search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    5 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை
    X

    5 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை

    • குறைந்த விலையில் விற்கப்படுகிறது
    • கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தொடங்கி வைத்தார்

    திருப்பத்தூர்:

    தக்காளி விலை கிலோ ரூ.100 முதல் ரூ.150 வரை விற்கப்படுவ தால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை தவிர்க்க ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுத்தது.

    அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் 5 ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை தொடங்கி வைக்கப்பட்டது.

    திருப்பத்தூர் கற்பகம் கூட்டுறவு ரேஷன் கடையில் நேற்று குறைந்த விலையில் தக்காளி விற்பனையை திருப்பத்தூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சி.பெ. முருகேசன் தொடங்கி வைத்தார். அப்போது பொது மக்க ளுக்கு 1கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் தக்காளியை வாங்கி சென்றனர். நிகழ்ச்சியில் பொது வினியோக திட்ட துணை பதிவாளர் சம்பத், கூட்டுறவு சார்பதிவாளர்கள் சதாசிவம், தர்மேந்திரன், ராமசந்திரன், முதுநிலை ஆய்வாளர் திப்புதிலீ பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதே போல் மாவட்டத்தில் ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய பகுதியில் மேலும் 4 கூட்டுறவு ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை தொடங்கி வைக்கப்பட்டது.

    Next Story
    ×