search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tomato Sales"

    • தமிழகத்தில் கடந்த 50 நாட்களுக்கு மேல் தக்காளி விலை அதிகரித்து வந்தது. அதிகபட்சமாக ஒரு கிலோ தக்காளி ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டது.
    • தமிழக அரசு சார்பில் ரேசன் கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டது.

    சேலம்:

    தமிழகத்தில் கடந்த 50 நாட்களுக்கு மேல் தக்காளி விலை அதிகரித்து வந்தது. அதிகபட்சமாக ஒரு கிலோ தக்காளி ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் வசதிக்காக தமிழக அரசு சார்பில் ரேசன் கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டது.

    கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தக்காளி விலை 100 ரூபாய்க்கு கீழ் குறையாமல் இருந்து வந்தது. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் தக்காளி வாங்குவதை தவிர்த்து விட்டனர்.

    அதேபோல் காய்கறிகள் விலை உயர்வாலும் பொது மக்கள் காய்கள் வாங்குவதை குறைத்து கொண்டனர். கிலோ கணக்கில் தக்கா ளியை வாங்கிச் சென்ற பொதுமக்கள் விலை உயர்வு காரணமாக கிராம் கணக்கில் தக்காளியை வாங்க ஆரம்பித்தனர்.

    உழவர் சந்தை

    சேலம் மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளில் வெளி இடங்களை விட குறைவான விலைக்கு விற்கப்பட்டதால் பொது மக்கள் உழவர் சந்தைகளில் தக்காளி வாங்கிச் சென்ற னர். இதனால் குறைந்த நேரத்திலேயே தக்காளி விற்பனை முடிவடைந்தது.

    சேலத்தில் உள்ள காய்கறி மார்க்கெட்டுகளுக்கு தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் சேலம் மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் இருந்து தக்காளிகள் விற்பனைக்கு கொண்டுவரப்படும். ஆனால் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக இந்த பகுதிகளில் இருந்து தக்காளி வரத்து குறைந்தது. இதனால் ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து தக்காளிகள் கொண்டுவரப்பட்டு அதிக விலைக்கு விற்கப்பட்டு வந்தது.

    தங்கத்தை போல் தக்காளி விலையும் உயர்ந்ததால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இந்த நிலையில் சேலத்தில் இன்று தக்காளி விலை திடீரென குறைந்தது. கிலோ ரூ.60 முதல் அதிகபட்சமாக ரூ.70 வரை தக்காளி விற்கப்பட்டது. இந்த விலை குறைவுக்கான காரணம் குறித்து வியாபாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

    கடந்த சில நாட்களாக உள்ளூர் தக்காளி வரத்து குறைந்து காணப்பட்டது. இதனால் ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து குறைந்த அளவிலேயே தக்காளி விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. இதனால் விலை உயர்ந்து காணப்பட்டது. தற்போது வழக்கம்போல் உள்ளூர் தக்காளிகள் வரத் தொடங்கிவிட்டது.

    கடந்த சில நாட்களைவிட இன்று மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக விலையும் குறைந்தது. அதிகபட்சமாக சில்லறை விலையில் முதல் ரக தக்காளி கிலோ ரூ.70-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் இனிவரும் காலங்களில் படிப்படியாக தக்காளி விலை குறைந்துவிடும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • உழவர் சந்தைகள் மற்றும் காய்கறி மார்க்கெட்களுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து தக்காளியை விற்பனை செய்ய விவசாயிகள் கொண்டு வருவார்கள்.
    • இந்த நிலையில் அதிக அளவில் வெயில் அடித்ததால் தக்காளி செடிகள் நோய் தாக்கியது. இதனால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகள் மற்றும் காய்கறி மார்க்கெட் களுக்கு வீரபாண்டி, தலைவாசல், மேச்சேரி, பனமரத்துப்பட்டி, ஓமலூர், மன்னார் பாளையம் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து தக்காளியை விற்பனை செய்ய விவசாயிகள் கொண்டு வருவார்கள்.

    இந்த நிலையில் அதிக அளவில் வெயில் அடித்ததால் தக்காளி செடிகள் நோய் தாக்கியது. இதனால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் வட மாநிலங்களில் அதிக அளவு மழை பெய்ததால் அங்கு இருந்தும் தக்காளி வரத்து குறைந்தது. இதனால் கடந்த சில நாட்களாக தக்காளி விலை உயர்ந்து ஒரு கிலோ 200 வரை விற்கப்பட்டது.

    சேலம் மார்க்கெட்டில் அதிகபட்சமாக 160 ரூபாய் வரை உழவர் சந்தைகளில் அதிகபட்சமாக 135 வரையும் தக்காளி விற்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் குறைந்த அளவிலேயே தக்காளியை வாங்கி செல்கிறார்கள் சிலர் தக்காளி வாங்குவது இல்லை.

    இந்த விலை உயர்வு மக்களை பாதிக்காத வகையில் தமிழக முழுவதும் 500 ரேஷன் கடைகள் மூலம் தக்காளி விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையொட்டி சேலம் மாநகரில் 20 ரேஷன் கடைகளில் கிலோ 60 ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டது .

    ஒரே நாளில் இந்த ரேஷன் கடைகள் மூலம் ஒரு டன் தக்காளி விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும் தினசரி ஒரு டன் தக்காளி விற்பனை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினார். 2-வது நாளாக இன்றும் 60 ரூபாய்க்கு ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை நடைபெற்று வருகிறது.

    • தக்காளி விற்பனையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்பப்பட்டு வருகிறது.
    • இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதா வது:-

    தக்காளி விலை உச்சத்தை எட்டியுள்ள நிலையில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ. 130 முதல் ரூ.150 வரை பொது சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் விலையை குறைப்பதற்காக சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, திருப்பத்தூர், காரைக்குடி, தேவகோட்டை மற்றும் சிங்கம்புணரி உழவர் சந்தைகளில் தக்காளி விற்பனையை அதிகப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சிவகங்கை மற்றும் திருப்பத்தூர் உழவர் சந்தைகளில் தோட்டக்கலை துறையின் மூலம் அமைக்கப்பட்டுள்ள டான்ஹோடா விற்பனை நிலையங்களில் விவசாயிக ளிடமிருந்து தக்காளி நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு சந்தை விலையை விட குறைவான விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    தோட்டக் கலைத்துறை யின் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் வழங்கப் பட்ட நகரும் காய்கறி விற்பனை வண்டிகள் மூலமாக விவசாயிகளால் நேரடியாக குறைவான விலையில் விற்கப்பட்டு வருகிறது. மேலும் விலை யினை கண்காணிக்கவும் தோட்டக்கலைத்துறை, வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறையின ருக்கு அறிவுறுத்தப்பட்டுள் ளது.

    இவை தொடர்பாக, உழவர் சந்தைகளில் டான்ஹோடா விற்பனை நிலையத்திற்கென சிவகங்கை97510 07695 (விற்பனையாளர் ஜெகன்பிரகாஷ்) மற்றும் திருப்பத்தூர் 91760 83647 (விற்பனையாளர் செல்வி. கவிநிலவு) தொடர்பு எண்கள் ஏற்படுத்தப்பட்டுள் ளது.

    மேலும் தகவலுக்கு, தேவகோட்டை9003631332, இளையான்குடி 94434 55755, காளையார்கோவில் 8508130960, கல்லல் 63761 36377, கண்ணங்குடி 90036 31332, மானாமதுரை 82202 88448, எஸ்.புதூர்97514 64516, சாக்கோட்டை 87783 64523, சிங்கம்புணரி 93445 26574, சிவகங்கை 63692 46510, திருப்பத்தூர் 97888 13286, திருப்புவனம்;96260 06374 ஆகிய தொலைபேசி எண்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள லாம்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    ×