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் பாதிப்படைந்து வருவதோடு வெயிலின் தாக்கத்தை குறைப்பதற்காக சாலை ஓரங்களில் உள்ள பழச்சாறுகள், கரும்பு சாறு, இளநீர், நுங்கு, பழ வகைகள் போன்றவற்றை பொது மக்கள் வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். மேலும் மதிய வேளையில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெருமளவில் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டு வருகிறது.

    இது மட்டும் இன்றி காலை முதல் மதியம் வரை கடுமையான வெயில் மற்றும் அனல் காற்று வீசி வருவதால் இரவு நேரங்களில் வழக்கத்தை விட அதிக அளவில் புழுக்கம் ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் தூக்கமின்றி இருப்பதையும் காண முடிந்தது. இந்த நிலையில் கடும் வெயில் காரணமாக தமிழகத்தில் நாளை மறுநாள் திறக்க இருந்த பள்ளிகள் 14-ந் தேதி திறக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடந்த 1 -ந்தேதி 102.2, 2- ந் தேதி 104.5, 3- ந் தேதி 104, 4 -ந் தேதி 104 டிகிரி வெயில் அளவு பதிவாகி இருந்தது. கடலூரில் இன்று காலை 11.30 மணி நிலவரப்படி 101.48 டிகிரி வெயில் பதிவாகியிருந்தது. பொதுமக்கள் கடும் வெயிலால் கடுமையாக பாதிப்படைந்து வரு வது குறிப்பிடத்தக்கதாகும். இது குறித்து வானிலையாளர் பாலமுருகனிடம் கேட்டபோது, கடலூர் மாவட்டத்தில் கோடை வெயில் தொடங்கி தற்போது வரை வழக்கத்தை விட அதிக அளவில் பதிவாகி வருகின்றது. இதில் கடந்த நான்கு நாட்களாக 100 டிகிரிக்கு மேல் வெயில் அளவு பதிவாகி உள்ளது. இந்த நிலையில் கடல் பகுதியில் இருந்து மேற்கு திசை காற்று மிக வலிமையாக வறண்ட காற்றாக வருவதால் அனல் காற்று அதிகரித்து சுட்டெரிக்கும் வெயில் தாக்கி வருகின்றது.

    மேலும் கிழக்கு பகுதியிலிருந்து வரக்கூடிய ஈரக்காற்று மதியம் ஒரு மணி முதல் 2 மணிக்குள் காற்று வந்தால் வெயிலின் தாக்கம் குறையும். ஆனால் தற்போது கிழக்கு காற்று தாமதமாக வருகின்றது. இது மட்டும் இன்றி தென்மேற்கு பருவமழை எப்போதும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் தொடங்கப்படும். ஆனால் இதனால் வரை தென்மேற்கு பருவ மழை கேரளா பகுதியில் தொடங்காததால் தமிழகத்தில் தொடர்ந்து வெயில் தாக்கி வருகின்றது. இந்த வருடம் தென்மேற்கு பருவக்காற்று நிலை இதுவரை அடையாததால் சற்று காலதாமதம் ஆகும் என எண்ணப்படுகிறது. இது மட்டும் இன்றி அந்தமான் பகுதியில் தற்போது தான் தென்மேற்கு பருவ மழை நிலை கொண்டு தொடங்கும் நிலையில் உள்ளது. இதனைத் தொடர்ந்து கேரளா பகுதியில் தென்மேற்கு மழை தொடங்கும் பட்சத்தில் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்படும். எனவே வருகிற 2 நாட்களும் இதே போன்ற வறண்ட நிலை மற்றும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் என தெரிவித்தார். ஆகையால் பொதுமக்கள் தமிழக அரசின் நிபந்தனைக்கு உட்பட்டு வெயிலின் தாக்கத்தை குறைக்கும் வகையில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை கோடை காலமாகும்.
    • கத்திரி வெயில் என்று அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்கிய பிறகு, வெயி லின் தாக்கம் மிக கடுமையாக இருக்கும்.

    சேலம்:

    தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை கோடை காலமாகும். இந்த காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும். குறிப்பாக கத்திரி வெயில் என்று அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்கிய பிறகு, வெயி லின் தாக்கம் மிக கடுமையாக இருக்கும். இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கி யதில் இருந்தே தமிழகத்தின் பல நகரங்களில் வெப்பம் அதிகரித்து இருந்தது.

    அக்னி நட்சத்திரம்

    இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்தி ரம் தொடங்கியது. அதன் பிறகு மே மாதம் 8-ந்தே திக்கு மேல் வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. குறிப்பாக மதிய நேரத்தில் வெயில் சுட்டெரித்தது.

    சேலத்தில் அதிகபட்சமாக 106 பாரன்ஹீட் வெப்ப நிலை நிலவியது. இதனால் கூலி வேலைக்கு செல் ேவார், தொழிலா ளர்கள், அலுவலக வேலைக்கு செல்வோர், வாகன ஓட்டி கள், பாதசாரி கள் கடும் அவதிக்குள்ளா கினர். இர வில் கடும் புழுக்கம் ஏற்பட்ட தால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பெரும் பாதிப்புக்குள்ளா கினர்.

    இன்றுடன்...

    இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் இன்றுடன் (29-ந்தேதி) முடிவடைகிறது. இதனால் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறையும் என்று வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • அக்கினி நட்சத்திர காலத்தில் என்ன செய்யலாம்?
    • குலதெய்வத்தை நினைத்து வழிபட்டு வந்தாலும் சிறந்த பரிகாரமாக அமையும்.

    மதுரை

    அக்கினி நட்சத்திர காலத்தில் என்னென்ன காரியங்கள் செய்யலாம்? என்னென்ன காரியங்கள் செய்யக்கூடாது? என்ற குழப்பம் பலருக்கும் வந்து கொண்டே இருக்கும்.

    அதற்கான பதிலை மடப்புரம் விலக்கு ஜோதிடர் கரு. கருப்பையா கூறியுள்ளார். ஆண்டு தோறும் சித்திரை, வைகாசி மாதங்களில் வருவது அக்னி நட்சத்திரமாகும். இந்த மாதம் மே 4-ந் தேதி தொடங்கிய அக்கினி நட்சத்திரம், வருகிற 29-ந் தேதி நிறைவடைகிறது.

    இந்த காலகட்டத்தில் புதிய காரியங்கள் செய்ய லாமா?, சுப காரியங்கள் செய்யலாமா?, மொட்டை அடிக்கலாமா?, காதுகுத்து நடத்தலாமா?, புதிய வீட்டுக்கு குடி போகலாமா?, என்ற கேள்விகள் மனதிற்குள் எழுந்து கொண்டே இருக்கும்.

    பொதுவாக அக்கினி நட்சத்திர காலத்தில் முன் பாதியை தொடுப்பு என்றும், பின் பாதியை கழிவு என்றும் சொல்வார்கள். எனவே பின் பாதி காலத்தில் தாராளமாக சுப காரியங்கள் செய்யலாம். குலதெய்வத்தை நினைத்து வழிபட்டு வந்தாலும் சிறந்த பரிகாரமாக அமையும்.

    மேலும் வழக்கமான காரியங்களை சிறப்பாக செய்யலாம். புதிய காரியங்களை மட்டும் தள்ளிப் போடுவது நல்லது. இந்த காலகட்டத்தில் தூரதேச பயணங்களை தவிர்ப்பதும் நல்லது. இடம், மனை தாராளமாக வாங்கலாம்.

    இவ்வாறு பிரபல ஜோதிடர் மடப்புரம் விலக்கு கரு. கருப்பையா விளக்கமளித்துள்ளார்.

    • முருகப்பெருமானுக்கு காலை 7 மணிக்கு சப்தநதி தீர்த்த அபிஷேகம் நடந்தது.
    • ஹோமம் மற்றும் பூர்ணாகுதி, தேவார, நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.

    சென்னிமலை, 

    சென்னிமலை முருகன் கோவிலில் அக்னி நட்சத்திர விழாவை முன்னிட்டு நேற்று நடந்த ஸ்ரீ சுப்பிரமண்ய ஜெப பாரா யணம் ஹோமம் பூஜை களில் ஆயிரக்காணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    சென்னிமலை முருகன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதத்தில் அக்னி நட்சத்திர விழா நடைபெறுவது வழக்கம். இந்த வருடம் 40 -– வது ஆண்டாக நடந்த மூன்று நாள் விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முருகப்பெருமானுக்கு காலை 7 மணிக்கு சப்தநதி தீர்த்த அபிஷேகம் நடந்தது.

    அதை தொடர்ந்து வேதிகா அர்ச்சனையும், 1008 கலச அபிஷேகம் மற்றும் ஸ்ரீ மஹா ஜெய விஜய ஸ்ரீ சுப்பிரமண்ய ஜெப பாராயணம் ஹோமம் மற்றும் பூர்ணாகுதி, தேவார, நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.

    பிறகு பகல் 12 மணிக்கு மேல் மகா தீபாராதனையும், அதைத்தொடர்ந்து உற்சவ மூர்த்தி புறப்பாடும் நடை பெற்றது.

    இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இறுதியில் பக்தர்களுக்கு சுப்புசாமி அருள் பிரசாதம் வழங்கினார், அன்னதான மும் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை அக்னி நட்சத்திர அன்னதான வழிபாட்டு மன்றத்தினர் செய்திருந்தனர். 

    ×