search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தக்காளி விற்பனையை அதிகப்படுத்த நடவடிக்கை
    X

    தக்காளி விற்பனையை அதிகப்படுத்த நடவடிக்கை

    • தக்காளி விற்பனையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்பப்பட்டு வருகிறது.
    • இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதா வது:-

    தக்காளி விலை உச்சத்தை எட்டியுள்ள நிலையில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ. 130 முதல் ரூ.150 வரை பொது சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் விலையை குறைப்பதற்காக சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, திருப்பத்தூர், காரைக்குடி, தேவகோட்டை மற்றும் சிங்கம்புணரி உழவர் சந்தைகளில் தக்காளி விற்பனையை அதிகப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சிவகங்கை மற்றும் திருப்பத்தூர் உழவர் சந்தைகளில் தோட்டக்கலை துறையின் மூலம் அமைக்கப்பட்டுள்ள டான்ஹோடா விற்பனை நிலையங்களில் விவசாயிக ளிடமிருந்து தக்காளி நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு சந்தை விலையை விட குறைவான விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    தோட்டக் கலைத்துறை யின் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் வழங்கப் பட்ட நகரும் காய்கறி விற்பனை வண்டிகள் மூலமாக விவசாயிகளால் நேரடியாக குறைவான விலையில் விற்கப்பட்டு வருகிறது. மேலும் விலை யினை கண்காணிக்கவும் தோட்டக்கலைத்துறை, வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறையின ருக்கு அறிவுறுத்தப்பட்டுள் ளது.

    இவை தொடர்பாக, உழவர் சந்தைகளில் டான்ஹோடா விற்பனை நிலையத்திற்கென சிவகங்கை97510 07695 (விற்பனையாளர் ஜெகன்பிரகாஷ்) மற்றும் திருப்பத்தூர் 91760 83647 (விற்பனையாளர் செல்வி. கவிநிலவு) தொடர்பு எண்கள் ஏற்படுத்தப்பட்டுள் ளது.

    மேலும் தகவலுக்கு, தேவகோட்டை9003631332, இளையான்குடி 94434 55755, காளையார்கோவில் 8508130960, கல்லல் 63761 36377, கண்ணங்குடி 90036 31332, மானாமதுரை 82202 88448, எஸ்.புதூர்97514 64516, சாக்கோட்டை 87783 64523, சிங்கம்புணரி 93445 26574, சிவகங்கை 63692 46510, திருப்பத்தூர் 97888 13286, திருப்புவனம்;96260 06374 ஆகிய தொலைபேசி எண்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள லாம்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    Next Story
    ×