search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நூலகங்களுக்கு கருணாநிதி பெயர் சூட்ட வேண்டும்
    X

    நூலகங்களுக்கு கருணாநிதி பெயர் சூட்ட வேண்டும்

    • மாவட்ட ஊராட்சி குழு வலியுறுத்தல்
    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட ஊராட்சிகுழுவின் சாதாரண கூட்டம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

    மாவட்ட ஊராட்சிக்குழு துணை தலைவர் நாகராஜ், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளில் உள்ள நூலகங்களுக்கும் முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் நூறாவது பிறந்த தினத்தை முன்னிட்டு 'முத்தமிழ் அறிஞர் டாக்டர்.கலைஞர் நினைவு நூலகம்' என பெயர் சூட்ட தமிழக அரசிடம் கோரிக்கை வைப்பது.

    கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி வழிகாட்டுதலின்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் உள்ள நூலகம் சிறப்பாக செயல்படும் வண்ணம் நூலகர் ஊதியம், அரசு போட்டி தேர்வு புத்தகங்கள் ஆகியவைகளை தமிழக அரசுடன் சேர்ந்து ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் மூலம் சி.எஸ்.ஆர். நிதியுதவியுடன் மூலம் பெற்று செயல்பட வைப்பது.

    காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் மாமண்டூர், வேகாமங்கலம், உத்திரம்பட்டு, ஈராளச்சேரி ஆகிய கிராமங்களில் வீடு இல்லாத இருளர் இன மக்களுக்கு அரசு மூலம் குடியிருப்பு வீட்டுமனை பட்டாவுடன் வீடு கட்டி கொடுக்க அரசிடம் வலியுறுத்துவது.

    காவேரிப்பாக்கம் ஒன்றியம் ஓச்சேரி ஊராட்சியில் சுற்றியுள்ள கிராம மக்கள் பயன்பெறும் வகையில் 10 படுக்கை அறையுடன் கூடிய ஆரம்ப சுகாதார நிலையம், பொது சுகாதார துறை மூலம் ஏற்படுத்தி தருவது.

    மாமண்டூர் கிராமத்தில் சமுதாய கூடம் கட்டிதர வேண்டியது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட ஊராட்சி செயலர் உமாபதி நன்றி கூறினார்.

    Next Story
    ×