search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தக்காளி விற்பனை"

    • வெள்ளகோவிலில் ஞாயிறு தோறும் வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது.
    • கோவக்காய் ரூ.40, முள்ளங்கி ரூ. 40, பச்சை மிளகாய் ரூ.50, சுரக்காய் ரூ.15க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவிலில் ஞாயிறு தோறும் வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் கிடைக்கும் காய்கறிகள் மற்றும் பயிர் வகைகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இதை பொதுமக்கள் மற்றும் நூல் மில்களில் தங்கி வேலை செய்யும் ஊழியர்கள் தங்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறி மற்றும் மளிகை சாமான்களை வாங்கிச்செல்வார்கள். இன்று வார சந்தையில் தக்காளி ஒரு கிலோ ரூ.10, கத்தரிக்காய் ரூ.50, பீர்க்கங்காய் ரூ.50, பெரிய வெங்காயம் ரூ.30 , சின்ன வெங்காயம் ரூ. 50, உருளைக்கிழங்கு ரூ.40, பீட்ரூட் ரூ.40, புடலங்காய் ரூ.40, முட்டை கோஸ் ரூ.30, பீன்ஸ் ரூ.80, கேரட் ரூ.60, பாவற்காய் ரூ.60, வெண்டைக்காய் ரூ.60, இஞ்சி ரூ.150, அவரைக்காய் ரூ.80, நேரோ காய் ரூ. 40, கோவக்காய் ரூ.40, முள்ளங்கி ரூ. 40, பச்சை மிளகாய் ரூ.50, சுரக்காய் ரூ.15க்கும் விற்பனை செய்யப்பட்டது. இத்தகவலை வாரச்சந்தை காய்கறி வியாபாரி குமார் தெரிவித்தார்.

    • தமிழகத்தில் கடந்த 50 நாட்களுக்கு மேல் தக்காளி விலை அதிகரித்து வந்தது. அதிகபட்சமாக ஒரு கிலோ தக்காளி ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டது.
    • தமிழக அரசு சார்பில் ரேசன் கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டது.

    சேலம்:

    தமிழகத்தில் கடந்த 50 நாட்களுக்கு மேல் தக்காளி விலை அதிகரித்து வந்தது. அதிகபட்சமாக ஒரு கிலோ தக்காளி ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் வசதிக்காக தமிழக அரசு சார்பில் ரேசன் கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டது.

    கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தக்காளி விலை 100 ரூபாய்க்கு கீழ் குறையாமல் இருந்து வந்தது. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் தக்காளி வாங்குவதை தவிர்த்து விட்டனர்.

    அதேபோல் காய்கறிகள் விலை உயர்வாலும் பொது மக்கள் காய்கள் வாங்குவதை குறைத்து கொண்டனர். கிலோ கணக்கில் தக்கா ளியை வாங்கிச் சென்ற பொதுமக்கள் விலை உயர்வு காரணமாக கிராம் கணக்கில் தக்காளியை வாங்க ஆரம்பித்தனர்.

    உழவர் சந்தை

    சேலம் மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளில் வெளி இடங்களை விட குறைவான விலைக்கு விற்கப்பட்டதால் பொது மக்கள் உழவர் சந்தைகளில் தக்காளி வாங்கிச் சென்ற னர். இதனால் குறைந்த நேரத்திலேயே தக்காளி விற்பனை முடிவடைந்தது.

    சேலத்தில் உள்ள காய்கறி மார்க்கெட்டுகளுக்கு தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் சேலம் மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் இருந்து தக்காளிகள் விற்பனைக்கு கொண்டுவரப்படும். ஆனால் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக இந்த பகுதிகளில் இருந்து தக்காளி வரத்து குறைந்தது. இதனால் ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து தக்காளிகள் கொண்டுவரப்பட்டு அதிக விலைக்கு விற்கப்பட்டு வந்தது.

    தங்கத்தை போல் தக்காளி விலையும் உயர்ந்ததால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இந்த நிலையில் சேலத்தில் இன்று தக்காளி விலை திடீரென குறைந்தது. கிலோ ரூ.60 முதல் அதிகபட்சமாக ரூ.70 வரை தக்காளி விற்கப்பட்டது. இந்த விலை குறைவுக்கான காரணம் குறித்து வியாபாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

    கடந்த சில நாட்களாக உள்ளூர் தக்காளி வரத்து குறைந்து காணப்பட்டது. இதனால் ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து குறைந்த அளவிலேயே தக்காளி விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. இதனால் விலை உயர்ந்து காணப்பட்டது. தற்போது வழக்கம்போல் உள்ளூர் தக்காளிகள் வரத் தொடங்கிவிட்டது.

    கடந்த சில நாட்களைவிட இன்று மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக விலையும் குறைந்தது. அதிகபட்சமாக சில்லறை விலையில் முதல் ரக தக்காளி கிலோ ரூ.70-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் இனிவரும் காலங்களில் படிப்படியாக தக்காளி விலை குறைந்துவிடும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • குறைந்த விலையில் விற்கப்படுகிறது
    • கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தொடங்கி வைத்தார்

    திருப்பத்தூர்:

    தக்காளி விலை கிலோ ரூ.100 முதல் ரூ.150 வரை விற்கப்படுவ தால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை தவிர்க்க ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுத்தது.

    அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் 5 ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை தொடங்கி வைக்கப்பட்டது.

    திருப்பத்தூர் கற்பகம் கூட்டுறவு ரேஷன் கடையில் நேற்று குறைந்த விலையில் தக்காளி விற்பனையை திருப்பத்தூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சி.பெ. முருகேசன் தொடங்கி வைத்தார். அப்போது பொது மக்க ளுக்கு 1கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் தக்காளியை வாங்கி சென்றனர். நிகழ்ச்சியில் பொது வினியோக திட்ட துணை பதிவாளர் சம்பத், கூட்டுறவு சார்பதிவாளர்கள் சதாசிவம், தர்மேந்திரன், ராமசந்திரன், முதுநிலை ஆய்வாளர் திப்புதிலீ பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதே போல் மாவட்டத்தில் ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய பகுதியில் மேலும் 4 கூட்டுறவு ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை தொடங்கி வைக்கப்பட்டது.

    • விவசாயிகள் வலியுறுத்தல்
    • ஆட்டு கொட்டகையை உரிய பயனாளிகளுக்கு வழங்க வேண்டும்

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு தாலுகா அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு அணைக்கட்டு தாசில்தார் கி.வேண்டா தலைமை தாங்கினார். தேர்தல் தனிப்பிரிவு தாசில்தார் திருக்குமரேசன் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் விவசாயிகள் பேசுகையில்:-

    தற்போது விலையில் வின்னைத்தொட்டு இருக்கும் தக்காளி நகரப் புறத்தை தொடர்பு கிராம புரத்தில் உள்ள அணைத்து ரேஷன் கடையிலும் கொடுக்க வேண்டும். விவசாய பம்பு செட்டுக்கு பெயர் மாற்றம் செய்ய சிறப்பு முகாம் அமைக்க வேண்டும்,

    பிறப்பு இறப்பு சான்றிதழ் வந்தால் உடனடியாக பயனாளிகளிடம் கொடுக்க வேண்டும், சேர்ப்பாடி கூட்டுறவு சங்கத்தில் நடவை இயந்திரம் மற்றும் அறுவடை இயந்திரம் கொடுக்க வேண்டும், ஒடுகத்தூரில் இருந்து மேல் அரசம்பட்டு சாலை விரிவாக்கம் செய்ய வேண்டும். குரங்குகள் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆட்டு கொட்டகையை உரிய பயனாளிகளுக்கு வழங்க வேண்டும்.

    தற்போது வழங்கப்படும் ஆட்டுக் கொட்டகைகளை அப்பகுதியைச் சேர்ந்த அரசியல் நிர்வாகிகள் மற்றும் வார்டு உறுப்பி னர்களே எடுத்துக் கொள்வதாக கூட்டத்தில் ஆதங்கமாக பேசி விவசாயிகள் கண்ணீர் விட்டனர்.

    இது சம்பந்தமாக அணைக்கட்டு பிடிஓ நேரடியாக வந்து உரிய பதிலளிக்க வேண்டும் என விவசாயிகள் அங்கேயே அமர்ந்து கூட்டத்தை நடக்க விடாமல் செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

    இதனையடுத்து தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசிய பிடிஓ சாந்தி அடுத்த கூட்டத்திற்குள் உரிய பதிலளிக்கப்படும் என தெரிவித்ததனால் கூட்டம் சிறிது நேரத்திற்க்கு பின் தொடர்ந்து நடைபெற்றது.

    • உழவர் சந்தைகள் மற்றும் காய்கறி மார்க்கெட்களுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து தக்காளியை விற்பனை செய்ய விவசாயிகள் கொண்டு வருவார்கள்.
    • இந்த நிலையில் அதிக அளவில் வெயில் அடித்ததால் தக்காளி செடிகள் நோய் தாக்கியது. இதனால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகள் மற்றும் காய்கறி மார்க்கெட் களுக்கு வீரபாண்டி, தலைவாசல், மேச்சேரி, பனமரத்துப்பட்டி, ஓமலூர், மன்னார் பாளையம் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து தக்காளியை விற்பனை செய்ய விவசாயிகள் கொண்டு வருவார்கள்.

    இந்த நிலையில் அதிக அளவில் வெயில் அடித்ததால் தக்காளி செடிகள் நோய் தாக்கியது. இதனால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் வட மாநிலங்களில் அதிக அளவு மழை பெய்ததால் அங்கு இருந்தும் தக்காளி வரத்து குறைந்தது. இதனால் கடந்த சில நாட்களாக தக்காளி விலை உயர்ந்து ஒரு கிலோ 200 வரை விற்கப்பட்டது.

    சேலம் மார்க்கெட்டில் அதிகபட்சமாக 160 ரூபாய் வரை உழவர் சந்தைகளில் அதிகபட்சமாக 135 வரையும் தக்காளி விற்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் குறைந்த அளவிலேயே தக்காளியை வாங்கி செல்கிறார்கள் சிலர் தக்காளி வாங்குவது இல்லை.

    இந்த விலை உயர்வு மக்களை பாதிக்காத வகையில் தமிழக முழுவதும் 500 ரேஷன் கடைகள் மூலம் தக்காளி விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையொட்டி சேலம் மாநகரில் 20 ரேஷன் கடைகளில் கிலோ 60 ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டது .

    ஒரே நாளில் இந்த ரேஷன் கடைகள் மூலம் ஒரு டன் தக்காளி விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும் தினசரி ஒரு டன் தக்காளி விற்பனை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினார். 2-வது நாளாக இன்றும் 60 ரூபாய்க்கு ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை நடைபெற்று வருகிறது.

    • ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது.
    • குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை செய்யப்படுவது மகிழ்ச்சி அளிப்பதாக பெண்கள் தெரிவித்தனர்.

    ஈரோடு:

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தக்காளி விளைச்சல் பாதிப்பு, வரத்து குறைவு காரணமாக தக்காளி விலை புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

    சென்னையில் ஒரு கிலோ தக்காளி ரூ. 200 ஐ தாண்டியது. தக்காளி விலை உயர்வால் பெண்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். தக்காளி விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

    ஈரோடு மாவட்டத்திலும் தக்காளி விலை கிலோ ரூ.160 வரை விற்பனை யானது. இதை எடுத்து தமிழக அரசு சார்பில் ரேஷன் கடைகளில் மலிவு விலையில் ஒரு கிலோ தக்காளி ரூ. 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு ரேஷன் கடைகளில் மலிவு விலையில் தக்காளி விற்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து தக்காளி விலை குறைய தொடங்கியது. இதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்த நிலையில் கடந்த 4 நாட்களாக மீண்டும் தக்காளி விலை உயர்ந்தது. ஈரோட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ. 150 வரை விற்பனையானது.

    இதனை அடுத்து அரசு மாற்று ஏற்பாடாக இன்று முதல் தமிழகம் முழுவதும் உள்ள 500 ரேஷன் கடைகளில் மலிவு விலை யில் தக்காளி விற்பனை செய்யப்படும் என அறிவித்திருந்தது.

    அதன்படி இன்று ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள 10 ரேஷன் கடைகளில் மலிவு விலையில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    ஈரோடு கொல்ல ம்பாளையம் கூட்டுறவு அங்காடியில் கிலோ 60 ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளியை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.

    10 கடைகளிலும் தலா 100 கிலோ வீதம் மலிவு விலை தக்காளி விற்பனை செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஒரு நபருக்கு ஒரு கிலோ என்ற அடிப்படையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    கடந்த ஒரு மாத காலமாக விலை உயர்வால் தக்காளி வாங்கி சமையலுக்கு பயன்படுத்த முடியாத நிலையில் தற்போது நியாய விலை கடைகளில் குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை செய்யப்படுவது மகிழ்ச்சி அளிப்பதாக பெண்கள் தெரிவித்தனர்.

    • தினசரி வரும் தக்காளியின் வரத்து பாதியாக குறைந்துவிட்டது
    • இல்லத்தரசிகள் கவலை

    வேலூர்:

    தமிழகத்தில் தக்காளியின் விலை தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த வாரத்தில் கிலோ ரூ.130 வரை விற்கப்பட்ட தக்காளி விலை குறையும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.

    ஆனால் மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், தெலுங்கானா ஆகிய மாநிலங்க ளில் பரவலாக பலத்த மழை பெய்து வருவதால் தக்காளி விலை மேலும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    மழையால் பாதிக்கப்பட்டு உள்ள வடமாநிலங்களில் இருந்தும் அங்குள்ள வியாபாரிகளும் ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் அதிகளவில் குவிந்து தக்காளியை கொள்முதல் செய்து வருவதால் தக்காளிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    இதனால் வேலூர் நேதாஜி மார்கெட்டுக்கு வரும் தக்காளியின் வரத்து குறைந்ததால் விலை அதிகரிக்க தொடங்கியது. வேலூர் மார்கெட்டுக்கு தினசரி வரும் தக்காளியின் வரத்து பாதியாக குறைந்துவிட்டது.

    இதனால் சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.150 வரை விற்கப்படுகிறது.

    அதேபோல் வெளி மார்கெட்டில் உள்ள காய்கறி, மளிகை மற்றும் சூப்பர் மார்க்கெட் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.150 முதல் ரூ.170 வரை விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி விலை உயர்வால் இல்லத்தரசிகள் கவலை அடைந்து உள்ளனர்.

    சமையலுக்கு கிலோ கணக்கில் வாங்கிய தக்காளியை தற்போது ¼ கிலோ, ½ கிலோ என்ற அளவில் வாங்குகின்றனர்.

    • தக்காளி விற்பனையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்பப்பட்டு வருகிறது.
    • இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதா வது:-

    தக்காளி விலை உச்சத்தை எட்டியுள்ள நிலையில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ. 130 முதல் ரூ.150 வரை பொது சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் விலையை குறைப்பதற்காக சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, திருப்பத்தூர், காரைக்குடி, தேவகோட்டை மற்றும் சிங்கம்புணரி உழவர் சந்தைகளில் தக்காளி விற்பனையை அதிகப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சிவகங்கை மற்றும் திருப்பத்தூர் உழவர் சந்தைகளில் தோட்டக்கலை துறையின் மூலம் அமைக்கப்பட்டுள்ள டான்ஹோடா விற்பனை நிலையங்களில் விவசாயிக ளிடமிருந்து தக்காளி நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு சந்தை விலையை விட குறைவான விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    தோட்டக் கலைத்துறை யின் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் வழங்கப் பட்ட நகரும் காய்கறி விற்பனை வண்டிகள் மூலமாக விவசாயிகளால் நேரடியாக குறைவான விலையில் விற்கப்பட்டு வருகிறது. மேலும் விலை யினை கண்காணிக்கவும் தோட்டக்கலைத்துறை, வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறையின ருக்கு அறிவுறுத்தப்பட்டுள் ளது.

    இவை தொடர்பாக, உழவர் சந்தைகளில் டான்ஹோடா விற்பனை நிலையத்திற்கென சிவகங்கை97510 07695 (விற்பனையாளர் ஜெகன்பிரகாஷ்) மற்றும் திருப்பத்தூர் 91760 83647 (விற்பனையாளர் செல்வி. கவிநிலவு) தொடர்பு எண்கள் ஏற்படுத்தப்பட்டுள் ளது.

    மேலும் தகவலுக்கு, தேவகோட்டை9003631332, இளையான்குடி 94434 55755, காளையார்கோவில் 8508130960, கல்லல் 63761 36377, கண்ணங்குடி 90036 31332, மானாமதுரை 82202 88448, எஸ்.புதூர்97514 64516, சாக்கோட்டை 87783 64523, சிங்கம்புணரி 93445 26574, சிவகங்கை 63692 46510, திருப்பத்தூர் 97888 13286, திருப்புவனம்;96260 06374 ஆகிய தொலைபேசி எண்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள லாம்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்
    • ஒரு கிலோ ரூ.60-க்கு தருகிறார்கள்

    நாகர்கோவில் :

    தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக தக்காளி விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. குமரி மாவட்டத்திலும் தக்காளி விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. ஒரு கிலோ தக்காளி ரூ.140 வரை விற்கப்பட்டது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இந்த நிலையில் தக்காளி விலையை குறைக்க மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டது. ரேசன் கடைகள் மூலமாக தக்காளியை வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப் பட்டது. இதைத்தொடர்ந்து ரேசன் கடைகள் மூலமாக தற்போது தக்காளி வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.இதேபோல நாகர்கோவில் ஊட்டுவாழ்ம டம் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் இன்று தக்காளி விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்கப்பட்டது. இதையடுத்து அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் ஆர்வமாக வந்து தக்காளியை வாங்கி சென்றனர். ஒரு நபருக்கு ஒரு கிலோ தக்காளி மட்டுமே வழங்கப்பட்டது.

    இதேபோல மாவட்டத்தில் உள்ள மேலும் 4 ரேசன் கடைகளில் தக்காளி பொதுமக்களுக்கு வழங்க கூட்டுறவுத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். அந்த வகையில் மறவன்குடியிருப்பு, கலைநகர், புன்னைநகர் மற்றும் அண்ணா விளையாட்டு அரங்கம் அருகே என மேலும் 4 ரேஷன் கடைகள் மூலமாக தக்காளி வினியோகம் செய்யப்பட்டது.

    ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் வெளி மார்க்கெட்டில் இன்றும் தக்காளி விலை அதிகமாகவே இருந்தது. ஒரு கிலோ தக்காளி ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டது. அப்டா மார்க்கெட், கனக மூலம் சந்தை மற்றும் கோட்டார் மார்க்கெட்டு களில் தக்காளி ரூ.120-க்கு விற்பனையானது.

    இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், "தக்காளியின் வரத்து குறைவாக உள்ளதால் தொடர்ந்து ரூ.120-க்கு விற்கப்பட்டு வருகிறது. தக்காளியின் வரத்து அதிகரித்தால் மட்டுமே விலை குறைய வாய்ப்புள்ளது. பெங்களூர் பகுதிகளில் இருந்து வழக்கமாக வரும் தக்காளியை விட பாதி அளவே தக்காளிகள் மார்க்கெட்டு களுக்கு விற்பனைக்கு வந்து கொண்டிருக்கிறது" என்றனர்.

    ரேஷன் கடைகளில் தக்காளி வினியோகம் செய்யப்பட்டது. இது குறித்து இல்லத்தரசிகளிடம் கேட்டபோது," மார்க்கெட்டுகளில் தக்காளி விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. இதனால் நாங்கள் தக்காளி பயன்பாட்டை குறைத்து வந்தோம். வழக்கமாக ஒரு கிலோ தக்காளியை வாங்கி வந்த நிலையில் கடந்த சில நாட்களாக கிராம் கணக்கில் தான் தக்காளியை வாங்குகிறோம்.

    இந்த நிலையில் ரேசன் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60 விற்பனை செய்யப்படுவது வரவேற்கத் தகக்கது. ஒரு சில கடைகளில் மட்டுமே தற்போது தக்காளி வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அனைத்து ரேசன் கடைகளிலும் தக்காளியை வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

    • ராமநாதபுரத்தில் தோட்டக்கலைத்துறை மூலம் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்படும்.
    • பொதுமக்கள் வாங்கி பயனடையுமாறு கலெக்டர் கூறியுள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழகம் முழுவதும் தக்காளி உற்பத்தி மற்றும் வரத்து குறைவின் காரண மாக. கடந்த சில நாட்களாக விலை ஏறுமுகமாக இருந்து வருகிறது. இந்த திடீர் விலை உயர்வால் பாதிக்கப் பட்டுள்ள பொதுமக்களின் நிலையை உணர்ந்த முதல் அமைச்சர் இந்த தற்காலிக விலையேற்றத்தில் இருந்து பொதுமக்களை காக்கவும் விலை ஏற்றத்தை கட்டுப் படுத்தவும் தோட்டக்கலைத்துறை மூலம் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள் முதல் செய்து உழவர் சந்தைகளில் குறைந்த விலையில் விற்பனை செய்ய வேண்டு மென உத்தரவிட்டுள்ளார்.

    இதனைத் தொடர்ந்து, ராமநாதபுரம் மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் ராமநாதபுரம் உழவர் சந்தையில் டான்ஹோடா விற்பனையகம் மூலம் சந்தை விலையை விட குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு தனி நபருக்கு அதிகபட்ச மாக 1 கிலோ வரை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு உழவர் சந்தையில் தோட்டக்கலைத்துறை மூலம் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் தக்காளியினை பொதுமக்கள் வாங்கி பயனடையுமாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சென்னையில் உள்ள கூட்டுறவு ரேசன் கடைகளில் தக்காளி கிலோ ரூ.60-க்கு விற்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
    • தக்காளி அதிகம் வராததால் 1 நபருக்கு 1 கிலோ என்ற அளவில்தான் 60 ரூபாய்க்கு ரேஷன் கடைகளில் கொடுக்கிறார்கள்.

    சென்னை:

    தக்காளி வெளி மார்க்கெட்டில் கிலோ ரூ.120 முதல் ரூ.130 வரை விற்கப்பட்டு வருகிறது.

    ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து குறைந்துள்ளதால் இங்கு தட்டுப்பாடு ஏற்பட்டு நாளுக்கு நாள் தக்காளி விலை அதிகரித்து விட்டது.

    இதனால் சென்னையில் உள்ள கூட்டுறவு ரேசன் கடைகளில் தக்காளி கிலோ ரூ.60-க்கு விற்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் இதை விரிவுபடுத்தும் வகையில் இப்போது மொத்தம் 302 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை தொடங்கி உள்ளது.

    தக்காளி அதிகம் வராததால் 1 நபருக்கு 1 கிலோ என்ற அளவில்தான் 60 ரூபாய்க்கு ரேஷன் கடை களில் கொடுக்கிறார்கள்.

    சென்னையில் காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலைக்கு உட்பட்ட ராமாபுரம், மடிப்பாக்கம், போரூர், வளசரவாக்கம், மதுரவாயல் லட்சுமி நகர், வானகரம், கந்தன்சாவடி, காரப்பாக்கம் ரேசன் கடைகளில் தக்காளி விற்கப்படுகிறது.

    திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்க கடைகள், ராயப்பேட்டை, பெசன்ட் நகர், சாஸ்திரி நகர், அவ்வை நகர், தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, ஸ்ரீராம் நகர், தி.நகர், சேத்துப்பட்டு, கோடம்பாக்கம், லட்சுமி புரம், நுங்கம்பாக்கம், கோபாலபுரம், ஆர்.ஏ.புரம், சைதாப்பேட்டை, சின்னமலை, கிண்டி, கே.கே.நகர், ஆர்.கே.நகர், எருக்கஞ்சேரி, மணலி, மாம்பலம், சாலி கிராமம், வேளச்சேரி, ஆதம்பாக்கம் என 87 ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.

    இது தவிர மதுரை மண்டலத்தில் 20 கடைகள், கோவை மண்டலத்தில் 20, திருச்சி மண்டலத்தில் 20, சேலம் மண்டலம்-15, திருநெல்வேலி மண்டலம்-15, திருப்பூர்-10, வேலூர்-15, ஈரோடு-15, தூத்துக்குடி-15, தஞ்சாவூர்-15, திண்டுக்கல்-10, காஞ்சிபுரம்-10, கரூர்-10, கடலூர்-10, விழுப்புரம்-10, கன்னியாகுமரியில்-5 ரேஷன் கடை என 215 ரேஷன் கடைகள் ஆக மொத்தம் 302 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்து வருகின்றனர்.

    • போட்டி போட்டு மக்கள் வாங்கி சென்றனர்
    • விலை உயர்வினால் பொதுமக்கள் பாதிப்படையக்கூடாது என்ற நோக்கத்துடன் தமிழக அரசு நடவடிக்கை

    கன்னியாகுமரி :

    மழை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வெளிமாநிலங்களில் இருந்து வரத்து குறைந்ததால் கடந்த சில நாட்களாக தக்காளி விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. இந்த விலை உயர்வினால் பொதுமக்கள் பாதிப்படையக்கூடாது என்ற நோக்கத்துடன் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    அதன் அடிப்படையில் அரசு தோட்டக்கலை துறைக்கு சொந்தமான கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் தோட்டகலைத்துறை சார்பில் முதற்கட்டமாக டான்ஹோட விற்பனை மையத்தில் தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஒரு கிலோ ரூ.95-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த தக்காளி விற்பனையை குமரி மாவட்ட தோட்டக்கலை துறை துணை இயக்குநர் ஷீலா ஜாண் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் கன்னியாகுமரி அரசு தோட்டக்கலை பண்ணை மேலாளர் சக்திவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர். மேலும் இன்று வடசேரி உழவர் சந்தை டான்ஹோட விற்பனை மையத்திலும் தக்காளி குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    ×