search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளிக்கு செல்ல பயந்து வீட்டை விட்டு வெளியேறிய 9-ம் வகுப்பு மாணவன் - திண்டுக்கல்லில் போலீசார் மீட்டனர்
    X

    கோப்பு படம்.

    பள்ளிக்கு செல்ல பயந்து வீட்டை விட்டு வெளியேறிய 9-ம் வகுப்பு மாணவன் - திண்டுக்கல்லில் போலீசார் மீட்டனர்

    • சிவஹரி (14). பாண்டியன் நகரில் உள்ள தனியார் பள்ளியில், 9ம் வகுப்பு படித்து வருகிறார்.
    • வீட்டுப்பாடம் எழுதாததால், பள்ளி செல்ல பயந்து, வீட்டுக்கு தெரியாமல் உறவினர் வீட்டுக்கு சென்றதாக போலீசார் கூறினர்.

    திருப்பூர்:

    திருப்பூர் போயம்பாளையம், நந்தா நகரை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் சிவஹரி (14). பாண்டியன் நகரில் உள்ள தனியார் பள்ளியில், 9ம் வகுப்பு படித்து வருகிறார். சிவஹரி நேற்று அதிகாலை கடைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அக்கம் பக்கத்திலும் உறவினர் வீடுகளிலும் தேடிப் பார்த்தனர் ஆனால் எங்கும் சிறுவனை காணவில்லை. பின்னர் இது குறித்து அனுப்பர்பாளையம் போலீசில் புகார் செய்தனர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மாயமான சிறுவனை தேடி வந்தனர்.

    போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் ஈரோடு மாவட்டம், திண்டலிலுள்ள உறவினர் வீட்டுக்கு சிறுவன் சென்றது தெரியவந்தது. திண்டல் சென்று சிறுவனை அழைத்து வந்த போலீசார் உரிய அறிவுரை கூறி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்

    வீட்டுப்பாடம் எழுதாததால், பள்ளி செல்ல பயந்து, வீட்டுக்கு தெரியாமல் உறவினர் வீட்டுக்கு சென்றதாக போலீசார் கூறினர்.

    Next Story
    ×