search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொதுமக்களை வாட்டி வதைத்தஅக்னி நட்சத்திரம் இன்றுடன் விடைபெறுகிறது
    X

    பொதுமக்களை வாட்டி வதைத்தஅக்னி நட்சத்திரம் இன்றுடன் விடைபெறுகிறது

    • ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை கோடை காலமாகும்.
    • கத்திரி வெயில் என்று அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்கிய பிறகு, வெயி லின் தாக்கம் மிக கடுமையாக இருக்கும்.

    சேலம்:

    தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை கோடை காலமாகும். இந்த காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும். குறிப்பாக கத்திரி வெயில் என்று அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்கிய பிறகு, வெயி லின் தாக்கம் மிக கடுமையாக இருக்கும். இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கி யதில் இருந்தே தமிழகத்தின் பல நகரங்களில் வெப்பம் அதிகரித்து இருந்தது.

    அக்னி நட்சத்திரம்

    இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்தி ரம் தொடங்கியது. அதன் பிறகு மே மாதம் 8-ந்தே திக்கு மேல் வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. குறிப்பாக மதிய நேரத்தில் வெயில் சுட்டெரித்தது.

    சேலத்தில் அதிகபட்சமாக 106 பாரன்ஹீட் வெப்ப நிலை நிலவியது. இதனால் கூலி வேலைக்கு செல் ேவார், தொழிலா ளர்கள், அலுவலக வேலைக்கு செல்வோர், வாகன ஓட்டி கள், பாதசாரி கள் கடும் அவதிக்குள்ளா கினர். இர வில் கடும் புழுக்கம் ஏற்பட்ட தால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பெரும் பாதிப்புக்குள்ளா கினர்.

    இன்றுடன்...

    இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் இன்றுடன் (29-ந்தேதி) முடிவடைகிறது. இதனால் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறையும் என்று வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×