search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ration Shops"

    • தக்காளி வரத்து குறைவாக உள்ளதால் விலையேற்றத்துடன் காணப்படுகிறது.
    • பாளை மார்க்கெட்டில் தக்காளி விலை இன்று கிலோ 130 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    நெல்லை:

    தமிழகத்தில் தக்காளி விலை தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சற்று குறைந்த நிலையில் மீண்டும் அதிகரித்தது.

    ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை

    வெளிமாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து குறைவாகவே வருவதால் விலை யேற்றத்துடன் காணப் படுகிறது. பாளை காந்தி மார்க்கெட்டில் தக்காளி விலை இன்று கிலோ ரூ.120 முதல் ரூ.130 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் படி தமிழகம் முழுவதும் இன்று முதல் 300 ரேஷன் கடைகளில் தக்காளி விற்ப னை செய்யப் படும் என்று கூட்டுற வுத்துறை அறிவித்தது.

    ஏற்கனவே சென்னையில் மட்டும் 85 ரேஷன் கடை களில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், பொதுமக்களின் நலன் கருதி இன்று முதல் மாநிலம் முழுவதும் 300 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

    நெல்லையில் 15 கடைகளில்...

    இந்நிலையில் இன்று முதல் நெல்லை மாவட் டத்திலும் சுமார் 15 ரேஷன் கடை களில் குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டது. முதற்கட்டமாக மாநகராட்சி பகுதிக்குட்பட்ட இடங்களில் நெல்லை மாவட்ட நுகர் வோர் மொத்த விற்பனை பண்டக சாலை சார்பில் நெல்லை டவுனில் 7 கடைகளிலும், டயோசீசன் கூட்டுறவு பண்டக சாலை சார்பில் சமாதானபுரம், மகாராஜ நகர் ஆகிய 2 கடைகளிலும், நெல்லை நுகர்வோர் பண்டகசாலை சார்பில் அன்புநகர், பெரு மாள்புரம் என 2 கடைகள் உள்பட மொத்தம் 15 ரேஷன் கடைகளில் கிலோ ரூ.60-க்கு தக்காளி விற்கப்படுகிறது.

    இதற்காக முதற்கட்டமாக 400 கிலோ தக்காளி கொள் முதல் செய்யப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் வரிசையில் நின்று ஆர்வமு டன் வாங்கி செல்கின்றனர். வெளி மார்க்கெட்டுகளில் ரூ.130 வரை தக்காளி விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், ரேஷன் கடையில் ரூ.60-க்கு தக்காளி கிடைப்பது பொது மக்கள் மத்தியில் சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • சென்னையில் உள்ள கூட்டுறவு ரேசன் கடைகளில் தக்காளி கிலோ ரூ.60-க்கு விற்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
    • தக்காளி அதிகம் வராததால் 1 நபருக்கு 1 கிலோ என்ற அளவில்தான் 60 ரூபாய்க்கு ரேஷன் கடைகளில் கொடுக்கிறார்கள்.

    சென்னை:

    தக்காளி வெளி மார்க்கெட்டில் கிலோ ரூ.120 முதல் ரூ.130 வரை விற்கப்பட்டு வருகிறது.

    ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து குறைந்துள்ளதால் இங்கு தட்டுப்பாடு ஏற்பட்டு நாளுக்கு நாள் தக்காளி விலை அதிகரித்து விட்டது.

    இதனால் சென்னையில் உள்ள கூட்டுறவு ரேசன் கடைகளில் தக்காளி கிலோ ரூ.60-க்கு விற்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் இதை விரிவுபடுத்தும் வகையில் இப்போது மொத்தம் 302 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை தொடங்கி உள்ளது.

    தக்காளி அதிகம் வராததால் 1 நபருக்கு 1 கிலோ என்ற அளவில்தான் 60 ரூபாய்க்கு ரேஷன் கடை களில் கொடுக்கிறார்கள்.

    சென்னையில் காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலைக்கு உட்பட்ட ராமாபுரம், மடிப்பாக்கம், போரூர், வளசரவாக்கம், மதுரவாயல் லட்சுமி நகர், வானகரம், கந்தன்சாவடி, காரப்பாக்கம் ரேசன் கடைகளில் தக்காளி விற்கப்படுகிறது.

    திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்க கடைகள், ராயப்பேட்டை, பெசன்ட் நகர், சாஸ்திரி நகர், அவ்வை நகர், தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, ஸ்ரீராம் நகர், தி.நகர், சேத்துப்பட்டு, கோடம்பாக்கம், லட்சுமி புரம், நுங்கம்பாக்கம், கோபாலபுரம், ஆர்.ஏ.புரம், சைதாப்பேட்டை, சின்னமலை, கிண்டி, கே.கே.நகர், ஆர்.கே.நகர், எருக்கஞ்சேரி, மணலி, மாம்பலம், சாலி கிராமம், வேளச்சேரி, ஆதம்பாக்கம் என 87 ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.

    இது தவிர மதுரை மண்டலத்தில் 20 கடைகள், கோவை மண்டலத்தில் 20, திருச்சி மண்டலத்தில் 20, சேலம் மண்டலம்-15, திருநெல்வேலி மண்டலம்-15, திருப்பூர்-10, வேலூர்-15, ஈரோடு-15, தூத்துக்குடி-15, தஞ்சாவூர்-15, திண்டுக்கல்-10, காஞ்சிபுரம்-10, கரூர்-10, கடலூர்-10, விழுப்புரம்-10, கன்னியாகுமரியில்-5 ரேஷன் கடை என 215 ரேஷன் கடைகள் ஆக மொத்தம் 302 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்து வருகின்றனர்.

    • கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்த விற்பனைக்கே தக்காளி கிலோ ரூ.100-க்கு இன்று விற்கப்பட்டது.
    • காய்கறி கடைகளில் தக்காளி சில்லரை விற்பனை ரூ.130 முதல் ரூ.150 வரை விற்கப்படுகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் தக்காளி விலை தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சற்று குறைந்த நிலையில் மீண்டும் அதிகரித்தது. வெளிமாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து சென்னைக்கு குறைவாகவே வருவதால் விலையேற்றத்துடன் காணப்படுகிறது.

    கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்த விற்பனைக்கே தக்காளி கிலோ ரூ.100-க்கு இன்று விற்கப்பட்டது. இதனால் காய்கறி கடைகளில் சில்லரை விற்பனை ரூ.130 முதல் ரூ.150 வரை விற்கப்படுகிறது.

    இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் படி மாநிலம் முழுவதும் நாளை முதல் 300 ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    ஏற்கனவே சென்னையில் மட்டும் 85 ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், பொதுமக்களின் நலன் கருதி நாளை முதல் மாநிலம் முழுவதும் 300 ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட உள்ளது.

    • டெல்லி மாநாட்டில் அமைச்சர் சாய். ஜெ.சரவணன்குமார் வலியுறுத்தல்
    • புதுவை, காரைக்கால்,மாகி,ஏனம் ஆகிய பிராந்தியங்களில் அரிசி வழங்கப்படுவதில்லை.

    புதுச்சேரி:

    டெல்லியில் மத்திய உணவு துறை அமைச்சர் பியூஸ் கோயில் தலைமையில் மாநில மற்றும் யூனியன் பிரதேச உணவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்கும் தேசிய உணவுத்துறை மாநாடு நடந்தது.

    இதில் பங்கேற்று பேசிய புதுச்சேரி குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய்.ஜெ. சரவணன்குமார், புதுச்சேரி யூனியன் பிரதேசம் தமிழகம், கேரளா, ஆந்திரா மாநிலங்களை ஒட்டியுள்ள பிராந்தியங்கள் ஆகும். தமிழகம், கேரளா,ஆந்திரா போன்ற தென்னிந்திய மாநிலங்களில் பொதுமக்களுக்கு ரேசன் கடைகள் மூலம் அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் புதுவை, காரைக்கால்,மாகி,ஏனம் ஆகிய பிராந்தியங்களில் அரிசி வழங்கப்படுவதில்லை.

    இது புதுச்சேரி பிராந்திய மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. நாம் பா.ஜனதா சார்பில் கடந்த தேர்தலில் வழங்கிய தேர்தல் வாக்குறு திகளில் பொதுமக்களுக்கு நேரடியாக அரிசி வழங்குவதாக உறுதியளித்திருந்தோம். ஆனால் தற்போது அரிசி வழங்காமல் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர். விரைவில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வசிக்கும் பொது மக்களுக்கு ரேசன் கடைகள் மூலம் அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசினார்.

    • செயற்குழு உறுப்பினர் ராமச் சந்திரன்,மூத்த தலைவர் முருகன் ஆகியோர் தொடக்க உரையாற்றினர்.
    • அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைக்க வேண்டும்

    புதுச்சேரி:

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி புதுவை நகரக்குழு சார்பில் காந்திவீதி- முத்துமாரியம்மன் கோவில் வீதி சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    நகர செயலாளர் மதிவாணன் தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர் ராமச் சந்திரன்,மூத்த தலைவர் முருகன் ஆகியோர் தொடக்க உரையாற்றினர்.

    நிர்வாகிகள் கலியமூர்த்தி, பிரபுராஜ், சரவணன், ஜோதிபாசு, மணவாளன், வீரமணிகண்டன், தாட்சாயிணி, மது, ரஞ்சித், பாரி, சுப்பிரமணியன், மனோகர், விஜி, வனஜா கண்டன உரையாற்றினர்.

    மார்க்சிஸ்ட்டு மாநில செயலாளர் ராஜாங்கம் சிறப்புரையாற்றினார். மணவாளன் நன்றி கூறினார்.

    புதுவை அரசு ரேஷன்க டைகளை திறந்து அத்தி யாவசிய பொருட்களை வழங்க வேண்டும்.

    குடும்பதலைவிக்கு ரூ.ஆயிரம், சிலிண்டருக்கு ரூ.300 மானியம், பெண்களுக்கு இலவச பஸ் வசதியை செய்துதர வேண்டும். ஏழை மக்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும். அரசு துறைகளில் காலியாக உள்ள 10 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    • தற்காலிகமான தக்காளி விலையேற்றத்தை கட்டுப்படுத்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் துரிதமாக மேற்கொண்டு வருகிறது.
    • சட்டவிரோதமாக தக்காளியை பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிகை விடப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பண்ணை பசுமை கடையை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் இன்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் தக்காளி விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த கூட்டுறவுத்துறையின் மூலம் செயல்பட்டு வரும், பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மற்றும் நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் கொள்முதல் விலைக்கே தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு கோடையில் கடும் வெப்பம் நிலவியதால் விவசாயிகள் தக்காளி பயிரிடுவது கணிசமாக குறைந்ததாலும், அண்டை மாநிலங்களிலிருந்து தக்காளி வரத்து குறைந்ததாலும், கடந்த வாரம் முதல் தக்காளி விலை அதிகரித்துள்ளது. தோராயமாக நாள் ஒன்றுக்கு சென்னை, கோயம்பேடு மார்கெட்டிற்கு 800டன் வரையிலான வரக்கூடிய தக்காளி வரத்து தற்போது 300டன் என்ற அளவில் குறைந்துள்ளது. இதனால் வெளிச்சந்தைகளில் ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.90 முதல் ரூ.100 வரை விற்கப்படுகிறது. இதனால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த விலையேற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில், கூட்டுறவுத்துறையின் மூலம் தமிழகத்தில் செயல்பட்டு வரும் 62 பண்ணை பசுமை நுகர்வோர் பசுமை கடைகள் 3 நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் கொள்முதல் விலைக்கே தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் இன்று முதல் குறைந்தபட்சமாக தக்காளி விலை கிலோ ஒன்றுக்கு ரூ.60 முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலையானது வெளிச்சந்தையுடன் ஒப்பிடுகையில் ரூ.30 முதல் ரூ.40 வரை குறைவானதாகும்.

    திருவல்லிக்கேணி நகர கூட்டுறவுச் சங்கத்தின் கீழ் தேனாம்பேட்டை, திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, ராஜா அண்ணாமலைபுரம், கீழ்ப்பாக்கம், பெரியார்நகர் ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், அம்மா உணவத்திற்கும் தனியாக தக்காளி கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்பட்டு உள்ளது.

    இந்த தற்காலிகமான தக்காளி விலையேற்றத்தை கட்டுப்படுத்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் துரிதமாக மேற்கொண்டு வருகிறது. மேலும், சட்டவிரோதமாக தக்காளியை பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிகை விடப்பட்டுள்ளது. இந்த நிலை நீடித்தால் தமிழ்நாட்டில் உள்ள 35,000-க்கும் மேற்பட்ட நியாயவிலைக் கடைகள் மூலம் தக்காளி விற்பனையினை விரிவுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் தகவல்
    • அரசு மக்களுக்கு ரேஷன் கடைகளை திறந்து பொருட்களை விநியோகம் செய்வோம் என்று வாக்குறுதி அளித் துள்ளது. சட்டமன்றத்திலும் உறுதி அளித்துள்ளோம்.

    புதுச்சேரி:

    ரேஷன் கடைகள் திறப்பு குறித்து அமைச்சர் சாய்.ஜெ. சரவணன்குமார் கூறியதாவது:-

    ரேஷன் கடைகளை திறந்து மீண்டும் பொருட்களை விநியோகம் செய்வது தொடர்பாக சட்டத்துறையிடம் கருத்து கேட்கப்பட்டது. தற்போது சட்டத்துறை தனது கருத்தை தெரிவித்துள்ளது.

    மத்திய அரசின் திட்டங்களில் நேரடி பண பரிமாற்றம் தொடரலாம். ஆனால் மாநிலஅரசு மக்களுக்கு ரேஷன் கடை களை திறந்து பொருட்களை விநியோகம் செய்வோம் என்று வாக்குறுதி அளித் துள்ளது. சட்டமன்றத்திலும் உறுதி அளித்துள்ளோம்.

    மேலும் புதுவை மக்களும் ரேஷன் கடைகள் மூலம் பொருட்கள் வழங்க வேண்டும் என்று விரும்பு கின்றனர். அதோடு ஒரு குடும்பத்திற்கு வழங்கப்படும் பொருள்களுக்கான தொகை அந்த குடும்பத்தில் உள்ள ஒரு நபருக்கு வங்கி கணக்கில் சேர்க்கப்படுகிறது.

    இதனை அந்த குடும்பத்தில் உள்ள அனை வருடனும் அவர் பகிர்ந்து கொள்கிறாரா என்று கேள்வி எழுகிறது.

    இது போன்ற நியாயமான கருத்துக்களை கோப்பில் தெரிவித்திருக்கிறோம். இன்னும் ஓரிரு நாளில் ரேஷன் கடை திறப்பு தொடர்பான கோப்புக்கு அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்படும்.

    தொடர்ந்து கோப்பு கவர்னருக்கு அனுப்பப்பட உள்ளது கவர்னரின் ஒப்புதலுக்கு பிறகு மீண்டும் ரேஷன் கடைகள் திறக்கப்படும்.

    இவ்வாறு அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் தெரிவித்தார். 

    • உழவாலயத்தில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
    • உழவர் தின விழாவை சிறப்பாக நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டையில் உழவர் உழைப்பாளர் கட்சி தலைமை அலுவலகம் உழவாலயத்தில் கட்சித் தலைவர் செல்லமுத்து தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இதில் மாநில செயலாளர் சின்ன காளிபாளையம் ஈஸ்வரன், மாநில பொருளாளர் பாலசுப்ரமணியம், மாநில மகளிர் அணி செயலாளர் கே.சி.எம். சங்கீத பிரியா, ஊடக பிரிவு செயலாளர் ஈஸ்வரன்,இளைஞரணி செயலாளர் காடாம்பாடி கணேசன், திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரமூர்த்தி, கோடங்கிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் காவி.பழனிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதில் வரும் ஜூலை 5ந்தேதி உழவர் தின விழாவை சிறப்பாக நடத்துவது. தமிழக அரசு ரேசன்கடைகளில், தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய நடவடிக்கை வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்திற்கு பின் கட்சித் தலைவர் செல்லமுத்து செய்தியாளரிடம் கூறியதாவது:- திருப்பூர், கோவை மாவட்டங்களில் லட்சக்கணக்கான ஏக்கரில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. விவசாய தொழிலாளர்கள் பற்றாக்குறையால் இங்கு உள்ள பல விவசாயிகள் தென்னை விவசாயத்திற்கு மாறிவிட்டனர். இந்தநிலையில் தற்போது தேங்காய் விலை குறைந்துள்ளது.

    உதாரணமாக கடந்த சில வாரங்களுக்கு முன் தேங்காய் ஒன்றின் விலை ரூ.13 முதல் ரூ. 14.50 வரை விலை கிடைத்தது. தற்போது தேங்காய் ஒன்றின் விலை ரூ.10 முதல் 11.50 வரை வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். தென்னை விவசாயத்திற்கு பயன்படும் மருந்துகள், உரம், போன்றவைகள் கடுமையாக விலை அதிகரித்துள்ள நிலையில் தேங்காய் விலை குறைவால் தென்னை விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

    மேலும் ரேசன் கடைகளில் வழங்கப்படும் பாமாயில் இறக்குமதி செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. அதற்கு மாற்றாக தேங்காய் எண்ணெயை வினியோகிக்க அரசு முன்வர வேண்டும். மேலும் தென்னை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் அரசு உரம், இடுபொருள்களுக்கு மானியம் வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசு விவசாயிகளிடமிருந்து இனாம் நிலங்களை கைப்பற்றுவதை விடுத்து அந்த நிலங்களை பண்படுத்தி பல வருடங்களாக கஷ்டப்பட்டு கடன் பட்டு, மலடாக இருந்த நிலத்தை ,விளை நிலமாக மாற்றிய விவசாயிகளுக்கு அவர்களது பெயரிலேயே பட்டா வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

    • பொது இடத்தில் ரேசன் கடை கட்ட வலியுறுத்தி துணை வட்டாட்சியரிடம் கிராமமக்கள் குடும்ப அட்டைகளை ஒப்படைத்தனர்
    • மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உதயநத்தம் ஊராட்சிக்குட்பட்ட கோடாலி கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளனர். இதில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் பகுதியில் இருந்த பழைய ரேஷன் கடை கட்டிடம் சேதமடைந்ததால் அதனை இடித்து புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மற்றொரு சமூகத்தினர், அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் அரசுக்கு சொந்தமான பொது இடத்தில் ரேஷன் கடையை கட்ட வேண்டும் என வலியுறுத்தி கிராம மக்கள் ரேஷன் கார்டுகளை வி.ஏ.ஓ. அலுவலகத்தில் ஒப்படைக்க வந்தனர்.

    அப்போது பொதுவான இடத்தில் ரேஷன் கடை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததால் ரேஷன் கார்டுகளை ஒப்படைக்கும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். ஆனால் ஏற்கனவே இருந்த இடத்திலேயே ரேஷன் கடை கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் ஜெயங்கொண்டம் தாலுக்கா அலுவலகத்தை முற்றுகையிட்டு சுமார் 247 குடும்பங்களை சேர்ந்தவர்கள் அரசால் வழங்கப்பட்ட தங்களது ரேஷன் கார்டுகளை ஜெயங்கொண்டம் தனி துணை வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.

    கோடாலி கிராமத்தில் அரசுக்கு சொந்தமான பொது இடத்தில் ரேஷன் கடையை கட்ட வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அனைத்து அலுவலகங்களிலும் மனு அளித்திருக்கிறோம். எனவே மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். பொது இடத்தில் ரேசன் கடை கட்டாவிட்டால் அடுத்த கட்டமாக மிகப்பெரிய போராட்டம் நடத்தவும் தயாராக உள்ளோம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    • மக்களுக்கு தரமான பொருட்கள் கிடைக்கின்றதா என்பதை அதிகாரிகள் மூலம் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றோம்.
    • அரிசி கருப்பு, பழுப்பு நிறத்தில் இருக்க கூடாது என்பதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது.

    கோவை:

    கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர்கள் மற்றும் அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டம் இன்று நடந்தது.

    கூட்டத்திற்கு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

    கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் சக்கரபாணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் முடிந்து 3-வது ஆண்டை நோக்கி செல்கிறோம். மக்களுக்கு தரமான பொருட்களை கொடுக்க முதலஅமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

    மக்களுக்கு தரமான பொருட்கள் கிடைக்கின்றதா என்பதை அதிகாரிகள் மூலம் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றோம். அரிசி கருப்பு, பழுப்பு நிறத்தில் இருக்க கூடாது என்பதில் இந்த அரசு கவனம் செலுத்தி வருகிறது.

    2 வருடங்களில் 16 லட்சம் பேருக்கு குடும்ப அட்டை வழங்கப்பட்டு இருக்கிறது. குடும்ப அட்டை தொலைந்து விட்டால், ரூ.45 செலுத்தி அதன் நகலை பெற முடியும். தகுதியுள்ள அனைவருக்கும் குடும்ப அட்டை கிடைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றது.

    சிறுதானிய உணவு திருவிழா அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட உள்ளது.

    அனைத்து நியாய விலை கடைகளிலும் கியூஆர் கோடு முறை விரைவில் நடைமுறைப்படுத்தப்படும். இனி பொருட்களை கியூ ஆர் கோடு முறையில் வாங்கி கொள்ளலாம். அதற்கான நடவடிக்கைகள் விரைவில் தொடங்க உள்ளது.

    கோவை மாவட்டத்தில் 536 நியாய விலை கடைகள் வாடகை கட்டிடத்தில் இருக்கின்றது, அவற்றிக்கு சொந்த கட்டிடம் கட்டப்படும்.

    கோதுமையை பொறுத்தவரை 23 ஆயிரம் மெட்ரிக் என்பதை 8 ஆயிரம் டன்னாக மத்திய அரசு குறைத்து விட்டனர். இது தொடர்பாக மத்திய அரசுடன் பேசி கூடுதல் ஒதுக்கீடு கேட்க இருக்கின்றோம்.

    நியாயவிலை கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்குவது அரசின் பரீசிலனையில் இருக்கிறது. கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் முதல்கட்டமாக வழங்க திட்டமிடப்பட்டு இருக்கின்றது. மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை அதிகரிக்க மத்திய அரசிடம் வலியுறுத்தி இருக்கின்றோம். இந்த விவகாரத்தில் தமிழக அரசை மத்திய அரசு வஞ்சிக்கின்றது.

    பருப்பு, பாமாயில், சக்கரை போன்றவற்றை எவ்வளவு விலை கொடுத்தும் அரசால் வாங்கி விட முடியும். எதிர்கட்சி என்பதால் மத்திய அரசு தமிழக அரசை வஞ்சிக்கின்றது. கோதுமை, மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை ஒன்றிய அரசு குறைத்து இருக்கின்றது.

    ரேஷன் கடைகளில் இரு விதமான அரிசி விநியோகம் செய்யப்பட்டாலும், மக்கள் எந்த அரிசியை விரும்புகின்றனரோ அதை மட்டுமே கொடுப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 1,185 பகுதி, முழுநேர ரேஷன் கடைகள் செயல்படுகின்றன.
    • 3 லட்சம் கார்டுதாரர்கள் பயன்பெறுவர்.

    தாராபுரம் :

    தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ரேஷன் கடைகளில் படிப்படியாக செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் திருப்பூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களுக்கு உட்பட்ட 1,149, நுகர்பொருள் வாணிப கழக கட்டுப்பாட்டில் 22, மகளிர் குழுக்கள் வாயிலாக 14 என மொத்தம் 1,185 பகுதி, முழுநேர ரேஷன் கடைகள் செயல்படுகின்றன. இந்த கடைகளிலும், தமிழக அரசின் உத்தரவுபடி இம்மாதம் முதல் செறிவூட்டப்பட்ட அரிசி வினியோகம் தொடங்குகிறது. இதற்கான பணிகள் தீவிரமடைந்துள்ளது.

    முதற்கட்டமாக ரேஷன்கார்டுதாரர்களுக்கு வழங்குவதற்காக, மாவட்ட நுகர்பொருள் வாணிப கழகம் வாயிலாக மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி மூட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டும் வருகிறது.புதிய திட்டத்தில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டப்படி பொருட்கள் பெறும் (பி.எச்.எச்-.,- ஏ.ஏ.ஒய்.,) கார்டு பயனாளிகளுக்கும் இந்த அரிசி வழங்கப்பட உள்ளது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் ரேஷன் கடைகள் வாயிலாக மட்டும் 3 லட்சம் கார்டுதாரர்கள் பயன்பெறுவர் என நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • பொது விநியோகத் திட்ட துணை பதிவாளர் பழனிச்சாமி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    • உணவு பொருட்கள் கிடைக்கவில்லை என்ற புகார்கள் வராமல் விற்பனையாளர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    பல்லடம் :

    பல்லடம் வட்டாரத்தில் உள்ள ரேஷன் கடைகளில் திருப்பூர் மாவட்ட பொதுவிநி யோகத் திட்ட துணை பதிவாளர் பழனிச்சாமி திடீர் ஆய்வு மேற்கொண்டார். கணபதிபா ளையம், கரைப்புதூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள ரேசன் கடைகளில் எடை கருவிகள் மற்றும் உணவுப் பொருட்கள் சரியான அளவில் உள்ளதா ? என ஆய்வு செய்தார். பொது மக்களுக்கு வழங்கப்படும் அரிசி உள்ளிட்ட பொருட்கள் தரமானதாக வழங்க வேண்டும். குறைபாடுகள் இருந்தால் உடனடியாக அதனைக் கிடங்கிற்கு திருப்பி அனுப்பி தரமான பொருட்களை பெற்று பொதுமக்களுக்கு வழங்க வேண்டும்.

    எந்த ஒரு குடும்ப அட்டைதாரருக்கும் உணவு பொருட்கள் கிடைக்கவில்லை என்ற புகார்கள் வராமல் விற்பனையாளர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். அரிசி மற்றும் பருப்பு பொருட்களின் மாதிரிகளை பொதுமக்கள் பார்வைக்கு தெரியும் படி வைக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

    ×