search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "reception"

    • சமூக சேவை, சுற்றுச் சூழல் பாதுகாப்பு பிரிவுகளில் 2023-ம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கப்பட உள்ளன.
    • விருதுக்கு விண்ணப்பம் மற்றும் பரிந்துரைகளை அனுப்ப இம்மாதம் 31-ந்தேதி கடைசி நாள் ஆகும்.

    சேலம்:

    தமிழக கவர்னர் மாளிகை சார்பில் சமூக சேவை, சுற்றுச் சூழல் பாதுகாப்பு பிரிவுகளில் 2023-ம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கப்பட உள்ளன. தேர்வு செய்யப்படுவோருக்கு 2024 குடியரசு தினத்தன்று கவர்னர் மாளிகையில் பாராட்டு சான்று மற்றும் ரொக்கம் பரிசு வழங்கப்படும். விருதுக்கு விண்ணப்பம் மற்றும் பரிந்துரைகளை அனுப்ப இம்மாதம் 31-ந்தேதி கடைசி நாள் ஆகும்.

    ஒவ்வொரு பிரிவிலும் ஒரு நிறுவனம் மற்றும் 3 தனி நபர் தேர்வு செய்யப்படுவர். நிறுவனத்துக்கு விருதுடன் ரூ.5 லட்சம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். தனி நபருக்கு விருதுடன் 2 லட்சம் ரூபாய் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.

    தனி நபர்கள், அரசு சாரா நிறுவனங்கள், மற்றும் நிறுவனங்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம். அரசு செயலர் அல்லது அதற்கு கீழ் உள்ள அதிகாரி, மத்திய அரசு இணை செயலர் அல்லது அதற்கு மேல் நிலையில் உள்ள அதிகாரி, அதே நிலையில் ஓய்வு பெற்றவர்கள், பல்கலைக்கழக துணை வேந்தர்கள், பத்ம விருது பெற்றவர்கள் மாவட்ட கலெக்டர்கள் பரிந்துரைக்கலாம்.

    விண்ணப்பம் மற்றும் பரிந்துரைகளை www.tnrajbhavan.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்ய விண்ணப்பப் படி வத்தை வருகிற 31-ந்தே திக்குள் கவர்னரின் துணை செயலர் மற்றும் கட்டுப்பாட்டு அலுவலர், கவர்னர் செய லகம் சென்னை -600022 என்ற முக வரிக்கு அனு ப்ப வேண்டும்.

    • மதுரையில் முதல்-அமைச்சருக்கு அளிக்கப்படும் வரவேற்பில் தமிழகமே திரும்பி பார்க்க வேண்டும்.
    • அமைச்சர் மூர்த்தி கூட்டத்தில் பேசினார்.

    மதுரை

    மதுரை பசுமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மதுரை வடக்கு, தெற்கு, மாநகர் ஆகிய 3 மாவட்டங்களில் தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாநகர் மாவட்ட செயலாளர் கோ.தளபதி எம்.எல்.ஏ. தலைமையில், மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மணிமாறன் முன்னிலையில் நடந்தது.

    இந்த கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு பேசியதாவது:-

    வருகிற 15-ந்தேதி மதுரை யில் உலகத்தரம் வாய்ந்த நமது தலைவர் கலைஞர் பெயரால் அமைக்கப்பட்ட நூலகத்தை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க வருகிறார். இது அரசு விழா என்பதால் வரவேற்பு நிகழ்ச்சியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்க வேண்டும். மதுரை விமான நிலையத்தில் இருந்து விரகனூர் ரவுண்டானா வரை மதுரை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் அணி வகுத்து வரவேற்க வேண்டும்.

    மதுரை மாநகர் பகுதிகளில் நூலகம் வரை மாநகர் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் வரவேற்பு அளிப்பார்கள். இந்த வரவேற்பு நிகழ்ச்சியில்

    50-க்கும் மேற்பட்ட கலை நிகழ்ச்சிகளுடன் வரவேற்பு அளிக்கப்படுகிறது. இந்த வரவேற்பை மதுரை மட்டு மல்லாது தமிழகமே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு இருக்க வேண்டும். வருகிற பாராளு மன்றத் தேர்தலில் எதிரொ லிக்கும் வகையில் நாம் எழுச்சியுடன் வரவேற்க வேண்டும். 40-க்கு 40 நாம் வெற்றி பெற்ற வேண்டும்.

    மேலும் மதுரை, விருது நகர், தேனி ஆகிய 3 பாராளு மன்ற தொகுதியை தி.மு.க. வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெற செய்ய வேண்டும். அதற்காக தலைமையிடம் இந்த 3 தொகுதியை தி.மு.க.வுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துவோம்.

    அது நமது உரிமை, இருப்பினும் தலைமை அறிவிக்கும் வேட்பாளரை வெற்றி பெற செய்வோம் என்று தெரிவித்தார். தமிழகத்தில் நாம் பெரும் வெற்றி இந்திய பிரதமர் யார் என்பதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிர்ணயிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

    மதுரையில் நடந்த மகளிர் சுய உதவி குழுவினருக்கு நலத்திட்ட உதவிகள் 72 ஆயிரம் பேருக்கு வழங்கி னோம். பிற மாவட்டங்களில் இல்லாத அளவு அந்த நிகழ்ச்சி இருந்தது என்று நாம் பாராட்டப் பெற்றோம். அதேபோல் விரைவில் ஒரு லட்சம் பேர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் உயர்மட்ட செயல் திட்ட குழு உறுப்பினர் முன்னாள் அமைச்சர் பொன் முத்து ராமலிங்கம், மாநில தணிக்கை குழு உறுப்பினர் வேலுச்சாமி, சோழவந்தான் எம்.எல்.ஏ. வெங்க டேசன், முன்னாள் மேயர் குழந்தை வேலு, மாவட்ட அவைத் தலைவர்கள் பாலசுப்பிர மணியன், ஒச்சு பாலு, நாக ராஜன், மாவட்ட பொரு ளாளர் சோமசுந்தர பாண்டி யன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் கரு.தியாகராஜன், தனசெல்வம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் முத்துராமலிங்கம், லதா அதியமான்.

    மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஜி.பி.ராஜா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சூரியகலா கலா நிதி, மண்டல தலைவர்கள் வாசுகி சசிகுமார், சுவிதா விமல், சரவண புவனேஸ்வரி, பகுதி செயலாளர்கள் மருதுபாண்டி, சசிகுமார், ஈஸ்வரன், கிருஷ்ணபாண்டி, ராமமூர்த்தி.

    ஒன்றிய சேர்மன்கள் வீரராகவன், வேட்டையன், பேரூராட்சி தலைவர்கள் வாடிப்பட்டி பால்பாண்டி, ரேணுகா ஈஸ்வரி, ஜெய ராமன், நகர் மன்ற தலைவர்கள் ரம்யா முத்துக்குமார், முகமது யாசின், சுகாதார குழு தலைவர் ஜெயராஜ் ஒன்றிய செயலாளர்கள் ரகுபதி, சிறைச்செல்வம், பால ராஜேந்திரன், தனசேகர், தன்ராஜ், பசும்பொன் மாறன்.

    கவுன்சிலர்கள் கருப்புசாமி, வழக்கறிஞர் குட்டி என்ற ராஜரத்தினம், காளிதாஸ், வாசு, செந்தா மரைக்கண்ணன், உசிலை சிவா, சுதன், ஆழ்வார், அணி அமைப்பா ளர்கள் விமல், வக்கீல் கலாநிதி, வட்ட செயலாளர் மகேந்திரன், புதூர் வேலு, ராஜேந்திரன், நெல்பேட்டை லயன் சீனிவாசன், நேதாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 500 மதுக்கடைகளை மூடும் முடிவுக்கு மனிதநேய மக்கள் கட்சி வரவேற்றுள்ளது.
    • முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

    ராமநாதபுரம்

    மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா எம். எல். ஏ. கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் முதற்கட்டமாக 500 மதுக்கடைகள் மூடப்படும் என சட்டமன்றப் பேரவை யில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் அறிவித்தார். அதன் அடிப்படையில் கடந்த ஏப்ரல் மாதம் 500 மது கடைகளைக் கண்டறிந்து அதனை மூட அரசாணை வெளியிடப்பட்டது.

    அதன் அடிப்படையில் 500 மதுக்கடைகளை மூட தமிழக அரசு உத்தரவு வெளியிட்டுள்ளதை மனிதநேய மக்கள் கட்சி வரவேற்கிறது. இதற்காக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

    தற்போது மூடப்பட்டுள்ள 500 மது கடைகள் மட்டுமின்றி தமிழகம் மதுவில்லா மாநிலமாகத் திகழ முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மதுக்கடைகள் மூடப்படும் பகுதிகளில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்பட்டால் அந்த விற்பனையை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்றும் மனித நேய மக்கள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அரசு பள்ளியில் மாணவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி முருகானந்தம் மாணவ-மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கினார்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் உள்ள பஞ்சாயத்து யூனியன் மேற்கு தொடக்கப்பள்ளியில் 1 முதல் 5 வரை மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கியது.

    பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு பேரூராட்சி மன்ற தலைவர் ஷாஜஹான் பானு, ஜவஹர் அலிகான் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. ரோட்டரி சங்க தலைவர் திருநாவுக்கரசு, வார்டு உறுப்பினர்கள் சல்மா பீவி, மஹ்ஜபின் சல்மா பீவி முன்னிலை வகித்தனர்.

    பெற்றோர் ஆசிரிய கழகத் தலைவர் ஜெயந்தன் அனைவரையும் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி முருகானந்தம் மாணவ-மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கினார்.

    பழைய மாணவர்கள் கல்வியின் முக்கியத்த்துவம் குறித்த வாசகம் அடங்கிய பதாதைகளை ஏந்தி ஊர்வலம் வந்தனர். பள்ளி மேலாண்மைக்குழு தலைவி ரம்யா நன்றி கூறினார்.

    • (டி.என்.பி.எஸ்.சி) சார்பில் தமிழக நீர்வள துறையில் உள்ள 40 பணியிடங்க ளுக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
    • இதில் நீர்வள ஆதார துறையில் உதவியாளர் ஜியால ஜிஸ்ட்-11 பேர், கனிமம் துறையில் உதவியாளர் ஜியாலஜிஸ்ட்- 29 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    சேலம்:

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) சார்பில் தமிழக நீர்வள துறையில் உள்ள 40 பணியிடங்க ளுக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் நீர்வள ஆதார துறையில் உதவியாளர் ஜியால ஜிஸ்ட்-11 பேர், கனிமம் துறையில் உதவியாளர் ஜியாலஜிஸ்ட்- 29 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    கல்வி தகுதி ஜியாலஜி, அப்ளைடு ஜியாலஜி, ைஹட்ரோ ஜியாலஜி பிரிவில் எம்.எஸ்.சி. படித்து முடித்திருக்க வேண்டும். வயது 1.7.2023 அடிப்ப டையில் பொதுப்பிரிவினர் 18-32 வயதுக்குள் இருக்க வேண்டும். மற்ற பிரிவினருக்கு வயது உச்சவரம்பு இல்லை. விண்ணப்பதாரர்கள் எழுத்துத் ேதர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

    விண்ணப்பிக்க கடைசிநாள் வருகிற 23-ந்தேதி ஆகும். விண்ணப்பதாரர்கள் டி.என்.பி.எஸ்.சி. இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • தமிழகத்தில் அரசு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின்கீழ் 54 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 3 இணைப்பு கல்லூரிகள் உள்ளன.
    • இவற்றில் தொழில்நுட்ப பட்டய படிப்புகளுக்கு 19120 இடங்கள் உள்ளன.

    சேலம்:

    தமிழகத்தில் அரசு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின்கீழ் 54 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 3 இணைப்பு கல்லூரிகள் உள்ளன. இவற்றில் தொழில்நுட்ப பட்டய படிப்புகளுக்கு 19120 இடங்கள் உள்ளன.

    விண்ணப்பதிவு தொடங்கியது

    இதில் முதலாமாண்டு மற்றும் பகுதிநேர படிப்புக ளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு இணைய வழியில் நேற்று தொடங்கியது.

    இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக ரூ.150 நிர்ணயிக்கப்ப ட்டுள்ளது. எஸ்.சி.,எஸ்.டி. பிரிவின ருக்கு கட்டண மில்லை. விருப்பமுள்ள வர்கள் http://www.tnpoly.in/ எனும் வலைதளம் வரியாக வருகிற ஜூன் 9-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தகுதி பெற்ற மாணவர்களுக்கான தர வரிசைப் பட்டியல், அந்தந்த பாலிடெக்னிக் கல்லூரி களில் தயார் செய்யப்பட்டு வெளியிடப்படும்.

    கூடுதல் விவரங்களை மேற்கண்ட இணைய தளத்தில் அறிந்து கொள்ள லாம் என்று தொழில் நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

    • இருப்பிடம் திரும்பிய வீர அழகருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • சுவாமி தூக்கி வந்த பக்தர்களுக்கு உணவு வழங்கி உபசரித்தனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வைகைஆற்று தென்கிழக்கு பகுதியில் வீர அழகர்கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழா 10 நாட்கள் நடைபெறும். கடந்த 1-ந்தேதி தொடங்கிய திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான வைகை ஆற்றில் 5-ந்தேதி வீர அழகர் இறங்கினார்.

    அதைதொடர்ந்து கிராமத்தார் மண்டகப்படி, கோர்ட்டார் மண்டகப்படி, கடைதெரு மண்டகப் படிகளில் எழுந்தருளி கருட வாகனம் மற்றும் பல்லக்கில் மானாமதுரையில் உள்ள பல்வேறு பகுதிக்கு சென்று வீர அழகர் கோவிலுக்கு திரும்பினார்.

    இந்த விழாவில் முதல்நாளில் வீர அழகர் நகராட்சி அலுவலகம், ஆற்றில் இறங்குவதற்கு முன்பு போலீஸ் நிலையம், ஆற்றில் இறங்கும் அன்று சார்-குற்றவியல் நீதிமன்றம் சார்பில் நடைபெறும் கோர்ட்டார் மண்டகப்படி, அதை தொடர்ந்து மானாமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் மெயின் கடைவீதியில் எழுந்தருளும் நிகழ்ச்சி பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

    அரசுஅலுவலகத்திற்கு வீரஅழகர் வரும்போது நகராட்சி தலைவர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அனைத்துத்துறை அதிகாரிகள் வீர அழகரை வணங்கி வரவேற்பு கொடுத்தனர். சுவாமி தூக்கி வந்த பக்தர்களுக்கு உணவு வழங்கி உபசரித்தனர்.

    • டெல்லி போராட்டத்தில் பங்கேற்று திரும்பிய விவசாய சங்க தலைவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • பிரதமரின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி பாராளுமன்றம் நோக்கி நீதி கேட்டு நெடும் பயணம் சென்றனர்.

    சோழவந்தான்

    டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் பிரதமரின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி பாராளுமன்றம் நோக்கி நீதி கேட்டு நெடும் பயணம் சென்றனர். இதற்கு விவசாயிகள் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமை தாங்கினார். இதில் கலந்துகொண்ட சோழவந்தான் அருகே விக்கிரமங்கலத்தை அடுத்துள்ள முதலைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் சங்க மாநில கவுரவத் தலைவர் எம்.பி. ராமன் கிராமத்திற்கு திரும்பினார். அவரை முதலைக்குளம் கிராம மக்கள், விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினர் வரவேற்றனர். இதில் திருமங்கலம் பாசன கால்வாய் உறுப்பினர்கள் ஜெயக்குமார், சிவஅறிவழகன், ம.தி.மு.க. அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் முனியாண்டி, அ.ம.மு.க. ஒன்றிய செயலாளர் ராமன், கிளைச்செயலாளர் தவமணி, தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் மூக்கன், தொழிலதிபர் பால்பாண்டி, ஊராட்சி செயலாளர் பாண்டி, காங்கிரஸ் நிர்வாகி செல்லசாமி, விவசாயிகள் பால்சாமி, பாண்டி, ஒச்சு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சென்னை - முதல் குமரி வரை பெண் போலீசார் சைக்கிள் பேரணி
    • திருமாந்துறை சுங்கச்சாவடியில் வரவேற்பு

    பெரம்பலூர்,

    தமிழ்நாடு காவல்துறையில் பெண்களின் 50-வது ஆண்டு பொன் விழாவை கொண்டாடும் விதமாக சென்னையில் இருந்து கன்னியாகுமரியை நோக்கி 100-க்கும் மேற்பட்ட பெண் போலீசார் சைக்கிளில் பேரணியாக புறப்பட்டனர். நேற்று மாலை பெரம்பலூர் மாவட்டத்துக்கு வருகை தந்த அவர்களை திருமாந்துறை சுங்கச்சாவடியில் மங்களமேடு போலீசார் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் அவர்கள் அருகே உள்ள தனியார் பள்ளியில் இரவு தங்கி ஓய்வெடுத்தனர். இன்று (செவ்வாய்க்கிழமை) காலை அவர்கள் திருச்சிக்கு புறப்பட்டு செல்கின்றனர்.


    • மாவட்ட ஊராட்சி குழு தலைவர் இல்ல திருமண வரவேற்பில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.
    • முன்னாள் அமைச்சர்க ளுக்கும், நிர்வாகிகளுக்கும் பொன்மணி பாஸ்கரன் நன்றி கூறினார்.

    நெற்குப்பை 

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ் புதூர் ஒன்றியம் பொன்னா டப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பொன்மணி பாஸ்கரன்.இவர் அ.திமு.க. மாவட்ட பேரவை துணைச் செயலாள ராகவும் பதவி வகித்து வருகிறார்.

    இவரது மகள் ஹரிப்பிரியாவுக்கும், மணமகன் ஜெயக்கு மாருக்கும் கடந்த பிப்ரவரி 12-ந் தேதி சென்னையில் திருமணம் நடந்தது. அதனைத் தொடர்ந்து தனது சொந்த கிராமத்தில் பிப்ரவரி 26-ந் தேதி நடந்த வரவேற்பு விழாவில் பங்கேற்க அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், முன்னாள் அமைச் சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

    அந்த சமயத்தில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரசாரம் நடந்ததால் வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்க மாவட்ட செயலாளர் பி.ஆர். செந்தில்நாதன் மற்றும் நிர்வாகிகள் அழைப்பு விடுத்திருந்தனர்.

    கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்த எடப்பாடி பழனிச்சாமி குன்னத்தூரில் உள்ள ஓ.வி.எம். கார்டனில் அமைக்கப்பட்டிருந்த வரவேற்பு பந்தலில் மாவட்ட குழு சேர்மன் முன்னிலையில் மணமக்களை நேரில் சென்று வாழ்த்தினார்.

    இதில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ராஜேந்திர பாலாஜி, பாஸ்கரன், விஜய பாஸ்கர், செல்லூர் ராஜூ, நத்தம் விசுவநாதன், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. மற்றும் மாவட்ட ஒன்றிய, பேரூர், நிர்வாகிகள் உறுப்பி னர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

    திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்று மண மக்களை வாழ்த்திய எடப்பாடி பழனிச்சாமிக்கும், முன்னாள் அமைச்சர்க ளுக்கும், நிர்வாகிகளுக்கும் பொன்மணி பாஸ்கரன் நன்றி கூறினார்.

    • கீழடிக்கு வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கிராமிய கலைநிகழ்ச்சியுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் தி.மு.க.வினர் திரண்டனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தொகுதியில் மதுரை-ராமேசுவரம் சாலையில் உள்ள கீழடியில் உலகதரம் வாய்ந்த சுமார் ரூ.18.43 கோடி செலவில் அமைக்கப்பட்ட அகழ்வாராய்ச்சி அருங்காட்சியகம் திறப்பு விழா நடந்தது.

    இதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார். தனது செல்போனில் செல்பி படம் எடுத்து கொண்டார்.

    முன்னதாக கீழடி வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்கும் நிகழ்ச்சியில் நான்கு வழிச்சாலையின் இருபுறமும் அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தலைமையில் சிவகங்கை மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

    கீழடி கிராமத்துக்கு செல்லும் வழியில் கிராமிய பாடல்கள் பாடியும், கரகம் ஆடியும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதில் மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி ரவிக்குமார், மாவட்ட துணை செயலாளர்- திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், மானாமதுரை முன்னாள் எம்.எல்.ஏ.- நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி, இளையான்குடி முன்னாள் எம்.எல்.ஏ. சுப.மதியரசன், இளையான்குடி பேரூராட்சி தலைவர் நஜிமுதீன், மானாமதுரை ஒன்றிய தலைவர் லதா அண்ணாதுரை, ஒன்றிய கவுன்சிலர் வழக்கறிஞர் அண்ணாதுரை, நகராட்சி, யூனியன் துணைத் தலைவர்கள் பாலசுந்தரம், முத்துசாமி, கீழடி ஊராட்சி மன்ற தலைவர் வெங்கட சுப்பிரமணியன் மற்றும் தி.மு.க. தொண்டர்கள், கிராம மக்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு அளித்தனர்.

    • உதயநிதி ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிப்பது குறித்து தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை நடந்தது.
    • மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கேட்டுகடையில் தி.மு.க. ஒன்றியம் மற்றும் பேரூர் நிர்வாகிகள் இந்த கூட்டம் நடைபெற்றது.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கேட்டுகடையில் தி.மு.க. ஒன்றியம் மற்றும் பேரூர் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன் ஆகியோர் தலைமை தாங்கினர். பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், ஒன்றிய அவை தலைவர் நடராஜன், பேரூர் செயலாளர்கள் ரகுபதி, மனோகரவேல் பாண்டியன், பேரூராட்சி சேர்மன் ரேணுகாஈஸ்வரி கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி துணை சேர்மன் சுவாமிநாதன் வரவேற்று பேசினார்.

    இந்த கூட்டத்தில் மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழங்க மதுரை வருவதையொட்டி அவருக்கு அலங்காநல்லூர் ஒன்றியம் மற்றும் பேரூர் தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் ஒன்றிய சேர்மன் பஞ்சு, துணை சேர்மன் சங்கீதா மணிமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் இளைஞரணி சந்தனகருப்பு, மாணவரணி பிரதாப் ஆகியோர் நன்றி கூறினர்.

    ×