search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Officer information"

    • மீனவர்களுக்கு கூடுதல் டீசல் விற்பனை நிலையங்கள் அமைக்கப்படும் என்று அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.
    • மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ரவிச்சந்திர ராமவன்னி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம்

    ராமேசுவரம் அருகே உள்ள குந்துகாலில் தமிழ் நாடு மீன் வளர்ச்சி கழகம் மூலம் மீனவர்களுக்கு டீசல் விற்பனை நிலையம் திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை தாங்கி னார். காதர்பாட்ஷா முத்து ராமலிங்கம் எம்.எல்.ஏ. முன்னிலை வகித் தார். தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவர் கவுதமன் இந்தியன் ஆயில் சார்பில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட டீசல் விற்பனை மையத்தை திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் மீன் வளர்ச்சிக்கழகம் மூலம் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுடன் இணைந்து மீனவர்களுக்கு தேவையான டீசல் விற்பனை நிலையம் அமைக்கும் திட்டம் விரிவு படுத்தப்படவுள்ளன. அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்பொழுது செயல்பட்டு வரும் டீசல் விற்பனை நிலையங்களுடன் கூடுதலாக தொண்டி மற்றும் பெரியப்பட்டினம் பகுதியில் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    தற்பொழுது டீசல் விற்பனை மையத்தில் டீசல் மட்டும் விற்பனை செய்யப் பட்டு வருகிறது. மீன வர்களின் கோரிக்கை கேற்ப பெட்ரோல் விற்பனையும் செயல்படுத்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்திடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதனால் வரக்கூடிய வருமானம் மீன் வளர்ச்சி கழகத்திற்கு பயனுள்ளதாக அமையும். அதேபோல் ராமநாதபுரத்தில் எம்.எல்.ஏ. கோரிக்கைகேற்ப தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகம் மூலம் மீன் விற்பனை அங்காடி அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அரசின் திட்டங்களை மீனவ மக்கள் பெற்று பயன் பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன தலைமை மேலாளர் மாரீசுவரி, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர் பிரபா வதி, தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக முதுநிலை மேலாளர் ரவிச்சந்திரன், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக உதவி மேலாளர்கள் செல்வ லெட்சுமி, தமிழ்மாறன் , இந்தியன் ஆயில் கார்ப்ப ரேஷன் நிறுவன உதவி மேலாளர் பரத், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ரவிச்சந்திர ராமவன்னி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சிக்ரி ஆய்வகத்தை இலவசமாக பார்வையிடலாம் என்று அதிகாரி கூறினார்.
    • 04565-241470, 241502, 241355, 99945 14582 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    காரைக்குடி

    காரைக்குடியில் உள்ள மத்திய மின் வேதியியல் ஆய்வகம் சிக்ரியை பார்வை யிட பொது மக்களுக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) இலவச அனுமதி வழங்கப் பட்டுள்ளது.

    இதுகுறித்து சிக்ரி இயக்குநர் கேரமேஷா கூறியதாவது:-

    மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் கீழ், மத்திய அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வுக் குழுமம் சி.எஸ்.ஐ.ஆர் இயங்கி வருகிறது. அதன் காட்டுப்பாட்டின் கீழ், காரைக்குடி மத்திய மின்வேதியியல் ஆய்வுக் கழகம் சிக்ரி உட்பட நாடு முழுவதும் 37 ஆராய்ச்சி நிறுவனங்கள்உள்ளன.

    சி.எஸ்.ஐ.ஆர். செப் 26-ந் தேதி தொடங்கப்பட்டது.இந்த நாள் நிறுவன நாளாக கொண்டாடப்படுகிறது. அதை முன்னிட்டு, காரைக்குடி சிக்ரியில் பார்வையாளர்கள் தினம் கடைப் பிடிக்கப்படுகிறது. நாளை (26-ந் தேதி) காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை பொது மக்கள், மாணவர்கள் சிக்ரி கண்டு பிடிப்புகளை இலவசமாக பார்வை யிடலாம்.

    அதில் உலோக அரி மானம் தடுப்பு, காரிய அமில மின்கலம், லித்தியம் மின்கலம், துத்தநாக புரோமின் மின்கலம், தொழிற்சாலைக்கு உபயோ கமான ரசாயனங்கள், தூய நிலையான ஆற்றல், மின்வேதியியல் உணரிகள்.நானோ மின் வேதியியல் போன்ற பல்வேறு துறைகளில் கண்டு பிடிக்கப்பட்ட ஆராய்ச்சி களின் மாதிரிகள் இடம் பெற்றிருக்கும். மேலும் செயல் விளக்கமும் இருக்கும்.

    இதுதவிர எதிர்காலத்தில் எரிசக்தியை பூர்த்தி செய்யும் வகையில், நீரிலிருந்து தயாரிக்கப்படும் பசுமை எரிசக்தி ஹைட்ரஜன் காட்சிப்படுத்தப்படும். பார்வையாளர்களுக்கு காரைக்குடி பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையத்திலிருந்து பஸ் வசதி ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

    சிக்ரி வளாகத்தில் உணவு கிடைக்கவும், அவசர கால மருத்துவ சிகிச்சை பிரிவும் ஏற்பாடு செய்யப்படும். மேலும் விவரங்களுக்கு 04565-241470, 241502, 241355, 99945 14582 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • பிற மருத்துவ அவசர தேவைக்காக 2 லட்சத்து 15 ஆயிரத்து 233 பேரும், 108 ஆம்புலன்ைஸ அழைத்து பயன்படுத்தி உள்ளனர்.
    • 24 மணி நேரமும், தேவையான உதவிகளை செய்து தர ஆம்புலன்ஸ் பைலட், டெக்னீசியன் தயாராக உள்ளனர்.

     திருப்பூர்

    திருப்பூர் மாவட்டத்தில், 108 ஆம்புலன்ஸ் சேவை 2008ல் துவங்கப்பட்டது. துவக்கத்தில் 15 ஆம்புலன்ஸ்கள் மட்டும் இருந்தன. தற்போது 25 உயிர் காக்கும் வாகனம், 3 அதிநவீன உடனடி உயிர் பாதுகாப்பு கருவிகள் கொண்ட வாகனம், பிறந்தது முதல் 5 வயதுடைய குழந்தைகளுக்கு இரண்டு ஆம்புலன்ஸ், ஒரு பைக் ஆம்புலன்ஸ் என மொத்தம் 31 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்படுகின்றன.

    ஆம்புலன்ஸ் சேவை துவங்கியது முதல் கடந்த செப்டம்பர் 30-ந் தேதி வரை 3 லட்சத்து 82 ஆயிரத்து, 550 பேர் ஆம்புலன்ைஸ அழைத்து பயன்பெற்றுள்ளனர்.

    பிரசவத்துக்காக 75 ஆயிரத்து 296 பேரும், சாலை விபத்துக்காக 92 ஆயிரத்து, 21 பேரும், பிற மருத்துவ அவசர தேவைக்காக 2 லட்சத்து 15 ஆயிரத்து 233 பேரும், 108 ஆம்புலன்ைஸ அழைத்து பயன்படுத்தி உள்ளனர்.

    இது குறித்து திருப்பூர் மாவட்ட 108 ஆம்புலன்ஸ் மேலாளர் உதயநிதி கூறியதாவது:- 24 மணி நேரமும், தேவையான உதவிகளை செய்து தர ஆம்புலன்ஸ் பைலட், டெக்னீசியன் தயாராக உள்ளனர்.

    நள்ளிரவு, அதிகாலை நேரத்தில் தேவையான அவசர, பிரசவ உதவிகளை, கண்விழித்து தங்களால் இயன்றவரை பணியாற்றி வருகிறோம். அதன் வாயிலாக, 13 ஆண்டுகளில், 3.82 லட்சம் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. விபத்துக்கு அடுத்தப்படியாக பிரசவத்துக்கு 108 ஆம்புலன்சை அதிகளவில் மக்கள் தேடுகின்றனர். காரணம், அருகில் உள்ள மருத்துவமனைக்கு விரைந்து கொண்டு சேர்ப்பது, வரும் வழியில் தேவையான சிகிச்சை வழங்குவது உள்ளிட்ட காரணங்கள் தான்.

    அவ்வகையில் திருப்பூர் மாவட்டத்தில் ஆம்புலன்சில் 361 குழந்தைகள் பிறந்துள்ளன. ஆம்புலன்ஸ் டிரைவர், உதவியாளர் வாயிலாக வீடுகளில் 535 குழந்தைகள் பிறந்துள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×