search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊராட்சி குழு"

    • மீனவர்களுக்கு கூடுதல் டீசல் விற்பனை நிலையங்கள் அமைக்கப்படும் என்று அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.
    • மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ரவிச்சந்திர ராமவன்னி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம்

    ராமேசுவரம் அருகே உள்ள குந்துகாலில் தமிழ் நாடு மீன் வளர்ச்சி கழகம் மூலம் மீனவர்களுக்கு டீசல் விற்பனை நிலையம் திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை தாங்கி னார். காதர்பாட்ஷா முத்து ராமலிங்கம் எம்.எல்.ஏ. முன்னிலை வகித் தார். தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவர் கவுதமன் இந்தியன் ஆயில் சார்பில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட டீசல் விற்பனை மையத்தை திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் மீன் வளர்ச்சிக்கழகம் மூலம் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுடன் இணைந்து மீனவர்களுக்கு தேவையான டீசல் விற்பனை நிலையம் அமைக்கும் திட்டம் விரிவு படுத்தப்படவுள்ளன. அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்பொழுது செயல்பட்டு வரும் டீசல் விற்பனை நிலையங்களுடன் கூடுதலாக தொண்டி மற்றும் பெரியப்பட்டினம் பகுதியில் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    தற்பொழுது டீசல் விற்பனை மையத்தில் டீசல் மட்டும் விற்பனை செய்யப் பட்டு வருகிறது. மீன வர்களின் கோரிக்கை கேற்ப பெட்ரோல் விற்பனையும் செயல்படுத்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்திடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதனால் வரக்கூடிய வருமானம் மீன் வளர்ச்சி கழகத்திற்கு பயனுள்ளதாக அமையும். அதேபோல் ராமநாதபுரத்தில் எம்.எல்.ஏ. கோரிக்கைகேற்ப தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகம் மூலம் மீன் விற்பனை அங்காடி அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அரசின் திட்டங்களை மீனவ மக்கள் பெற்று பயன் பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன தலைமை மேலாளர் மாரீசுவரி, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர் பிரபா வதி, தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக முதுநிலை மேலாளர் ரவிச்சந்திரன், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக உதவி மேலாளர்கள் செல்வ லெட்சுமி, தமிழ்மாறன் , இந்தியன் ஆயில் கார்ப்ப ரேஷன் நிறுவன உதவி மேலாளர் பரத், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ரவிச்சந்திர ராமவன்னி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாவட்ட ஊராட்சி குழு வலியுறுத்தல்
    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட ஊராட்சிகுழுவின் சாதாரண கூட்டம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

    மாவட்ட ஊராட்சிக்குழு துணை தலைவர் நாகராஜ், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளில் உள்ள நூலகங்களுக்கும் முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் நூறாவது பிறந்த தினத்தை முன்னிட்டு 'முத்தமிழ் அறிஞர் டாக்டர்.கலைஞர் நினைவு நூலகம்' என பெயர் சூட்ட தமிழக அரசிடம் கோரிக்கை வைப்பது.

    கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி வழிகாட்டுதலின்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் உள்ள நூலகம் சிறப்பாக செயல்படும் வண்ணம் நூலகர் ஊதியம், அரசு போட்டி தேர்வு புத்தகங்கள் ஆகியவைகளை தமிழக அரசுடன் சேர்ந்து ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் மூலம் சி.எஸ்.ஆர். நிதியுதவியுடன் மூலம் பெற்று செயல்பட வைப்பது.

    காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் மாமண்டூர், வேகாமங்கலம், உத்திரம்பட்டு, ஈராளச்சேரி ஆகிய கிராமங்களில் வீடு இல்லாத இருளர் இன மக்களுக்கு அரசு மூலம் குடியிருப்பு வீட்டுமனை பட்டாவுடன் வீடு கட்டி கொடுக்க அரசிடம் வலியுறுத்துவது.

    காவேரிப்பாக்கம் ஒன்றியம் ஓச்சேரி ஊராட்சியில் சுற்றியுள்ள கிராம மக்கள் பயன்பெறும் வகையில் 10 படுக்கை அறையுடன் கூடிய ஆரம்ப சுகாதார நிலையம், பொது சுகாதார துறை மூலம் ஏற்படுத்தி தருவது.

    மாமண்டூர் கிராமத்தில் சமுதாய கூடம் கட்டிதர வேண்டியது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட ஊராட்சி செயலர் உமாபதி நன்றி கூறினார்.

    • மாவட்ட ஊராட்சி குழு தலைவர் இல்ல திருமண வரவேற்பில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.
    • முன்னாள் அமைச்சர்க ளுக்கும், நிர்வாகிகளுக்கும் பொன்மணி பாஸ்கரன் நன்றி கூறினார்.

    நெற்குப்பை 

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ் புதூர் ஒன்றியம் பொன்னா டப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பொன்மணி பாஸ்கரன்.இவர் அ.திமு.க. மாவட்ட பேரவை துணைச் செயலாள ராகவும் பதவி வகித்து வருகிறார்.

    இவரது மகள் ஹரிப்பிரியாவுக்கும், மணமகன் ஜெயக்கு மாருக்கும் கடந்த பிப்ரவரி 12-ந் தேதி சென்னையில் திருமணம் நடந்தது. அதனைத் தொடர்ந்து தனது சொந்த கிராமத்தில் பிப்ரவரி 26-ந் தேதி நடந்த வரவேற்பு விழாவில் பங்கேற்க அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், முன்னாள் அமைச் சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

    அந்த சமயத்தில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரசாரம் நடந்ததால் வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்க மாவட்ட செயலாளர் பி.ஆர். செந்தில்நாதன் மற்றும் நிர்வாகிகள் அழைப்பு விடுத்திருந்தனர்.

    கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்த எடப்பாடி பழனிச்சாமி குன்னத்தூரில் உள்ள ஓ.வி.எம். கார்டனில் அமைக்கப்பட்டிருந்த வரவேற்பு பந்தலில் மாவட்ட குழு சேர்மன் முன்னிலையில் மணமக்களை நேரில் சென்று வாழ்த்தினார்.

    இதில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ராஜேந்திர பாலாஜி, பாஸ்கரன், விஜய பாஸ்கர், செல்லூர் ராஜூ, நத்தம் விசுவநாதன், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. மற்றும் மாவட்ட ஒன்றிய, பேரூர், நிர்வாகிகள் உறுப்பி னர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

    திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்று மண மக்களை வாழ்த்திய எடப்பாடி பழனிச்சாமிக்கும், முன்னாள் அமைச்சர்க ளுக்கும், நிர்வாகிகளுக்கும் பொன்மணி பாஸ்கரன் நன்றி கூறினார்.

    ×