என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "rescue"
- பூமாண்டம்பாளையம் பகுதியில் கிணற்றில் விழுந்த நாய் உயிருடன் மீட்பு
- இவர் வளர்த்த நாய் அருகில் இருந்த 70 அடி கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.
வேலாயுதம் பாளையம்,
கரூர் மாவட்டம் பூமாண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 50). இவர் வளர்த்த நாய் அருகில் இருந்த 70 அடி கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதுகுறித்து கந்தசாமி வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று நாயை கயிற்றால் கட்டி பத்திரமாக உயிருடன் மீட்டனர்.
- சிவஹரி (14). பாண்டியன் நகரில் உள்ள தனியார் பள்ளியில், 9ம் வகுப்பு படித்து வருகிறார்.
- வீட்டுப்பாடம் எழுதாததால், பள்ளி செல்ல பயந்து, வீட்டுக்கு தெரியாமல் உறவினர் வீட்டுக்கு சென்றதாக போலீசார் கூறினர்.
திருப்பூர்:
திருப்பூர் போயம்பாளையம், நந்தா நகரை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் சிவஹரி (14). பாண்டியன் நகரில் உள்ள தனியார் பள்ளியில், 9ம் வகுப்பு படித்து வருகிறார். சிவஹரி நேற்று அதிகாலை கடைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அக்கம் பக்கத்திலும் உறவினர் வீடுகளிலும் தேடிப் பார்த்தனர் ஆனால் எங்கும் சிறுவனை காணவில்லை. பின்னர் இது குறித்து அனுப்பர்பாளையம் போலீசில் புகார் செய்தனர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மாயமான சிறுவனை தேடி வந்தனர்.
போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் ஈரோடு மாவட்டம், திண்டலிலுள்ள உறவினர் வீட்டுக்கு சிறுவன் சென்றது தெரியவந்தது. திண்டல் சென்று சிறுவனை அழைத்து வந்த போலீசார் உரிய அறிவுரை கூறி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்
வீட்டுப்பாடம் எழுதாததால், பள்ளி செல்ல பயந்து, வீட்டுக்கு தெரியாமல் உறவினர் வீட்டுக்கு சென்றதாக போலீசார் கூறினர்.
- ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி முட்புதரில் சிக்கிய மலைப்பாம்பை பத்திரமாக மீட்டார்.
- பிடிபட்ட மலைப்பாம்பு சுமார் 8 அடி நீளம் இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
மேட்டுப்பாளையம்,
கோவை மாவட்டம் அன்னூரில் இருந்து சத்தி செல்லும் சாலையில் பட்டறை அருகே மலைப்பாம்பு ஒன்று சாலையோர முட்புதரில் சிக்கி தவிப்பதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் பாம்பு பிடி வீரர் சிரஞ்சீவிக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பாம்பு பிடி வீரர் சிரஞ்சீவி ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி முட்புதரில் சிக்கிய மலைப்பாம்பை பத்திரமாக மீட்டார்.
இதுகுறித்து சிறுமுகை வனத்துறையினருக்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். வனத்துறையினரும் அங்கு வந்த மலைப்பாம்பினை மீட்டு பத்திரமாக அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு விட்டனர்.
பிடிபட்ட மலைப்பாம்பு சுமார் 8 அடி நீளம் இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
- சங்கர்குமார் பேர்பெரியான் குப்பம் அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.
- எதிர்பாராத விதமாக அருகில் இருந்த கிணற்றில் தவறி விழுந்தார்.
கடலூர்:
பண்ருட்டி அடுத்த செடுத்தான் குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவரது மகன் சங்கர்குமார் (வயது 17). இவர் பேர்பெரியான் குப்பம் அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று வீட்டிலிருந்து பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு அந்த பகுதியில் உள்ள விவசாய நிலப்பகுதிக்கு சென்றுள்ளார்.
பின்னர் அங்கிருந்து பள்ளிக்கு சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக அருகில் இருந்த கிணற்றில் தவறி விழுந்தார். இதை பார்த்த சக மாணவர்கள் முத்தாண்டிக்குப்பம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கிணற்றுக்குள் தவறி விழுந்த மாணவன் சங்கர்குமாரை பத்திரமாக மீட்டனர்.
- கற்களுக்கு இடையே பசு மாடு சிக்கிக்கொண்டது.
- 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பசுமாடு உயிருடன் மீட்கப்பட்டது.
மதுரை
மதுரை மீனாட்சி பஜார் ஸ்காட் ரோடு பகுதியில் ெரயில்வே தண்டவாளம் அருகே பராமரிப்பு பணிக ளுக்காக 650 கிலோ எடை கொண்ட 25-க்கும் மேற்பட்ட கற்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று காலை அங்கு மேய்ச்சலுக்காக சென்ற ஒரு பசுமாடு அங்கு இருந்த கற்களுக்குள் சிக்கி கொண்டது. உடல் பகுதி முழுவதும் சிக்கிக்கொண்டு வெளியேற முடியாமல் தவித்தது. அங்கிருந்தவர்கள் இதை பார்த்து தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ வந்த தீயணைப்புத் துறை யினர் கற்களுக்குள் சிக்கியபடி தவித்து கொண்டிருந்த பசு மாட்டை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
உயிருடன் பசு மாட்டை மீட்க வேண்டும் என்பதால் அவர்கள் பொறுமையாக செயல்பட வேண்டியிருந்தது. இதனால் மீட்பு பணியில் காலதாமதம் ஏற்பட்டது.
பின்னர் தீயணைப்பு துறையினருடன், பொது மக்களும் இணைந்து அடுக்கி வைக்கப்பட்டிருந்த கற்களை அகற்றினர். 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பசுமாடு உயிருடன் மீட்கப்பட்டது.
பசுமாட்டை உயிருடன் மீட்ட எஸ்.எஸ்.ஓ. பால முருகன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சுப்புராஜ், கார்த்திக், ராமர், பால் பாண்டி, வில்வகுமார் ஆகி யோரை அங்கிருந்தவர்கள் பாராட்டினர்.
- பெற்றோர்கள் சிறுமிகளை தேடினர். அவர்கள் கிடைக்கவில்லை.
- போலீசார் விசாரணை மேற்கொண்டு சிறுமிகளை தேடி வந்தனர்.
கடலூர்:
நெல்லிக்குப்பம் அடுத்த எழுமேடு பகுதியை சேர்ந்த மாணவி 10-ம் வகுப்பு படித்து வருகிறார். அவரது தோழி 15 வயது சிறுமி. இருவரையும் திடீரென்று காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்களது பெற்றோர்கள் சிறுமிகளை தேடினர். அவர்கள் கிடைக்கவில்லை. இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசில் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு சிறுமிகளை தேடி வந்தனர். அப்போது திருவண்ணாமலை அடுத்த சேத்துப்பட்டு பகுதியில் 2 சிறுமிகள் இருந்தது தெரிய வந்தது. பின்னர் நெல்லிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களை பாதுகாப்பாக மீட்டு வந்தனர். வீட்டில் குடும்ப பிரச்சினை இருந்து வந்ததால் ஊரை விட்டு சென்றுவிடலாம் என்று எண்ணிக் கொண்டு 2 சிறுமிகள் சென்றதாக போலீசாருக்கு தெரியவந்தது. இது போன்ற நடவடிக்கைகளில் வருங்காலங்களில் ஈடுபடக்கூடாதென சிறுமிகளிடம் அறிவுரை கூறிய போலீசார், அவர்களது பெற்றோர்களுடன் அனுப்பி வைத்தனர்.
- சேலம் அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வரு கிறார். இவர்களது 2-வது மகன் சரண் (17), அம்மாப்பேட்டை பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
- நேற்று காலை வழக்கம் போல ஜிம்முக்கு செல்வதாக கூறி விட்டு சென்றவர் அங்கு செல்லாமல் திடீரென மாய மானார்.
சேலம்:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள முத்தம்பட்டியை சேர்ந்தவர் மகாலிங்கம் ரத்த பரிசோதனை லேப் வைத்துள்ளார். இவரது மனைவி வசந்தி, இவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வரு கிறார். இவர்களது 2-வது மகன் சரண் (17), அம்மாப்பேட்டை பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
ஏரி
இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல ஜிம்முக்கு செல்வதாக கூறி விட்டு சென்றவர் அங்கு செல்லாமல் திடீரென மாய மானார். பின்னர் போலீசார் அவரது செல்போன் எண்ணை வைத்து அவரை தேடினர். அப்போது கன்னங்குறிச்சி புது ஏரி பகு தியை காட்டியது. தொடர்ந்து போலீசார் அங்கு சென்று பார்த்த போது ஏரிக்கரையில் சர ணின் மோட்டார் சைக்கிள், செல்போன், செருப்பு, ஐ.டி.கார்டு ஆகியவை இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் தீயணைப்பு துறையினர் உதவியுடன் ஏரியில் தேடினர். பிற்பகல் 3 மணி யளவில் சரணின் உடலை தீயணைப்பு வீரர்கள் பிண மாக மீட்டு பிரேத பரிசோ தனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் இன்று ஒப்படைக்கப்பட உள்ளது. இதையொட்டி அரசு ஆஸ்பத்திரியில் உற வினர்கள் குவிந்துள்ளதால் அந்த பகுதியில் சோகம் நிலவி வருகிறது.
இதற்கிடையே போலீசார் நடத்திய விசாரணையில், சரண் சரியாக படிக்காத தால் சரணை மன வேதனை யில் இருந்த சரண் ஏரியில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மேலும் அவரது செல்போனை ஆய்வு செய்த போது அதில் 77 தவறிய அழைப்புகள் கிடந்தன. ஆனால் அவரது செல்போன் பாஸ்வேர்டு மூலம் லாக் செய்யப்பட்டிருந்ததால் யார், யாரிடம் இருந்து போன் வந்தது. கடைசியாக யாரிடம் பேசினார் என்ற விவரத்தை கண்டு பிடிக்க முடியவில்லை. சரணின் செல் போனில் 77 தவறிய அழைப்புகள் கிடந்ததால் சரணை காணாததால் அவ ரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அவருக்கு போன் செய்திருக்கலாம் என்று தெரிகிறது.
செல்போன் ஆய்வு
மேலும் இன்று அந்த செல்போனை திறந்து பார்த்து ஆய்வு செய்ய போலீ சார் முடிவு செய்துள்ளனர். அப்போது தான் யார், யாரி டம் பேசி னார், யார் யாரிடம் இருந்து போன் வந்தது என்ற முழு விவரம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்த னர். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஐ.எம்.இ.ஐ நம்பர் மூலம் உறுதிப்படுத்திய பிறகு போலீசார் மீட்டனர்.
- சந்தேகப்படும் படி யாராவது செல்போனை விற்க வந்தால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவும்.
தஞ்சாவூர்:
தஞ்சை பழைய பஸ் நிலையம், ரெயில் நிலையம், பெரிய கோவில் உள்பட மேற்கு போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் காணாமல், திருடு போன செல்போன்களை கண்டுபிடிக்க சம்பந்தப்பட்ட நபர்கள் மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் உத்தரவின் பேரில் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சந்திரா தலைமையிலான போலீசார் காணாமல் மற்றும் திருடு போன செல்போன்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
மாயமான செல்போ ன்களின் ஐ.எம்.இ.ஐ நம்பர் மூலம் தேடும் பணியை தொடங்கினர். மேலும் பல்வேறு நவீன தொழில்நு ட்பத்தை பயன்படுத்தியும் செல்போனை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினர்.
அப்போது சம்பந்தப்பட்ட செல்போன்கள் தஞ்சை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் சிலர் ஏற்கனவே கடைகளில் வாங்கி விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த கடைகளுக்கு சென்று செல்போன்களை போலீசார் மீட்டனர். சந்தேகப்படும் படி யாராவது செல்போனை விற்க வந்தால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தினர்.
மேலும் சில செல்போன்கள் தஞ்சை மற்றும் சுற்று வட்டாரங்களில் உள்ள பகுதிகளை சேர்ந்த சிலர் பயன்படுத்தியதும் தெரியவந்தது. அதனை ஐ.எம்.இ.ஐ நம்பர் மூலம் உறுதிப்படுத்திய பிறகு போலீசார் மீட்டனர்.
சில செல்போன்களை கீழே கிடந்ததாக பொதுமக்கள் சிலர் போலீசிடம் ஒப்படைத்தனர். இவ்வாறாக பொதுமக்களால் தவறவிட்டு, புகார் பெற்று ரூ.8 லட்சம் மதிப்புள்ள 55 செல்போன்களை போலீசார் கண்டுபிடித்து மீட்டனர்.
இன்று அந்த செல்போன்களை உரியவர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் சந்திரா முன்னிலையில் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா சம்பந்தப்பட்டவர்களிடம் செல்போன்களை ஒப்படைத்தார்.
அப்போது அவர், கஷ்டப்பட்டு செல்போன்கள் வாங்குகிறீர்கள். அதனை சரியான முறையில் பாதுகாத்து வைத்துக் கொள்ளுங்கள். கூட்ட நெரிசல் அதிகம் உள்ள இடங்களில் கவனமாக செல்போன் மட்டுமின்றி உடைமைகளை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தினார்.
- காப்பி தோட்டத்தில் உள்ள கிணற்றில் நேற்று மாலை காட்டெருமை ஒன்று தவறி விழுந்து விட்டது.
- வனத்துறை ஊழியர்கள், காட்டெருமையை மேலே கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டனர்.
சேலம்:
சேலம் மாவட்டம ஏற்காடு டவுன் பகுதிக்கு அருகில் உள்ள தனியா ருக்கு சொந்தமான காப்பி தோட்டத்தில் உள்ள கிணற்றில் நேற்று மாலை காட்டெ ருமை ஒன்று தவறி விழுந்து விட்டது. மேலே வர வழி யில்லாமல் தண்ணீரில் தத்தளித்து.இதை பார்த்த காப்பி தோட்ட பணியாளர்கள் வனத்துறை யினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை ஊழியர்கள், காட்டெருமையை மேலே கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டனர். பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் கிணற்றின் ஒரு பகுதியை வெட்டி எடுத்து, காட்டெருமை மேலே வர வழி ஏற்படுத்தினர். பின்னர் இதை பயன்படுத்தி காட்டெருமை மேலே வந்தது. வனத்துறையினர் அதனை வனப்பகுதிக்கு விரட்டினர்.
- சந்தியா அதே பகுதியில் உள்ள சுமார் 40 அடி அழமுள்ள தரைக் கிணற்றில் தவறி விழுந்தார்.
- தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, இளம் பெண்ணை பாதுகாப்பாக மீட்டனர்.
கடலூர்:
விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை பழைய நெசவாளர் தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகள் சந்தியா (வயது 17).இவர் அதே பகுதியில் உள்ள மகாலட்சுமி என்பருக்கு சொந்தமான சுமார் 40 அடி அழமுள்ள தரைக் கிணற்றில் தவறி விழுந்தார். இது குறித்த தகவலின் பேரில், மங்கலம்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, இளம் பெண்ணை பாதுகாப்பாக மீட்டனர்.
- சாலையில் சென்ற ஒரு பஸ்சில் 21 பேர் பயணித்தனர்.
- சிறிய அளவில் காயம் அடைந்த 8 பேருக்கு சாதாரண பிரிவில் சிகிச்சை தரப்பட்டது.
கோவை,
கோவை ஆர்.டி.ஓ அலுவலக பிரதான சாலையில் ஒரு பஸ் வேகமாக வந்தது. அதில் 21 பேர் பயணித்தனர். அப்போது மோட்டார் சைக்கிள் குறுக்கே வந்தது. எனவே அந்த பஸ் சாலையோர மின்கம்பத்தில் மோதியது. இதில் பயணிகள் காயம் அடைந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தது. அதில் இருந்த ஊழியர்கள் மின்னல் வேகத்தில் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
இதன்ஒருபகுதியாக படுகாயத்துடன் இருந்த 12 பேரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவர்களில் 4 பேருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். சிறிய அளவில் காயம் அடைந்த 8 பேருக்கு சாதாரண பிரிவில் சிகிச்சை தரப்பட்டது.
கோவை ஆர்.டி.ஓ பிரதான சாலையில் விபத்து பற்றி தெரிய வந்ததும் அங்கு பொதுமக்கள் திரண்டு வந்தனர். அப்போது தான் அவர்களுக்கு சாலை விபத்து ஒத்திகை பயிற்சி என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்கள் நிம்மதி பெருமூச்சுடன் கலைந்து சென்றனர்.
ராமகிருஷ்ணா மருத்துவமனை நடத்திய விபத்து ஒத்திகை சோதனையில் மாநகர போலீஸ் துணை கமிஷனர் உள்ளிட்ட பலர் நேரடியாக பங்கேற்று பார்வையிட்டனர்.
இதுகுறித்து கோவை ராமகிருஷ்ணா ஆஸ்பத்திரி நிர்வாகிகள் கூறுகையில், பொதுமக்கள் மத்தியில் சாலைவிபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது என்று முடிவு செய்தோம். இதற்காக 21 பேர் பயணிகள் வேடத்துக்கு தேர்வு செய்யப்பட்டனர். அதன்பிறகு அவர்கள் ஒரு பஸ்சில் அமர வைக்கப்பட்டு மின்கம்பத்தில் மோதுவது போல ஒத்திகை சோதனை நடத்தப்பட்டது.
கோவையில் விபத்து ஏற்படும்போது பொது மக்கள் எப்படி செயல்பட வேண்டும், படுகாயம் அடைந்த வருக்கான முதலுதவி சிகிச்சை, தீவிர சிகிச்சை பிரிவில் மேற்கொள்ள வேண்டிய மருத்துவ நடைமுறைகள் ஆகியவை தொடர்பாக பொதுமக்கள் மற்றும் போலீசார் அறியும்வகையில் விழிப்புணர்வு ஒத்திகை பயிற்சிகள் நடத்தப்பட்டதாக தெரி வித்தனர்.
- சேலம் குகை பகுதியில் வீட்டில் இருந்து மாயமான சிறுமி மாய மானார்.
- இது குறித்து செவ்வாய் பேட்டை போலீசில் புகார் செய்தனர். போலீசார் தீவிர விசாரணை மேற் கொண்ட தில் , அந்த சிறுமி கொண்ட லாம்பட்டியில் உள்ள தனது பாட்டி வீட்டில் இருப்பது தெரியவந்தது.
சேலம்:
சேலம் குகை பகுதியை சேர்ந்த ஒரு தம்பதியின் 13 வயது மகள், அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று இரவு 9 மணி அளவில் வீட்டில் இருந்த அந்த சிறுமி திடீரென மாய மானார். இதனால் பதட்டம அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அக்கம் பக்கம் முழுவதும் தேடினர். எங்கும் அந்த சிறுமி கிடைக்காததால் இது குறித்து செவ்வாய் பேட்டை போலீசில் புகார் செய்தனர். போலீசார் தீவிர விசாரணை மேற் கொண்ட தில் , அந்த சிறுமி கொண்ட லாம்பட்டியில் உள்ள தனது பாட்டி வீட்டில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, இன்று அதிகாலையில், அந்த சிறுமியை கொண்டலாம்பட் டியில் உள்ள அவரது பாட்டி வீட்டில் இருந்து போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்